Friday, 26 January 2018

யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 1


யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் பக்தாதிலுள்ள - நய்னவா என்ற கிராமத்துக்குத் தூதராக அனுப்பினான். அவர் அங்கு வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்து, அவனுக்கு மாறுசெய்வதன் மூலம் கடுமையான வேதனையுண்டு எனவும் எச்சரிக்கை செய்தார். எனினும் அம்மக்கள் அவர்களின் கட்டளையை நிராகரித்து, மாறுசெய்த பொழுது, கோபமுற்றவராக அல்லாஹ்வின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு புறப்பட்டு கடற்கரைப் பக்கமாக சென்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என்றெண்ணி பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அவரது சமுதாயம் அவர் அவ்வூரை விட்டு வெளியேறிய பின் விசுவாசம் கொண்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்:

((கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள்; இருக்கக்கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.) யூனுஸ் – 98.

கடற்கரைப் பக்கம் சென்ற அவர் கடலில் பொதிகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்லும் கப்பலை நிறுத்தி, அதில் ஏறிச் சென்றார்.

அல்லாஹ் கூறுகிறான்:
(நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடினார்) அஸ் ஸாஃப்பாத் -140.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

பதிவு நாள்: 26-01-2018.

No comments:

Post a Comment