தோழர்களுக்கு ஆறுதல் கூறிய சுயைப் அலைஹிஸ்ஸலாம்
இவ்வாறு அவர்கள் பரிசகசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் இன்னும் நான் எதை கொண்டு அனுப்பபட்டேனோ அதை உங்களின் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும் மற்றும் ஒரு சாரார் விசுவாசம் கொள்ளாமல் இருக்கும் இந்நிலையில் நமக்கு மத்தியில் அல்லா தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் இருங்கள் என்று தன்னுடன் விசுவாசம் கொண்ட மக்களிடம் அவர் கூறினார் .மேலும் அவர் கூறினார் அல்லாஹுவே தீர்ப்பு வழங்குவதில் மிக மேலானவன், .
இவ்வாறு நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர் மேலும் மேலும் தனது பிரசாரத்தை அதிகப்படுத்தினார்.
சுயைப் நபியின் எச்சரிக்கை
அவர் மக்களை பார்த்து நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். அவ்வாறிருக்க என் மோசம் செய்கிறீர்கள் அவ்வாறு இருக்க நிச்சயமாக உங்களை சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த வேதனையை நான் பயப்படுகிறேன் என்று அறிவுரை கூறினார் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள்.
மேலும் அவர் கூறினார். நீங்கள் விசுவாசம் கொண்டவராக இருந்தால் அல்லா மீதப்படுத்துவதே மிக்க மேலானது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
பதிவு நாள்: 16-01-2018.
No comments:
Post a Comment