Tuesday, 16 January 2018

நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொடர் - 4

நபியை பரிகசித்த மத்யன் வாசிகள்

 அந்த மக்கள் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீங்கள் தொழுது கொண்டிருக்கிறீர்களே அந்த தொழுகைதான்  உங்களை இவ்வாறு எங்கள் இறைவனை வெறுக்க தூண்டுகிறதா என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் தொழுவதை பரிகசித்தார்கள்.

அம்மக்கள் அவரை பொய்ப்படுத்தினர்

அதற்கு நபி சுயைப் அலைஹி வசல்லம் எனது சமூகமே உங்களுடைய செயலை நீங்கள் செய்து கொள்ளுங்கள். என்னுடைய செயலை நான் செய்துகொள்கிறேன்.   யாருக்கு இழிவு படுத்தும் வேதனை வந்தடையும் இன்னும் பொய்யர் யார் என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்திருங்கள் நிச்சயம் நான் உங்களுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

அதற்கு அந்த  மக்கள்   நீங்கள் கூறும் அநேகமான விசயங்களை ஏற்றுகொள்ள இயலவில்லை நாங்கள் உங்களை எங்களிடையில் மிக்க பலவீனமானவர்களாகவே காண்கிறோம். மேலும் உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் உம்மை நாங்கள் கல்லால் அடித்து கொன்று விடுவோம் என்று கூறினார்கள். அதற்க்கு நமது தந்தை சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களே அல்லாஹுவைவிட என்னுடைய குடும்பத்தார்கள் உங்களுக்கு மேலானவர்களாக ஆஹிவிட்டர்களா நிச்சயமாக அல்லாஹுவை நீங்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் தள்ளிவிட்டீர்கள். நிச்சயமாக எனது ரட்சகன் அனைத்தையும் தன் அறிவாள் சூழ்ந்தவனாகவே இருக்கிறான் . ஆஹாவே அந்த மக்கள் அனைவரும் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களை பொய்யாக்கவே நாடினார்கள். மேலும் அவர்கள் நபி சுஹைப் அலைஹி வாசலாம் அவர்களையும் அவருடம் ஈமான் கொண்டமக்களையும் துன்புறுத்தவே நாடினார்கள்.

*மத்யன் வாசிகள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டனர்*

ஆதலால் அல்லாஹ் தனது வேதனையை இறக்க நாடிவிட்டான். ஆதலால் அந்த மக்களை அல்லா பூகம்பத்தால் அளித்தான் அந்த அழிவை பற்றி அல்லாஹ் கூறுகிறான் சமூது கூட்டம் நாசமானதுபோல் இந்த மத்யன் கூட்டமும் நாசமாகி விட்டது மேலும்  அவர்கள் முகம் குப்புற விழுந்து இறந்தார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். மேலும் அல்லாஹ்  கூறுகிறான்: நம் அருளால் சுயைபையும் சுயைபுடன் விசுவாசம் கொண்ட நன் மக்களையும் நாம்   காப்பாற்றினோம்.

சுயைப் நபியின் பிள்ளைகள்

மேலும் அல்லாஹ்  நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இரு மகள்கள் பிறந்தன. அவர்களது வரலாறு இன்ஷா அல்லாஹ் நபி  மூசா  அலைஹி வசல்லம் அவர்களுடன் ஒத்தே வருகிறது ஏன் ஏன்றால் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களது மகளை நபி மூசா அலைஹி வசல்லம் திருமணம் செய்து கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இத்துடன் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு முடிவுற்றது.

No comments:

Post a Comment