கடல் அலை மிகக் கடுமையாக இருந்தது. அதனால் கடலில் முழ்கிவிடக் கூடும் என மக்கள் பயந்து தங்களிடம் இருந்த பொதிகளை ஒன்றன் பின் ஒன்றாக கடலில் போட்டார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் நிறைவேரவில்லை. இறுதியாக பயணிகளில் சிலரைக் குறைத்து பலரைப் பாதுகாக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள். ஆனால், இக்காரியத்துக்கு யார் முன்வருவது என்ற சரிச்சை அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. பின், சீட்டு; போட்டு தெரிவு செய்தபோது யூனுஸ் (அலை) அவர்களின் பெயர் வந்தது. இதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகிவிட்டார்.)
அஸ் ஸாஃப்பாத் – 141.
பின்பு யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் பாய்ந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படி பெரிய மீன் ஒன்று அவர்களை விழுங்கி கடலின் ஆழத்துக்கு எடுத்துச் சென்றது. இக்கட்டத்தில் யூனுஸ் (அலை) அவர்கள் பலவிதமான இருள்களைச் சந்திக்க நேர்ந்தது. தனது கூட்டத்தாரை விட்டு கோபத்துடன் வந்த கவலை ஒரு பக்கமிருக்க, மீனுடைய வயிற்றுக்குள் ஒரு இருள், கடலின் ஆழம் மற்றொரு இருள், இரவின் இருள் இவ்வாறு இக்கட்டான சூழலில் இருந்த அவர்கள் முதலில் அல்லாஹ்வைத் தான் அழைத்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்:26-01-2018
No comments:
Post a Comment