Tuesday, 16 January 2018

நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தொடர் - 1


நபி சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு

நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களது மகள் வலி பேரன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்.மேலும் இவர்  ஒரு அரபி மொழிக்கு அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவராக இருக்கிறார். இவர் மத்யன் என்ற ஊர் வாசிகளுக்கு அனுப்பப்பட்ட நபி  இந்த மத்யன் என்ற ஊர் இன்று வரைபடத்தில் ஷா கடல் (dead sea)அருகில் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்புப் பணி

 இவர் தனது நுபுவத்தை (நபித்துவத்தை) பெற்றவுடன் அவர் அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்க தொடங்கினார் மேலும் இவரின் அழைப்பு பணியை பற்றி  அல்லா குறிப்பிடும்பொழுது  அந்த மக்கள்  செய்யும் பாவத்தையும் இணைத்தே குறிப்பிடுகிறான்.
மேலும் நபி சுயைப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகத்திடம்  எனது சமூகமே அல்லாஹ் ஒருவனையே உங்கள் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று கொள்ளுங்கள். அவனை தவிர வணங்க தகுதியானவன் வேறு யாரும் இல்லை. உங்கள் இரட்சகனிடம் இறந்து நிச்சயமாக தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது ஆகவே உங்கள் வியாபாரங்களில் அளவை பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக நிருங்கள்.

மேலும் நீங்கள் மக்களுக்கு செலுத்தவேண்டிய பொருட்களில் யாதொன்றையும் குறைத்தும் விடாதீர்கள் மேலும் இப் பூமியில் அது சீர்திருத்தம் அடைந்த பின்னர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணாதீர் நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் இதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார்.

அல்குர்ஆன் 7 -85.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பதிவு நாள்: 16-01-2018.

No comments:

Post a Comment