🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
☆எங்களுக்கு நேரம் இருக்கிறது -- ஆனால்
நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம்.
☆வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால் விடியாமலே விரைந்து செல்வோம் விளையாட்டு மைதானத்துக்கு.
☆ஊர் முழுக்க வலம் வர உடம்பில் தெம்புண்டு – ஆனால் ஒரு வக்து தொழுகைக்கும் இறையில்லம் வர மாட்டோம்.
☆மருந்து சாப்பிடுவதால் தொழ முடியவில்லை – ஆனால் விருந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் தடையில்லை.
☆பள்ளிக்கு பக்கத்தில் பாங்கு சத்தம் கேட்ப்போம் – ஆனால் சத்தமே இல்லாமல் நடையைக் கட்டிவிடுவோம்.
☆வீதியில் சும்மாதான் இருப்போம் – ஆனால்
ஜும்ஆவுக்கு கடைக்கோடியில்தான் நிற்போம்.
☆ஒரு நாள் முழுக்க எங்களுக்கு ஓய்வுதான் – ஆனால் உறங்குவது என்னவோ ஜும்ஆவில்தான்.
☆விருந்தில் முதல் பந்திதான் பிடித்த இடம் – ஆனால் ஜும்ஆவில் கடைசி இடம்ன் தான் எங்கள் புகலிடம்.
☆அளவின்றி அரட்டை அடிப்போம் – ஆனால்
மருந்துக்குக் கூட மார்க்க அறிவுரைகள் கேட்கமாட்டோம்.
☆ஒழு கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது – ஆனால் உபதேசம் எங்களுக்கு அறவே பிடிக்காது.
☆பத்திரிகையை வரிக்கு வரி மேய்வோம் – ஆனால் உலகப் பொது மறையில் ஒரு வரி கூடத் தெரியாது.
☆உலகப் பொதுமறை என்று முழங்குவோம் – ஆனால் அதில் ஒரு கட்டளையைக் கூட மதிக்க மாட்டோம்.
☆பர்தா பேணாதவர் பாவி என்போம் – ஆனால் பர்தா அணிந்தே பல பாவங்கள் புரிவோம்.
☆உடம்பு முழுக்க வியாதி இருக்கும் – ஆனால் உணவில் கட்டுப்பாடு ஒரு துளியும் பேண மாட்டோம்.
☆வரதட்சணை ஆகாது என்று வீரம் பேசுவோம் – ஆனால் கொல்லைப்புற வழியாக கொத்தாகப் பிடுங்குவோம்.
☆மஸ்ஜிதில்தான் திருமணத்தை நடத்துவோம் – ஆனால் மறைமுகமாக மார்க்கம் மீறுவோம்.
☆ஒரு பருக்கை சோறு கூட பரகத் என்போம் – ஆனால் திருமணத்தின்போது அண்டா சோற்றையே வீதியில் கொட்டுவோம்.
☆நீண்ட தேடலில் துணையை வசப்படுத்துவோம் – ஆனால் நிமிடத்தில் ஜமாஅத்துக்கு வருவோம் விவாகரத்து மனுவோடு.
☆வீட்டின் சுற்றுபுறம் வரை சுத்தம் பேணுவோம் – ஆனால் வீட்டுக் குப்பைகளை வீதியில் இறைத்து அசுத்தம் செய்வோம்
☆தாய் தந்தை நலம் பேண வேண்டும் என்போம் – ஆனால் தாரம் வந்ததும் தாயகம் துறப்போம்.
☆என் பெற்றோர் மேல் எனக்கு உயிர் என்போம் – ஆனால் அவர்தம் உயிர் பிரிந்த பின்னர்தான் ஊருக்கே வருவோம்.
☆குழந்தையின் உயர்வில் ஆர்வம் கொள்வோம் – ஆனால் குர்ஆன் ஓத அனுப்பக் கூட நேரமில்லை என்போம்.
☆ஒருதாய் பிள்ளை என உரக்கச் சொல்வோம் – ஆனால் உள்ளவன் இல்லாதவன், உள்ளூர் வெளியூர் என பிரித்து மேய்வோம்.
☆அடுத்தவன் காசு எனகெதற்கு என்போம் – ஆனால் வடிகாலைக் கூட விட்டு வைக்காமல் வளைத்துப் போடுவோம்
☆இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்போம் – ஆனால் படித்து பட்டம் வாங்கியதும் வெளிநாடு பறப்போம்.
☆மழை இல்லை என கவலை கொள்வோம் – ஆனால் குளிக்கும் நீரின் அளவில் ஒழு செய்வோம்.
☆ஏழைகள் மீது பரிவு காட்டு என்போம் - ஆனால் வட்டிக்கு பணம் விட்டு இரத்தம் உறிஞ்சுவோம்.
☆பகிர்ந்து உண்ண வேண்டும் என்று பேசுவோம் – ஆனால் ஜகாத் பொருளை பதுக்கி வைப்போம்.
☆இவையெல்லாம் துணிச்சலாகச் செய்வோம் – ஆனால் தயங்காமல் சொல்வோம் நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று...!!!
அல்லாஹ் நம் அனைவரும் பாதுகாப்பானாக.
நன்றி இணையம்....
No comments:
Post a Comment