Saturday, 6 January 2018
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 7
பழைய ஏற்பாட்டின் பொய்கூற்றுக்கு திருக்குர்ஆனின் பதிலடி
பழைய ஏற்பாட்டிலும் திருக் குரானிலும் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நபி மூஸா (அலை) அவர்கள் தூர் சினாய் மலைக்கு அல்லாஹ்வை சந்திக்க சென்றிருந்த சமயம் இடம்பெற்றது.தவ்ராத்தில் இந்த தங்கக் காளை நபி ஹாரூன் (அலை) செதுக்கியதாக கூறப்படுகிறது.ஆனால் திருக்குர்ஆன் இதனை மறுக்கிறது.திருக்குர்ஆன் இந்த சிலை சாமிரி என்பவனால் செதுக்கப்பட்டதாக கூறுகிறது.அல்லாஹ்வை சந்திக்கச் சென்ற மூஸா (அலை) அவர்கள் நீண்ட நாட்களாக (40 நாட்கள்) திரும்பாத நிலையில் சாமிரி என்பவன் முன் வந்து மூஸா காணாமல் போய்விட்டார் அவர் திரும்பி வரமாட்டார் எனக் கூறிய அவன் பிரவ்னின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று வரும் போது கொண்டு வந்த தங்க நகைகளையும் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சில தங்க நகைகளையும் சேர்த்து உருக்கி ஒரு தங்க காளைக்கன்றுச் சிலை ஒன்றை உருவாக்கி இது தான் நம் கடவுள் இதை வணங்குங்கள் என்றான்.மேலும் இதுதான் மூஸாவின் கடவுளும் கூட இதை அவர் மறந்து விட்டார் என இஸ்ரவேலர்களிடம் கூறினான்.அதை மூஸா (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன்(அலை) எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து செய்து வந்தனர்.ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை தடுத்தது பற்றியும் அவர்கள் அதை மறுத்தது பற்றியும் திருக்குர்ஆன் சூரத்துல் தாஹாவில் இப்படி கூறுகிறது.
ஹாரூன் நபியின் எச்சரிக்கை
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, ''என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்று கூறினார்.
இஸ்ரவேலர்களின் பிடிவாதம்
''மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்'' என்று அவர்கள் கூறினர்.
(சூரத்துல் தாஹா 90-91)
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 06-01-2018.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment