Monday, 1 January 2018

ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 4


மூஸா நபியின் சமூகத்தாரை சாமிரி வழிகெடுத்தான்

ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அவ்வளவு எச்சரித்தும் அறிவுரை வழங்கிய போதிலும் அவரின் பேச்சைக் கேட்காத இஸ்ரவேலர்கள் தொடர்ந்தும் அவரின் பேச்சை புறக்கணித்து வந்தனர். ஹஸ்ரத் மூசா (அலை) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க தூர் சினை மலைக்கு சென்ற நேரம் பார்த்து அந்த சமுகத்தில் இருந்த சாமிரி என்பவன் அவர்களை வழிகெடுத்து விடுகிறான்.அவன் ஒரு காளை ஒன்றின் சிலையை செய்து அதை இஸ்ரவேலர்களுக்கு வணங்குமாறு கூற, அவர்களும் அதை வணங்க துவங்குகின்றனர்.

இது பற்றி திருமறையின் சூரதுத் தாஹா இப்படி கூறுகிறது.

''நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்'' என்று (அல்லாஹ்) கூறினான்.

"ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து ''என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?'' (என்றார்).

''உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்".

"பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் ''இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.

( ஸூரத்துத் தாஹா 85 - 88 )

இன்ஷா அல்லாஹ் தொரும்......

பதிவு நாள்: 02-01-2018.

No comments:

Post a Comment