Wednesday, 7 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 1



✍முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி

நபி அய்யூப் அலை அவர்கள் இஸ்ஹாக் நபியின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் ஆவார்கள். மூஸா நபிக்கும், யூசுஃப் நபிக்கும் இடையே நபியாக அனுப்பப்பட்டவர்கள். இவர்களின் வரலாறு குர்ஆனில் சுருக்கமாக 21-வது மற்றும் 38-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சுருக்கம்:

அய்யூப் நபி மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய பிள்ளைகளும் இருந்தனர். அல்லாஹ் அவர்களின் பொருளைக் கொண்டும், குழந்தைகளைக் கொண்டும், உடலைக் கொண்டும் சோதித்தான். அதன்மூலம் ஏற்பட்ட துன்பங்களில் அய்யூப் நபி மிகப் பொறுமையாக இருந்தார்கள். அவர்களின் பொறுமைக்கு அல்லாஹ் சிறந்த கூலியை கொடுத்தான். அவர்களின் இறைஞ்சுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். மேலும் அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தையும் மீட்டிக் கொடுத்தான். அவர்களுக்கு அளவில்லா செல்வத்தையும் வழங்கினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:08-2-2018

No comments:

Post a Comment