பாலஸ்தீன நாட்டிற்கு ஒரு சிறந்த ஆட்சியாளர் வர வேண்டும் இதுவே முதலில் இஸ்லாமியர்கள் எண்ணங்களில் இருக்க வேண்டும், ஒரு சிறந்த கலீஃபா பாலஸ்தீன நாட்டில் இல்லாமல் இஸ்லாமியர்களின் வெற்றி என்பது கேள்வி குறி
நாம் எவ்வளவு தான் அரசுக்கு எதிராக நடுரோட்டில் நின்று கொண்டு போராடினாலும் எந்த வித பயனும் இல்லை, எந்த இடத்தில் பிரச்சனையோ அந்த இடத்தில் தான் ஒரு சிறந்த கலீஃபா இருக்க வேண்டும், ஏன் என்றால் அரசு அதிகாரம் இருந்தால் மட்டுமே அந்த வெற்றியை நோக்கி செல்ல முடியும்.
பாலஸ்தீன நாட்டில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஒன்று கூட முடியவில்லை இதுதான் பிரச்சனை,
காலம் காலமாக பாலஸ்தீனத்தில் அல்அக்ஸா பள்ளிவாசலிற்காகவே இந்த பிரச்சனை, ஆக பைத்துல்முகத்தஸ் என்பது சாதாரணமான பகுதியை சேர்ந்தது இல்லை, அதற்காக பல நபிமார்களும்,
இலட்சக்கணக்கான ஜிஹாதிகளும் உயிரை விட்டார்கள், அல்அக்ஸா மூலம் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபடுவதற்காக்கவே இந்த அனைத்து உயிர்தியாகங்களும்,
ஆனால் சைத்தானுடன் ஒன்று சேர்ந்து முஷ்ரிக்குகள் இந்த ஒற்றுமைக்கு எதிராகவே செயல்பட்டுகொண்டு வருகின்றனர்,
இந்த பூமியில் உள்ள முக்கிய மூன்று புனிதபள்ளிகளில் அல்அக்ஸா பள்ளிவாசலும் ஒன்று என்பதை இஸ்லாமியர்களாகிய நாம் மறந்து கொண்டு வருகின்றோம், நாம் மறந்து விட்ட காரணத்தால் அந்த இடங்களில் உள்ள பாலஸ்தீன நம் உறவுகள் அல்அக்ஸா பள்ளிவாசலில் ஒன்றுகூட முடியாமல் போராடி வருகின்றார்கள்,
மீண்டும், மீண்டும் இந்த அல்அக்ஸா மீட்போம் என்ற கட்டுரையில் சொல்ல வருவது என்னவென்றால் நாம்
இதற்காக இப்போதைய காலகட்டத்தில் போர் புரிய வேண்டாம் ,ரோட்டில் நின்று கொண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டாம்,
நாம் செய்ய வேண்டியது முதலில் ,
நாம் ஒவ்வொரு தொழுகையிலும் பாலஸ்தீன நாட்டில் ஒரு சிறந்த ஆட்சியாளரை இந்த இஸ்லாமிய உம்மத்திற்காக
எங்களில் இருந்தே கொண்டு வா
“யா அல்லாஹ் “என்று
அல்லாவிடம் கேட்க வேண்டும் ,
ஏன் என்றால் அவன் நாடாமல் எதுவும் நடப்பதில்லை,
ஆக அல்அக்ஸா பள்ளிவாசல் தொடர்பாக வெற்றி என்று வேண்டும் என்றால் அதற்கு அந்த இடத்தில் அரசு அதிகாரம் பெற்று
இஸ்லாமிய சிறந்த ஆட்சியாளர் இருக்க வேண்டும்,
ஆக அப்படி ஒரு கலீஃபா இல்லாமல் இருந்தால் பாலஸ்தீன நாட்டிற்கு எதிராக முஷ்ரிக்குகள் எச்சரிக்கை விடுவார்கள், பாலஸ்தீன மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துவார்கள், அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் முஷ்ரிக்குகளிடம் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது, என்பதை இஸ்லாமியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
(அல்அக்ஸா பள்ளிவாசலில் உள்ள தலைநகரம் ஜெருசலேம் )
மீண்டும் நினைவுபடுத்த இதை படிப்போம்
இஸ்ரேல் பிரதமர் கூறியதவாது என்னவென்றால்
"ஜெருசலேம் 3000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை... ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது, இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம், எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும், இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால் விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்"
இது இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் கருத்து. இவரது கூற்று எவ்வளவு தூரம் பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆதாரங்களுடன் பொருந்துகிறது என்று பார்ப்போம்.
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன் அரேபியத் தீபகற்பத்தில் இருந்து இடம்பெயர்ந்த கன்ஆனியர் பலஸ்தீனில் குடியேறினார்கள். இவர்கள் அரேபிய செமித்தியர்கள். இவர்கள் பபிலோனியாவில் இருந்து தப்பிவந்த இப்ராஹீம் (அலை) அவர்களை வரவேற்று அடைக்களம் கொடுத்தனர்.
இப்ராஹீம் (அலை) அவரகளது பேரணாகிய யாகூப் (அலை); கன்ஆனியர்களுடன் சமாதானமாக வாழும் போது அவரது அன்புக்குரிய மகனாகியக சிறுவன் யூஸுபை அவரது ஏனைய புத்திரர்கள் சதி மூலம் கொலை செய்ய எடுத்த முயற்சியின் பயனாக இவர்கள் பிற்காலத்தில் எகிப்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. எகிப்தில் 300 வருட காலம் வாழ்ந்தார்கள். (யாகூப் நபியின் பிள்ளைகளே பனூ இஸ்ராயீல் எனப்படுகின்றனர்).
கிமு 1250ல் இவர்கள் பிர்அவ்னின் அடக்குமுறை காரணமாக மூஸா (அலை) தலைமையில் எகிப்தில் இருந்து தப்பி பலஸ்தீனை நோக்கி வந்தார்கள். ஆனாலும் இவர்களது கோழைத்தனம் காரணமாக மூஸாவுடன் முரண்பட்டு பலஸ்தீனத்தில் நுழைய மறுத்தனர். அதனால் சினாய்ப்பாலை வனத்தில் பல வருடங்கள் அலைந்து திரிந்தார்கள்.
மூஸாவுடன் முரண்பட்டதன் விளைவை நினைத்து கவலைப்பட்ட பின்வந்த பரம்பறையினர் கிமு 1004ல் தாலூத் மன்னனின் தலைமையில் போராடினர். வெற்றி பெற்றனர். பின் தாவுத் நபியும் சுலைமான் நபியும் ஏரத்தாள 90 வருடங்கள் அங்கு ஆட்சி செய்தனர். இவ்விரு நபிமார்களின் நீதியான ஆட்சிக்குப் பின் பனூஇஸ்ரவேலர்கள் பிரிந்து தமக்குள் சர்ச்சைப்பட்டு பாவகாரியங்களில் ஈடுபடலாயினர். அவர்களுக்கென்று நிலையான ஆட்சி அமையவுமில்லை.
கி.மு 586ல் நுபுஹத் நஸ்ரின் படையெடுப்பினால் இஸ்ரவேலர்கள் முழுமையாக வீழ்ச்சியடைந்து அதிகமானோர் அங்கிருந்து அடிமைகளாக பப்லோனியாவிற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
539ல் பலஸ்தீன் பாரசீகரின் கீழ் வருகிறது. இக்காலத்தில் மீண்டும் யூதர்களில் ஒருசாரார் பலஸ்தீனில் குடியேறுகின்றனர். அத்துடன் ஜரூஸலத்தைத் தழுவிய 30கிமீ பரப்பினுள் பாரசீகர்களின் தயவில் சுயாட்சி செய்தனர்.
கிமு 332ல் அலக்ஸாந்தரின் படையெடுப்பால் பலஸ்தீனம் முழுமையாக கிரேக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 323ல் அலக்ஸாந்தரின் மரணத்தைத் தொடர்ந்த கிரேக்கர்கள் யூதர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். இதனால் அதிகமானோர் கிரேக்க கடவுள்களை வணங்க ஆரம்பித்தனர்.
_.கிமு 63ல் ரோமர்கள் ஜூலியஸ் ஸீஸரின் தலைமையில் பலஸ்தீனை வெற்றி கொள்கின்றனர். பலஸ்தீனை ஆள்வதற்கு ரோமர்கள் தமக்கு விசுவாசமான ஏரொதஸ் என்பவனை ஆட்சியிலமர்த்தினர். இவன் யூதர்களைத் திருப்திப்படுத்த யூத மதத்தை தழுவினான். ஸக்கரியா, யஹ்யா (அலை) ஆகிய நபிமார்களைக் கொன்றவன் இவனே. இவனது ஆட்சி கிமு 4வரை இருந்தது. அப்போதுதான் ஈஸா (அலை) பிறந்தார்கள். அவர்களையும் கொலை செய்வதற்குத் தேடினான். அதற்குப் பயந்து மர்யம் (அலை) தன் மகனை எகிப்துக்கு எடுத்துச் சென்றார். அவன் இறந்ததை அறிந்தபின் பலஸ்தீனத்திற்கு வந்தார்.
கிபி 33ல் யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்வதற்கு முயன்றனர். ஆனால் ஈஸா (அலை) அவர்களின் முடிவு வரலாற்றுப் புதிராகவே இன்றுவரை காணப்படுகின்றது. யூதர்கள் சிலுவையில் அறைந்து அவர் கொலை செய்யபட்டார் என்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவர் கொலை செய்யப்படாமலே விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள் பல நாடுகளுக்கும் குறிப்பாக ஐரோப்பாவுக்கு தப்பிச் சென்று கிறிஸ்தவப பிரச்சாரம் செய்தனர்.
கிபி 66ல் யூதர்கள் ரோமர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதை டைடஸ் என்ற ரோமத்து தளபதி அடக்கி யூதர்களைக் கொன்றொழித்தான். அத்துடன் யூதர்கள் பலஸ்தீனத்திற்கு வரக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டனர்.
கிபி 325ல் ரோம மன்னன் கொன்ஸ்தான்தீன் கிறிஸ்தவ மதத்தை தழுவினான். அதைத் தொடர்ந்து அவன் பலஸ்தீனம் வந்து அங்கே கிறிஸ்தவ தேவாலயங்களை நிறுவினான். அத்துடன் பலஸ்தீனர்களில் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்தை தழுவ ஆரம்பித்தனர்.
கிபி 395ல் ரோம சக்கராதிபத்தியம் ரோமப் பேரரசு என்றும் பைஸான்திய பேரரசு என்றும் இரண்டாகப் பிரிகிறது. பலஸ்தீனை பைஸாந்திய கிறிஸ்தவ மன்னர்களே ஆட்சி செய்தனர். இவர்கள் ஹிரகல் என அழைக்கப்பட்டனர்.
கிபி 614ல் பாரசீகர் பலஸ்தீனைக் கைப்பற்றினர். பின்னர் 8 வருடங்களில் மீண்டும் அது பைஸாந்தியர் வசம் ஆகிறது. இது பற்றி ஸூறா அர்ரூம் குறிப்பிடுகிறது.
கிபி 636ல் கிறிஸ்தவர்களிடம் இருந்து முஸ்லிம்கள் பலஸ்தீனைக் கைப்பற்றுகின்றனர். அன்று முதல் 1917வரை அது முஸ்லிம்களாலேயே ஆளப்பட்டது. இடைக்கிடை சிலுவை வீரர்கள் அதைக் கைப்பற்றினாலும் குறுகிய கால இடை வெளியில் முஸ்லிம்கள் அதை மீட்டெடுத்தனர்.
முதலாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து பலஸ்தீனை உரிமையாக்கிக் கொண்ட இங்கிலாந்து பலஸ்தீனை யூதர்களுக்கு வழங்கவும் யூததேசமொன்றை உருவாக்க உதவுவதாகவும் வாக்களித்தது. இதன்மூலம் யூதக் குடிவரவுகள் அதிகரித்தன. அன்று முதல் இன்றுவரை பலஸ்தீனர்கள் சிறிதும் சலைக்காமல் முஸ்லிம் உம்மத்துக்குரிய புனித பூமியை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்...
இப்போதைய கால சமயத்தில் அதாவது 2018ஆம் நூற்றான்டில் இஸ்ரேலிய அரசு மூலம் அமெரிக்க அரசு முஷ்ரிக்காக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்பது இவர்களின் எச்சரிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்,
அதற்கு உதாரணமாக
இப்போது பாலஸ்தீன மக்களுக்கு
ஜனவரி 2018 முதல் வாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் எச்சரிக்கை விட்டார் அது என்னவென்றால் இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்காவிட்டால், பாலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆக இந்த விடயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இஸ்ரேலிய அரசு என்ன சொல்கின்றதோ,அதை அப்படியே பாலஸ்தீன இஸ்லாமிய மக்கள் பின்பற்ற வேண்டும் ,இல்லையேல் பாலஸ்தீன இஸ்லாமியர்கள் துன்புறுத்த படுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்,
ஆக இந்த முஷ்ரிக்குகளிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதாலேயே இவர்கள் இதை விட மேல் செய்யவும் தயங்கமாட்டார்கள்,
ஆக இந்த அதிகாரத்திற்கு எதிராக ஒரு அதிகாரத்தின் மூலமே தடுக்க முடியும் என்பது இவர்களின் எச்சரிக்கையை கொண்டு நாம் புரிந்து கொள்ள முடியும்,
ஆக மீண்டும் இந்த கட்டுரையின் மூலம் சொல்ல வருவது நம் இஸ்லாமிய உம்மத்திற்கு தேவை பாலஸ்தீன நாட்டிற்கு இந்த முஷ்ரிக்குகளின் அரசுக்கு எதிராக ஒரு இஸ்லாமிய கலீஃபா அரசு அதிகாரத்தை பெற வேண்டும்,அதற்காக நாம் ஒவ்வொரு தொழுகையிலும் ஏக இறைவனாகிய அல்லாவிடம் துவா கேட்போம்,நம்மால் முடிந்ததை முயற்சி செய்வோம்,வெற்றி தோல்வி என்பது அல்லாவின் நாட்டம்,
அல்அக்ஸா பள்ளிவாசல் என்பது கட்டிடத்திற்காக மட்டும் இஸ்லாமியர்கள் போரட வேண்டியது இல்லை முக்கிய நோக்கம் அங்கு இஸ்லாமியர்கள் ஒன்று கூட வேண்டும் என்பதற்காக ,அந்த ஒற்றுமைக்காகவே போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் எண்ணங்களில் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நோக்கமாகவும்,
முயற்சியாகவும் இருக்க வேண்டும்,
மீண்டும் இஸ்லாமியர்கள் நினைவுபடுத்த வேண்டியது என்னவென்றால் நமது போராட்டம் ,கண்டனங்கள் அரசுக்குஎதிராக ரோட்டில் நின்றால் எந்த பயனும் இல்லை அது கேமாரா வரும் வரைக்காக மட்டுமே முடியும், கேமாராவிற்காக இந்த போராட்டம் இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,
போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் மக்களின் கூட்டம் ஏன் அல்லாவிடம் ஒன்றுபட்டு கேட்க வில்லை ,
ஏன் அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலோ கேட்கவில்லை என்று கேள்வி எழுகின்றதே ?
நம்பிக்கை கொள்வோம் மும்மீன்களே ,,,,
அல்லாவிடம் முதலில் ஒன்றுபட்டு கேட்போம்,
பிறகு போரட்டம் என்று மற்ற விஷயங்களில் முயற்சிப்போம்,
நாம் அல்லாவிடம் கேட்க தவறி
நாம் வெற்றியை நோக்கி செல்வது என்பது சாத்தியம் இல்லை.
ஆக இன்ஷா அல்லா அல்அக்ஸாவின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்வோம்.
சலீம் - அமெரிக்கா.
No comments:
Post a Comment