Wednesday, 7 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 4


அய்யூப் நபியின் பிரார்த்தனை

நிச்சயமாக துன்பம் என்னை பிடித்துக் கொண்டது; நீயோ கிருபையாளர்களில்லாம் மிகக் கிருபையாளன். (அல்குர்ஆன் 21:83)

மற்றொரு வசனத்தில்,
நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையைக் கொண்டும் தீண்டி விட்டான். (அல்குர்ஆன் 38:41)

நோயிலிருந்து அய்யூப் எவ்வாறு விடுபட்டார்கள்?

கிருபையாளனான அல்லாஹ் அவர்களின் துஆவை அங்கீகரித்தான். ஓர் இடத்தில் தன் காலால் பூமியை அடிக்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு கூறினான். அய்யூப் நபி அவ்வாறு செய்தவுடன் பூமியிலிருந்து ஓர் ஊற்று வெளியானது. அதிலே அவர்களை குளிக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அய்யூப் நபி அவ்வூற்றின் தண்ணீரிலிருந்து குளித்தவுடன் உடலின்  வெளிப்பகுதியிலிருந்த அனைத்து நோய்களும் குணமாகிவிட்டது.

பிறகு, அல்லாஹ் வேறொரு இடத்தில் நின்று பூமியை தன் காலால் அடிக்குமாறு அய்யூப் நபிக்கு கூறினான். அய்யூப் நபி அவ்வாறு செய்தவுடன் பூமியிலிருந்து மற்றொரு ஊற்று வெளியானது. அந்த தண்ணீரை குடிக்குமாறு அல்லாஹ் அய்யூப் நபிக்கு கட்டளையிட்டான். அதன் மூலம் அய்யூப் நபியின் உடலின் உட்பகுதியிலிருந்து அனைத்து நோய்களும் சரியாகி விட்டது.

உடலின் வெளிப்பகுதி, உட்பகுதியிலிருந்து அனைத்தும் நோயிலிருந்து அய்யூப் நபி பூரண சுகமடைந்தார்கள்.

அல்லாஹ் இதை பின்வரும் வசனத்தில் கூறிக்காட்டுகிறான்:

"உம்முடைய காலால் பூமியில் அடியும்" என்று கூறினோம்;அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது; அவரிடம், இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் இருக்கின்றன என்று கூறினோம்; அதனால் அவருடைய நோய் குணமாகிவிட்டது.
(அல்குர்ஆன் 38:42)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

*பதிவு நாள்: 08-02-2018

No comments:

Post a Comment