Tuesday, 16 January 2018

நாம் எந்த வகை தொழுகையாளிகள்???

ذكر ابن القيم - رحمه الله - في كتابه : ( الوابل الصيب ) أن الناس في الصلاة على خمسة أقسام :
இமாம் இப்னுல் கய்யிம் ( ரஹ்) அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்
 معاقب :
( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை

அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
அவனைத் தண்டிப்பான்.
 محاسب:
( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை

 மறுமையில் அந்தத் தொழுகையைப் பற்றி
அல்லாஹ் விசாரிப்பான்.
مكفرٌ عنه:
( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்கு பரிகாரமாகும் தொழுகை

 அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
 அவனின் பாவங்களை மன்னிப்பான்
مثاب:
( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை

 அந்தத் தொழுகையின் காரணமாக
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான்
مقرَّب
( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ் வின் பால்  நெருக்கமாக்கும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ்
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.

முதல் வகை தொழுகை.
ஒருவன் தொழுகிறான்ஆ னால் ஒழுங்காக முழுமையாக ஒழு செய்வதிலோ, தொழுகையுடைய, பர்லு, வாஜிபு, சுன்னத் போன்றவைகளை சரிவர செய்யவேண்டும் என்ற கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகிறான் இத்தகைய  தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்.

இரண்டாவது வகை.
  ஒருவன் தொழுகை நிறைவடைதற்குத் தேவையான பர்லு ,வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான், ஆனால் தக்பீர் கட்டி தொழுகையில் நுழைந்ததிலிருந்து  அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறி தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் என தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கியவாறே தொழுது முடிக்கிறான். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.

மூன்றாவது வகை:
தொழுகையின் அனைத்து ஷர்த்துகளையும்  முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது  முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல்  தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே தொழுது முடிக்கிறான். இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.

நான்காவது வகை:
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழு கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் அளப்பறிய நன்மைகளை வழங்குகிறான்.

ஐந்தாவது வகை: மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்,சுன்னத்துகளையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லா வின்முன் அல்லாஹ் இருப்பதை போன்ற உள்ளச்சத்துடன் தொழுகிறான். இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்த தொழுகைக்குமுள்ள வித்தியாசம். அதில்  உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும் அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு  இருக்காது.

ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப்பு தன் முன்னால் இருப்பதை  உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுகவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது. இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை.
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ் வின் பால்  நெருங்கச் செய்யும்.

சொல்லுங்கள் சகோதரர்களே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை?

வாருங்கள் நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம்.
------
By
Nooul Ameen.

No comments:

Post a Comment