Saturday, 6 January 2018

தலாக் விஷயத்தை இஸ்லாமிய எதிரிகள் எதிர்க்க காரணமென்ன?


மற்ற மதங்களும் கொள்கைகளும் திருமணத்தை விழாவாகவும், ஒருநாள் கூத்தாகவும் பார்க்கும் உலகில் அத்திருமணத்தை வணக்க வழிபாடுகளில் ஒன்றாக கணித்த மார்க்கம் இஸ்லாம்.!

"ஒரு கணவன் தன் மனைவிக்கு காதலுடன் ஒருவாய் உணவு ஊட்டினாலும் அது நன்மைக்குரிய செயல். என கூறுகிறது இஸ்லாம்.!

 மற்ற மதங்கள் மனைவி மக்களை விட்டுவிட்டு துறவறம் செல்வதை ஆதரிக்கும் போது....
"ஒரு கணவன் தன் நேச மனைவிக்காக (தன் குடும்பத்தினருக்காக) நேர்மையான வழியில் சம்பாதிப்பது, மறுமையில் பல சிறப்புகளை பெற்றுதரும் காரியம் என கூறுகிறது இஸ்லாம்.

அப்பேற்பட்ட அழகிய கணவன் மனைவி வாழ்வில் விரிசல் ஏற்பட்டு இனி வாழவே முடியாது எனும் நிலை ஏற்படும்போது....
  நீதிமன்றத்தில் நாம் கூறும் எந்த காரணத்திற்கும் சுலபமாக விவாகரத்து கிடைக்காது.!
  தன் கணவனிடம் ஆண்மை இல்லை என மனைவியும்,
 தன் மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு உள்ளது என கணவனும் கூறினால்தான் விவாகரத்து கிடைக்கும் என்பதால்....
  பொய்யான குற்றங்களை ஒருவரின் மீது ஒருவர் சாட்டி விவாகரத்து வாங்கும் நிலையே உலகில் உள்ளது.!

ஆண்மை இல்லையென்றும், இன்னொருவனுடன் தொடர்பு உள்ளது என்றும் பொய்யான காரணம் கூறி விவாகரத்து பெற்ற அந்த ஆணையோ பெண்ணையோ மணமுடிக்க யார் முன்வருவர்.?

வேறுவழியின்றி விபச்சாரத்தை நோக்கி நகர மட்டுமே அதிகமான வாய்ப்புள்ளது அவர்களது அடுத்தகட்ட வாழ்க்கை.!

அப்படி வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கும் உலகில்....
இனி ஒற்றுமையாக வாழவே முடியாது எனும் நிலை வரும்போது கணவனுக்கு தலாக் எனும் உரிமையும், மனைவிக்கு குலா எனும் உரிமையையும் வழங்கி இருவரின் அடுத்தக்கட்ட வாழ்வை கண்ணியமாக வாழ வழிவகுக்கிறது இஸ்லாம்.!

தனக்கு கிடைக்காத இத்தீர்வு...
முஸ்லிம்கள் மட்டும் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனரே! என்ற ஏக்கமே எதிரிகள் எதிக்கவும் காரணம்.!

  ஆனால் கடைசி முஸ்லிம் உள்ளவரை மனிதனுக்கு மரியாதை தரும் எங்களது மார்க்க சட்டத்தையும் மாற்ற எவனாலும் முடியாது.!
இன்ஷா அல்லாஹ்

✍ பாரூக் சைதாப்பேட்டை

பதிவு நாள்: 07-01-2018.

No comments:

Post a Comment