அல்ஹாபிழ்.அ.சதாம் உசேன் ஹஸனி B.A(arabic) தொண்டி
"மனிதன் இவ்வுலகில் சில நியதிகளை கடைபிடிப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறான்.
அவற்றில் குறிப்பாக தனக்குக் கிடைக்கும் அனைத்தும் தன்னோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றோ அல்லது "நீண்ட காலமாவது அந்த பொருள் தன்னோடு நீடிக்க வேண்டும் என்றோ ஆசை வைக்கிறான்.
ஆக மனிதனின் அதிகமான ஆசையே தனக்கு கிடைப்பவை அனைத்தும் என்னோடு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதே!
இதன் அடிப்படையில் மனிதன் "தன் வாழ்க்கை முழுவதிலும் தான் விரும்பியவாறு முடிவே இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால்! அப்படிப்பட்ட வாழ்க்கையும் மனிதனுக்கு காத்து இருக்கிறது என்றே இறைவன் கூறுகிறான்..
والاخرة خير و ابقا
மறுமையோ மிகச் சிறந்ததும்; நிரந்தரமானதாகும். (87:17)
உண்மையில் மனிதன் சிசு என்ற கட்டத்திலிருந்தும் வாலிபம் என்ற கட்டத்திலிருந்தும் முதுமை என்ற கட்டத்திலிருந்தும் விடுபட்டு மறுமை வாழ்வின் பால் காலடி வைப்பதே மனிதனின் நிரந்தர வாழ்க்கையின் ஆரம்பம் என்று இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான்.
எனவே அந்த மறுமை வாழ்வை அடையப்போகும் ஒவ்வொரு ஆண்மாவும் அதற்கு தேவையான நல்அமல்களை கட்டு சாதமாக எடுத்துச் செல்ல கடமைபட்டிருக்கிறது.
அதுவே அந்த நிரந்தர வாழ்க்கைக்கு மிக அவசியமானதாகும்.
ஆனால் மனிதனோ நிரந்தற வாழ்க்கையை மறந்துவிட்டு நிறந்தறமற்ற உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
அதை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டு காட்டுகிறான்..
بل تؤثرون الحياة الدنيا
(மனிதனோ) உலக வாழ்வையே தேர்ந்
தெடுத்துக் கொள்கிறான். ( 87:16)
இந்த உலக வாழ்வு கட்டாயம் முடிவுக்குட்பட்டதே என்பதை மனித மனம் மறந்தாலும்! எந்த மனிதனும் இவ்வுலகில் நிலைக்கவில்லை என்பதை இறைவன் மிக ஆழமாக ஒவ்வொரு கணமும் புரிய வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
அப்படி இருந்தும் மனிதன் ஏன் இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்று நாம் கேட்கலாம்..
ஆம் அதன் காரணத்தை இறைவனே குறிப்பிடுகிறான்.
உலகை சம்பாரிக்க வேண்டும் என்ற வேட்கையே; மனிதனை நிரந்தர மறு உலக வாழ்க்கையைபற்றி சிந்திப்பதைவிட்டும் மறக்கடித்துவிடுகிறது.
"அதிகம்; அதிகம் சேர்க்க வேண்டும் (என்ற எண்ணம்) மனிதனை அழிவில் போட்டுவிட்டது. (102:01)
இந்த வசனம் கூறும் செய்தி அதிகமான மனிதர்களின் நிதர்சன வாழ்க்கையைப்
பற்றியது.
இந்த உலகை சம்பாதிப்பதற்காக தன்னை முற்றிலுமாக அர்பணிக்கும் மனிதன் நாளைய மறுமை நாளுக்காக சம்பாதிப்பதில் மிகப்பெரும் பொடுபோக்கில் இருக்கின்றான்.
சிலருக்கு இரு உலகின் பலனையும் கூட பெற முடியாமல் போயும்விடுகிறது..
இதுவே மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரும் கைசேதமாகும்.
நிரந்தரமான வாழ்விற்காக சம்பாதிக்காமல் நிலையற்ற வாழ்க்கைக்காக யார் சம்பாதித்தாரோ; அவரின் செயல்களெல்லாம் வைரக்கற்கள் கொட்டிக்கிடக்கும் இடத்தில் கூலாங்கற்களை தேடி பொறுக்கியதற்கு ஒப்பாகும்.
நாளை மறுமையில் பலனளிக்கப்போவது நம் நற்செயல்கள்தான் என்பது இறைவாக்குறுதி. ஆனால் அவற்றையெல்லாம் அற்ப உலகை சம்க்குபாதிக்கும் ஆசை கண்ணிற்கு திரையிட்டு பாவங்களிலும்; கழியாட்டங்களிலும் மனிதனை தள்ளிவிடுகிறது.
இதனால் அவன் இரு உலக வாழ்விலும் பெரும் கைசேதத்தை சம்த்துபாதித்துக் கொள்கிறான்.
ஆகவே அன்பான சகோதர சகோதரிகளே!
நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க நினைத்தால்;
நம் வாழ்க்கையில் ஒருபகுதியையேனும் மறுமை வாழ்க்கைக்கான தயாரிப்புக்காக அற்பணிக்க வேண்டும்..
இல்லையேல் நாமும் கைசேதத்திற்கு ஆளாக நேரிடலாம்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் மறுமைக்காக செயல்பட்டு நாளை அந்த நிறந்தற வாழ்வில் வெற்றியடையச் செய்வானாக.!
Friday, 26 January 2018
யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 5
இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.
1. அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கை இழக்காதிருத்தல்.
2. நிச்சயமாக அல்லாஹ் தௌபாவை ஏற்றுக் கொள்பவன். யூனுஸ் (அலை) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.
3. சங்கடத்தில் மாட்டிக் கொண்டவருக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(நெருக்கடியைச் சந்தித்தவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்) அந்நம்ல் – 62.
4. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யூனுஸ் (அலை) அவர்கள் மூலம் நேர்வழி அடைந்தார்கள் என்ற செய்தி இவரின் உயர் அந்தஸ்தைக் காட்டுகிறது.
5. மனிதர்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களே! எனவே அவர்களில் அவன் நாடியவர்களைத் தண்டிப்பான். அவர் நபியாக இருப்பினும் சரியே!
யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!
முடிவுற்றது....
பதிவு நாள்: 27-01-2018.
1. அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கை இழக்காதிருத்தல்.
2. நிச்சயமாக அல்லாஹ் தௌபாவை ஏற்றுக் கொள்பவன். யூனுஸ் (அலை) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.
3. சங்கடத்தில் மாட்டிக் கொண்டவருக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(நெருக்கடியைச் சந்தித்தவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்) அந்நம்ல் – 62.
4. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யூனுஸ் (அலை) அவர்கள் மூலம் நேர்வழி அடைந்தார்கள் என்ற செய்தி இவரின் உயர் அந்தஸ்தைக் காட்டுகிறது.
5. மனிதர்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களே! எனவே அவர்களில் அவன் நாடியவர்களைத் தண்டிப்பான். அவர் நபியாக இருப்பினும் சரியே!
யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!
முடிவுற்றது....
பதிவு நாள்: 27-01-2018.
யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 4
அத்துடன் அல்லாஹ் முடித்துக்கொள்ளவில்லை. மாறாக குளிரில் கிடந்து வந்த மனிதனுக்கு சூடு வழங்க வேண்டுமென்பதற்காக ~யக்தீன~; என்ற மரத்தை முளைக்கச் செய்தான். அது அவருக்கு நிழல் கொடுத்து, மறைத்து வைத்து, சூட்டை வழங்கியது. இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்:
(அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.)
அஸ் ஸாஃப்பாத் – 146.
மீண்டும் அல்லாஹ் அவர்களை அழைப்பு விடுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.) அஸ் ஸாஃப்பாத் – 147.
(அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமதானமும் உண்டாவதாக!)
இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 27-01-2018.
(அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.)
அஸ் ஸாஃப்பாத் – 146.
மீண்டும் அல்லாஹ் அவர்களை அழைப்பு விடுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.) அஸ் ஸாஃப்பாத் – 147.
(அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமதானமும் உண்டாவதாக!)
இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 27-01-2018.
யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 3
அல்லாஹ் கூறுகிறான்:
(மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் எனறு நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.) அல் அன்பியா – 87.
அல்லாஹ்வை துதி செய்ய ஆரம்பித்த போது, அல்லாஹ் அவரது துயரத்தைப் போக்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்) அஸ் ஸாஃப்பாத் – 143:144.
பின்பு மீன் அவரை கரையில் கொண்டு வந்து போட்டது. அப்போது அவர் நோயுற்றவராக போடப்பட்டாரே தவிர இழிவாக போடப்படவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்) அஸ் ஸாஃப்பாத் -145.
இது அல்லாஹ் அவர் மீது புரிந்த அருளாகும். அதைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்:
(அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.) அல் கலம்- 49.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 27-01-2018.
(மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் எனறு நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.) அல் அன்பியா – 87.
அல்லாஹ்வை துதி செய்ய ஆரம்பித்த போது, அல்லாஹ் அவரது துயரத்தைப் போக்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்) அஸ் ஸாஃப்பாத் – 143:144.
பின்பு மீன் அவரை கரையில் கொண்டு வந்து போட்டது. அப்போது அவர் நோயுற்றவராக போடப்பட்டாரே தவிர இழிவாக போடப்படவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்) அஸ் ஸாஃப்பாத் -145.
இது அல்லாஹ் அவர் மீது புரிந்த அருளாகும். அதைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்:
(அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.) அல் கலம்- 49.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 27-01-2018.
யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 2
கடல் அலை மிகக் கடுமையாக இருந்தது. அதனால் கடலில் முழ்கிவிடக் கூடும் என மக்கள் பயந்து தங்களிடம் இருந்த பொதிகளை ஒன்றன் பின் ஒன்றாக கடலில் போட்டார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் நிறைவேரவில்லை. இறுதியாக பயணிகளில் சிலரைக் குறைத்து பலரைப் பாதுகாக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள். ஆனால், இக்காரியத்துக்கு யார் முன்வருவது என்ற சரிச்சை அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. பின், சீட்டு; போட்டு தெரிவு செய்தபோது யூனுஸ் (அலை) அவர்களின் பெயர் வந்தது. இதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகிவிட்டார்.)
அஸ் ஸாஃப்பாத் – 141.
பின்பு யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் பாய்ந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படி பெரிய மீன் ஒன்று அவர்களை விழுங்கி கடலின் ஆழத்துக்கு எடுத்துச் சென்றது. இக்கட்டத்தில் யூனுஸ் (அலை) அவர்கள் பலவிதமான இருள்களைச் சந்திக்க நேர்ந்தது. தனது கூட்டத்தாரை விட்டு கோபத்துடன் வந்த கவலை ஒரு பக்கமிருக்க, மீனுடைய வயிற்றுக்குள் ஒரு இருள், கடலின் ஆழம் மற்றொரு இருள், இரவின் இருள் இவ்வாறு இக்கட்டான சூழலில் இருந்த அவர்கள் முதலில் அல்லாஹ்வைத் தான் அழைத்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்:26-01-2018
(அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகிவிட்டார்.)
அஸ் ஸாஃப்பாத் – 141.
பின்பு யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் பாய்ந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படி பெரிய மீன் ஒன்று அவர்களை விழுங்கி கடலின் ஆழத்துக்கு எடுத்துச் சென்றது. இக்கட்டத்தில் யூனுஸ் (அலை) அவர்கள் பலவிதமான இருள்களைச் சந்திக்க நேர்ந்தது. தனது கூட்டத்தாரை விட்டு கோபத்துடன் வந்த கவலை ஒரு பக்கமிருக்க, மீனுடைய வயிற்றுக்குள் ஒரு இருள், கடலின் ஆழம் மற்றொரு இருள், இரவின் இருள் இவ்வாறு இக்கட்டான சூழலில் இருந்த அவர்கள் முதலில் அல்லாஹ்வைத் தான் அழைத்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்:26-01-2018
யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 1
யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் பக்தாதிலுள்ள - நய்னவா என்ற கிராமத்துக்குத் தூதராக அனுப்பினான். அவர் அங்கு வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்து, அவனுக்கு மாறுசெய்வதன் மூலம் கடுமையான வேதனையுண்டு எனவும் எச்சரிக்கை செய்தார். எனினும் அம்மக்கள் அவர்களின் கட்டளையை நிராகரித்து, மாறுசெய்த பொழுது, கோபமுற்றவராக அல்லாஹ்வின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு புறப்பட்டு கடற்கரைப் பக்கமாக சென்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என்றெண்ணி பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அவரது சமுதாயம் அவர் அவ்வூரை விட்டு வெளியேறிய பின் விசுவாசம் கொண்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்:
((கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள்; இருக்கக்கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.) யூனுஸ் – 98.
கடற்கரைப் பக்கம் சென்ற அவர் கடலில் பொதிகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்லும் கப்பலை நிறுத்தி, அதில் ஏறிச் சென்றார்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடினார்) அஸ் ஸாஃப்பாத் -140.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 26-01-2018.
Tuesday, 23 January 2018
ஆச்சர்யமூட்டும் மார்க்க வினா விடைகள்
முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி கீரனூர்
1.நான்கு ருகூக்களும்,நான்கு ஸஜ்தாக்களும் உள்ள தொழுகை எது?
பதில்:சூரிய,சந்திர கிரகண தொழுகையாகும்.(புகாரி 1046)
2.எந்த ஸஹாபியின் மரணத்தால் அல்லாஹ்வுடைய அர்ஷ் நடுங்கியது?
பதில்:ஸஅது இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு (புகாரி 3803)
3.ஃபர்ளுத் தொழுகைக்குப் பின்னும்,தூங்கும் பொழுதும் ஆயத்துல் குர்ஸி ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில்:இரவில் அதை ஓதினால் காலை வரை ஷைத்தான் அவரை நெருங்கமாட்டான்.
(புகாரி 2311,3275,5010)
தொழுகை்குப் பின் ஓதி வந்தால் அவர் சுவனம் செல்ல மரணத்தை தவிர வேறெதுவும் அவருக்கு தடையாக இருக்காது.
(நஸாயீ சுனனுல் குப்ரா 9585)
4.அல்லாஹ் எந்த சமூகத்தார் மீது கோபம் கொண்டான்?
பதில்:யூதர்கள்,இவர்கள் தங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்களை கொலை செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள்.
(அல்குர்ஆன் 1:7)
5.வழிகெட்ட சமூகத்தார் யார்?
பதில்:கிறித்துவர்கள்,இவர்கள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈஸாவை கடவுளாக்கி வழிகெட்டுவிட்டனர்.
(அல்குர்ஆன் 1:7)
6.ஒரு பெண்ணின் தந்தையும் நபி,கணவரும் நபி?அப்பெண் யார்?
பதில்:சுஐப் நபியின் மகள்;மூஸா நபியின் மனைவி
சுஐய் நபி தன் மகளை மூஸா நபிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
(அல்குர்ஆன் 28:27)
7.ஹதீஸில் இடம்பெற்றுள்ள ரிபாத் எனும் வார்த்தைக்கு பொருள் என்ன?
பதில்:ஒரு தொழுைகை முடிந்ததும் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பது,சிரமமான நேரத்தில் பரிபூரணமாக உளு செய்வது,அதிக எட்டுக்கள் வைத்து பள்ளிக்கு நடந்து வருவது
(முஸ்லிம்:369)
8.எந்த ஸஹாபிப் பெண்மனியின் சாட்சி இரண்டு ஆண்களின் சாட்சிக்கு சமமானது ஆகும்?
பதில்:ஹுஜைமா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹா
(அபூதாவூத்:3607)
9.ஒரு ஸஹாபி குர்ஆன் ஓதுவதை கேட்க வானத்திலிருந்து மலக்குகள் இறங்கி வந்தனர்?அவர் யார்?
பதில்:உஸைத் இப்னு ஹூளைர் ரலியல்லாஹு அன்ஹு
(புகாரி: 5018)
1.நான்கு ருகூக்களும்,நான்கு ஸஜ்தாக்களும் உள்ள தொழுகை எது?
பதில்:சூரிய,சந்திர கிரகண தொழுகையாகும்.(புகாரி 1046)
2.எந்த ஸஹாபியின் மரணத்தால் அல்லாஹ்வுடைய அர்ஷ் நடுங்கியது?
பதில்:ஸஅது இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு (புகாரி 3803)
3.ஃபர்ளுத் தொழுகைக்குப் பின்னும்,தூங்கும் பொழுதும் ஆயத்துல் குர்ஸி ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில்:இரவில் அதை ஓதினால் காலை வரை ஷைத்தான் அவரை நெருங்கமாட்டான்.
(புகாரி 2311,3275,5010)
தொழுகை்குப் பின் ஓதி வந்தால் அவர் சுவனம் செல்ல மரணத்தை தவிர வேறெதுவும் அவருக்கு தடையாக இருக்காது.
(நஸாயீ சுனனுல் குப்ரா 9585)
4.அல்லாஹ் எந்த சமூகத்தார் மீது கோபம் கொண்டான்?
பதில்:யூதர்கள்,இவர்கள் தங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்களை கொலை செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள்.
(அல்குர்ஆன் 1:7)
5.வழிகெட்ட சமூகத்தார் யார்?
பதில்:கிறித்துவர்கள்,இவர்கள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈஸாவை கடவுளாக்கி வழிகெட்டுவிட்டனர்.
(அல்குர்ஆன் 1:7)
6.ஒரு பெண்ணின் தந்தையும் நபி,கணவரும் நபி?அப்பெண் யார்?
பதில்:சுஐப் நபியின் மகள்;மூஸா நபியின் மனைவி
சுஐய் நபி தன் மகளை மூஸா நபிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
(அல்குர்ஆன் 28:27)
7.ஹதீஸில் இடம்பெற்றுள்ள ரிபாத் எனும் வார்த்தைக்கு பொருள் என்ன?
பதில்:ஒரு தொழுைகை முடிந்ததும் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பது,சிரமமான நேரத்தில் பரிபூரணமாக உளு செய்வது,அதிக எட்டுக்கள் வைத்து பள்ளிக்கு நடந்து வருவது
(முஸ்லிம்:369)
8.எந்த ஸஹாபிப் பெண்மனியின் சாட்சி இரண்டு ஆண்களின் சாட்சிக்கு சமமானது ஆகும்?
பதில்:ஹுஜைமா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹா
(அபூதாவூத்:3607)
9.ஒரு ஸஹாபி குர்ஆன் ஓதுவதை கேட்க வானத்திலிருந்து மலக்குகள் இறங்கி வந்தனர்?அவர் யார்?
பதில்:உஸைத் இப்னு ஹூளைர் ரலியல்லாஹு அன்ஹு
(புகாரி: 5018)
வீதிக்கு வந்த நீதி
✍முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி
இறைவனின் சட்டமான தலாக்கை நீதிமன்றத்திற்கு இழுத்தார்கள்,இறைவனோ நீதிமன்றத்தை தெருவில் இழுத்து விட்டுவிட்டான்...
இஸ்லாம் பெண்களுக்கு முத்தலாக் சட்டத்தின் மூலம் அநீதி இழைக்கிறது.நாங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு நியாயம் வழங்குகிறோம் எனக் கூறி முத்தலாக் தடை மசோதாவை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கு மாறாக கொண்டுவர துடிக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியில்தான் நீதி தெருவிற்கு வந்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை குற்றம் சாட்டி மற்ற நான்கு நீதியரசர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
குற்றச்சாட்டின் பிண்ணனி என்ன?
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றைய ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர் என்று ஒரு கருத்து பரவலாக உள்ளது.சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டியவரும்,பா.ஜ.க வின் அகில இந்திய தலைவருமரும்,சொராபுதீன் கொல்லப்பட்ட போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா அவர்கள்.
அமித்ஷாவும் நூறுகோடி பேரமும்
மிகவும் நேர்மையானவர் என அறியப்பட்டிருந்த நீதிபதி லோயா சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தார்.அப்படி இறப்பதற்கு முன் அந்த வழக்கில் அமித்ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு நூறுகோடி ரூபாய் அளிப்பதாக கூறப்பட்டது.அதை அவர் மறுத்ததால் வேறுவழியின்றி கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
நீதிபதி லோயாவின் மர்மமான மரணம் பற்றிய விசாரணை தற்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அந்த வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டால் பல உண்னைகள் வெளிவரும்.அரசியல் மாற்றங்களும் நிகழும்.
இதுபோல பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.இந்த வழக்குகளை சரியான முறையில் சகநீதிபதிகளுக்கு மிஸ்ரா ஒதுக்குவதில்லை என்பதுதான் மிஸ்ராவின் மீது வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டாகும்.
இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாது என்று கூறி அவர்களின் மீது சந்தேகப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆராய்ந்து பார்த்தால் முழுக்க முழுக்க மிஸ்ரா பா.ஜ.க விற்கு ஆதாரவாக செயல்படுவது தெரியவரும்.அதைத்தான் மறைமுகமாக நான்கு நீதியரசர்களும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்கள்.
நீதித்துறையில் இஸ்லாம்!
நீதமும் நேர்மையும் ஆட்சியாளரின் உறைவிடம் என எடுத்துரைக்கிறது இஸ்லாம்.
நேர்மையான ஆட்சியாளர் நாளை மறுமையில் அர்ஷின் நிழலுக்கு கீழ் வீற்றிருப்பார் என்பது நபிமொழியாகும்.
தவறுசெய்பவர்கள் உறவினர்களாக இருப்பினும்,பெற்றோர்களாக இருப்பினும் நியாயமான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்ட பணிக்கிறது இஸ்லாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் கையை வெட்டியிருப்போன் எனக்கூறியது இதற்கு சான்றாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு நீதியும்,ஏழைக்கு ஒரு நீதியும் என்பது இஸ்லாத்தில் இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் உயர்குலத்துப் பெண் ஃபாத்திமா திருடிவிடுகிறாள்.அவள் உயர்குலத்து பெண்மனியாக இருப்தால் அக்குலத்தின் தலைவர்கள் ஸஹாபாக்களை அணுகி ஃபாத்திமாவிற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிபாரிசு செய்யுமாறு வேண்டினர்.ஸஹாபாக்களும் நபியவர்களிடம் அப்பெண்ணுக்காக சிபாரிசு செய்தனர்.
நீதியின் பிறப்பிடமான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிபாரிசு செய்த ஸஹாபாக்களை எச்சரிக்கை செய்தார்கள்.குலம் கோத்திரத்திற்கும் பணம் காசுக்கும் விலைபோவதல்ல நீதி என்ற அடிப்படையில் அப்பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்றினார்கள்.
ஜனாதிபதியாக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டுவிட்டால் கூண்டில் ஏறிவிட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் நியதியாகும்.
ஜனாதிபதியான அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது யூதன் ஒருவன் குற்றம் சுமத்தினான்.அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வழக்கிற்காக கூண்டில் ஏறினார்கள்.தங்களின் பதவியை வைத்து அவர்கள் கூண்டில் ஏறுவதை விட்டும் விலக்கு பெறவில்லை.
இஸ்லாமிய நீதித்துறையைப் போல இந்திய நீதித்துறையும் மாறவேண்டும் என்பதே சாமானியர்களின் விருப்பமாகும்.
இறைவனின் சட்டமான தலாக்கை நீதிமன்றத்திற்கு இழுத்தார்கள்,இறைவனோ நீதிமன்றத்தை தெருவில் இழுத்து விட்டுவிட்டான்...
இஸ்லாம் பெண்களுக்கு முத்தலாக் சட்டத்தின் மூலம் அநீதி இழைக்கிறது.நாங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு நியாயம் வழங்குகிறோம் எனக் கூறி முத்தலாக் தடை மசோதாவை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கு மாறாக கொண்டுவர துடிக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியில்தான் நீதி தெருவிற்கு வந்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை குற்றம் சாட்டி மற்ற நான்கு நீதியரசர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
குற்றச்சாட்டின் பிண்ணனி என்ன?
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றைய ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர் என்று ஒரு கருத்து பரவலாக உள்ளது.சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டியவரும்,பா.ஜ.க வின் அகில இந்திய தலைவருமரும்,சொராபுதீன் கொல்லப்பட்ட போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா அவர்கள்.
அமித்ஷாவும் நூறுகோடி பேரமும்
மிகவும் நேர்மையானவர் என அறியப்பட்டிருந்த நீதிபதி லோயா சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தார்.அப்படி இறப்பதற்கு முன் அந்த வழக்கில் அமித்ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு நூறுகோடி ரூபாய் அளிப்பதாக கூறப்பட்டது.அதை அவர் மறுத்ததால் வேறுவழியின்றி கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
நீதிபதி லோயாவின் மர்மமான மரணம் பற்றிய விசாரணை தற்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அந்த வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டால் பல உண்னைகள் வெளிவரும்.அரசியல் மாற்றங்களும் நிகழும்.
இதுபோல பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.இந்த வழக்குகளை சரியான முறையில் சகநீதிபதிகளுக்கு மிஸ்ரா ஒதுக்குவதில்லை என்பதுதான் மிஸ்ராவின் மீது வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டாகும்.
இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாது என்று கூறி அவர்களின் மீது சந்தேகப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆராய்ந்து பார்த்தால் முழுக்க முழுக்க மிஸ்ரா பா.ஜ.க விற்கு ஆதாரவாக செயல்படுவது தெரியவரும்.அதைத்தான் மறைமுகமாக நான்கு நீதியரசர்களும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்கள்.
நீதித்துறையில் இஸ்லாம்!
நீதமும் நேர்மையும் ஆட்சியாளரின் உறைவிடம் என எடுத்துரைக்கிறது இஸ்லாம்.
நேர்மையான ஆட்சியாளர் நாளை மறுமையில் அர்ஷின் நிழலுக்கு கீழ் வீற்றிருப்பார் என்பது நபிமொழியாகும்.
தவறுசெய்பவர்கள் உறவினர்களாக இருப்பினும்,பெற்றோர்களாக இருப்பினும் நியாயமான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்ட பணிக்கிறது இஸ்லாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் கையை வெட்டியிருப்போன் எனக்கூறியது இதற்கு சான்றாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு நீதியும்,ஏழைக்கு ஒரு நீதியும் என்பது இஸ்லாத்தில் இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் உயர்குலத்துப் பெண் ஃபாத்திமா திருடிவிடுகிறாள்.அவள் உயர்குலத்து பெண்மனியாக இருப்தால் அக்குலத்தின் தலைவர்கள் ஸஹாபாக்களை அணுகி ஃபாத்திமாவிற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிபாரிசு செய்யுமாறு வேண்டினர்.ஸஹாபாக்களும் நபியவர்களிடம் அப்பெண்ணுக்காக சிபாரிசு செய்தனர்.
நீதியின் பிறப்பிடமான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிபாரிசு செய்த ஸஹாபாக்களை எச்சரிக்கை செய்தார்கள்.குலம் கோத்திரத்திற்கும் பணம் காசுக்கும் விலைபோவதல்ல நீதி என்ற அடிப்படையில் அப்பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்றினார்கள்.
ஜனாதிபதியாக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டுவிட்டால் கூண்டில் ஏறிவிட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் நியதியாகும்.
ஜனாதிபதியான அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது யூதன் ஒருவன் குற்றம் சுமத்தினான்.அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வழக்கிற்காக கூண்டில் ஏறினார்கள்.தங்களின் பதவியை வைத்து அவர்கள் கூண்டில் ஏறுவதை விட்டும் விலக்கு பெறவில்லை.
இஸ்லாமிய நீதித்துறையைப் போல இந்திய நீதித்துறையும் மாறவேண்டும் என்பதே சாமானியர்களின் விருப்பமாகும்.
Wednesday, 17 January 2018
புரிந்து கொள்ளப்படாத முத்தலாக்கும் புதைக்க வேண்டிய இன்றைய சட்டங்களும்
புரிந்து கொள்ளப்படாத முத்தலாக்கும் புதைக்க வேண்டிய இன்றைய சட்டங்களும்
⚫⚫⚫⚫⚫⚫
பெருமானார்(ஸல்) அவர்கள் மணந்த
ஒரே கன்னிப்பெண்..
ஆறுவயதில் பெருமானார்(ஸல்)
அவர்களுடன் திருமண உறவு ஏற்பட்டது..
ஒன்பது வயதில் பருவமடைந்த பிறகு
பெருமானாரோடு(ஸல்)
அவர்களோடு
இனிய இல்லறம் நடத்தியவர்கள்..
அன்னை ஆயிஷா(ரலி)
அவர்கள்...
எனவேதான் இஸ்லாமிய பெண்களின் திருமணவயது பெண் பருவமடைந்தவுடனே
ஆரம்பமாகிறது...
பெருமானார்(ஸல்) அவர்கள் மரணிக்கிறபோது ஆயிஷா(ரலி) அவர்களின் வயது பதினெட்டு...
தனது அறுபத்துமூன்று வயதுவரை வாழ்ந்து
இந்த சமூகத்திற்கு பெருமானாரின் (ஸல்)அவர்களின் ஏராளமான பொன்மொழிகளை (ஹதீதுகளை) அளித்தார்கள்...
பெருமானாரும்(ஸல்) அவர்களுடன்...
வாழ்ந்த இல்லறவாழ்க்கையை
சமூகத்திற்காக எடுத்துச் சொன்னார்கள்
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள்...
அன்னை ஆயிஷாவோடு ஓட்டப்பந்தயத்தில்
வேண்டும் என்றே தோற்றுப்போகிறார்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள்..
பெண்கள் கணவனை தோற்கடித்தால் ஒரு
வகை மகிழ்ச்சி.. பெருமானாரின்(ஸல்)
அவர்களின் இந்த உளவியல் நிகழ்வு
நுட்பமானது...
விளையாட்டுகளை பெருமானாரின்(ஸல்)
தோளின் மீது தனது தலைவைத்து
வேடிக்கை பார்த்தார்கள் ஆயிஷா(ரலி)...
பெருமானாரும்(ஸல்) அவர்களும் ஆயிஷா
(ரலி) அவர்களும் ஒரே பாத்திரத்தில்
நீர் வைத்து குளித்தார்கள்..
மாமிசத்தின் ஒருமுனையை
அவர்களும்.. ஒருமுனையை
இவர்களும் வாய்வைத்து கடித்து
உண்டார்கள்..
பாத்திரத்தில் பெருமானார்(ஸல்)
அவர்கள் வாய்வைத்து குடித்த இடத்தில் வாய்வைத்து குடித்தார்கள்...அன்னை
ஆயிஷா( ரலி)..
இல்லறவாழ்வின் எடுத்துக்காட்டான
வாழ்க்கை வாழ்ந்தார்கள்..
இதன் பிறகு பெருமானார்(ஸல்) அவர்கள் ஒன்பது திருமணங்களை முடித்தார்கள்..
ஆயிஷா (ரலி)அவர்களைத்தவிர.
மற்ற அனைவரும் விதவைகள்
கணவனால் கைவிடப்பட்டவர்கள்..
பல்வேறு அரசியல் சமூக காரணங்களுக்காக
பெருமானார்(ஸல்) அவர்கள் இத்தணை
திருமணங்கள் செய்தார்கள்..
மரியத்துல் கிப்தியா என்ற அடிமை பெண்
பரிசாக அவர்களுக்கு அனுப்பப்பட்டார்..
அது அடிமைகளை ஆகுமானதாக ஆக்கிக்
கொள்ளும் காலம் அவர்கள் மூலம்
இப்ராஹீம் என்ற ஆண்குழந்தை பிறந்தது..
பெருமானாருக்கு அன்னை கதீஜா(ரலி
அவர்கள் மூலம் இரண்டு ஆண் மற்றும்
நான்கு பெண்குழந்தைகள்
பிறந்தனர்...
ஆண்குழந்தைகள் அனைவரும் விரைவில்
மரணமடைந்தனர்..
பெருமானார்(ஸல்) எல்லா மனைவியரின்
வீடுகளுக்கும் நாள் குறித்து சென்று
வந்தார்கள்..
எல்லோரையும் சமமாக பாவித்தார்கள்..
பெருமானாரின் மனைவியரின் அதிக
பொருள்கேட்டு அழுத்தம் கொடுத்த
போது பெருமானார் அவர்கள் இருபத்தி
ஒன்பது நாட்கள் கழித்து வந்தார்கள்..
அதிக பொருள்கள் தர வசதியில்லை
நான்வேண்டுமா? அல்லது மணவிடுதலை
தந்துவிடவா? என வினவியபோது
எல்லா மனைவியரும் பெருமானாரையே
போதுமாக்கி கொண்டார்கள்...
இத்தணை மனைவியரோடு
வயது முதிர்ந்த.. வயது குறைந்த...
மனைவியர்களோடு பொருளாதார
சமநிலையோடு.. எல்லா மனைவியரது
உரிமைகளையும் கடமைகளையும்
நிறைவேற்றி வாழ்வியல் புரட்சி
செய்தார்கள்.. பெருமானார்(ஸல்)
அவர்கள்..
பெருமானார் மணவிடுதலை தர
நாடியது இந்த சமூகத்திற்கான செய்தி..
கருத்து முரண்பட்டவர்கள்
தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாமல் எளிதாக பிரிந்து கொள்ளலாம்
என்பதே நமக்கான பாடம்...
இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை மற்ற
மதங்களின் வாழ்வியல்
நெறிகளோடு ஒப்பீடு செய்வோம்..
அப்போதுதான் இஸ்லாமிய தலாக்
சட்டங்களின் மேன்மை புரியும்....
⬛⬛⬛⬛⬛
S.A,ஜாபர்அலி
11.01.18
⬛⬛⬛⬛⬛
⚫⚫⚫⚫⚫⚫
பெருமானார்(ஸல்) அவர்கள் மணந்த
ஒரே கன்னிப்பெண்..
ஆறுவயதில் பெருமானார்(ஸல்)
அவர்களுடன் திருமண உறவு ஏற்பட்டது..
ஒன்பது வயதில் பருவமடைந்த பிறகு
பெருமானாரோடு(ஸல்)
அவர்களோடு
இனிய இல்லறம் நடத்தியவர்கள்..
அன்னை ஆயிஷா(ரலி)
அவர்கள்...
எனவேதான் இஸ்லாமிய பெண்களின் திருமணவயது பெண் பருவமடைந்தவுடனே
ஆரம்பமாகிறது...
பெருமானார்(ஸல்) அவர்கள் மரணிக்கிறபோது ஆயிஷா(ரலி) அவர்களின் வயது பதினெட்டு...
தனது அறுபத்துமூன்று வயதுவரை வாழ்ந்து
இந்த சமூகத்திற்கு பெருமானாரின் (ஸல்)அவர்களின் ஏராளமான பொன்மொழிகளை (ஹதீதுகளை) அளித்தார்கள்...
பெருமானாரும்(ஸல்) அவர்களுடன்...
வாழ்ந்த இல்லறவாழ்க்கையை
சமூகத்திற்காக எடுத்துச் சொன்னார்கள்
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள்...
அன்னை ஆயிஷாவோடு ஓட்டப்பந்தயத்தில்
வேண்டும் என்றே தோற்றுப்போகிறார்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள்..
பெண்கள் கணவனை தோற்கடித்தால் ஒரு
வகை மகிழ்ச்சி.. பெருமானாரின்(ஸல்)
அவர்களின் இந்த உளவியல் நிகழ்வு
நுட்பமானது...
விளையாட்டுகளை பெருமானாரின்(ஸல்)
தோளின் மீது தனது தலைவைத்து
வேடிக்கை பார்த்தார்கள் ஆயிஷா(ரலி)...
பெருமானாரும்(ஸல்) அவர்களும் ஆயிஷா
(ரலி) அவர்களும் ஒரே பாத்திரத்தில்
நீர் வைத்து குளித்தார்கள்..
மாமிசத்தின் ஒருமுனையை
அவர்களும்.. ஒருமுனையை
இவர்களும் வாய்வைத்து கடித்து
உண்டார்கள்..
பாத்திரத்தில் பெருமானார்(ஸல்)
அவர்கள் வாய்வைத்து குடித்த இடத்தில் வாய்வைத்து குடித்தார்கள்...அன்னை
ஆயிஷா( ரலி)..
இல்லறவாழ்வின் எடுத்துக்காட்டான
வாழ்க்கை வாழ்ந்தார்கள்..
இதன் பிறகு பெருமானார்(ஸல்) அவர்கள் ஒன்பது திருமணங்களை முடித்தார்கள்..
ஆயிஷா (ரலி)அவர்களைத்தவிர.
மற்ற அனைவரும் விதவைகள்
கணவனால் கைவிடப்பட்டவர்கள்..
பல்வேறு அரசியல் சமூக காரணங்களுக்காக
பெருமானார்(ஸல்) அவர்கள் இத்தணை
திருமணங்கள் செய்தார்கள்..
மரியத்துல் கிப்தியா என்ற அடிமை பெண்
பரிசாக அவர்களுக்கு அனுப்பப்பட்டார்..
அது அடிமைகளை ஆகுமானதாக ஆக்கிக்
கொள்ளும் காலம் அவர்கள் மூலம்
இப்ராஹீம் என்ற ஆண்குழந்தை பிறந்தது..
பெருமானாருக்கு அன்னை கதீஜா(ரலி
அவர்கள் மூலம் இரண்டு ஆண் மற்றும்
நான்கு பெண்குழந்தைகள்
பிறந்தனர்...
ஆண்குழந்தைகள் அனைவரும் விரைவில்
மரணமடைந்தனர்..
பெருமானார்(ஸல்) எல்லா மனைவியரின்
வீடுகளுக்கும் நாள் குறித்து சென்று
வந்தார்கள்..
எல்லோரையும் சமமாக பாவித்தார்கள்..
பெருமானாரின் மனைவியரின் அதிக
பொருள்கேட்டு அழுத்தம் கொடுத்த
போது பெருமானார் அவர்கள் இருபத்தி
ஒன்பது நாட்கள் கழித்து வந்தார்கள்..
அதிக பொருள்கள் தர வசதியில்லை
நான்வேண்டுமா? அல்லது மணவிடுதலை
தந்துவிடவா? என வினவியபோது
எல்லா மனைவியரும் பெருமானாரையே
போதுமாக்கி கொண்டார்கள்...
இத்தணை மனைவியரோடு
வயது முதிர்ந்த.. வயது குறைந்த...
மனைவியர்களோடு பொருளாதார
சமநிலையோடு.. எல்லா மனைவியரது
உரிமைகளையும் கடமைகளையும்
நிறைவேற்றி வாழ்வியல் புரட்சி
செய்தார்கள்.. பெருமானார்(ஸல்)
அவர்கள்..
பெருமானார் மணவிடுதலை தர
நாடியது இந்த சமூகத்திற்கான செய்தி..
கருத்து முரண்பட்டவர்கள்
தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாமல் எளிதாக பிரிந்து கொள்ளலாம்
என்பதே நமக்கான பாடம்...
இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை மற்ற
மதங்களின் வாழ்வியல்
நெறிகளோடு ஒப்பீடு செய்வோம்..
அப்போதுதான் இஸ்லாமிய தலாக்
சட்டங்களின் மேன்மை புரியும்....
⬛⬛⬛⬛⬛
S.A,ஜாபர்அலி
11.01.18
⬛⬛⬛⬛⬛
Tuesday, 16 January 2018
அல் அக்ஸாவை மீட்போம் - 9
பாலஸ்தீன நாட்டிற்கு ஒரு சிறந்த ஆட்சியாளர் வர வேண்டும் இதுவே முதலில் இஸ்லாமியர்கள் எண்ணங்களில் இருக்க வேண்டும், ஒரு சிறந்த கலீஃபா பாலஸ்தீன நாட்டில் இல்லாமல் இஸ்லாமியர்களின் வெற்றி என்பது கேள்வி குறி
நாம் எவ்வளவு தான் அரசுக்கு எதிராக நடுரோட்டில் நின்று கொண்டு போராடினாலும் எந்த வித பயனும் இல்லை, எந்த இடத்தில் பிரச்சனையோ அந்த இடத்தில் தான் ஒரு சிறந்த கலீஃபா இருக்க வேண்டும், ஏன் என்றால் அரசு அதிகாரம் இருந்தால் மட்டுமே அந்த வெற்றியை நோக்கி செல்ல முடியும்.
பாலஸ்தீன நாட்டில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஒன்று கூட முடியவில்லை இதுதான் பிரச்சனை,
காலம் காலமாக பாலஸ்தீனத்தில் அல்அக்ஸா பள்ளிவாசலிற்காகவே இந்த பிரச்சனை, ஆக பைத்துல்முகத்தஸ் என்பது சாதாரணமான பகுதியை சேர்ந்தது இல்லை, அதற்காக பல நபிமார்களும்,
இலட்சக்கணக்கான ஜிஹாதிகளும் உயிரை விட்டார்கள், அல்அக்ஸா மூலம் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபடுவதற்காக்கவே இந்த அனைத்து உயிர்தியாகங்களும்,
ஆனால் சைத்தானுடன் ஒன்று சேர்ந்து முஷ்ரிக்குகள் இந்த ஒற்றுமைக்கு எதிராகவே செயல்பட்டுகொண்டு வருகின்றனர்,
இந்த பூமியில் உள்ள முக்கிய மூன்று புனிதபள்ளிகளில் அல்அக்ஸா பள்ளிவாசலும் ஒன்று என்பதை இஸ்லாமியர்களாகிய நாம் மறந்து கொண்டு வருகின்றோம், நாம் மறந்து விட்ட காரணத்தால் அந்த இடங்களில் உள்ள பாலஸ்தீன நம் உறவுகள் அல்அக்ஸா பள்ளிவாசலில் ஒன்றுகூட முடியாமல் போராடி வருகின்றார்கள்,
மீண்டும், மீண்டும் இந்த அல்அக்ஸா மீட்போம் என்ற கட்டுரையில் சொல்ல வருவது என்னவென்றால் நாம்
இதற்காக இப்போதைய காலகட்டத்தில் போர் புரிய வேண்டாம் ,ரோட்டில் நின்று கொண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டாம்,
நாம் செய்ய வேண்டியது முதலில் ,
நாம் ஒவ்வொரு தொழுகையிலும் பாலஸ்தீன நாட்டில் ஒரு சிறந்த ஆட்சியாளரை இந்த இஸ்லாமிய உம்மத்திற்காக
எங்களில் இருந்தே கொண்டு வா
“யா அல்லாஹ் “என்று
அல்லாவிடம் கேட்க வேண்டும் ,
ஏன் என்றால் அவன் நாடாமல் எதுவும் நடப்பதில்லை,
ஆக அல்அக்ஸா பள்ளிவாசல் தொடர்பாக வெற்றி என்று வேண்டும் என்றால் அதற்கு அந்த இடத்தில் அரசு அதிகாரம் பெற்று
இஸ்லாமிய சிறந்த ஆட்சியாளர் இருக்க வேண்டும்,
ஆக அப்படி ஒரு கலீஃபா இல்லாமல் இருந்தால் பாலஸ்தீன நாட்டிற்கு எதிராக முஷ்ரிக்குகள் எச்சரிக்கை விடுவார்கள், பாலஸ்தீன மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துவார்கள், அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் முஷ்ரிக்குகளிடம் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது, என்பதை இஸ்லாமியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
(அல்அக்ஸா பள்ளிவாசலில் உள்ள தலைநகரம் ஜெருசலேம் )
மீண்டும் நினைவுபடுத்த இதை படிப்போம்
இஸ்ரேல் பிரதமர் கூறியதவாது என்னவென்றால்
"ஜெருசலேம் 3000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை... ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது, இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம், எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும், இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால் விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்"
இது இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் கருத்து. இவரது கூற்று எவ்வளவு தூரம் பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆதாரங்களுடன் பொருந்துகிறது என்று பார்ப்போம்.
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன் அரேபியத் தீபகற்பத்தில் இருந்து இடம்பெயர்ந்த கன்ஆனியர் பலஸ்தீனில் குடியேறினார்கள். இவர்கள் அரேபிய செமித்தியர்கள். இவர்கள் பபிலோனியாவில் இருந்து தப்பிவந்த இப்ராஹீம் (அலை) அவர்களை வரவேற்று அடைக்களம் கொடுத்தனர்.
இப்ராஹீம் (அலை) அவரகளது பேரணாகிய யாகூப் (அலை); கன்ஆனியர்களுடன் சமாதானமாக வாழும் போது அவரது அன்புக்குரிய மகனாகியக சிறுவன் யூஸுபை அவரது ஏனைய புத்திரர்கள் சதி மூலம் கொலை செய்ய எடுத்த முயற்சியின் பயனாக இவர்கள் பிற்காலத்தில் எகிப்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. எகிப்தில் 300 வருட காலம் வாழ்ந்தார்கள். (யாகூப் நபியின் பிள்ளைகளே பனூ இஸ்ராயீல் எனப்படுகின்றனர்).
கிமு 1250ல் இவர்கள் பிர்அவ்னின் அடக்குமுறை காரணமாக மூஸா (அலை) தலைமையில் எகிப்தில் இருந்து தப்பி பலஸ்தீனை நோக்கி வந்தார்கள். ஆனாலும் இவர்களது கோழைத்தனம் காரணமாக மூஸாவுடன் முரண்பட்டு பலஸ்தீனத்தில் நுழைய மறுத்தனர். அதனால் சினாய்ப்பாலை வனத்தில் பல வருடங்கள் அலைந்து திரிந்தார்கள்.
மூஸாவுடன் முரண்பட்டதன் விளைவை நினைத்து கவலைப்பட்ட பின்வந்த பரம்பறையினர் கிமு 1004ல் தாலூத் மன்னனின் தலைமையில் போராடினர். வெற்றி பெற்றனர். பின் தாவுத் நபியும் சுலைமான் நபியும் ஏரத்தாள 90 வருடங்கள் அங்கு ஆட்சி செய்தனர். இவ்விரு நபிமார்களின் நீதியான ஆட்சிக்குப் பின் பனூஇஸ்ரவேலர்கள் பிரிந்து தமக்குள் சர்ச்சைப்பட்டு பாவகாரியங்களில் ஈடுபடலாயினர். அவர்களுக்கென்று நிலையான ஆட்சி அமையவுமில்லை.
கி.மு 586ல் நுபுஹத் நஸ்ரின் படையெடுப்பினால் இஸ்ரவேலர்கள் முழுமையாக வீழ்ச்சியடைந்து அதிகமானோர் அங்கிருந்து அடிமைகளாக பப்லோனியாவிற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
539ல் பலஸ்தீன் பாரசீகரின் கீழ் வருகிறது. இக்காலத்தில் மீண்டும் யூதர்களில் ஒருசாரார் பலஸ்தீனில் குடியேறுகின்றனர். அத்துடன் ஜரூஸலத்தைத் தழுவிய 30கிமீ பரப்பினுள் பாரசீகர்களின் தயவில் சுயாட்சி செய்தனர்.
கிமு 332ல் அலக்ஸாந்தரின் படையெடுப்பால் பலஸ்தீனம் முழுமையாக கிரேக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 323ல் அலக்ஸாந்தரின் மரணத்தைத் தொடர்ந்த கிரேக்கர்கள் யூதர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். இதனால் அதிகமானோர் கிரேக்க கடவுள்களை வணங்க ஆரம்பித்தனர்.
_.கிமு 63ல் ரோமர்கள் ஜூலியஸ் ஸீஸரின் தலைமையில் பலஸ்தீனை வெற்றி கொள்கின்றனர். பலஸ்தீனை ஆள்வதற்கு ரோமர்கள் தமக்கு விசுவாசமான ஏரொதஸ் என்பவனை ஆட்சியிலமர்த்தினர். இவன் யூதர்களைத் திருப்திப்படுத்த யூத மதத்தை தழுவினான். ஸக்கரியா, யஹ்யா (அலை) ஆகிய நபிமார்களைக் கொன்றவன் இவனே. இவனது ஆட்சி கிமு 4வரை இருந்தது. அப்போதுதான் ஈஸா (அலை) பிறந்தார்கள். அவர்களையும் கொலை செய்வதற்குத் தேடினான். அதற்குப் பயந்து மர்யம் (அலை) தன் மகனை எகிப்துக்கு எடுத்துச் சென்றார். அவன் இறந்ததை அறிந்தபின் பலஸ்தீனத்திற்கு வந்தார்.
கிபி 33ல் யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்வதற்கு முயன்றனர். ஆனால் ஈஸா (அலை) அவர்களின் முடிவு வரலாற்றுப் புதிராகவே இன்றுவரை காணப்படுகின்றது. யூதர்கள் சிலுவையில் அறைந்து அவர் கொலை செய்யபட்டார் என்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவர் கொலை செய்யப்படாமலே விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள் பல நாடுகளுக்கும் குறிப்பாக ஐரோப்பாவுக்கு தப்பிச் சென்று கிறிஸ்தவப பிரச்சாரம் செய்தனர்.
கிபி 66ல் யூதர்கள் ரோமர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதை டைடஸ் என்ற ரோமத்து தளபதி அடக்கி யூதர்களைக் கொன்றொழித்தான். அத்துடன் யூதர்கள் பலஸ்தீனத்திற்கு வரக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டனர்.
கிபி 325ல் ரோம மன்னன் கொன்ஸ்தான்தீன் கிறிஸ்தவ மதத்தை தழுவினான். அதைத் தொடர்ந்து அவன் பலஸ்தீனம் வந்து அங்கே கிறிஸ்தவ தேவாலயங்களை நிறுவினான். அத்துடன் பலஸ்தீனர்களில் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்தை தழுவ ஆரம்பித்தனர்.
கிபி 395ல் ரோம சக்கராதிபத்தியம் ரோமப் பேரரசு என்றும் பைஸான்திய பேரரசு என்றும் இரண்டாகப் பிரிகிறது. பலஸ்தீனை பைஸாந்திய கிறிஸ்தவ மன்னர்களே ஆட்சி செய்தனர். இவர்கள் ஹிரகல் என அழைக்கப்பட்டனர்.
கிபி 614ல் பாரசீகர் பலஸ்தீனைக் கைப்பற்றினர். பின்னர் 8 வருடங்களில் மீண்டும் அது பைஸாந்தியர் வசம் ஆகிறது. இது பற்றி ஸூறா அர்ரூம் குறிப்பிடுகிறது.
கிபி 636ல் கிறிஸ்தவர்களிடம் இருந்து முஸ்லிம்கள் பலஸ்தீனைக் கைப்பற்றுகின்றனர். அன்று முதல் 1917வரை அது முஸ்லிம்களாலேயே ஆளப்பட்டது. இடைக்கிடை சிலுவை வீரர்கள் அதைக் கைப்பற்றினாலும் குறுகிய கால இடை வெளியில் முஸ்லிம்கள் அதை மீட்டெடுத்தனர்.
முதலாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து பலஸ்தீனை உரிமையாக்கிக் கொண்ட இங்கிலாந்து பலஸ்தீனை யூதர்களுக்கு வழங்கவும் யூததேசமொன்றை உருவாக்க உதவுவதாகவும் வாக்களித்தது. இதன்மூலம் யூதக் குடிவரவுகள் அதிகரித்தன. அன்று முதல் இன்றுவரை பலஸ்தீனர்கள் சிறிதும் சலைக்காமல் முஸ்லிம் உம்மத்துக்குரிய புனித பூமியை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்...
இப்போதைய கால சமயத்தில் அதாவது 2018ஆம் நூற்றான்டில் இஸ்ரேலிய அரசு மூலம் அமெரிக்க அரசு முஷ்ரிக்காக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்பது இவர்களின் எச்சரிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்,
அதற்கு உதாரணமாக
இப்போது பாலஸ்தீன மக்களுக்கு
ஜனவரி 2018 முதல் வாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் எச்சரிக்கை விட்டார் அது என்னவென்றால் இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்காவிட்டால், பாலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆக இந்த விடயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இஸ்ரேலிய அரசு என்ன சொல்கின்றதோ,அதை அப்படியே பாலஸ்தீன இஸ்லாமிய மக்கள் பின்பற்ற வேண்டும் ,இல்லையேல் பாலஸ்தீன இஸ்லாமியர்கள் துன்புறுத்த படுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்,
ஆக இந்த முஷ்ரிக்குகளிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதாலேயே இவர்கள் இதை விட மேல் செய்யவும் தயங்கமாட்டார்கள்,
ஆக இந்த அதிகாரத்திற்கு எதிராக ஒரு அதிகாரத்தின் மூலமே தடுக்க முடியும் என்பது இவர்களின் எச்சரிக்கையை கொண்டு நாம் புரிந்து கொள்ள முடியும்,
ஆக மீண்டும் இந்த கட்டுரையின் மூலம் சொல்ல வருவது நம் இஸ்லாமிய உம்மத்திற்கு தேவை பாலஸ்தீன நாட்டிற்கு இந்த முஷ்ரிக்குகளின் அரசுக்கு எதிராக ஒரு இஸ்லாமிய கலீஃபா அரசு அதிகாரத்தை பெற வேண்டும்,அதற்காக நாம் ஒவ்வொரு தொழுகையிலும் ஏக இறைவனாகிய அல்லாவிடம் துவா கேட்போம்,நம்மால் முடிந்ததை முயற்சி செய்வோம்,வெற்றி தோல்வி என்பது அல்லாவின் நாட்டம்,
அல்அக்ஸா பள்ளிவாசல் என்பது கட்டிடத்திற்காக மட்டும் இஸ்லாமியர்கள் போரட வேண்டியது இல்லை முக்கிய நோக்கம் அங்கு இஸ்லாமியர்கள் ஒன்று கூட வேண்டும் என்பதற்காக ,அந்த ஒற்றுமைக்காகவே போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் எண்ணங்களில் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நோக்கமாகவும்,
முயற்சியாகவும் இருக்க வேண்டும்,
மீண்டும் இஸ்லாமியர்கள் நினைவுபடுத்த வேண்டியது என்னவென்றால் நமது போராட்டம் ,கண்டனங்கள் அரசுக்குஎதிராக ரோட்டில் நின்றால் எந்த பயனும் இல்லை அது கேமாரா வரும் வரைக்காக மட்டுமே முடியும், கேமாராவிற்காக இந்த போராட்டம் இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,
போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் மக்களின் கூட்டம் ஏன் அல்லாவிடம் ஒன்றுபட்டு கேட்க வில்லை ,
ஏன் அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலோ கேட்கவில்லை என்று கேள்வி எழுகின்றதே ?
நம்பிக்கை கொள்வோம் மும்மீன்களே ,,,,
அல்லாவிடம் முதலில் ஒன்றுபட்டு கேட்போம்,
பிறகு போரட்டம் என்று மற்ற விஷயங்களில் முயற்சிப்போம்,
நாம் அல்லாவிடம் கேட்க தவறி
நாம் வெற்றியை நோக்கி செல்வது என்பது சாத்தியம் இல்லை.
ஆக இன்ஷா அல்லா அல்அக்ஸாவின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்வோம்.
சலீம் - அமெரிக்கா.
நாம் எவ்வளவு தான் அரசுக்கு எதிராக நடுரோட்டில் நின்று கொண்டு போராடினாலும் எந்த வித பயனும் இல்லை, எந்த இடத்தில் பிரச்சனையோ அந்த இடத்தில் தான் ஒரு சிறந்த கலீஃபா இருக்க வேண்டும், ஏன் என்றால் அரசு அதிகாரம் இருந்தால் மட்டுமே அந்த வெற்றியை நோக்கி செல்ல முடியும்.
பாலஸ்தீன நாட்டில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஒன்று கூட முடியவில்லை இதுதான் பிரச்சனை,
காலம் காலமாக பாலஸ்தீனத்தில் அல்அக்ஸா பள்ளிவாசலிற்காகவே இந்த பிரச்சனை, ஆக பைத்துல்முகத்தஸ் என்பது சாதாரணமான பகுதியை சேர்ந்தது இல்லை, அதற்காக பல நபிமார்களும்,
இலட்சக்கணக்கான ஜிஹாதிகளும் உயிரை விட்டார்கள், அல்அக்ஸா மூலம் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபடுவதற்காக்கவே இந்த அனைத்து உயிர்தியாகங்களும்,
ஆனால் சைத்தானுடன் ஒன்று சேர்ந்து முஷ்ரிக்குகள் இந்த ஒற்றுமைக்கு எதிராகவே செயல்பட்டுகொண்டு வருகின்றனர்,
இந்த பூமியில் உள்ள முக்கிய மூன்று புனிதபள்ளிகளில் அல்அக்ஸா பள்ளிவாசலும் ஒன்று என்பதை இஸ்லாமியர்களாகிய நாம் மறந்து கொண்டு வருகின்றோம், நாம் மறந்து விட்ட காரணத்தால் அந்த இடங்களில் உள்ள பாலஸ்தீன நம் உறவுகள் அல்அக்ஸா பள்ளிவாசலில் ஒன்றுகூட முடியாமல் போராடி வருகின்றார்கள்,
மீண்டும், மீண்டும் இந்த அல்அக்ஸா மீட்போம் என்ற கட்டுரையில் சொல்ல வருவது என்னவென்றால் நாம்
இதற்காக இப்போதைய காலகட்டத்தில் போர் புரிய வேண்டாம் ,ரோட்டில் நின்று கொண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டாம்,
நாம் செய்ய வேண்டியது முதலில் ,
நாம் ஒவ்வொரு தொழுகையிலும் பாலஸ்தீன நாட்டில் ஒரு சிறந்த ஆட்சியாளரை இந்த இஸ்லாமிய உம்மத்திற்காக
எங்களில் இருந்தே கொண்டு வா
“யா அல்லாஹ் “என்று
அல்லாவிடம் கேட்க வேண்டும் ,
ஏன் என்றால் அவன் நாடாமல் எதுவும் நடப்பதில்லை,
ஆக அல்அக்ஸா பள்ளிவாசல் தொடர்பாக வெற்றி என்று வேண்டும் என்றால் அதற்கு அந்த இடத்தில் அரசு அதிகாரம் பெற்று
இஸ்லாமிய சிறந்த ஆட்சியாளர் இருக்க வேண்டும்,
ஆக அப்படி ஒரு கலீஃபா இல்லாமல் இருந்தால் பாலஸ்தீன நாட்டிற்கு எதிராக முஷ்ரிக்குகள் எச்சரிக்கை விடுவார்கள், பாலஸ்தீன மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துவார்கள், அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் முஷ்ரிக்குகளிடம் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது, என்பதை இஸ்லாமியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
(அல்அக்ஸா பள்ளிவாசலில் உள்ள தலைநகரம் ஜெருசலேம் )
மீண்டும் நினைவுபடுத்த இதை படிப்போம்
இஸ்ரேல் பிரதமர் கூறியதவாது என்னவென்றால்
"ஜெருசலேம் 3000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை... ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது, இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம், எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும், இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால் விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்"
இது இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் கருத்து. இவரது கூற்று எவ்வளவு தூரம் பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆதாரங்களுடன் பொருந்துகிறது என்று பார்ப்போம்.
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன் அரேபியத் தீபகற்பத்தில் இருந்து இடம்பெயர்ந்த கன்ஆனியர் பலஸ்தீனில் குடியேறினார்கள். இவர்கள் அரேபிய செமித்தியர்கள். இவர்கள் பபிலோனியாவில் இருந்து தப்பிவந்த இப்ராஹீம் (அலை) அவர்களை வரவேற்று அடைக்களம் கொடுத்தனர்.
இப்ராஹீம் (அலை) அவரகளது பேரணாகிய யாகூப் (அலை); கன்ஆனியர்களுடன் சமாதானமாக வாழும் போது அவரது அன்புக்குரிய மகனாகியக சிறுவன் யூஸுபை அவரது ஏனைய புத்திரர்கள் சதி மூலம் கொலை செய்ய எடுத்த முயற்சியின் பயனாக இவர்கள் பிற்காலத்தில் எகிப்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. எகிப்தில் 300 வருட காலம் வாழ்ந்தார்கள். (யாகூப் நபியின் பிள்ளைகளே பனூ இஸ்ராயீல் எனப்படுகின்றனர்).
கிமு 1250ல் இவர்கள் பிர்அவ்னின் அடக்குமுறை காரணமாக மூஸா (அலை) தலைமையில் எகிப்தில் இருந்து தப்பி பலஸ்தீனை நோக்கி வந்தார்கள். ஆனாலும் இவர்களது கோழைத்தனம் காரணமாக மூஸாவுடன் முரண்பட்டு பலஸ்தீனத்தில் நுழைய மறுத்தனர். அதனால் சினாய்ப்பாலை வனத்தில் பல வருடங்கள் அலைந்து திரிந்தார்கள்.
மூஸாவுடன் முரண்பட்டதன் விளைவை நினைத்து கவலைப்பட்ட பின்வந்த பரம்பறையினர் கிமு 1004ல் தாலூத் மன்னனின் தலைமையில் போராடினர். வெற்றி பெற்றனர். பின் தாவுத் நபியும் சுலைமான் நபியும் ஏரத்தாள 90 வருடங்கள் அங்கு ஆட்சி செய்தனர். இவ்விரு நபிமார்களின் நீதியான ஆட்சிக்குப் பின் பனூஇஸ்ரவேலர்கள் பிரிந்து தமக்குள் சர்ச்சைப்பட்டு பாவகாரியங்களில் ஈடுபடலாயினர். அவர்களுக்கென்று நிலையான ஆட்சி அமையவுமில்லை.
கி.மு 586ல் நுபுஹத் நஸ்ரின் படையெடுப்பினால் இஸ்ரவேலர்கள் முழுமையாக வீழ்ச்சியடைந்து அதிகமானோர் அங்கிருந்து அடிமைகளாக பப்லோனியாவிற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
539ல் பலஸ்தீன் பாரசீகரின் கீழ் வருகிறது. இக்காலத்தில் மீண்டும் யூதர்களில் ஒருசாரார் பலஸ்தீனில் குடியேறுகின்றனர். அத்துடன் ஜரூஸலத்தைத் தழுவிய 30கிமீ பரப்பினுள் பாரசீகர்களின் தயவில் சுயாட்சி செய்தனர்.
கிமு 332ல் அலக்ஸாந்தரின் படையெடுப்பால் பலஸ்தீனம் முழுமையாக கிரேக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 323ல் அலக்ஸாந்தரின் மரணத்தைத் தொடர்ந்த கிரேக்கர்கள் யூதர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். இதனால் அதிகமானோர் கிரேக்க கடவுள்களை வணங்க ஆரம்பித்தனர்.
_.கிமு 63ல் ரோமர்கள் ஜூலியஸ் ஸீஸரின் தலைமையில் பலஸ்தீனை வெற்றி கொள்கின்றனர். பலஸ்தீனை ஆள்வதற்கு ரோமர்கள் தமக்கு விசுவாசமான ஏரொதஸ் என்பவனை ஆட்சியிலமர்த்தினர். இவன் யூதர்களைத் திருப்திப்படுத்த யூத மதத்தை தழுவினான். ஸக்கரியா, யஹ்யா (அலை) ஆகிய நபிமார்களைக் கொன்றவன் இவனே. இவனது ஆட்சி கிமு 4வரை இருந்தது. அப்போதுதான் ஈஸா (அலை) பிறந்தார்கள். அவர்களையும் கொலை செய்வதற்குத் தேடினான். அதற்குப் பயந்து மர்யம் (அலை) தன் மகனை எகிப்துக்கு எடுத்துச் சென்றார். அவன் இறந்ததை அறிந்தபின் பலஸ்தீனத்திற்கு வந்தார்.
கிபி 33ல் யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்வதற்கு முயன்றனர். ஆனால் ஈஸா (அலை) அவர்களின் முடிவு வரலாற்றுப் புதிராகவே இன்றுவரை காணப்படுகின்றது. யூதர்கள் சிலுவையில் அறைந்து அவர் கொலை செய்யபட்டார் என்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவர் கொலை செய்யப்படாமலே விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள் பல நாடுகளுக்கும் குறிப்பாக ஐரோப்பாவுக்கு தப்பிச் சென்று கிறிஸ்தவப பிரச்சாரம் செய்தனர்.
கிபி 66ல் யூதர்கள் ரோமர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதை டைடஸ் என்ற ரோமத்து தளபதி அடக்கி யூதர்களைக் கொன்றொழித்தான். அத்துடன் யூதர்கள் பலஸ்தீனத்திற்கு வரக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டனர்.
கிபி 325ல் ரோம மன்னன் கொன்ஸ்தான்தீன் கிறிஸ்தவ மதத்தை தழுவினான். அதைத் தொடர்ந்து அவன் பலஸ்தீனம் வந்து அங்கே கிறிஸ்தவ தேவாலயங்களை நிறுவினான். அத்துடன் பலஸ்தீனர்களில் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்தை தழுவ ஆரம்பித்தனர்.
கிபி 395ல் ரோம சக்கராதிபத்தியம் ரோமப் பேரரசு என்றும் பைஸான்திய பேரரசு என்றும் இரண்டாகப் பிரிகிறது. பலஸ்தீனை பைஸாந்திய கிறிஸ்தவ மன்னர்களே ஆட்சி செய்தனர். இவர்கள் ஹிரகல் என அழைக்கப்பட்டனர்.
கிபி 614ல் பாரசீகர் பலஸ்தீனைக் கைப்பற்றினர். பின்னர் 8 வருடங்களில் மீண்டும் அது பைஸாந்தியர் வசம் ஆகிறது. இது பற்றி ஸூறா அர்ரூம் குறிப்பிடுகிறது.
கிபி 636ல் கிறிஸ்தவர்களிடம் இருந்து முஸ்லிம்கள் பலஸ்தீனைக் கைப்பற்றுகின்றனர். அன்று முதல் 1917வரை அது முஸ்லிம்களாலேயே ஆளப்பட்டது. இடைக்கிடை சிலுவை வீரர்கள் அதைக் கைப்பற்றினாலும் குறுகிய கால இடை வெளியில் முஸ்லிம்கள் அதை மீட்டெடுத்தனர்.
முதலாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து பலஸ்தீனை உரிமையாக்கிக் கொண்ட இங்கிலாந்து பலஸ்தீனை யூதர்களுக்கு வழங்கவும் யூததேசமொன்றை உருவாக்க உதவுவதாகவும் வாக்களித்தது. இதன்மூலம் யூதக் குடிவரவுகள் அதிகரித்தன. அன்று முதல் இன்றுவரை பலஸ்தீனர்கள் சிறிதும் சலைக்காமல் முஸ்லிம் உம்மத்துக்குரிய புனித பூமியை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்...
இப்போதைய கால சமயத்தில் அதாவது 2018ஆம் நூற்றான்டில் இஸ்ரேலிய அரசு மூலம் அமெரிக்க அரசு முஷ்ரிக்காக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்பது இவர்களின் எச்சரிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்,
அதற்கு உதாரணமாக
இப்போது பாலஸ்தீன மக்களுக்கு
ஜனவரி 2018 முதல் வாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் எச்சரிக்கை விட்டார் அது என்னவென்றால் இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்காவிட்டால், பாலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆக இந்த விடயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இஸ்ரேலிய அரசு என்ன சொல்கின்றதோ,அதை அப்படியே பாலஸ்தீன இஸ்லாமிய மக்கள் பின்பற்ற வேண்டும் ,இல்லையேல் பாலஸ்தீன இஸ்லாமியர்கள் துன்புறுத்த படுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்,
ஆக இந்த முஷ்ரிக்குகளிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதாலேயே இவர்கள் இதை விட மேல் செய்யவும் தயங்கமாட்டார்கள்,
ஆக இந்த அதிகாரத்திற்கு எதிராக ஒரு அதிகாரத்தின் மூலமே தடுக்க முடியும் என்பது இவர்களின் எச்சரிக்கையை கொண்டு நாம் புரிந்து கொள்ள முடியும்,
ஆக மீண்டும் இந்த கட்டுரையின் மூலம் சொல்ல வருவது நம் இஸ்லாமிய உம்மத்திற்கு தேவை பாலஸ்தீன நாட்டிற்கு இந்த முஷ்ரிக்குகளின் அரசுக்கு எதிராக ஒரு இஸ்லாமிய கலீஃபா அரசு அதிகாரத்தை பெற வேண்டும்,அதற்காக நாம் ஒவ்வொரு தொழுகையிலும் ஏக இறைவனாகிய அல்லாவிடம் துவா கேட்போம்,நம்மால் முடிந்ததை முயற்சி செய்வோம்,வெற்றி தோல்வி என்பது அல்லாவின் நாட்டம்,
அல்அக்ஸா பள்ளிவாசல் என்பது கட்டிடத்திற்காக மட்டும் இஸ்லாமியர்கள் போரட வேண்டியது இல்லை முக்கிய நோக்கம் அங்கு இஸ்லாமியர்கள் ஒன்று கூட வேண்டும் என்பதற்காக ,அந்த ஒற்றுமைக்காகவே போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் எண்ணங்களில் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நோக்கமாகவும்,
முயற்சியாகவும் இருக்க வேண்டும்,
மீண்டும் இஸ்லாமியர்கள் நினைவுபடுத்த வேண்டியது என்னவென்றால் நமது போராட்டம் ,கண்டனங்கள் அரசுக்குஎதிராக ரோட்டில் நின்றால் எந்த பயனும் இல்லை அது கேமாரா வரும் வரைக்காக மட்டுமே முடியும், கேமாராவிற்காக இந்த போராட்டம் இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,
போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் மக்களின் கூட்டம் ஏன் அல்லாவிடம் ஒன்றுபட்டு கேட்க வில்லை ,
ஏன் அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலோ கேட்கவில்லை என்று கேள்வி எழுகின்றதே ?
நம்பிக்கை கொள்வோம் மும்மீன்களே ,,,,
அல்லாவிடம் முதலில் ஒன்றுபட்டு கேட்போம்,
பிறகு போரட்டம் என்று மற்ற விஷயங்களில் முயற்சிப்போம்,
நாம் அல்லாவிடம் கேட்க தவறி
நாம் வெற்றியை நோக்கி செல்வது என்பது சாத்தியம் இல்லை.
ஆக இன்ஷா அல்லா அல்அக்ஸாவின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்வோம்.
சலீம் - அமெரிக்கா.
Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தை இவர்தான்.
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல் -மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன. 12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும், கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.
நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக
எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்ற அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில்நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன்காரணமாக வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறைவழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
இந்தியர்களிடமிருந்து கணித எண்களைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த
காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் அல்ஜீப்ரா என்ற சொல் பிறந்தது. வடிவக்கணிதம் (Geometry), முக்கோணக்கணிதம்
(Trigonometry) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும்.
இவரது முழுப்பெயர் அபூயூசுஃப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.
அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.
நன்றி - இணையம்.
நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக
எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்ற அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில்நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன்காரணமாக வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறைவழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
இந்தியர்களிடமிருந்து கணித எண்களைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த
காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் அல்ஜீப்ரா என்ற சொல் பிறந்தது. வடிவக்கணிதம் (Geometry), முக்கோணக்கணிதம்
(Trigonometry) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும்.
இவரது முழுப்பெயர் அபூயூசுஃப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.
அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.
நன்றி - இணையம்.
பயணத்தின் போது பாதுகாப்பு
🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் (“அல்லாஹு அக்பர்”) கூறுவார்கள். பிறகு “சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லாஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்” என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
🍃திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: “ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்” (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்)
📚 நூல் : (முஸ்லிம் 2612) 📚
🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் “அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்”
என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.
(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
நூல் : (முஸ்லிம் 5247).
நன்றி - இணையம்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
🍃திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: “ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்” (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்)
📚 நூல் : (முஸ்லிம் 2612) 📚
🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் “அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்”
என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.
(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
நூல் : (முஸ்லிம் 5247).
நன்றி - இணையம்.
சிற்றின்பமும் ... பேரின்பமும்..
ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது - நண்பா, சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது.
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?
உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?
அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும் "
என்றது.
தேனீ கோபப்படவில்லை. உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு துர்நாற்றம் பிடித்தவையாகவும், அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே
நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.
ஆனால் உன்னுடைய உணவு, கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும்.
அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த துர்நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது.
ஈ அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஓடிப் போனது .
பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.
சிற்றின்பம் ஈ தேடுவது, பேரின்பம் தேனி தேடுவது.....
அதனால்தான் அந்த இறைவனை அடையும் பேரின்பத்தை தேடிய இறைநேசர்களின் வாழ்க்கையும், அவர்களின் வார்த்தைகளும் இன்றும் தேனாய் இனித்துக்கொண்டிருக்கிறது ...
செய்யது அஹமது அலி . பாகவி.
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது.
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?
உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?
அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும் "
என்றது.
தேனீ கோபப்படவில்லை. உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு துர்நாற்றம் பிடித்தவையாகவும், அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே
நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.
ஆனால் உன்னுடைய உணவு, கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும்.
அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த துர்நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது.
ஈ அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஓடிப் போனது .
பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.
சிற்றின்பம் ஈ தேடுவது, பேரின்பம் தேனி தேடுவது.....
அதனால்தான் அந்த இறைவனை அடையும் பேரின்பத்தை தேடிய இறைநேசர்களின் வாழ்க்கையும், அவர்களின் வார்த்தைகளும் இன்றும் தேனாய் இனித்துக்கொண்டிருக்கிறது ...
செய்யது அஹமது அலி . பாகவி.
நாம் எந்த வகை தொழுகையாளிகள்???
ذكر ابن القيم - رحمه الله - في كتابه : ( الوابل الصيب ) أن الناس في الصلاة على خمسة أقسام :
இமாம் இப்னுல் கய்யிம் ( ரஹ்) அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்
معاقب :
( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை
அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
அவனைத் தண்டிப்பான்.
محاسب:
( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை
மறுமையில் அந்தத் தொழுகையைப் பற்றி
அல்லாஹ் விசாரிப்பான்.
مكفرٌ عنه:
( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்கு பரிகாரமாகும் தொழுகை
அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
அவனின் பாவங்களை மன்னிப்பான்
مثاب:
( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான்
مقرَّب
( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ் வின் பால் நெருக்கமாக்கும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ்
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.
முதல் வகை தொழுகை.
ஒருவன் தொழுகிறான்ஆ னால் ஒழுங்காக முழுமையாக ஒழு செய்வதிலோ, தொழுகையுடைய, பர்லு, வாஜிபு, சுன்னத் போன்றவைகளை சரிவர செய்யவேண்டும் என்ற கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகிறான் இத்தகைய தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்.
இரண்டாவது வகை.
ஒருவன் தொழுகை நிறைவடைதற்குத் தேவையான பர்லு ,வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான், ஆனால் தக்பீர் கட்டி தொழுகையில் நுழைந்ததிலிருந்து அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறி தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் என தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கியவாறே தொழுது முடிக்கிறான். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.
மூன்றாவது வகை:
தொழுகையின் அனைத்து ஷர்த்துகளையும் முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல் தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே தொழுது முடிக்கிறான். இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.
நான்காவது வகை:
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழு கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் அளப்பறிய நன்மைகளை வழங்குகிறான்.
ஐந்தாவது வகை: மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்,சுன்னத்துகளையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லா வின்முன் அல்லாஹ் இருப்பதை போன்ற உள்ளச்சத்துடன் தொழுகிறான். இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்த தொழுகைக்குமுள்ள வித்தியாசம். அதில் உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும் அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு இருக்காது.
ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப்பு தன் முன்னால் இருப்பதை உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுகவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது. இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை.
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ் வின் பால் நெருங்கச் செய்யும்.
சொல்லுங்கள் சகோதரர்களே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை?
வாருங்கள் நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம்.
------
By
Nooul Ameen.
இமாம் இப்னுல் கய்யிம் ( ரஹ்) அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்
معاقب :
( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை
அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
அவனைத் தண்டிப்பான்.
محاسب:
( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை
மறுமையில் அந்தத் தொழுகையைப் பற்றி
அல்லாஹ் விசாரிப்பான்.
مكفرٌ عنه:
( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்கு பரிகாரமாகும் தொழுகை
அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
அவனின் பாவங்களை மன்னிப்பான்
مثاب:
( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான்
مقرَّب
( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ் வின் பால் நெருக்கமாக்கும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ்
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.
முதல் வகை தொழுகை.
ஒருவன் தொழுகிறான்ஆ னால் ஒழுங்காக முழுமையாக ஒழு செய்வதிலோ, தொழுகையுடைய, பர்லு, வாஜிபு, சுன்னத் போன்றவைகளை சரிவர செய்யவேண்டும் என்ற கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகிறான் இத்தகைய தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்.
இரண்டாவது வகை.
ஒருவன் தொழுகை நிறைவடைதற்குத் தேவையான பர்லு ,வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான், ஆனால் தக்பீர் கட்டி தொழுகையில் நுழைந்ததிலிருந்து அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறி தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் என தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கியவாறே தொழுது முடிக்கிறான். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.
மூன்றாவது வகை:
தொழுகையின் அனைத்து ஷர்த்துகளையும் முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல் தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே தொழுது முடிக்கிறான். இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.
நான்காவது வகை:
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழு கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் அளப்பறிய நன்மைகளை வழங்குகிறான்.
ஐந்தாவது வகை: மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்,சுன்னத்துகளையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லா வின்முன் அல்லாஹ் இருப்பதை போன்ற உள்ளச்சத்துடன் தொழுகிறான். இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்த தொழுகைக்குமுள்ள வித்தியாசம். அதில் உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும் அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு இருக்காது.
ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப்பு தன் முன்னால் இருப்பதை உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுகவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது. இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை.
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ் வின் பால் நெருங்கச் செய்யும்.
சொல்லுங்கள் சகோதரர்களே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை?
வாருங்கள் நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம்.
------
By
Nooul Ameen.
நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொடர் - 4
நபியை பரிகசித்த மத்யன் வாசிகள்
அந்த மக்கள் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீங்கள் தொழுது கொண்டிருக்கிறீர்களே அந்த தொழுகைதான் உங்களை இவ்வாறு எங்கள் இறைவனை வெறுக்க தூண்டுகிறதா என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் தொழுவதை பரிகசித்தார்கள்.
அம்மக்கள் அவரை பொய்ப்படுத்தினர்
அதற்கு நபி சுயைப் அலைஹி வசல்லம் எனது சமூகமே உங்களுடைய செயலை நீங்கள் செய்து கொள்ளுங்கள். என்னுடைய செயலை நான் செய்துகொள்கிறேன். யாருக்கு இழிவு படுத்தும் வேதனை வந்தடையும் இன்னும் பொய்யர் யார் என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்திருங்கள் நிச்சயம் நான் உங்களுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மக்கள் நீங்கள் கூறும் அநேகமான விசயங்களை ஏற்றுகொள்ள இயலவில்லை நாங்கள் உங்களை எங்களிடையில் மிக்க பலவீனமானவர்களாகவே காண்கிறோம். மேலும் உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் உம்மை நாங்கள் கல்லால் அடித்து கொன்று விடுவோம் என்று கூறினார்கள். அதற்க்கு நமது தந்தை சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களே அல்லாஹுவைவிட என்னுடைய குடும்பத்தார்கள் உங்களுக்கு மேலானவர்களாக ஆஹிவிட்டர்களா நிச்சயமாக அல்லாஹுவை நீங்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் தள்ளிவிட்டீர்கள். நிச்சயமாக எனது ரட்சகன் அனைத்தையும் தன் அறிவாள் சூழ்ந்தவனாகவே இருக்கிறான் . ஆஹாவே அந்த மக்கள் அனைவரும் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களை பொய்யாக்கவே நாடினார்கள். மேலும் அவர்கள் நபி சுஹைப் அலைஹி வாசலாம் அவர்களையும் அவருடம் ஈமான் கொண்டமக்களையும் துன்புறுத்தவே நாடினார்கள்.
*மத்யன் வாசிகள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டனர்*
ஆதலால் அல்லாஹ் தனது வேதனையை இறக்க நாடிவிட்டான். ஆதலால் அந்த மக்களை அல்லா பூகம்பத்தால் அளித்தான் அந்த அழிவை பற்றி அல்லாஹ் கூறுகிறான் சமூது கூட்டம் நாசமானதுபோல் இந்த மத்யன் கூட்டமும் நாசமாகி விட்டது மேலும் அவர்கள் முகம் குப்புற விழுந்து இறந்தார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: நம் அருளால் சுயைபையும் சுயைபுடன் விசுவாசம் கொண்ட நன் மக்களையும் நாம் காப்பாற்றினோம்.
சுயைப் நபியின் பிள்ளைகள்
மேலும் அல்லாஹ் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இரு மகள்கள் பிறந்தன. அவர்களது வரலாறு இன்ஷா அல்லாஹ் நபி மூசா அலைஹி வசல்லம் அவர்களுடன் ஒத்தே வருகிறது ஏன் ஏன்றால் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களது மகளை நபி மூசா அலைஹி வசல்லம் திருமணம் செய்து கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
இத்துடன் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு முடிவுற்றது.
அந்த மக்கள் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீங்கள் தொழுது கொண்டிருக்கிறீர்களே அந்த தொழுகைதான் உங்களை இவ்வாறு எங்கள் இறைவனை வெறுக்க தூண்டுகிறதா என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் தொழுவதை பரிகசித்தார்கள்.
அம்மக்கள் அவரை பொய்ப்படுத்தினர்
அதற்கு நபி சுயைப் அலைஹி வசல்லம் எனது சமூகமே உங்களுடைய செயலை நீங்கள் செய்து கொள்ளுங்கள். என்னுடைய செயலை நான் செய்துகொள்கிறேன். யாருக்கு இழிவு படுத்தும் வேதனை வந்தடையும் இன்னும் பொய்யர் யார் என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்திருங்கள் நிச்சயம் நான் உங்களுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மக்கள் நீங்கள் கூறும் அநேகமான விசயங்களை ஏற்றுகொள்ள இயலவில்லை நாங்கள் உங்களை எங்களிடையில் மிக்க பலவீனமானவர்களாகவே காண்கிறோம். மேலும் உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் உம்மை நாங்கள் கல்லால் அடித்து கொன்று விடுவோம் என்று கூறினார்கள். அதற்க்கு நமது தந்தை சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களே அல்லாஹுவைவிட என்னுடைய குடும்பத்தார்கள் உங்களுக்கு மேலானவர்களாக ஆஹிவிட்டர்களா நிச்சயமாக அல்லாஹுவை நீங்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் தள்ளிவிட்டீர்கள். நிச்சயமாக எனது ரட்சகன் அனைத்தையும் தன் அறிவாள் சூழ்ந்தவனாகவே இருக்கிறான் . ஆஹாவே அந்த மக்கள் அனைவரும் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களை பொய்யாக்கவே நாடினார்கள். மேலும் அவர்கள் நபி சுஹைப் அலைஹி வாசலாம் அவர்களையும் அவருடம் ஈமான் கொண்டமக்களையும் துன்புறுத்தவே நாடினார்கள்.
*மத்யன் வாசிகள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டனர்*
ஆதலால் அல்லாஹ் தனது வேதனையை இறக்க நாடிவிட்டான். ஆதலால் அந்த மக்களை அல்லா பூகம்பத்தால் அளித்தான் அந்த அழிவை பற்றி அல்லாஹ் கூறுகிறான் சமூது கூட்டம் நாசமானதுபோல் இந்த மத்யன் கூட்டமும் நாசமாகி விட்டது மேலும் அவர்கள் முகம் குப்புற விழுந்து இறந்தார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: நம் அருளால் சுயைபையும் சுயைபுடன் விசுவாசம் கொண்ட நன் மக்களையும் நாம் காப்பாற்றினோம்.
சுயைப் நபியின் பிள்ளைகள்
மேலும் அல்லாஹ் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இரு மகள்கள் பிறந்தன. அவர்களது வரலாறு இன்ஷா அல்லாஹ் நபி மூசா அலைஹி வசல்லம் அவர்களுடன் ஒத்தே வருகிறது ஏன் ஏன்றால் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களது மகளை நபி மூசா அலைஹி வசல்லம் திருமணம் செய்து கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
இத்துடன் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு முடிவுற்றது.
நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொடர் - 3
தோழர்களுக்கு ஆறுதல் கூறிய சுயைப் அலைஹிஸ்ஸலாம்
இவ்வாறு அவர்கள் பரிசகசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் இன்னும் நான் எதை கொண்டு அனுப்பபட்டேனோ அதை உங்களின் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும் மற்றும் ஒரு சாரார் விசுவாசம் கொள்ளாமல் இருக்கும் இந்நிலையில் நமக்கு மத்தியில் அல்லா தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் இருங்கள் என்று தன்னுடன் விசுவாசம் கொண்ட மக்களிடம் அவர் கூறினார் .மேலும் அவர் கூறினார் அல்லாஹுவே தீர்ப்பு வழங்குவதில் மிக மேலானவன், .
இவ்வாறு நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர் மேலும் மேலும் தனது பிரசாரத்தை அதிகப்படுத்தினார்.
சுயைப் நபியின் எச்சரிக்கை
அவர் மக்களை பார்த்து நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். அவ்வாறிருக்க என் மோசம் செய்கிறீர்கள் அவ்வாறு இருக்க நிச்சயமாக உங்களை சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த வேதனையை நான் பயப்படுகிறேன் என்று அறிவுரை கூறினார் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள்.
மேலும் அவர் கூறினார். நீங்கள் விசுவாசம் கொண்டவராக இருந்தால் அல்லா மீதப்படுத்துவதே மிக்க மேலானது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 16-01-2018.
இவ்வாறு அவர்கள் பரிசகசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் இன்னும் நான் எதை கொண்டு அனுப்பபட்டேனோ அதை உங்களின் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும் மற்றும் ஒரு சாரார் விசுவாசம் கொள்ளாமல் இருக்கும் இந்நிலையில் நமக்கு மத்தியில் அல்லா தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் இருங்கள் என்று தன்னுடன் விசுவாசம் கொண்ட மக்களிடம் அவர் கூறினார் .மேலும் அவர் கூறினார் அல்லாஹுவே தீர்ப்பு வழங்குவதில் மிக மேலானவன், .
இவ்வாறு நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர் மேலும் மேலும் தனது பிரசாரத்தை அதிகப்படுத்தினார்.
சுயைப் நபியின் எச்சரிக்கை
அவர் மக்களை பார்த்து நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். அவ்வாறிருக்க என் மோசம் செய்கிறீர்கள் அவ்வாறு இருக்க நிச்சயமாக உங்களை சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த வேதனையை நான் பயப்படுகிறேன் என்று அறிவுரை கூறினார் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள்.
மேலும் அவர் கூறினார். நீங்கள் விசுவாசம் கொண்டவராக இருந்தால் அல்லா மீதப்படுத்துவதே மிக்க மேலானது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 16-01-2018.
நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொடர் - 2
சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவுரை
நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த மக்களிடம் மேலும் அல்லாஹ் நீங்கள் குறைவானவர்களாக இருந்தபோது உங்களை அதிகமாக்கி வைத்ததை நினைவு கூறுங்கள். குழப்பம் செய்து கொண்டிருந்தவர்களின் இறுதி முடிவு எவ்வாறு இருந்தது என்பதை உங்கள் முன்னால் வாழ்ந்த சமூகத்தை எண்ணிபாருங்கள் என்று அறிவுரை கூறினார்.
அதற்கு அந்த சமூகத்தாரின் கருவங்கொண்டிருந்தார்களே அத்தகைய தலைவர்கள் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் ஷுயைபே! நாம் உம்மையும் உன்னுடன் விசுவாசித்தொரையும் நம்முடைய ஊரைவிட்டு
வெளியேற்றி விடுவோம். அல்லது நிச்சயமாக நீங்கள் அனைவரும் நம்முடைய மார்கத்துக்கு திரும்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நம்முடைய தந்தை நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கேட்டார்கள் நாங்கள் உங்கள் மார்கத்தை வெறுப்பவராக இருந்தாலுமா என்று . மேலும் அல்லாஹ் வழிகேட்டில் இருந்து எங்களை பாதுகாத்த பிறகு நாங்கள் உங்களுடன் வந்து இணைந்தால் அல்லாஹ்வின் மீது பொய்யுரைதவர்களாக நாங்கள் மாறிவிடுவோம். எங்கள் ரட்சகன் அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் இதிலிருந்து மீளுவதர்க்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
மேலும் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.எங்கள் ரட்சகன் அவன் அறிவால் அனைத்து பொருள்களிலும் சூழ்ந்திருக்கிறான். அல்லாஹுவின் மீதே எங்களது நம்பிக்கையை நாங்கள் வைத்து விட்டோம்.
சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை
மேலும் அவர் அல்லாஹுவிடம் கோரினார் யா அல்லாஹ் எங்களுக்கும் எங்களுடைய சமுதாயத்திருக்கும் இடையே நீ நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே தீர்ப்பு வழங்குவோரில் மிக மேலானவன் என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் பிராத்தித்தார்கள்.
மேலும் அந்த சமூகத்தாரின் பிரத்தானிகள் ஈமான் கொண்ட நன் மக்களை பார்த்து நீங்கள் சுஹைபை பின்பற்றினால் நீங்கள்தான் நஷ்டவாளிகள் என்று கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 16-01-2018.
நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த மக்களிடம் மேலும் அல்லாஹ் நீங்கள் குறைவானவர்களாக இருந்தபோது உங்களை அதிகமாக்கி வைத்ததை நினைவு கூறுங்கள். குழப்பம் செய்து கொண்டிருந்தவர்களின் இறுதி முடிவு எவ்வாறு இருந்தது என்பதை உங்கள் முன்னால் வாழ்ந்த சமூகத்தை எண்ணிபாருங்கள் என்று அறிவுரை கூறினார்.
அதற்கு அந்த சமூகத்தாரின் கருவங்கொண்டிருந்தார்களே அத்தகைய தலைவர்கள் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் ஷுயைபே! நாம் உம்மையும் உன்னுடன் விசுவாசித்தொரையும் நம்முடைய ஊரைவிட்டு
வெளியேற்றி விடுவோம். அல்லது நிச்சயமாக நீங்கள் அனைவரும் நம்முடைய மார்கத்துக்கு திரும்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நம்முடைய தந்தை நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கேட்டார்கள் நாங்கள் உங்கள் மார்கத்தை வெறுப்பவராக இருந்தாலுமா என்று . மேலும் அல்லாஹ் வழிகேட்டில் இருந்து எங்களை பாதுகாத்த பிறகு நாங்கள் உங்களுடன் வந்து இணைந்தால் அல்லாஹ்வின் மீது பொய்யுரைதவர்களாக நாங்கள் மாறிவிடுவோம். எங்கள் ரட்சகன் அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் இதிலிருந்து மீளுவதர்க்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
மேலும் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.எங்கள் ரட்சகன் அவன் அறிவால் அனைத்து பொருள்களிலும் சூழ்ந்திருக்கிறான். அல்லாஹுவின் மீதே எங்களது நம்பிக்கையை நாங்கள் வைத்து விட்டோம்.
சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை
மேலும் அவர் அல்லாஹுவிடம் கோரினார் யா அல்லாஹ் எங்களுக்கும் எங்களுடைய சமுதாயத்திருக்கும் இடையே நீ நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே தீர்ப்பு வழங்குவோரில் மிக மேலானவன் என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் பிராத்தித்தார்கள்.
மேலும் அந்த சமூகத்தாரின் பிரத்தானிகள் ஈமான் கொண்ட நன் மக்களை பார்த்து நீங்கள் சுஹைபை பின்பற்றினால் நீங்கள்தான் நஷ்டவாளிகள் என்று கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 16-01-2018.
நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொடர் - 1
நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு
நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களது மகள் வலி பேரன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்.மேலும் இவர் ஒரு அரபி மொழிக்கு அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவராக இருக்கிறார். இவர் மத்யன் என்ற ஊர் வாசிகளுக்கு அனுப்பப்பட்ட நபி இந்த மத்யன் என்ற ஊர் இன்று வரைபடத்தில் ஷா கடல் (dead sea)அருகில் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்புப் பணி
இவர் தனது நுபுவத்தை (நபித்துவத்தை) பெற்றவுடன் அவர் அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்க தொடங்கினார் மேலும் இவரின் அழைப்பு பணியை பற்றி அல்லா குறிப்பிடும்பொழுது அந்த மக்கள் செய்யும் பாவத்தையும் இணைத்தே குறிப்பிடுகிறான்.
மேலும் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகத்திடம் எனது சமூகமே அல்லாஹ் ஒருவனையே உங்கள் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று கொள்ளுங்கள். அவனை தவிர வணங்க தகுதியானவன் வேறு யாரும் இல்லை. உங்கள் இரட்சகனிடம் இறந்து நிச்சயமாக தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது ஆகவே உங்கள் வியாபாரங்களில் அளவை பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக நிருங்கள்.
மேலும் நீங்கள் மக்களுக்கு செலுத்தவேண்டிய பொருட்களில் யாதொன்றையும் குறைத்தும் விடாதீர்கள் மேலும் இப் பூமியில் அது சீர்திருத்தம் அடைந்த பின்னர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணாதீர் நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் இதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார்.
அல்குர்ஆன் 7 -85.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 16-01-2018.
Sunday, 14 January 2018
இஸ்லாமிய திருமண தகவல் மையம்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானி ர்ரஹீம்
இஸ்லாமிய திருமண தகவல் மையம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும் பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் - புஹாரி 1905.
🖊📖தங்களது விவரங்களை எங்களுடைய இஸ்லாமிய திருமண தகவல் மையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
💡பெற்றோர்களை இழந்த (எத்தீம் கானா)
மதரஸாக்களில் ஆலிமா, முபல்லிஹா, முஸ்லிமா படிக்கக் கூடிய பெண்களுக்கும், ஏழ்ழை நிலையிலுள்ள பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
நமது 🌴கியாமத் நாளை நோக்கி🌴 மாத இதழில் உங்களுடைய விவரங்களை பதியப்படும்.
இன்ஷா அல்லாஹ் உங்களுக்ககான பொருத்தமானவர்கள் அமைந்தால் உங்களிடம் தெரிவிப்போம்.
விவரங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் + 91-9841460795. (சென்னை)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக.
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள் புஹாரி - 5090.
முஹம்மது முஸ்தபா - சென்னை.
இஸ்லாமிய திருமண தகவல் மையம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும் பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் - புஹாரி 1905.
🖊📖தங்களது விவரங்களை எங்களுடைய இஸ்லாமிய திருமண தகவல் மையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
💡பெற்றோர்களை இழந்த (எத்தீம் கானா)
மதரஸாக்களில் ஆலிமா, முபல்லிஹா, முஸ்லிமா படிக்கக் கூடிய பெண்களுக்கும், ஏழ்ழை நிலையிலுள்ள பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
நமது 🌴கியாமத் நாளை நோக்கி🌴 மாத இதழில் உங்களுடைய விவரங்களை பதியப்படும்.
இன்ஷா அல்லாஹ் உங்களுக்ககான பொருத்தமானவர்கள் அமைந்தால் உங்களிடம் தெரிவிப்போம்.
விவரங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் + 91-9841460795. (சென்னை)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக.
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள் புஹாரி - 5090.
முஹம்மது முஸ்தபா - சென்னை.
ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் இப்னு ஹுசைமா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
இப்னு ஹுசைமா
இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்ஹாக்
குறிப்புப் பெயர் அபூபக்கர்
தந்தை பெயர் இஸ்ஹாக் பின் ஹுசைமா
குலம் சுலமி கோத்திரத்தைச் சார்ந்தவர்.
பிறப்பு ஹிஜ்ரீ இருநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு நைசாபூர் என்ற ஊரில் பிறந்தார்.
ஆசிரியர்கள் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், முஹம்மத் பின் முஸன்னா, முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.
படைப்புகள் :கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவத்தைப் பற்றிய புத்தகம்) ஷஃனுத் துஆ வ தப்சீரு மற்றும் சஹீஹு இப்னி ஹஸைமா ஆகிய மூன்று புத்தகங்கள்.
மரணம் : ஹிஜ்ரீ 311 வது வருடம் துல்கஃதா மாதத்தில் சனிக்கிழமை இரவு அன்று இவர் மரணித்தார்.
இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்ஹாக்
குறிப்புப் பெயர் அபூபக்கர்
தந்தை பெயர் இஸ்ஹாக் பின் ஹுசைமா
குலம் சுலமி கோத்திரத்தைச் சார்ந்தவர்.
பிறப்பு ஹிஜ்ரீ இருநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு நைசாபூர் என்ற ஊரில் பிறந்தார்.
ஆசிரியர்கள் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், முஹம்மத் பின் முஸன்னா, முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.
படைப்புகள் :கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவத்தைப் பற்றிய புத்தகம்) ஷஃனுத் துஆ வ தப்சீரு மற்றும் சஹீஹு இப்னி ஹஸைமா ஆகிய மூன்று புத்தகங்கள்.
மரணம் : ஹிஜ்ரீ 311 வது வருடம் துல்கஃதா மாதத்தில் சனிக்கிழமை இரவு அன்று இவர் மரணித்தார்.
ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் தாரமீ அவர்களுடைய வாழ்க்கை குறிப்புகள்
இமாம் தாரமீ
இயற்பெயர் : அப்துல்லாஹ்
குறிப்புப்பெயர் : அபூமுஹம்மத்
குலம் : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார்.
தந்தைப் பெயர் : அப்துர் ரஹ்மான்
பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார்.
கல்வி : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் எப்பொழுது கல்வி கற்க ஆரம்பித்தார் என்பது நமக்கு சரியாக தகவல்கள் மூலம் கிடைக்கவில்லை. இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனனுத் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். பல அறிஞர்கள் இவரை சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : ஹுராசான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பக்தாத், வாசித், திமஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.
ஆசிரியர்கள் : யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.
மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹமைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.
தொகுப்புகள் : சுனனுத் தாரமீ என்ற சிறந்த ஹதீஸ் தொகுப்பு நூலை இமாம் தாரமீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். இன்னும் அல்ஜாமிஃ, அத்தஃப்சீர் என்ற நூலையும் தொகுத்துள்ளார். எனினும் இவை காணாமல் போய்விட்டன.
மரணம் : இமாம் தாரமீ அவர்கள் ஹிஜ்ரீ 255 ஆம் ஆண்டு இறந்தார்கள். அப்போது இவருடைய வயது 75 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டார்.
நன்றி - இணையம்.
இயற்பெயர் : அப்துல்லாஹ்
குறிப்புப்பெயர் : அபூமுஹம்மத்
குலம் : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார்.
தந்தைப் பெயர் : அப்துர் ரஹ்மான்
பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார்.
கல்வி : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் எப்பொழுது கல்வி கற்க ஆரம்பித்தார் என்பது நமக்கு சரியாக தகவல்கள் மூலம் கிடைக்கவில்லை. இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனனுத் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். பல அறிஞர்கள் இவரை சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : ஹுராசான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பக்தாத், வாசித், திமஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.
ஆசிரியர்கள் : யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.
மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹமைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.
தொகுப்புகள் : சுனனுத் தாரமீ என்ற சிறந்த ஹதீஸ் தொகுப்பு நூலை இமாம் தாரமீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். இன்னும் அல்ஜாமிஃ, அத்தஃப்சீர் என்ற நூலையும் தொகுத்துள்ளார். எனினும் இவை காணாமல் போய்விட்டன.
மரணம் : இமாம் தாரமீ அவர்கள் ஹிஜ்ரீ 255 ஆம் ஆண்டு இறந்தார்கள். அப்போது இவருடைய வயது 75 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டார்.
நன்றி - இணையம்.
தொடரும் மாணவர் தற்கொலைகள்
ஆலிமா S. நஜ்மா சித்தீக்கியா MA
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர் [அல் குர்ஆன் 2:195]
உலகம் தோன்றிய காலம் முதல் யுக முடிவின் காலம் வரை பிறப்பிற்காக சிரிப்பதும் இறப்பிற்காக அழுவதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.
ஒவ்வொரு மனிதனும் அவன் விரும்பியோ விரும்பாமலோ மரணம் எனும் விதி அவனை அடைந்தே தீர வேண்டும் என்பது இறைவனின் நியதி. இந்த நியதி ஒரு புறமிருக்க தங்களுக்கு தாங்களே முடிவை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தகவலென்றால் இந்த கோழைத்தனமான முடிவிற்கு மாணவ சமுதாயமும் சமீபகாலமாக பலிகடா ஆகிவருவது வேதனையிலும் வேதனை!!
இதனை விவாத அரங்காக்கும் ஊடகங்கள்!
கல்வித்துறையை குற்றம் சாட்டும் கல்வியாளர்கள்!
ஆசிரியர்கள் மீது பழி சுமத்தும் பெற்றோர்கள்!
வளர்ப்பு முறையை விவாதிக்கும் கல்வி ஸ்தாபனங்கள்!
இவ்வாறான சூழலில் கியாமத் நாள் வரை இவர்களின் விவாதங்களுக்கு விடை கிடைக்கப் போவதில்லை.பெற்றோர்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சுகிறது. உலகப் பொதுமறையான அல்குர்ஆன் வழியிலும் உத்தம நபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உபதேசத்தின்படியும் நம்முடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் முடிவெடுக்க வேண்டும்.
இன்றைய அவசர உலகில் குழந்தைகளை கொஞ்சுவதற்கோ அன்பு பாராட்டுவதற்கோ கூட பெற்றோருக்கு நேரமில்லை.பெருமானார் (ஸல்)அவர்கள் தன் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டார்கள் என்பதையும், செல்ல பெயர்கள் கொண்டு அழைத்தார்கள் என்பதையும் படிப்பதோடு நிறுத்திவிடாமல் நம் வாழ்வில் செயல்படுத்திட முன்வர வேண்டும்.
கண்டிக்க வேண்டிய காரியங்களுக்கு குழந்தைகளை கண்டிக்கவும் தவறிவிடக்கூடாது. உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு வயதுடையவர்களாகும் போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதுடையவர்களாகும் போது (தொழாவிட்டால்) தொழச் சொல்லி அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
இந்த ஹதீஸானது குழந்தைகளை கண்டிக்கும் விஷயங்களில் பெற்றோர்களின் பங்களிப்பு எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அறியாத பருவத்தில் செய்தக் குற்றத்திற்காக அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள். ஆனால் பெற்றேர்களாகிய நாம் அவர்களை தவறு செய்யவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வளருவார்கள் இன்ஷா அல்லாஹ்.
ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சதக்காவுடைய பொருட்கள் வந்தபோது அவர்களது பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடலானார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் துப்பு! நபியின் குடும்பத்திற்கு சதக்கா ஹராம் என்று கூறினார்கள்.
நூல்கள்: புகாரி முஸ்லிம்
இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைதானே வளர்ந்தால் சரியாகிவிடும் என சில ஹராம்களை ஹலால் ஆக்கி விட்டுவிடுகிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல பெற்றோர்கள் சரிபடுத்த முயலும் நேரத்தில் சரிபடுத்த முடியாமல் ஆகிவிடுகிறது.
தோல்விகள், ஏமாற்றங்கள் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை குழந்தைகளுக்கு ஊட்டியே வளர்க்க வேண்டும். பிறக்கும்போது தந்தையை இழந்து, வளரும்போது வளர்ப்பு தந்தையை இழந்து ஆசையாய் பெற்ற ஆண்மக்களையும் இழந்து தன் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிய பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாறுகள் வாழ்வியல் இலக்கணங்களாய் நம் குழந்தைகளுக்கு புகட்டப்பட வேண்டும்.
இத்தகைய உணர்வுகள் ஊட்டப்பட்டு வளரும் குழந்தையானது மறுமை வெற்றியே தன் இலட்சியமாய், இம்மை எனும் குறுகிய காலப்பயணத்தில் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கிக் கொள்ளும்.
பெற்றோர்களும் குழந்தைகளுடன் நட்புணர்வோடு பழகி அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட ஆலோசனை கூற வேண்டும்.
"இந்தியா தற்கொலை நகரமாக மாறி வருகிறது" என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இத்தகைய புள்ளி விபரங்களை வெறும் செய்தியாக நாம் படித்துவிடாமல் பிரச்சனையாக களம் கண்டு, இதற்குரிய தீர்வை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அணுகி இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாககூடிய இளைய தலைமுறையை உருவாக்குவோமாக.
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர் [அல் குர்ஆன் 2:195]
உலகம் தோன்றிய காலம் முதல் யுக முடிவின் காலம் வரை பிறப்பிற்காக சிரிப்பதும் இறப்பிற்காக அழுவதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.
ஒவ்வொரு மனிதனும் அவன் விரும்பியோ விரும்பாமலோ மரணம் எனும் விதி அவனை அடைந்தே தீர வேண்டும் என்பது இறைவனின் நியதி. இந்த நியதி ஒரு புறமிருக்க தங்களுக்கு தாங்களே முடிவை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தகவலென்றால் இந்த கோழைத்தனமான முடிவிற்கு மாணவ சமுதாயமும் சமீபகாலமாக பலிகடா ஆகிவருவது வேதனையிலும் வேதனை!!
இதனை விவாத அரங்காக்கும் ஊடகங்கள்!
கல்வித்துறையை குற்றம் சாட்டும் கல்வியாளர்கள்!
ஆசிரியர்கள் மீது பழி சுமத்தும் பெற்றோர்கள்!
வளர்ப்பு முறையை விவாதிக்கும் கல்வி ஸ்தாபனங்கள்!
இவ்வாறான சூழலில் கியாமத் நாள் வரை இவர்களின் விவாதங்களுக்கு விடை கிடைக்கப் போவதில்லை.பெற்றோர்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சுகிறது. உலகப் பொதுமறையான அல்குர்ஆன் வழியிலும் உத்தம நபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உபதேசத்தின்படியும் நம்முடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் முடிவெடுக்க வேண்டும்.
இன்றைய அவசர உலகில் குழந்தைகளை கொஞ்சுவதற்கோ அன்பு பாராட்டுவதற்கோ கூட பெற்றோருக்கு நேரமில்லை.பெருமானார் (ஸல்)அவர்கள் தன் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டார்கள் என்பதையும், செல்ல பெயர்கள் கொண்டு அழைத்தார்கள் என்பதையும் படிப்பதோடு நிறுத்திவிடாமல் நம் வாழ்வில் செயல்படுத்திட முன்வர வேண்டும்.
கண்டிக்க வேண்டிய காரியங்களுக்கு குழந்தைகளை கண்டிக்கவும் தவறிவிடக்கூடாது. உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு வயதுடையவர்களாகும் போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதுடையவர்களாகும் போது (தொழாவிட்டால்) தொழச் சொல்லி அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
இந்த ஹதீஸானது குழந்தைகளை கண்டிக்கும் விஷயங்களில் பெற்றோர்களின் பங்களிப்பு எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அறியாத பருவத்தில் செய்தக் குற்றத்திற்காக அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள். ஆனால் பெற்றேர்களாகிய நாம் அவர்களை தவறு செய்யவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வளருவார்கள் இன்ஷா அல்லாஹ்.
ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சதக்காவுடைய பொருட்கள் வந்தபோது அவர்களது பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடலானார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் துப்பு! நபியின் குடும்பத்திற்கு சதக்கா ஹராம் என்று கூறினார்கள்.
நூல்கள்: புகாரி முஸ்லிம்
இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைதானே வளர்ந்தால் சரியாகிவிடும் என சில ஹராம்களை ஹலால் ஆக்கி விட்டுவிடுகிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல பெற்றோர்கள் சரிபடுத்த முயலும் நேரத்தில் சரிபடுத்த முடியாமல் ஆகிவிடுகிறது.
தோல்விகள், ஏமாற்றங்கள் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை குழந்தைகளுக்கு ஊட்டியே வளர்க்க வேண்டும். பிறக்கும்போது தந்தையை இழந்து, வளரும்போது வளர்ப்பு தந்தையை இழந்து ஆசையாய் பெற்ற ஆண்மக்களையும் இழந்து தன் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிய பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாறுகள் வாழ்வியல் இலக்கணங்களாய் நம் குழந்தைகளுக்கு புகட்டப்பட வேண்டும்.
இத்தகைய உணர்வுகள் ஊட்டப்பட்டு வளரும் குழந்தையானது மறுமை வெற்றியே தன் இலட்சியமாய், இம்மை எனும் குறுகிய காலப்பயணத்தில் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கிக் கொள்ளும்.
பெற்றோர்களும் குழந்தைகளுடன் நட்புணர்வோடு பழகி அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட ஆலோசனை கூற வேண்டும்.
"இந்தியா தற்கொலை நகரமாக மாறி வருகிறது" என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இத்தகைய புள்ளி விபரங்களை வெறும் செய்தியாக நாம் படித்துவிடாமல் பிரச்சனையாக களம் கண்டு, இதற்குரிய தீர்வை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அணுகி இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாககூடிய இளைய தலைமுறையை உருவாக்குவோமாக.
இஸ்லாத்தை விட்டும் தடம்புரளும் இஸ்லாமிய சமுதாயம்
ஒரே இறைவனாகிய அல்லாஹ்வையும், அவனது இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் எற்றுக்கொண்டு, பின்பற்றி வாழக்கூடியவர்களே முஸ்லிம்கள்!.
இத்தகைய சிறந்த மார்க்கத்திலுள்ள நாம் இன்றைய நவீன காலகட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விட்டு மறக்கடிக்கப்பட்டும், உலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியும் சென்றுகொண்டே இருக்கின்றோம். இதில் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் இன்றைய நவீன அறிவியல் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, மார்க்கத்திற்கு புறம்பாக நடக்கக்கூடிய சூழ்நிலையை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
இதை மறுக்க முடியாது!.
குழந்தைகளை சரியான மார்க்கப் பற்றோடு வளர்க்கக்கூடிய பெற்றோர்கள் தம்முடைய குழந்தைக்கு உலக விசயங்களையும், உலகக் கல்வியை மட்டுமே போதித்துக் கொடுத்துவிட்டு மார்க்கத்தை கற்றுக்கொடுக்க மறந்துவிட்டார்கள். இவ்வாறு செய்தால் நம்முடைய மரணத்திற்கு பின்பு நான் பெற்ற இக்குழந்தைகள் எனக்காக எப்படி துஆ செய்யும் என்பதை இப்பெற்றோர்கள் உணர்வதே இல்லை!
"ஏழு வயதை அடையும் குழந்தைகளை தொழுமாறு ஏவுங்கள்; பத்து வயது ஆகியும் தமது குழந்தை தொழவில்லையெனில் அவர்களை அடியுங்கள் '' (அறிவிப்பாளர் : அம்ரு இப்னு ஷூஜபு ; நூல் : அபூதாவூத் ) - என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கூறியிருக்க இம்மார்க்கத்தை பின்பற்றக்கூடிய முஸ்லிம்களாகிய நாமோ நம் குழந்தைகளை என்றைக்கேனும் தொழுமாறு ஏவுகிறோமா என்று கொஞ்சம் சிந்துத்து பார்க்க வேண்டும்!
இன்றைய சூழலில் முஸ்லிம்களாக இருக்கும் நாமோ நம் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர்களின் மனம்போன போக்கிலே திரியவும் விட்டு இறுதியில் அக்குழந்தைகள் நரகப்படுகுழியை நோக்கி செல்வதற்கு நாமே முக்கியக் காரணமாகி விடுகின்றோம்!.
சத்தியத்தை பிறருக்கு எத்திவைத்து அழைப்புப் பணி செய்யவேண்டிய இளைஞர் சமுதாயமோ இன்றைக்கு மார்க்கத்திற்கு முரணாக, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக நடந்துகொண்டு உலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியே தொடர்ந்து தம்முடைய பார்வையை செலுத்திய வண்ணமாக உள்ளனர்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 59:7)
"மாற்று சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்".
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(நூல் : அபுதாவூத் 3512)
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறாக கூறியிருக்க இன்றைய இளைஞர் சமுதாயமோ Fashion என்ற பெயரில் யூதர்களைப் போன்று தங்களது முடிகளையும், தாடியையும் வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள்;
மாற்றுமத பண்டிகைகளுக்கும், புத்தாண்டு தினத்திற்கும் வாழ்த்துச் சொல்லக்கூடிய அளவிற்கு பாதகமான வழியை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றார்கள்.
அல்லாஹ் ஹராமாக்கிய மதுபானத்தையும், ஹெராயின், கோகைன், புகையிலை, கஞ்சா - போன்ற போதைப் பொருட்களையும், ஊக்கமளிக்கக்கூடிய ஊசிகளையும் பயன்படுத்தக்கூடிய ஒரு நிலைக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றனர்.
இதோ அல்லாஹ் கூறுகிறான் :-
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டோரே! உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:29)
அல்லாஹ் கூறும் மேற்கண்ட போதனையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே போதித்து அதன்படியே அவர்களை நடத்தியிருந்தால் இத்தகைய சூழ்நிலைக்கு அவர்கள்ஆளாகியிருப்பார்களா?..
மார்க்க பற்றுள்ள சிறுவர்களோடு தம் குழந்தையை பழகுமாறு ஏவி, தம் குழந்தைகளை சரியாக கவனித்து வந்திருந்தால் இந்நிலைமை வந்திருக்குமா?.
இதோடு மட்டுமல்ல நம்முடைய சமுதாயத்தின் பெண்களை எடுத்துக்கொள்வோம்! இன்றைக்கு நம் சமுதாய பெண்களில் சிலரோ ஹிஜாப்பை விரும்பாத மக்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள்; இன்னும் சிலர் தம்முடைய அலங்காரத்தை வெளியே காட்டும்படியான இறுக்கமான ஆடைகளை உடுத்திக்கொண்டு நறுமணத்தையும் பூசிக்கொண்டு சாலைகளிலும், வீதிகளிலும் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதுதான் நபிவழியா? நாம் சரியாக நபிவழிப்படி நடக்கிறோமா? என்று இம்மக்கள் சற்றே சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்!.
இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :-
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : -
ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036)
இன்னும் சில பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்கின்றோம் என்ற பெயரில், அங்கே இருக்கக்கூடிய மாற்று மதத்தவர்களுடன் நட்பு ரீதியில் ஆரம்பமாகி இறுதியில் ''காதல்'' என்ற பெயரில் அவர்களோடு இணக்கமாகி இணைவைப்பாளராகவே பாதை மாறிச் செல்லக்கூடிய நிலையை இன்றைக்கு நாம் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
இத்தகைய தடம்புரள்களுக்கெல்லாம் முக்கியக் காரணம் என்னவென்றால், " பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே மார்க்கத்தை முறையாகப் போதிக்காததே'' ஆகும்!.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அல்லாஹ் மிக அழகாக தன் திருமறையில் கூறுகிறான்:-
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் -23:1,2,9)
இறைநம்பியாளர்களின் பண்புகளை அல்லாஹ் இவ்வாறு மிகத் தெளிவாகக் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தாமும் செயல்பட்டு, தம் குழந்தைகளை அறியாமையினால் சில பெற்றோர்கள் செலுத்துகின்றனர்.
இன்றைய சூழலில் நம்முடைய சமுதாய மக்களில் யாருக்கேனும் இஸ்லாத்தை பற்றியும், மறுமையைப் பற்றியும் போதனை செய்தால், சிலர் கூறுகின்றார்கள் எப்படியென்று தெரியுமா?.
"மரணித்து போன பின்பு உயிரோடு எப்படி எழுப்பப்படுவோம்?.. '' இதையெல்லாம் இக்காலத்தில் நாம் எப்படி நம்புவது? - என்றும் கேட்கக்கூடியவர்களை நாம் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?.. இதில் கொஞ்சம் படிப்பினை பெற வேண்டாமா?..
"நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?'' என்று மனிதன் கேட்கிறான்.
"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
(அல்குர்ஆன் 19:66,67,68)
எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே!.. பின்பற்றி நடப்பதற்கோ இறைவேதமும், நபிகளாரின் போதனையும் நம் கையிலே இருக்கும்போது, அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டபடி எதை நோக்கி உங்களது பயணம் போய்க்கொண்டு இருக்கின்றது?..
எதற்கும் பயன்பெறாத இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியா???
இக்கவர்ச்சியில் நீங்கள் மயங்கியது ஏன்?. ஷைத்தான் உங்களது செயல்களை உங்களுக்கு மிகவும் அழகானதாக்கி காட்டியுள்ளானா?..
இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் :-
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் 35:5)
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(அல்குர்ஆன் 29:64)
அழியக்கூடிய இந்த உலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமே தவிர வேறில்லை என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் கூறுகின்றானே நாமெல்லாம் இதைக்கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?
நம்முடைய வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?. இந்த குறுகியகால வாழ்வை இறைவன் நமக்கு ஏன் வழங்கியுள்ளான் என்று என்றைக்கேனும் நாம் சிந்தித்துள்ளோமா?.
மனிதர்களே! நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள் அனைத்தையும் படைத்து மாபெரும் அர்ஷின் மேல் அமர்ந்த ரப்புல் ஆலமீன் இந்த உலக வாழ்க்கையை நமக்கு ஓர் தேர்வுக்களமாக ஆக்கியிருப்பதாக கூறுகிறான். நாமெல்லாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா?.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
(அல்குர்ஆன் 67:2)
இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த தேர்விலே நாம் வெற்றிபெற வேண்டுமென்று என்றைக்கேனும் நாம் நினைத்துள்ளோமா?.
இவ்வுலகில் வாழக்கூடிய நாம் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவழிக்கின்றோம். வீட்டிலே அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் சினிமா படங்களையும், பாடல்களையும் பார்த்துக்கொண்டும் , கேட்டுக்கொண்டும் பயனற்ற வழியிலே நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால், நம்மை படைத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு என்றைக்கேனும் நேரம் ஒதுக்கியுள்ளோமா என்று யாரிடமாவது கேட்டால், ' மெளனம் ' தான் பதிலாக இருக்கின்றது. ஏன் மனிதா!. இறைவனை தொழ மறுக்கின்றாய்?.
தொழவில்லையெனில் நாம் சுவனம் செல்லமுடியாது என்ற சிந்தனை உன்னை விட்டும் சைத்தானால் மறக்கடிக்கப்பட்டுவிட்டதா?
அல்லாஹ் கூறும் அழகிய அறிவுரையை பாருங்கள்.
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 11:114)
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்றும், தொழுகை வெட்கக்கேடான செயல்களிலிருந்து நம்மை காக்கும் என்று படைத்த இறைவன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மில் பலரும் இன்றைக்கு தொழுகைக்கான அழைப்பை பரிகாசமாக ஆக்கிக்கொள்கிறோம். இவ்வாறு செய்வோருக்கு கேடுதான் என்று அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்.
தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 5:58)
அல்லாஹ்வை அன்றி வேரெவராலும் உதவி செய்யப்படாத அந்த நாளில் நம்மிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே - தொழுதாயா?. என்பதுதான்;
ஆதலால், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றக் கூடிய மக்களாக நாமெல்லாம் மாற வேண்டும். அப்போதுதான் நாம் இறைவனின் நெருக்கமான அடியானாக இருக்க முடியும்.
தொழுகை நிலைநாட்டுவதன் மூலம் நாம் செய்த வெட்கக்கேடான செயல்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் இறைவனிடம் மன்னிப்பை பெற முடியும்!.
இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞனுக்கு மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் கிடைக்குமென்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல் : முஸ்லிம் 1869)
எனவே, இளைஞர் பருவத்தில் இருக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை வணங்குவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த அர்ஷினின் நிழலை பெறக்கூடிய நன்மக்களில் நாமும் ஒருவராக மாற முடியும்!.
அதேபோல பெற்றோர்களும் தம்முடைய குழந்தைகளுக்கு உலகக் கல்விகளுக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் தருவதைப் போன்று , இதைவிட பலமடங்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்கக் கல்வியையும் கற்றுக்கொடுத்து, அதன்படியே அக்குழந்தைகளை வளர்ப்போராக மாற வேண்டும். ஏனென்று கேட்டால் குழந்தைகள் என்போர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓர் அமானிதங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
(அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) )
(நூல் : ஸஹீஹ் புகாரி 5200 )
எனவே, இந்த அமானிதத்தை குறித்து அல்லாஹ் மறுமையில் நிச்சயம் கேள்வி எழுப்புவான். ஆகவே, நமது குழந்தைகளை ஒழுக்கநெறியோடும், மார்க்கப் பற்றோடும் வளர்த்தல் என்பது மிக முக்கியமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
1) நிலையான அறக்கொடை
2) பயன்பெறப்படும் கல்வி.
3) அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி) )
(நூல் :ஸஹீஹ் முஸ்லிம் 3358 )
பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது தம் பிள்ளைகளை மார்க்க பற்றோடும், ஒழுக்க நெறிகளோடு வளர்த்ததன் பயன், மரணத்திற்குப் பின்பு அந்த பெற்றோரைப் போய் சேர்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஆதலால், சத்திய மார்க்கத்தின் அடிப்படையில் தம் குழந்தைகளை வார்த்தெடுக்க நாம் அதிகமதிகம் முயற்சித்தல் வேண்டும்!.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும்.
(அல்குர்ஆன் 66:6)
இவ்வாறு மார்க்கத்தை முறையாக போதிக்கச் செய்வதன் மூலமாகத்தான் அக்குழந்தைகளும், அவர்களின் சந்ததிகளும் நரக நெருப்பிலிருந்து காத்து கொண்டு, அந்த மறுமை நாளில் வெற்றிபெறவும் முடியும்!.
எனவே, வரக்கூடிய காலக்கட்டங்களில் முறையாக இம்மார்க்கத்தை பேணி நடப்போராகவும், தொழுவோராகவும், தர்மம் செய்யக்கூடிய நல்ல மக்களாவும் ஆக்கி வல்ல ரஹ்மான் நம்மை ஜன்னத்துல் பிர்தெளஸ் என்று சொல்லக்கூடிய உயரிய சொர்க்கச்சோலையில் ஒன்று சேர்ப்பானாக!.
கட்டுரை ஆக்கம் :- விளதை ரய்யான்.
இத்தகைய சிறந்த மார்க்கத்திலுள்ள நாம் இன்றைய நவீன காலகட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விட்டு மறக்கடிக்கப்பட்டும், உலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியும் சென்றுகொண்டே இருக்கின்றோம். இதில் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் இன்றைய நவீன அறிவியல் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, மார்க்கத்திற்கு புறம்பாக நடக்கக்கூடிய சூழ்நிலையை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
இதை மறுக்க முடியாது!.
குழந்தைகளை சரியான மார்க்கப் பற்றோடு வளர்க்கக்கூடிய பெற்றோர்கள் தம்முடைய குழந்தைக்கு உலக விசயங்களையும், உலகக் கல்வியை மட்டுமே போதித்துக் கொடுத்துவிட்டு மார்க்கத்தை கற்றுக்கொடுக்க மறந்துவிட்டார்கள். இவ்வாறு செய்தால் நம்முடைய மரணத்திற்கு பின்பு நான் பெற்ற இக்குழந்தைகள் எனக்காக எப்படி துஆ செய்யும் என்பதை இப்பெற்றோர்கள் உணர்வதே இல்லை!
"ஏழு வயதை அடையும் குழந்தைகளை தொழுமாறு ஏவுங்கள்; பத்து வயது ஆகியும் தமது குழந்தை தொழவில்லையெனில் அவர்களை அடியுங்கள் '' (அறிவிப்பாளர் : அம்ரு இப்னு ஷூஜபு ; நூல் : அபூதாவூத் ) - என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கூறியிருக்க இம்மார்க்கத்தை பின்பற்றக்கூடிய முஸ்லிம்களாகிய நாமோ நம் குழந்தைகளை என்றைக்கேனும் தொழுமாறு ஏவுகிறோமா என்று கொஞ்சம் சிந்துத்து பார்க்க வேண்டும்!
இன்றைய சூழலில் முஸ்லிம்களாக இருக்கும் நாமோ நம் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர்களின் மனம்போன போக்கிலே திரியவும் விட்டு இறுதியில் அக்குழந்தைகள் நரகப்படுகுழியை நோக்கி செல்வதற்கு நாமே முக்கியக் காரணமாகி விடுகின்றோம்!.
சத்தியத்தை பிறருக்கு எத்திவைத்து அழைப்புப் பணி செய்யவேண்டிய இளைஞர் சமுதாயமோ இன்றைக்கு மார்க்கத்திற்கு முரணாக, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக நடந்துகொண்டு உலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியே தொடர்ந்து தம்முடைய பார்வையை செலுத்திய வண்ணமாக உள்ளனர்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 59:7)
"மாற்று சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்".
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(நூல் : அபுதாவூத் 3512)
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறாக கூறியிருக்க இன்றைய இளைஞர் சமுதாயமோ Fashion என்ற பெயரில் யூதர்களைப் போன்று தங்களது முடிகளையும், தாடியையும் வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள்;
மாற்றுமத பண்டிகைகளுக்கும், புத்தாண்டு தினத்திற்கும் வாழ்த்துச் சொல்லக்கூடிய அளவிற்கு பாதகமான வழியை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றார்கள்.
அல்லாஹ் ஹராமாக்கிய மதுபானத்தையும், ஹெராயின், கோகைன், புகையிலை, கஞ்சா - போன்ற போதைப் பொருட்களையும், ஊக்கமளிக்கக்கூடிய ஊசிகளையும் பயன்படுத்தக்கூடிய ஒரு நிலைக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றனர்.
இதோ அல்லாஹ் கூறுகிறான் :-
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டோரே! உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:29)
அல்லாஹ் கூறும் மேற்கண்ட போதனையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே போதித்து அதன்படியே அவர்களை நடத்தியிருந்தால் இத்தகைய சூழ்நிலைக்கு அவர்கள்ஆளாகியிருப்பார்களா?..
மார்க்க பற்றுள்ள சிறுவர்களோடு தம் குழந்தையை பழகுமாறு ஏவி, தம் குழந்தைகளை சரியாக கவனித்து வந்திருந்தால் இந்நிலைமை வந்திருக்குமா?.
இதோடு மட்டுமல்ல நம்முடைய சமுதாயத்தின் பெண்களை எடுத்துக்கொள்வோம்! இன்றைக்கு நம் சமுதாய பெண்களில் சிலரோ ஹிஜாப்பை விரும்பாத மக்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள்; இன்னும் சிலர் தம்முடைய அலங்காரத்தை வெளியே காட்டும்படியான இறுக்கமான ஆடைகளை உடுத்திக்கொண்டு நறுமணத்தையும் பூசிக்கொண்டு சாலைகளிலும், வீதிகளிலும் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதுதான் நபிவழியா? நாம் சரியாக நபிவழிப்படி நடக்கிறோமா? என்று இம்மக்கள் சற்றே சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்!.
இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :-
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : -
ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036)
இன்னும் சில பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்கின்றோம் என்ற பெயரில், அங்கே இருக்கக்கூடிய மாற்று மதத்தவர்களுடன் நட்பு ரீதியில் ஆரம்பமாகி இறுதியில் ''காதல்'' என்ற பெயரில் அவர்களோடு இணக்கமாகி இணைவைப்பாளராகவே பாதை மாறிச் செல்லக்கூடிய நிலையை இன்றைக்கு நாம் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
இத்தகைய தடம்புரள்களுக்கெல்லாம் முக்கியக் காரணம் என்னவென்றால், " பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே மார்க்கத்தை முறையாகப் போதிக்காததே'' ஆகும்!.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அல்லாஹ் மிக அழகாக தன் திருமறையில் கூறுகிறான்:-
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் -23:1,2,9)
இறைநம்பியாளர்களின் பண்புகளை அல்லாஹ் இவ்வாறு மிகத் தெளிவாகக் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தாமும் செயல்பட்டு, தம் குழந்தைகளை அறியாமையினால் சில பெற்றோர்கள் செலுத்துகின்றனர்.
இன்றைய சூழலில் நம்முடைய சமுதாய மக்களில் யாருக்கேனும் இஸ்லாத்தை பற்றியும், மறுமையைப் பற்றியும் போதனை செய்தால், சிலர் கூறுகின்றார்கள் எப்படியென்று தெரியுமா?.
"மரணித்து போன பின்பு உயிரோடு எப்படி எழுப்பப்படுவோம்?.. '' இதையெல்லாம் இக்காலத்தில் நாம் எப்படி நம்புவது? - என்றும் கேட்கக்கூடியவர்களை நாம் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?.. இதில் கொஞ்சம் படிப்பினை பெற வேண்டாமா?..
"நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?'' என்று மனிதன் கேட்கிறான்.
"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
(அல்குர்ஆன் 19:66,67,68)
எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே!.. பின்பற்றி நடப்பதற்கோ இறைவேதமும், நபிகளாரின் போதனையும் நம் கையிலே இருக்கும்போது, அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டபடி எதை நோக்கி உங்களது பயணம் போய்க்கொண்டு இருக்கின்றது?..
எதற்கும் பயன்பெறாத இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியா???
இக்கவர்ச்சியில் நீங்கள் மயங்கியது ஏன்?. ஷைத்தான் உங்களது செயல்களை உங்களுக்கு மிகவும் அழகானதாக்கி காட்டியுள்ளானா?..
இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் :-
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் 35:5)
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(அல்குர்ஆன் 29:64)
அழியக்கூடிய இந்த உலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமே தவிர வேறில்லை என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் கூறுகின்றானே நாமெல்லாம் இதைக்கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?
நம்முடைய வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?. இந்த குறுகியகால வாழ்வை இறைவன் நமக்கு ஏன் வழங்கியுள்ளான் என்று என்றைக்கேனும் நாம் சிந்தித்துள்ளோமா?.
மனிதர்களே! நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள் அனைத்தையும் படைத்து மாபெரும் அர்ஷின் மேல் அமர்ந்த ரப்புல் ஆலமீன் இந்த உலக வாழ்க்கையை நமக்கு ஓர் தேர்வுக்களமாக ஆக்கியிருப்பதாக கூறுகிறான். நாமெல்லாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா?.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
(அல்குர்ஆன் 67:2)
இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த தேர்விலே நாம் வெற்றிபெற வேண்டுமென்று என்றைக்கேனும் நாம் நினைத்துள்ளோமா?.
இவ்வுலகில் வாழக்கூடிய நாம் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவழிக்கின்றோம். வீட்டிலே அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் சினிமா படங்களையும், பாடல்களையும் பார்த்துக்கொண்டும் , கேட்டுக்கொண்டும் பயனற்ற வழியிலே நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால், நம்மை படைத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு என்றைக்கேனும் நேரம் ஒதுக்கியுள்ளோமா என்று யாரிடமாவது கேட்டால், ' மெளனம் ' தான் பதிலாக இருக்கின்றது. ஏன் மனிதா!. இறைவனை தொழ மறுக்கின்றாய்?.
தொழவில்லையெனில் நாம் சுவனம் செல்லமுடியாது என்ற சிந்தனை உன்னை விட்டும் சைத்தானால் மறக்கடிக்கப்பட்டுவிட்டதா?
அல்லாஹ் கூறும் அழகிய அறிவுரையை பாருங்கள்.
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 11:114)
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்றும், தொழுகை வெட்கக்கேடான செயல்களிலிருந்து நம்மை காக்கும் என்று படைத்த இறைவன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மில் பலரும் இன்றைக்கு தொழுகைக்கான அழைப்பை பரிகாசமாக ஆக்கிக்கொள்கிறோம். இவ்வாறு செய்வோருக்கு கேடுதான் என்று அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்.
தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 5:58)
அல்லாஹ்வை அன்றி வேரெவராலும் உதவி செய்யப்படாத அந்த நாளில் நம்மிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே - தொழுதாயா?. என்பதுதான்;
ஆதலால், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றக் கூடிய மக்களாக நாமெல்லாம் மாற வேண்டும். அப்போதுதான் நாம் இறைவனின் நெருக்கமான அடியானாக இருக்க முடியும்.
தொழுகை நிலைநாட்டுவதன் மூலம் நாம் செய்த வெட்கக்கேடான செயல்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் இறைவனிடம் மன்னிப்பை பெற முடியும்!.
இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞனுக்கு மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் கிடைக்குமென்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல் : முஸ்லிம் 1869)
எனவே, இளைஞர் பருவத்தில் இருக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை வணங்குவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த அர்ஷினின் நிழலை பெறக்கூடிய நன்மக்களில் நாமும் ஒருவராக மாற முடியும்!.
அதேபோல பெற்றோர்களும் தம்முடைய குழந்தைகளுக்கு உலகக் கல்விகளுக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் தருவதைப் போன்று , இதைவிட பலமடங்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்கக் கல்வியையும் கற்றுக்கொடுத்து, அதன்படியே அக்குழந்தைகளை வளர்ப்போராக மாற வேண்டும். ஏனென்று கேட்டால் குழந்தைகள் என்போர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓர் அமானிதங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
(அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) )
(நூல் : ஸஹீஹ் புகாரி 5200 )
எனவே, இந்த அமானிதத்தை குறித்து அல்லாஹ் மறுமையில் நிச்சயம் கேள்வி எழுப்புவான். ஆகவே, நமது குழந்தைகளை ஒழுக்கநெறியோடும், மார்க்கப் பற்றோடும் வளர்த்தல் என்பது மிக முக்கியமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
1) நிலையான அறக்கொடை
2) பயன்பெறப்படும் கல்வி.
3) அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி) )
(நூல் :ஸஹீஹ் முஸ்லிம் 3358 )
பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது தம் பிள்ளைகளை மார்க்க பற்றோடும், ஒழுக்க நெறிகளோடு வளர்த்ததன் பயன், மரணத்திற்குப் பின்பு அந்த பெற்றோரைப் போய் சேர்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஆதலால், சத்திய மார்க்கத்தின் அடிப்படையில் தம் குழந்தைகளை வார்த்தெடுக்க நாம் அதிகமதிகம் முயற்சித்தல் வேண்டும்!.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும்.
(அல்குர்ஆன் 66:6)
இவ்வாறு மார்க்கத்தை முறையாக போதிக்கச் செய்வதன் மூலமாகத்தான் அக்குழந்தைகளும், அவர்களின் சந்ததிகளும் நரக நெருப்பிலிருந்து காத்து கொண்டு, அந்த மறுமை நாளில் வெற்றிபெறவும் முடியும்!.
எனவே, வரக்கூடிய காலக்கட்டங்களில் முறையாக இம்மார்க்கத்தை பேணி நடப்போராகவும், தொழுவோராகவும், தர்மம் செய்யக்கூடிய நல்ல மக்களாவும் ஆக்கி வல்ல ரஹ்மான் நம்மை ஜன்னத்துல் பிர்தெளஸ் என்று சொல்லக்கூடிய உயரிய சொர்க்கச்சோலையில் ஒன்று சேர்ப்பானாக!.
கட்டுரை ஆக்கம் :- விளதை ரய்யான்.
Saturday, 13 January 2018
வெற்றியை நோக்கி - 1.
வானம், பூமி, படைப்பினங்கள் அனைத்தும் உலகம் இயங்க தேவையுடையதாகவே படைக்கப்பட்டிருக்கிறது. உலகில் ஒவ்வொரு பொருளும் ஒன்றையொன்று சார்ந்ததாகவே படைக்கப்பட்டுள்ளது.
இவ்வுலக படைப்பினங்களில் மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபடுகிறான்எ ன்பது நிதர்சனம். இந்த மாறுபாடுகள் பல வகையில் இருந்தாலும் மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவம் மனித இனத்திற்கு இருக்கிறது என்றால் அது சிந்திக்கும் ஆற்றல் எனலாம். அத்தகைய சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதன் நன்மை, தீமையை மனிதன் பகுப்பாய்வு செய்யும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும். கல்வி எனும் ஆயுதம் மனிதர்களின் கையில் இருந்தால் மட்டுமே இத்தகைய சிந்திக்கும் ஆற்றலானது பகுப்பாய்வின் பக்கம் மனிதனை கொண்டுச் செல்லும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்."
மக்களுக்கும், மாக்களுக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்த அரபுலக மண்ணில் மனித நேயம், இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை போன்ற புரட்சிகள் உருவாகிட முக்கிய காரணமாக அமைந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த கல்வியே!
"எந்த ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை இறைவனும் மாற்றுவதில்லை"
முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வை பிற சமுதாயத்துடன் ஒப்பிடும் போது ஐந்து விழுக்காடு மட்டுமே முன்னேற்றம் அடைந்து உள்ளோம். இனி வரும் காலங்களிலாவது முஸ்லிம் சமுதாயம் எழுச்சி பெற வேண்டுமெனில் நாம் நமது அடுத்த தலைமுறையை ஒரு தொலை நோக்கு திட்டத்துடன் இலக்கை நிர்ணயித்து உருவாக்கிட வேண்டும்.
இறைவன் தனது வான்மறையில் கூறுகிறான்.
” அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' ( திருக்குர்ஆன் 39:09)
ஒருவர் கல்வியை அறிவாக பெற்று, ஆய்வு செய்து அதன் மூலம் உலக மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை எவ்வாறு தடுக்க வேண்டும் என போதிப்பவனும் கல்வியை கற்று அந்த கல்வியை பொருளாதார தேவைக்காக மட்டும் பயின்றவனும் சமமாவார்களா? இது கல்விக்கான தேடலின் முதல் வினா மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற கல்வியை, உலக ஆதாயத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவர் கற்றுக் கொண்டால் மறுமை நாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மாட்டார்.” (அபூதாவூத் - 3664)
நபி (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
‘அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினர் விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(புஹாரி)
இத்தகைய நபி மொழிகள் மற்றும் வான்மறையின் கட்டளைகளும் கல்வியை முறையாக கற்று அதைக் கொண்டு பயன் பெறுவதின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. ஒரு மனிதன் பண்ட்டவனாக, பக்குவப்பட்டவனாக சிறந்த மனிதனாக மாற வேண்டுமென்றால் அது சிறந்த கல்வியால் மட்டுமே சாத்தியம். அத்தகைய சிறந்த கல்வியை நாம் அடைந்தோமா? அடைகிறோமா?
படித்து பட்டம் பெற்றவர்களெல்லாம் சிறந்த கல்வியாளர்களாக உள்ளார்களா என்பதை கவனிக்க வேண்டும். படிக்கும் போதே, மாணவர்களிடம் மாதம் ஒரு லட்சத்திற்கு குறைவாக சம்பாதித்தால், உன்னை சமுதாயம், உற்றார் உறவினர்கள் மதிக்கமாட்டார்கள் அதற்கு தகுந்தாற்போல் படி என்று பிள்ளைகள் மனதில் பணத்தாசையை விதைக்கிறார்கள். மாணவர்களும் அதை மையமாக வைத்து இலட்சம் என்ற ஒரே வார்த்தையை தங்கள் வாழ்வின் இலட்சியமாக கொண்டு பயணிக்கிறார்கள். இன்றைய மாணவர்கள் பூமி, கடல், காற்று, சூரியன், வானம், கோள்கள் என எல்லா படைப்பினங்களைப் பற்றியும் படிக்கிறார்கள். ஆய்வு செய்கிறார்கள். ஆனால், இவையனைத்தையும் செம்மையாய் படைத்த இறைவனின் ஆற்றலை இவர்கள் சிந்திப்பதில்லை. அவ்வாறு படைத்த இறைவனை அறிந்து கொள்ளாத பட்சத்தில், பயனற்ற கல்வியாகவே இக்கல்வி அமையும். இறைவனை பற்றி படித்தால் மட்டுமே இறையச்சம் வரும். லஞ்சம் வாங்க கூடாது, ஊழல் செய்யக் கூடாது, ஏழைகளிடம் அளவுக்கு அதிகமான மருத்துவ கட்டணம் வசூலிக்கக்கூடாது போன்ற தரமான எண்ணங்கள் உங்கள் மனதில் வளரும். நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்ல போகிறோம் என்பதை பற்றிய ஆய்வு மாணவர்களுக்கு தேவை. நபி (ஸல்) அவர்கள் பயனுள்ள கல்வியை தருவாயாக ! என்று இறைவனிடம் து ஆ செய்யும்படி கூறுகிறார்கள்.
இத்தகைய கல்வி முறையானது ஒரு நல்ல மனித நேய மிக்க பண்பாளனை உருவாக்கி தரவில்லையென்றால் அந்த கல்வி பயனற்ற கல்வியே. கல்வி என்பது வெறும் மூளைக்கு மட்டும் பயிற்சியாக இல்லாமல் இதயத்திற்கும் இடம் கொடுக்கும் இன்பகரமானதாக இருக்க வேண்டும். அறிவுசார் கல்வியுடன் அறநெறியும் போதிக்கப்பட வேண்டும். நவீன கல்வி முறைகள் இத்தகைய அம்சங்களை கொண்டு திகழ்கிறதா என்பதை வரும் காலங்களில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்...
குமரி அன்ஸாரி MCA
(தொடரும்...).
இவ்வுலக படைப்பினங்களில் மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபடுகிறான்எ ன்பது நிதர்சனம். இந்த மாறுபாடுகள் பல வகையில் இருந்தாலும் மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவம் மனித இனத்திற்கு இருக்கிறது என்றால் அது சிந்திக்கும் ஆற்றல் எனலாம். அத்தகைய சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதன் நன்மை, தீமையை மனிதன் பகுப்பாய்வு செய்யும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும். கல்வி எனும் ஆயுதம் மனிதர்களின் கையில் இருந்தால் மட்டுமே இத்தகைய சிந்திக்கும் ஆற்றலானது பகுப்பாய்வின் பக்கம் மனிதனை கொண்டுச் செல்லும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்."
மக்களுக்கும், மாக்களுக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்த அரபுலக மண்ணில் மனித நேயம், இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை போன்ற புரட்சிகள் உருவாகிட முக்கிய காரணமாக அமைந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த கல்வியே!
"எந்த ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை இறைவனும் மாற்றுவதில்லை"
முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வை பிற சமுதாயத்துடன் ஒப்பிடும் போது ஐந்து விழுக்காடு மட்டுமே முன்னேற்றம் அடைந்து உள்ளோம். இனி வரும் காலங்களிலாவது முஸ்லிம் சமுதாயம் எழுச்சி பெற வேண்டுமெனில் நாம் நமது அடுத்த தலைமுறையை ஒரு தொலை நோக்கு திட்டத்துடன் இலக்கை நிர்ணயித்து உருவாக்கிட வேண்டும்.
இறைவன் தனது வான்மறையில் கூறுகிறான்.
” அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' ( திருக்குர்ஆன் 39:09)
ஒருவர் கல்வியை அறிவாக பெற்று, ஆய்வு செய்து அதன் மூலம் உலக மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை எவ்வாறு தடுக்க வேண்டும் என போதிப்பவனும் கல்வியை கற்று அந்த கல்வியை பொருளாதார தேவைக்காக மட்டும் பயின்றவனும் சமமாவார்களா? இது கல்விக்கான தேடலின் முதல் வினா மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற கல்வியை, உலக ஆதாயத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவர் கற்றுக் கொண்டால் மறுமை நாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மாட்டார்.” (அபூதாவூத் - 3664)
நபி (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
‘அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினர் விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(புஹாரி)
இத்தகைய நபி மொழிகள் மற்றும் வான்மறையின் கட்டளைகளும் கல்வியை முறையாக கற்று அதைக் கொண்டு பயன் பெறுவதின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. ஒரு மனிதன் பண்ட்டவனாக, பக்குவப்பட்டவனாக சிறந்த மனிதனாக மாற வேண்டுமென்றால் அது சிறந்த கல்வியால் மட்டுமே சாத்தியம். அத்தகைய சிறந்த கல்வியை நாம் அடைந்தோமா? அடைகிறோமா?
படித்து பட்டம் பெற்றவர்களெல்லாம் சிறந்த கல்வியாளர்களாக உள்ளார்களா என்பதை கவனிக்க வேண்டும். படிக்கும் போதே, மாணவர்களிடம் மாதம் ஒரு லட்சத்திற்கு குறைவாக சம்பாதித்தால், உன்னை சமுதாயம், உற்றார் உறவினர்கள் மதிக்கமாட்டார்கள் அதற்கு தகுந்தாற்போல் படி என்று பிள்ளைகள் மனதில் பணத்தாசையை விதைக்கிறார்கள். மாணவர்களும் அதை மையமாக வைத்து இலட்சம் என்ற ஒரே வார்த்தையை தங்கள் வாழ்வின் இலட்சியமாக கொண்டு பயணிக்கிறார்கள். இன்றைய மாணவர்கள் பூமி, கடல், காற்று, சூரியன், வானம், கோள்கள் என எல்லா படைப்பினங்களைப் பற்றியும் படிக்கிறார்கள். ஆய்வு செய்கிறார்கள். ஆனால், இவையனைத்தையும் செம்மையாய் படைத்த இறைவனின் ஆற்றலை இவர்கள் சிந்திப்பதில்லை. அவ்வாறு படைத்த இறைவனை அறிந்து கொள்ளாத பட்சத்தில், பயனற்ற கல்வியாகவே இக்கல்வி அமையும். இறைவனை பற்றி படித்தால் மட்டுமே இறையச்சம் வரும். லஞ்சம் வாங்க கூடாது, ஊழல் செய்யக் கூடாது, ஏழைகளிடம் அளவுக்கு அதிகமான மருத்துவ கட்டணம் வசூலிக்கக்கூடாது போன்ற தரமான எண்ணங்கள் உங்கள் மனதில் வளரும். நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்ல போகிறோம் என்பதை பற்றிய ஆய்வு மாணவர்களுக்கு தேவை. நபி (ஸல்) அவர்கள் பயனுள்ள கல்வியை தருவாயாக ! என்று இறைவனிடம் து ஆ செய்யும்படி கூறுகிறார்கள்.
இத்தகைய கல்வி முறையானது ஒரு நல்ல மனித நேய மிக்க பண்பாளனை உருவாக்கி தரவில்லையென்றால் அந்த கல்வி பயனற்ற கல்வியே. கல்வி என்பது வெறும் மூளைக்கு மட்டும் பயிற்சியாக இல்லாமல் இதயத்திற்கும் இடம் கொடுக்கும் இன்பகரமானதாக இருக்க வேண்டும். அறிவுசார் கல்வியுடன் அறநெறியும் போதிக்கப்பட வேண்டும். நவீன கல்வி முறைகள் இத்தகைய அம்சங்களை கொண்டு திகழ்கிறதா என்பதை வரும் காலங்களில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்...
குமரி அன்ஸாரி MCA
(தொடரும்...).
Tuesday, 9 January 2018
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 10
யார் இந்த சாமிரி ?
இந்த சாமிரி என்பவனின் இயற்பெயர் மூசா பின் சபர் ஆகும்.சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய இவன் மூஸா (அலை ) அவர்களின் ஒன்று விட்ட சகோதரன் என்றும் கூறப்படுகிறது.இவன் காளை மாட்டை வணங்கும் மக்களான பஜர்மா கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் இவன் ஸமாரா என்ற ஊரைச் சேர்ந்தவன் என்றும் தப்சீர் இப்னு கசீர் கூறுகிறது.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
ஹாரூன் நபியின் மறைவு
நபி ஹாரூன் (அலை) அவர்கள் பனீ இஸ்ரவேலர்கள் தீஹ் என்னும் வனாந்திரத்தில் இருக்கும்போது இவர்கள் காலமானார்கள் என்றும், இவர்களின் அடக்கிவிடம் ஸினாய் பாலைவனத்திலுள்ள ஸவீக் மலை மீது உள்ளது என்றும், ஹுர் மலைமீது உள்ளது என்றும், உஹத் மலை மீது உள்ளது என்றும் பலவிதமாய் கூறப்படுகிறது.
இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் பதிவுகளில் ஏனைய நபிமார்கள் வரலாறு பற்றி காண்போம்.
யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்.
முடிவுற்றது....
பதிவு நாள்: 10-01-2018.
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 9
மூஸா நபியின் சமூகத்தாரை சாமிரி எப்படி வழிகெடுத்தான்?
பிறகு இதற்கேல்லாம் காரணமாக இருந்த சாமிரியைப் பார்த்து நபி மூஸா (அலை) அவர்கள்
''ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?'' என்று மூஸா அவனிடம் கேட்டார்.
(சூரத்துல் தாஹா - 95 )
நபி மூஸா (அலை) அவர்களின் கேள்விக்கு சாமிரி இவ்வாறு பதிலளிக்கிறான்.
''அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று'' என (ஸாமிரீ பதில்) சொன்னான்.
(சூரத்துல் தாஹா - 96 )
"பனு இஸ்ராயில்களில் மற்றவர்கள் பார்க்காத ஒரு விடயத்தை நான் பார்த்தேன்.அத்தூதர் (ஜிப்ரயீல்) காலடி மண்ணிலிருந்து ஒரு பிடி எடுத்து தங்கக் காளைச் சிலை மீது போட்டேன்.ஏனென்றால் அந்த தூதர் காலடி பட்ட இடமெல்லாம் புற்பூண்டுகள் பசுமையாக வளர்வதைப் பார்த்தேன்."என்று தான் அச்சிலையை இயங்கச்செய்த விதத்தை விளக்கினான்.மற்றவர்கள் பார்க்க இயலாத அதாவது ஜிப்ரயீல் (அலை) அவர்களை சாமிரி எப்படி பார்த்தான்.
Monday, 8 January 2018
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 8
தூர் சினாய் மலையிலிருந்து அவசரமாக திரும்பி வந்த நபி மூஸா (அலை) அவர்கள் தம் சமூகம் வழிகேட்டில் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டு தம் சகோதரரான நபி ஹாரூன் (அலை) அவர்களிடம் கோபம் கொண்டு இவ்வாறு கேட்கிறார்கள்.
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) ''ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
''நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?
''(இதற்கு ஹாரூன்;) ''என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்'' என்று கூறினார்.
(சூரத்துல் தாஹா 92-94)
இன்ஷா அல்லாஹ் தொடரும் .......
பதிவு நாள்: 08-01-2018......
Saturday, 6 January 2018
நாங்களும் முஸ்லிம்கள்தான்.
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
☆எங்களுக்கு நேரம் இருக்கிறது -- ஆனால்
நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம்.
☆வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால் விடியாமலே விரைந்து செல்வோம் விளையாட்டு மைதானத்துக்கு.
☆ஊர் முழுக்க வலம் வர உடம்பில் தெம்புண்டு – ஆனால் ஒரு வக்து தொழுகைக்கும் இறையில்லம் வர மாட்டோம்.
☆மருந்து சாப்பிடுவதால் தொழ முடியவில்லை – ஆனால் விருந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் தடையில்லை.
☆பள்ளிக்கு பக்கத்தில் பாங்கு சத்தம் கேட்ப்போம் – ஆனால் சத்தமே இல்லாமல் நடையைக் கட்டிவிடுவோம்.
☆வீதியில் சும்மாதான் இருப்போம் – ஆனால்
ஜும்ஆவுக்கு கடைக்கோடியில்தான் நிற்போம்.
☆ஒரு நாள் முழுக்க எங்களுக்கு ஓய்வுதான் – ஆனால் உறங்குவது என்னவோ ஜும்ஆவில்தான்.
☆விருந்தில் முதல் பந்திதான் பிடித்த இடம் – ஆனால் ஜும்ஆவில் கடைசி இடம்ன் தான் எங்கள் புகலிடம்.
☆அளவின்றி அரட்டை அடிப்போம் – ஆனால்
மருந்துக்குக் கூட மார்க்க அறிவுரைகள் கேட்கமாட்டோம்.
☆ஒழு கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது – ஆனால் உபதேசம் எங்களுக்கு அறவே பிடிக்காது.
☆பத்திரிகையை வரிக்கு வரி மேய்வோம் – ஆனால் உலகப் பொது மறையில் ஒரு வரி கூடத் தெரியாது.
☆உலகப் பொதுமறை என்று முழங்குவோம் – ஆனால் அதில் ஒரு கட்டளையைக் கூட மதிக்க மாட்டோம்.
☆பர்தா பேணாதவர் பாவி என்போம் – ஆனால் பர்தா அணிந்தே பல பாவங்கள் புரிவோம்.
☆உடம்பு முழுக்க வியாதி இருக்கும் – ஆனால் உணவில் கட்டுப்பாடு ஒரு துளியும் பேண மாட்டோம்.
☆வரதட்சணை ஆகாது என்று வீரம் பேசுவோம் – ஆனால் கொல்லைப்புற வழியாக கொத்தாகப் பிடுங்குவோம்.
☆மஸ்ஜிதில்தான் திருமணத்தை நடத்துவோம் – ஆனால் மறைமுகமாக மார்க்கம் மீறுவோம்.
☆ஒரு பருக்கை சோறு கூட பரகத் என்போம் – ஆனால் திருமணத்தின்போது அண்டா சோற்றையே வீதியில் கொட்டுவோம்.
☆நீண்ட தேடலில் துணையை வசப்படுத்துவோம் – ஆனால் நிமிடத்தில் ஜமாஅத்துக்கு வருவோம் விவாகரத்து மனுவோடு.
☆வீட்டின் சுற்றுபுறம் வரை சுத்தம் பேணுவோம் – ஆனால் வீட்டுக் குப்பைகளை வீதியில் இறைத்து அசுத்தம் செய்வோம்
☆தாய் தந்தை நலம் பேண வேண்டும் என்போம் – ஆனால் தாரம் வந்ததும் தாயகம் துறப்போம்.
☆என் பெற்றோர் மேல் எனக்கு உயிர் என்போம் – ஆனால் அவர்தம் உயிர் பிரிந்த பின்னர்தான் ஊருக்கே வருவோம்.
☆குழந்தையின் உயர்வில் ஆர்வம் கொள்வோம் – ஆனால் குர்ஆன் ஓத அனுப்பக் கூட நேரமில்லை என்போம்.
☆ஒருதாய் பிள்ளை என உரக்கச் சொல்வோம் – ஆனால் உள்ளவன் இல்லாதவன், உள்ளூர் வெளியூர் என பிரித்து மேய்வோம்.
☆அடுத்தவன் காசு எனகெதற்கு என்போம் – ஆனால் வடிகாலைக் கூட விட்டு வைக்காமல் வளைத்துப் போடுவோம்
☆இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்போம் – ஆனால் படித்து பட்டம் வாங்கியதும் வெளிநாடு பறப்போம்.
☆மழை இல்லை என கவலை கொள்வோம் – ஆனால் குளிக்கும் நீரின் அளவில் ஒழு செய்வோம்.
☆ஏழைகள் மீது பரிவு காட்டு என்போம் - ஆனால் வட்டிக்கு பணம் விட்டு இரத்தம் உறிஞ்சுவோம்.
☆பகிர்ந்து உண்ண வேண்டும் என்று பேசுவோம் – ஆனால் ஜகாத் பொருளை பதுக்கி வைப்போம்.
☆இவையெல்லாம் துணிச்சலாகச் செய்வோம் – ஆனால் தயங்காமல் சொல்வோம் நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று...!!!
அல்லாஹ் நம் அனைவரும் பாதுகாப்பானாக.
நன்றி இணையம்....
☆எங்களுக்கு நேரம் இருக்கிறது -- ஆனால்
நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம்.
☆வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால் விடியாமலே விரைந்து செல்வோம் விளையாட்டு மைதானத்துக்கு.
☆ஊர் முழுக்க வலம் வர உடம்பில் தெம்புண்டு – ஆனால் ஒரு வக்து தொழுகைக்கும் இறையில்லம் வர மாட்டோம்.
☆மருந்து சாப்பிடுவதால் தொழ முடியவில்லை – ஆனால் விருந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் தடையில்லை.
☆பள்ளிக்கு பக்கத்தில் பாங்கு சத்தம் கேட்ப்போம் – ஆனால் சத்தமே இல்லாமல் நடையைக் கட்டிவிடுவோம்.
☆வீதியில் சும்மாதான் இருப்போம் – ஆனால்
ஜும்ஆவுக்கு கடைக்கோடியில்தான் நிற்போம்.
☆ஒரு நாள் முழுக்க எங்களுக்கு ஓய்வுதான் – ஆனால் உறங்குவது என்னவோ ஜும்ஆவில்தான்.
☆விருந்தில் முதல் பந்திதான் பிடித்த இடம் – ஆனால் ஜும்ஆவில் கடைசி இடம்ன் தான் எங்கள் புகலிடம்.
☆அளவின்றி அரட்டை அடிப்போம் – ஆனால்
மருந்துக்குக் கூட மார்க்க அறிவுரைகள் கேட்கமாட்டோம்.
☆ஒழு கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது – ஆனால் உபதேசம் எங்களுக்கு அறவே பிடிக்காது.
☆பத்திரிகையை வரிக்கு வரி மேய்வோம் – ஆனால் உலகப் பொது மறையில் ஒரு வரி கூடத் தெரியாது.
☆உலகப் பொதுமறை என்று முழங்குவோம் – ஆனால் அதில் ஒரு கட்டளையைக் கூட மதிக்க மாட்டோம்.
☆பர்தா பேணாதவர் பாவி என்போம் – ஆனால் பர்தா அணிந்தே பல பாவங்கள் புரிவோம்.
☆உடம்பு முழுக்க வியாதி இருக்கும் – ஆனால் உணவில் கட்டுப்பாடு ஒரு துளியும் பேண மாட்டோம்.
☆வரதட்சணை ஆகாது என்று வீரம் பேசுவோம் – ஆனால் கொல்லைப்புற வழியாக கொத்தாகப் பிடுங்குவோம்.
☆மஸ்ஜிதில்தான் திருமணத்தை நடத்துவோம் – ஆனால் மறைமுகமாக மார்க்கம் மீறுவோம்.
☆ஒரு பருக்கை சோறு கூட பரகத் என்போம் – ஆனால் திருமணத்தின்போது அண்டா சோற்றையே வீதியில் கொட்டுவோம்.
☆நீண்ட தேடலில் துணையை வசப்படுத்துவோம் – ஆனால் நிமிடத்தில் ஜமாஅத்துக்கு வருவோம் விவாகரத்து மனுவோடு.
☆வீட்டின் சுற்றுபுறம் வரை சுத்தம் பேணுவோம் – ஆனால் வீட்டுக் குப்பைகளை வீதியில் இறைத்து அசுத்தம் செய்வோம்
☆தாய் தந்தை நலம் பேண வேண்டும் என்போம் – ஆனால் தாரம் வந்ததும் தாயகம் துறப்போம்.
☆என் பெற்றோர் மேல் எனக்கு உயிர் என்போம் – ஆனால் அவர்தம் உயிர் பிரிந்த பின்னர்தான் ஊருக்கே வருவோம்.
☆குழந்தையின் உயர்வில் ஆர்வம் கொள்வோம் – ஆனால் குர்ஆன் ஓத அனுப்பக் கூட நேரமில்லை என்போம்.
☆ஒருதாய் பிள்ளை என உரக்கச் சொல்வோம் – ஆனால் உள்ளவன் இல்லாதவன், உள்ளூர் வெளியூர் என பிரித்து மேய்வோம்.
☆அடுத்தவன் காசு எனகெதற்கு என்போம் – ஆனால் வடிகாலைக் கூட விட்டு வைக்காமல் வளைத்துப் போடுவோம்
☆இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்போம் – ஆனால் படித்து பட்டம் வாங்கியதும் வெளிநாடு பறப்போம்.
☆மழை இல்லை என கவலை கொள்வோம் – ஆனால் குளிக்கும் நீரின் அளவில் ஒழு செய்வோம்.
☆ஏழைகள் மீது பரிவு காட்டு என்போம் - ஆனால் வட்டிக்கு பணம் விட்டு இரத்தம் உறிஞ்சுவோம்.
☆பகிர்ந்து உண்ண வேண்டும் என்று பேசுவோம் – ஆனால் ஜகாத் பொருளை பதுக்கி வைப்போம்.
☆இவையெல்லாம் துணிச்சலாகச் செய்வோம் – ஆனால் தயங்காமல் சொல்வோம் நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று...!!!
அல்லாஹ் நம் அனைவரும் பாதுகாப்பானாக.
நன்றி இணையம்....
தலாக் விஷயத்தை இஸ்லாமிய எதிரிகள் எதிர்க்க காரணமென்ன?
"ஒரு கணவன் தன் மனைவிக்கு காதலுடன் ஒருவாய் உணவு ஊட்டினாலும் அது நன்மைக்குரிய செயல். என கூறுகிறது இஸ்லாம்.!
மற்ற மதங்கள் மனைவி மக்களை விட்டுவிட்டு துறவறம் செல்வதை ஆதரிக்கும் போது....
"ஒரு கணவன் தன் நேச மனைவிக்காக (தன் குடும்பத்தினருக்காக) நேர்மையான வழியில் சம்பாதிப்பது, மறுமையில் பல சிறப்புகளை பெற்றுதரும் காரியம் என கூறுகிறது இஸ்லாம்.
அப்பேற்பட்ட அழகிய கணவன் மனைவி வாழ்வில் விரிசல் ஏற்பட்டு இனி வாழவே முடியாது எனும் நிலை ஏற்படும்போது....
நீதிமன்றத்தில் நாம் கூறும் எந்த காரணத்திற்கும் சுலபமாக விவாகரத்து கிடைக்காது.!
தன் கணவனிடம் ஆண்மை இல்லை என மனைவியும்,
தன் மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு உள்ளது என கணவனும் கூறினால்தான் விவாகரத்து கிடைக்கும் என்பதால்....
பொய்யான குற்றங்களை ஒருவரின் மீது ஒருவர் சாட்டி விவாகரத்து வாங்கும் நிலையே உலகில் உள்ளது.!
ஆண்மை இல்லையென்றும், இன்னொருவனுடன் தொடர்பு உள்ளது என்றும் பொய்யான காரணம் கூறி விவாகரத்து பெற்ற அந்த ஆணையோ பெண்ணையோ மணமுடிக்க யார் முன்வருவர்.?
வேறுவழியின்றி விபச்சாரத்தை நோக்கி நகர மட்டுமே அதிகமான வாய்ப்புள்ளது அவர்களது அடுத்தகட்ட வாழ்க்கை.!
அப்படி வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கும் உலகில்....
இனி ஒற்றுமையாக வாழவே முடியாது எனும் நிலை வரும்போது கணவனுக்கு தலாக் எனும் உரிமையும், மனைவிக்கு குலா எனும் உரிமையையும் வழங்கி இருவரின் அடுத்தக்கட்ட வாழ்வை கண்ணியமாக வாழ வழிவகுக்கிறது இஸ்லாம்.!
தனக்கு கிடைக்காத இத்தீர்வு...
முஸ்லிம்கள் மட்டும் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனரே! என்ற ஏக்கமே எதிரிகள் எதிக்கவும் காரணம்.!
ஆனால் கடைசி முஸ்லிம் உள்ளவரை மனிதனுக்கு மரியாதை தரும் எங்களது மார்க்க சட்டத்தையும் மாற்ற எவனாலும் முடியாது.!
இன்ஷா அல்லாஹ்
✍ பாரூக் சைதாப்பேட்டை
பதிவு நாள்: 07-01-2018.
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 7
பழைய ஏற்பாட்டின் பொய்கூற்றுக்கு திருக்குர்ஆனின் பதிலடி
பழைய ஏற்பாட்டிலும் திருக் குரானிலும் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நபி மூஸா (அலை) அவர்கள் தூர் சினாய் மலைக்கு அல்லாஹ்வை சந்திக்க சென்றிருந்த சமயம் இடம்பெற்றது.தவ்ராத்தில் இந்த தங்கக் காளை நபி ஹாரூன் (அலை) செதுக்கியதாக கூறப்படுகிறது.ஆனால் திருக்குர்ஆன் இதனை மறுக்கிறது.திருக்குர்ஆன் இந்த சிலை சாமிரி என்பவனால் செதுக்கப்பட்டதாக கூறுகிறது.அல்லாஹ்வை சந்திக்கச் சென்ற மூஸா (அலை) அவர்கள் நீண்ட நாட்களாக (40 நாட்கள்) திரும்பாத நிலையில் சாமிரி என்பவன் முன் வந்து மூஸா காணாமல் போய்விட்டார் அவர் திரும்பி வரமாட்டார் எனக் கூறிய அவன் பிரவ்னின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று வரும் போது கொண்டு வந்த தங்க நகைகளையும் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சில தங்க நகைகளையும் சேர்த்து உருக்கி ஒரு தங்க காளைக்கன்றுச் சிலை ஒன்றை உருவாக்கி இது தான் நம் கடவுள் இதை வணங்குங்கள் என்றான்.மேலும் இதுதான் மூஸாவின் கடவுளும் கூட இதை அவர் மறந்து விட்டார் என இஸ்ரவேலர்களிடம் கூறினான்.அதை மூஸா (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன்(அலை) எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து செய்து வந்தனர்.ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை தடுத்தது பற்றியும் அவர்கள் அதை மறுத்தது பற்றியும் திருக்குர்ஆன் சூரத்துல் தாஹாவில் இப்படி கூறுகிறது.
ஹாரூன் நபியின் எச்சரிக்கை
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, ''என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்று கூறினார்.
இஸ்ரவேலர்களின் பிடிவாதம்
''மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்'' என்று அவர்கள் கூறினர்.
(சூரத்துல் தாஹா 90-91)
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 06-01-2018.
Friday, 5 January 2018
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 6
இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை வணங்க காரணம்
சில இஸ்ரேலியர்களின் மீது பண்டைய எகிப்திய மதத்தின் தாக்கம் படிப்படியாகவே ஏற்பட்டது.இஸ்ரவேலர்களை பிரவ்னின் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்த மூஸா நபியவர்களிடம் அவர்கள் கேட்ட முதல் விடயம் பற்றி அல்லாஹ் திருமறையின் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) இல் இப்படி கூறுகிறான்.
"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
(சூரத்துல் அஃராஃப் : 138)
இப்படி கேட்ட அந்த இஸ்ரேலிய சமூகம் இன்னுமொரு படி மேலே சென்று மூஸா நபியவர்களின் இப்படியொரு முட்டாள்தனமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்.அந்த கோரிக்கை பற்றி திருமறையின் சூரத்துல் பகரா (பசுமாடு) இப்படி கூறுகிறது.
"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது."
(சூரத்துல் பகரா : 55)
திருமறையின் இந்த வசனத்தை நாம் நன்றாக ஆய்வு செய்யும் போது,இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் அதனை விளங்கிக் கொள்ளகூடிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை அதனாலே அவர்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமான பண்டைய எகிப்தியர்களின் தாக்கம் அவர்களிடம் ஏற்பட்டது.
இன்ஷா அல்லாஹ் தொடரும் .....
பதிவு நாள்: 06-01-2018.
Wednesday, 3 January 2018
டிசம்பர் 2017 வெற்றியாளர்கள்
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் டிசம்பர் மாதம் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
குழுமத்தில் உள்ள சகோதரர் :👇
🥇யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 71
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு 💰
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்
🥇முகம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 70
முதல் குழுமத்தில் உள்ள சகோதர்
🥈பீர் முகம்மது - திருநெல்வேலி 69
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🚏 மூன்றாம் பரிசு 🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥉சுல்தான் - திருநெல்வேலி 69
🥉அப்பாஸ் அலி - சென்னை 68
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
☂ 🥇 மஹதி - திருச்சி 69
☂ 🥈 ராஜா முஹம்மது - கட்டுமாவடி 69
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோ:
🍋 முகம்மது முஸ்தபா - சென்னை 68
🍋 ஜாஹிர் ஹூசைன் - சென்னை (பட்டாபிராம்) 67
🍋 அப்துல் ஹக்கீம் - தென்காசி 67
🍋 முஹம்மது ஷஃபி - வலையப்பட்டி(நாமக்கல்) 65
🍋 அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லுர் 63
🍋 முகம்மது ஃபயாஸ் - சென்னை 61
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்
🍋 அல்லா பாகஷ் - சென்னை 62
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴 அட்மின் குழு
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் " இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
முதல் பரிசு 900 ₹
மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி முதல் பாகம் (அல்லது) முஸ்லிம் முதல் பாகம் (1நபருக்கு)
இரண்டாம்பரிசு 450₹
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு300₹
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
4.சிறப்பு பரிசு200₹
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு100₹
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள் : 01 - 01 - 2018.
கியாமத் நாளை நோக்கியின் டிசம்பர் மாதம் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
குழுமத்தில் உள்ள சகோதரர் :👇
🥇யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 71
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு 💰
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்
🥇முகம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 70
முதல் குழுமத்தில் உள்ள சகோதர்
🥈பீர் முகம்மது - திருநெல்வேலி 69
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🚏 மூன்றாம் பரிசு 🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥉சுல்தான் - திருநெல்வேலி 69
🥉அப்பாஸ் அலி - சென்னை 68
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
☂ 🥇 மஹதி - திருச்சி 69
☂ 🥈 ராஜா முஹம்மது - கட்டுமாவடி 69
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோ:
🍋 முகம்மது முஸ்தபா - சென்னை 68
🍋 ஜாஹிர் ஹூசைன் - சென்னை (பட்டாபிராம்) 67
🍋 அப்துல் ஹக்கீம் - தென்காசி 67
🍋 முஹம்மது ஷஃபி - வலையப்பட்டி(நாமக்கல்) 65
🍋 அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லுர் 63
🍋 முகம்மது ஃபயாஸ் - சென்னை 61
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்
🍋 அல்லா பாகஷ் - சென்னை 62
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴 அட்மின் குழு
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் " இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
முதல் பரிசு 900 ₹
மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி முதல் பாகம் (அல்லது) முஸ்லிம் முதல் பாகம் (1நபருக்கு)
இரண்டாம்பரிசு 450₹
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு300₹
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
4.சிறப்பு பரிசு200₹
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு100₹
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள் : 01 - 01 - 2018.
Tuesday, 2 January 2018
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 5
இஸ்ரவேலர்கள் உருவ வழிபாட்டில் ஈடுபட காரணம் என்ன?
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த ஒரு சில இஸ்ரவேலர்களின் இந்த மாறுபட்ட போக்குக்கு காரணம் என்ன ? ஒரு சிலையின் முன் தம் சிரத்தை பணியவைத்து வணங்க அவர்களை தூண்டியது என்ன ? அதற்கு வழியமைத்துக் கொடுத்த காரணம் என்ன ?
உருவ வழிபாட்டில் எந்தவிதமான நம்பிக்கையும் அற்ற ஒரே ஒரு இறைவனை மட்டும் வணங்கும் ஒரு சமூகம் திடீரென உருவ வழிபாட்டை எப்படி ஏற்றுக் கொண்டது ?
இஸ்ரவேலர்கள் என்போர் யார்?
இஸ்ரவேலர்கள் என்பது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலம் முதல் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்த ஒரு சமூகமாகும்.இவர்களுக்கு " இஸ்ரவேலர்கள் " அல்லது " இஸ்ரேலின் குழந்தைகள் " என்று பெயர் வரக் காரணம் ஹஸ்ரத் யஹ்கூப் (அலை ) அவர்களாகும்.இவர் ஹஸ்ரத் இப்ராஹீம் அவர்களின் பேரராவார்.ஹஸ்ரத் இப்ராஹீம்,ஹஸ்ரத் இஸ்ஹாக் மற்றும் ஹஸ்ரத் யஹ்கூப் போன்ற நபிமார்களிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்கள் பாதுகாத்து வந்தனர்.ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களின் காலப்பகுதியில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தில் பெருமளவில் குடியேறினர்.அப்ப்தும் அவர்கள் ஓரிறைக் கொள்கையை பற்றிப் பிடித்தவர்களாகவே நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர்.இஸ்ரவேலர்கள் ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய போது அப்போதைய எகிப்து சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சில இஸ்ரேலியர்கள் பசு வணக்கத்தில் ஈடுபட தாக்கம் செலுத்திய மிக முக்கியமான விடயம் அவர்கள் வாழ்ந்த பண்டைய எகிப்திய சமூகமாகும்.நபி மூஸா (அலை) தூர்சினாய் மலைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க போனபோது இஸ்ரேலியர்கள் வணங்கிய தங்கக் காளை பண்டைய எகிப்தியர்கள் வணங்கிய HATHOR என்ற பெண் தேவதையின் நகலாகும்.எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி அன்பு இசை சந்தோசம் அழகு மற்றும் தாய்மை என்பவற்றுக்கு பொறுப்பான கடவுள்தான் இந்த HATHOR ஆகும்." Too Long In The Sun " என்ற நூலின் ஆசிரியரான Richard Rives என்பவரின் கருத்துப்படி,
HATHOR மற்றும் APHIS எகிப்தியர்களின் பசு மற்றும் காளைக் கடவுள் என்பவை சூரிய வணக்கத்தின் பிரதிநிதிகளாவர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 02-01-2018.
Monday, 1 January 2018
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 4
மூஸா நபியின் சமூகத்தாரை சாமிரி வழிகெடுத்தான்
இது பற்றி திருமறையின் சூரதுத் தாஹா இப்படி கூறுகிறது.
''நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்'' என்று (அல்லாஹ்) கூறினான்.
"ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து ''என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?'' (என்றார்).
''உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்".
"பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் ''இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.
( ஸூரத்துத் தாஹா 85 - 88 )
இன்ஷா அல்லாஹ் தொரும்......
பதிவு நாள்: 02-01-2018.
Subscribe to:
Posts (Atom)