Wednesday, 17 January 2018

புரிந்து கொள்ளப்படாத முத்தலாக்கும் புதைக்க வேண்டிய இன்றைய சட்டங்களும்

புரிந்து கொள்ளப்படாத முத்தலாக்கும் புதைக்க வேண்டிய இன்றைய சட்டங்களும்
                   
⚫⚫⚫⚫⚫⚫
பெருமானார்(ஸல்) அவர்கள் மணந்த
ஒரே கன்னிப்பெண்..

ஆறுவயதில் பெருமானார்(ஸல்)
அவர்களுடன் திருமண உறவு ஏற்பட்டது..

ஒன்பது வயதில் பருவமடைந்த பிறகு
பெருமானாரோடு(ஸல்)
அவர்களோடு
இனிய இல்லறம் நடத்தியவர்கள்..
அன்னை ஆயிஷா(ரலி)
அவர்கள்...

எனவேதான் இஸ்லாமிய பெண்களின் திருமணவயது பெண் பருவமடைந்தவுடனே
ஆரம்பமாகிறது...

பெருமானார்(ஸல்) அவர்கள் மரணிக்கிறபோது ஆயிஷா(ரலி) அவர்களின் வயது பதினெட்டு...

தனது அறுபத்துமூன்று வயதுவரை வாழ்ந்து
இந்த சமூகத்திற்கு பெருமானாரின் (ஸல்)அவர்களின் ஏராளமான பொன்மொழிகளை (ஹதீதுகளை) அளித்தார்கள்...

பெருமானாரும்(ஸல்) அவர்களுடன்...
வாழ்ந்த இல்லறவாழ்க்கையை
சமூகத்திற்காக எடுத்துச் சொன்னார்கள்
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள்...

அன்னை ஆயிஷாவோடு ஓட்டப்பந்தயத்தில்
வேண்டும் என்றே தோற்றுப்போகிறார்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள்..

பெண்கள் கணவனை தோற்கடித்தால் ஒரு
வகை மகிழ்ச்சி.. பெருமானாரின்(ஸல்)
அவர்களின் இந்த உளவியல் நிகழ்வு
நுட்பமானது...

விளையாட்டுகளை பெருமானாரின்(ஸல்)
தோளின் மீது தனது தலைவைத்து
வேடிக்கை பார்த்தார்கள் ஆயிஷா(ரலி)...

பெருமானாரும்(ஸல்) அவர்களும் ஆயிஷா
(ரலி) அவர்களும் ஒரே பாத்திரத்தில்
நீர் வைத்து குளித்தார்கள்..

மாமிசத்தின் ஒருமுனையை
அவர்களும்.. ஒருமுனையை
இவர்களும் வாய்வைத்து கடித்து
உண்டார்கள்..

பாத்திரத்தில் பெருமானார்(ஸல்)
அவர்கள் வாய்வைத்து குடித்த இடத்தில் வாய்வைத்து குடித்தார்கள்...அன்னை
ஆயிஷா( ரலி)..

இல்லறவாழ்வின் எடுத்துக்காட்டான
வாழ்க்கை வாழ்ந்தார்கள்..

இதன் பிறகு பெருமானார்(ஸல்) அவர்கள் ஒன்பது திருமணங்களை முடித்தார்கள்..

ஆயிஷா (ரலி)அவர்களைத்தவிர.
மற்ற அனைவரும் விதவைகள்
கணவனால் கைவிடப்பட்டவர்கள்..

பல்வேறு அரசியல் சமூக காரணங்களுக்காக
பெருமானார்(ஸல்) அவர்கள் இத்தணை
திருமணங்கள் செய்தார்கள்..

மரியத்துல் கிப்தியா என்ற அடிமை பெண்
பரிசாக அவர்களுக்கு அனுப்பப்பட்டார்..

அது அடிமைகளை ஆகுமானதாக ஆக்கிக்
கொள்ளும் காலம் அவர்கள் மூலம்
இப்ராஹீம் என்ற ஆண்குழந்தை பிறந்தது..

பெருமானாருக்கு அன்னை கதீஜா(ரலி
அவர்கள் மூலம் இரண்டு ஆண் மற்றும்
நான்கு பெண்குழந்தைகள்
பிறந்தனர்...

ஆண்குழந்தைகள் அனைவரும் விரைவில்
மரணமடைந்தனர்..

பெருமானார்(ஸல்) எல்லா மனைவியரின்
வீடுகளுக்கும் நாள் குறித்து சென்று
வந்தார்கள்..

எல்லோரையும் சமமாக பாவித்தார்கள்..

பெருமானாரின் மனைவியரின் அதிக
பொருள்கேட்டு அழுத்தம் கொடுத்த
போது பெருமானார் அவர்கள் இருபத்தி
ஒன்பது நாட்கள் கழித்து வந்தார்கள்..

அதிக பொருள்கள் தர வசதியில்லை
நான்வேண்டுமா? அல்லது மணவிடுதலை
தந்துவிடவா? என வினவியபோது
எல்லா மனைவியரும் பெருமானாரையே
போதுமாக்கி கொண்டார்கள்...

இத்தணை மனைவியரோடு
வயது முதிர்ந்த.. வயது குறைந்த...
மனைவியர்களோடு பொருளாதார
சமநிலையோடு.. எல்லா மனைவியரது
உரிமைகளையும் கடமைகளையும்
நிறைவேற்றி வாழ்வியல் புரட்சி
செய்தார்கள்.. பெருமானார்(ஸல்)
அவர்கள்..

பெருமானார் மணவிடுதலை தர
நாடியது இந்த சமூகத்திற்கான செய்தி..

கருத்து முரண்பட்டவர்கள்
தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாமல் எளிதாக பிரிந்து கொள்ளலாம்
என்பதே நமக்கான பாடம்...

இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை மற்ற
மதங்களின் வாழ்வியல்
நெறிகளோடு  ஒப்பீடு செய்வோம்..

அப்போதுதான் இஸ்லாமிய தலாக்
சட்டங்களின் மேன்மை புரியும்....

⬛⬛⬛⬛⬛
                  S.A,ஜாபர்அலி
                    11.01.18
⬛⬛⬛⬛⬛

No comments:

Post a Comment