அல்ஹாபிழ்.அ.சதாம் உசேன் ஹஸனி B.A(arabic) தொண்டி
"மனிதன் இவ்வுலகில் சில நியதிகளை கடைபிடிப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறான்.
அவற்றில் குறிப்பாக தனக்குக் கிடைக்கும் அனைத்தும் தன்னோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றோ அல்லது "நீண்ட காலமாவது அந்த பொருள் தன்னோடு நீடிக்க வேண்டும் என்றோ ஆசை வைக்கிறான்.
ஆக மனிதனின் அதிகமான ஆசையே தனக்கு கிடைப்பவை அனைத்தும் என்னோடு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதே!
இதன் அடிப்படையில் மனிதன் "தன் வாழ்க்கை முழுவதிலும் தான் விரும்பியவாறு முடிவே இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால்! அப்படிப்பட்ட வாழ்க்கையும் மனிதனுக்கு காத்து இருக்கிறது என்றே இறைவன் கூறுகிறான்..
والاخرة خير و ابقا
மறுமையோ மிகச் சிறந்ததும்; நிரந்தரமானதாகும். (87:17)
உண்மையில் மனிதன் சிசு என்ற கட்டத்திலிருந்தும் வாலிபம் என்ற கட்டத்திலிருந்தும் முதுமை என்ற கட்டத்திலிருந்தும் விடுபட்டு மறுமை வாழ்வின் பால் காலடி வைப்பதே மனிதனின் நிரந்தர வாழ்க்கையின் ஆரம்பம் என்று இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான்.
எனவே அந்த மறுமை வாழ்வை அடையப்போகும் ஒவ்வொரு ஆண்மாவும் அதற்கு தேவையான நல்அமல்களை கட்டு சாதமாக எடுத்துச் செல்ல கடமைபட்டிருக்கிறது.
அதுவே அந்த நிரந்தர வாழ்க்கைக்கு மிக அவசியமானதாகும்.
ஆனால் மனிதனோ நிரந்தற வாழ்க்கையை மறந்துவிட்டு நிறந்தறமற்ற உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
அதை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டு காட்டுகிறான்..
بل تؤثرون الحياة الدنيا
(மனிதனோ) உலக வாழ்வையே தேர்ந்
தெடுத்துக் கொள்கிறான். ( 87:16)
இந்த உலக வாழ்வு கட்டாயம் முடிவுக்குட்பட்டதே என்பதை மனித மனம் மறந்தாலும்! எந்த மனிதனும் இவ்வுலகில் நிலைக்கவில்லை என்பதை இறைவன் மிக ஆழமாக ஒவ்வொரு கணமும் புரிய வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
அப்படி இருந்தும் மனிதன் ஏன் இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்று நாம் கேட்கலாம்..
ஆம் அதன் காரணத்தை இறைவனே குறிப்பிடுகிறான்.
உலகை சம்பாரிக்க வேண்டும் என்ற வேட்கையே; மனிதனை நிரந்தர மறு உலக வாழ்க்கையைபற்றி சிந்திப்பதைவிட்டும் மறக்கடித்துவிடுகிறது.
"அதிகம்; அதிகம் சேர்க்க வேண்டும் (என்ற எண்ணம்) மனிதனை அழிவில் போட்டுவிட்டது. (102:01)
இந்த வசனம் கூறும் செய்தி அதிகமான மனிதர்களின் நிதர்சன வாழ்க்கையைப்
பற்றியது.
இந்த உலகை சம்பாதிப்பதற்காக தன்னை முற்றிலுமாக அர்பணிக்கும் மனிதன் நாளைய மறுமை நாளுக்காக சம்பாதிப்பதில் மிகப்பெரும் பொடுபோக்கில் இருக்கின்றான்.
சிலருக்கு இரு உலகின் பலனையும் கூட பெற முடியாமல் போயும்விடுகிறது..
இதுவே மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரும் கைசேதமாகும்.
நிரந்தரமான வாழ்விற்காக சம்பாதிக்காமல் நிலையற்ற வாழ்க்கைக்காக யார் சம்பாதித்தாரோ; அவரின் செயல்களெல்லாம் வைரக்கற்கள் கொட்டிக்கிடக்கும் இடத்தில் கூலாங்கற்களை தேடி பொறுக்கியதற்கு ஒப்பாகும்.
நாளை மறுமையில் பலனளிக்கப்போவது நம் நற்செயல்கள்தான் என்பது இறைவாக்குறுதி. ஆனால் அவற்றையெல்லாம் அற்ப உலகை சம்க்குபாதிக்கும் ஆசை கண்ணிற்கு திரையிட்டு பாவங்களிலும்; கழியாட்டங்களிலும் மனிதனை தள்ளிவிடுகிறது.
இதனால் அவன் இரு உலக வாழ்விலும் பெரும் கைசேதத்தை சம்த்துபாதித்துக் கொள்கிறான்.
ஆகவே அன்பான சகோதர சகோதரிகளே!
நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க நினைத்தால்;
நம் வாழ்க்கையில் ஒருபகுதியையேனும் மறுமை வாழ்க்கைக்கான தயாரிப்புக்காக அற்பணிக்க வேண்டும்..
இல்லையேல் நாமும் கைசேதத்திற்கு ஆளாக நேரிடலாம்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் மறுமைக்காக செயல்பட்டு நாளை அந்த நிறந்தற வாழ்வில் வெற்றியடையச் செய்வானாக.!
No comments:
Post a Comment