Wednesday, 7 February 2018
நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 3
தன் அடியாரும், நபியுமான அய்யூப் அவர்களைப் பற்றி அல்லாஹ் மேற்கூறப்பட்ட வசனங்களில் கூறிக் காட்டுகிறான்.
அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தால் உடலின் மூலமும், பொருளின் மூலமும், குடும்பத்தார்களின் மூலமும் சோதிக்கப்பட்டார்கள். அவர்களின் இதயத்தைத் தவிர மற்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் நோய் பரவி இருந்தது. உடலின் ஊசிதுளை அளவு மட்டும் தான் சரியாக இருந்தது. மற்ற அனைத்து இடங்களிலும் நோய் பரவி இருந்தது. கடுமையான நோயின் தாக்கத்தால் எவரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்களின் மனைவி மட்டும் அல்லாஹ், ரஸுலின் மீதுள்ள பயத்தால் அய்யூப் நபியுடன் இருந்து பணிவிடை செய்தார்கள். அவர்களின் மனைவி மக்களிடத்தில் கூலிக்கு வேலை செய்து வாங்கும் கூலியிலிருந்து அய்யூப் நபிக்கு உணவு கொடுப்பார்கள்.
மனைவி, வேலைக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அவர்களுடனையே இருப்பார்கள். இவ்வாறு சுமார் 18 வருடங்கள் பணிவிடை செய்து வந்தார்கள்.
நோய் கடுமையாகி, மிகவும் மோசமான நிலையை அடைந்த பொழுது அய்யூப் நபி தன் இரட்கனிடத்தில் நோயைப் பற்றி முறையிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:08-02-2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment