Friday, 26 January 2018

யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 3

அல்லாஹ் கூறுகிறான்:
(மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் எனறு நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.) அல் அன்பியா – 87.

அல்லாஹ்வை துதி செய்ய ஆரம்பித்த போது, அல்லாஹ் அவரது துயரத்தைப் போக்கினான்.

அல்லாஹ் கூறுகிறான்:
(அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்) அஸ் ஸாஃப்பாத் – 143:144.

பின்பு மீன் அவரை கரையில் கொண்டு வந்து போட்டது. அப்போது அவர் நோயுற்றவராக போடப்பட்டாரே தவிர இழிவாக போடப்படவில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்) அஸ் ஸாஃப்பாத் -145.

இது அல்லாஹ் அவர் மீது புரிந்த அருளாகும். அதைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்:

(அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.) அல் கலம்- 49.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

பதிவு நாள்: 27-01-2018.

No comments:

Post a Comment