சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவுரை
நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த மக்களிடம் மேலும் அல்லாஹ் நீங்கள் குறைவானவர்களாக இருந்தபோது உங்களை அதிகமாக்கி வைத்ததை நினைவு கூறுங்கள். குழப்பம் செய்து கொண்டிருந்தவர்களின் இறுதி முடிவு எவ்வாறு இருந்தது என்பதை உங்கள் முன்னால் வாழ்ந்த சமூகத்தை எண்ணிபாருங்கள் என்று அறிவுரை கூறினார்.
அதற்கு அந்த சமூகத்தாரின் கருவங்கொண்டிருந்தார்களே அத்தகைய தலைவர்கள் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் ஷுயைபே! நாம் உம்மையும் உன்னுடன் விசுவாசித்தொரையும் நம்முடைய ஊரைவிட்டு
வெளியேற்றி விடுவோம். அல்லது நிச்சயமாக நீங்கள் அனைவரும் நம்முடைய மார்கத்துக்கு திரும்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நம்முடைய தந்தை நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கேட்டார்கள் நாங்கள் உங்கள் மார்கத்தை வெறுப்பவராக இருந்தாலுமா என்று . மேலும் அல்லாஹ் வழிகேட்டில் இருந்து எங்களை பாதுகாத்த பிறகு நாங்கள் உங்களுடன் வந்து இணைந்தால் அல்லாஹ்வின் மீது பொய்யுரைதவர்களாக நாங்கள் மாறிவிடுவோம். எங்கள் ரட்சகன் அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் இதிலிருந்து மீளுவதர்க்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
மேலும் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.எங்கள் ரட்சகன் அவன் அறிவால் அனைத்து பொருள்களிலும் சூழ்ந்திருக்கிறான். அல்லாஹுவின் மீதே எங்களது நம்பிக்கையை நாங்கள் வைத்து விட்டோம்.
சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை
மேலும் அவர் அல்லாஹுவிடம் கோரினார் யா அல்லாஹ் எங்களுக்கும் எங்களுடைய சமுதாயத்திருக்கும் இடையே நீ நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே தீர்ப்பு வழங்குவோரில் மிக மேலானவன் என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் பிராத்தித்தார்கள்.
மேலும் அந்த சமூகத்தாரின் பிரத்தானிகள் ஈமான் கொண்ட நன் மக்களை பார்த்து நீங்கள் சுஹைபை பின்பற்றினால் நீங்கள்தான் நஷ்டவாளிகள் என்று கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 16-01-2018.
No comments:
Post a Comment