முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி கீரனூர்
1.நான்கு ருகூக்களும்,நான்கு ஸஜ்தாக்களும் உள்ள தொழுகை எது?
பதில்:சூரிய,சந்திர கிரகண தொழுகையாகும்.(புகாரி 1046)
2.எந்த ஸஹாபியின் மரணத்தால் அல்லாஹ்வுடைய அர்ஷ் நடுங்கியது?
பதில்:ஸஅது இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு (புகாரி 3803)
3.ஃபர்ளுத் தொழுகைக்குப் பின்னும்,தூங்கும் பொழுதும் ஆயத்துல் குர்ஸி ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில்:இரவில் அதை ஓதினால் காலை வரை ஷைத்தான் அவரை நெருங்கமாட்டான்.
(புகாரி 2311,3275,5010)
தொழுகை்குப் பின் ஓதி வந்தால் அவர் சுவனம் செல்ல மரணத்தை தவிர வேறெதுவும் அவருக்கு தடையாக இருக்காது.
(நஸாயீ சுனனுல் குப்ரா 9585)
4.அல்லாஹ் எந்த சமூகத்தார் மீது கோபம் கொண்டான்?
பதில்:யூதர்கள்,இவர்கள் தங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்களை கொலை செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள்.
(அல்குர்ஆன் 1:7)
5.வழிகெட்ட சமூகத்தார் யார்?
பதில்:கிறித்துவர்கள்,இவர்கள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈஸாவை கடவுளாக்கி வழிகெட்டுவிட்டனர்.
(அல்குர்ஆன் 1:7)
6.ஒரு பெண்ணின் தந்தையும் நபி,கணவரும் நபி?அப்பெண் யார்?
பதில்:சுஐப் நபியின் மகள்;மூஸா நபியின் மனைவி
சுஐய் நபி தன் மகளை மூஸா நபிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
(அல்குர்ஆன் 28:27)
7.ஹதீஸில் இடம்பெற்றுள்ள ரிபாத் எனும் வார்த்தைக்கு பொருள் என்ன?
பதில்:ஒரு தொழுைகை முடிந்ததும் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பது,சிரமமான நேரத்தில் பரிபூரணமாக உளு செய்வது,அதிக எட்டுக்கள் வைத்து பள்ளிக்கு நடந்து வருவது
(முஸ்லிம்:369)
8.எந்த ஸஹாபிப் பெண்மனியின் சாட்சி இரண்டு ஆண்களின் சாட்சிக்கு சமமானது ஆகும்?
பதில்:ஹுஜைமா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹா
(அபூதாவூத்:3607)
9.ஒரு ஸஹாபி குர்ஆன் ஓதுவதை கேட்க வானத்திலிருந்து மலக்குகள் இறங்கி வந்தனர்?அவர் யார்?
பதில்:உஸைத் இப்னு ஹூளைர் ரலியல்லாஹு அன்ஹு
(புகாரி: 5018)
Mashallah
ReplyDeleteபயனுள்ள பகுதி...:மாஷாஅல்லாஹ்...:
ReplyDelete