Wednesday, 7 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 2


அய்யூப் நபி வரலாறு குர்ஆனின் 21-வது அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது.

நபியே! அய்யூபையும் நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனிடம் நிச்சயமாகத் துன்பம் என்னை பீடித்துக் கொண்டது;நீேயா கிருபையாளர்களில்லாம் மிகக் கிருபையாளன்" என்று பிரார்த்தனை செய்து அழைத்த போது,

நாம் அவருக்கு பதிலளித்து;பின்னர் அவருக்கிருந்த துன்பத்தை நீக்கி விட்டோம்;அவருடைய குடும்பத்தையும்,அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம்;இது, நம்மிடமிருந்துள்ள கிருபையாகவும் நம்மை வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்:21-83,84)

38-வது அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது:

மேலும் நபியே! நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனை அழைத்துப் பிரார்த்தனை செய்து "நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும்,வேதனையைக் கொண்டும் தீண்டிவிட்டான்"என்று கூறிய போது,அதற்கு நாம்

"உம்முடைய காலால் பூமியை அடியும்"என்று கூறினோம்;அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது;அவரிடம்,இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும்,பானமும் இருக்கின்றன என்று கூறினோம்;அதனால் அவருடைய நோய் குணமாகி விட்டது.

மேலும், நம்மிடமிருந்த அருளாகவும்,அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும்,அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம்.
(அல்குர்ஆன் 38:41-43)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 08-2-2018

No comments:

Post a Comment