Friday, 26 January 2018

யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 5

இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.

1. அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கை இழக்காதிருத்தல்.

2. நிச்சயமாக அல்லாஹ் தௌபாவை ஏற்றுக் கொள்பவன். யூனுஸ் (அலை) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.

3. சங்கடத்தில் மாட்டிக் கொண்டவருக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:
(நெருக்கடியைச் சந்தித்தவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்) அந்நம்ல் – 62.

4. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யூனுஸ் (அலை) அவர்கள் மூலம் நேர்வழி அடைந்தார்கள் என்ற செய்தி இவரின் உயர் அந்தஸ்தைக் காட்டுகிறது.

5. மனிதர்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களே! எனவே அவர்களில் அவன் நாடியவர்களைத் தண்டிப்பான். அவர் நபியாக இருப்பினும் சரியே!

யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!

முடிவுற்றது....

பதிவு நாள்: 27-01-2018.

No comments:

Post a Comment