Wednesday, 27 September 2017

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி

57 முஸ்லிம் நாடுகள் இருந்தும்  ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க இயலவில்லை.

*பெரும்பான்மையாக இருந்தும் வஹ்ன்  என்ற உள நோயின் காரணமாக உங்களைப் பற்றிய அச்சம் எதிரிகளின் உள்ளத்திலிருந்து முழுமையாக  நீக்கப்பட்டுவிடும் என்ற நபி ஸல் அவர்களின் முன்னறிவிப்புத்தான் ஞாபகம் வருகிறது.*

*இறைவா!ரோஹிங்கிய முஸ்லிம்களை பாதுகாப்பாயாக!!!*

ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தத்தின் துவக்கம்..

ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தத்தின் துவக்கம்..

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட நிகழ்ச்சிக்கு ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகிறது. வெளிரங்கத்தில்  ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் - அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!

ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!

இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!

ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்குள்ளாகும் நிலைமை!
 وقال: إن أقتل فأنا رجل واحد وإن قُتِلْتَ هلكت الأمة.
அபூபக்கர்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் கொல்லப்பட்டால் எனக்கு மட்டும்தான் அழிவு. ஆனால் நபியே நீங்கள் கொல்லப்பட்டால் உம்மத்தே அழிந்துவிடும். அதனால் பயப்படுகிறேன் என்றார்கள்.

 நூல்: تفسيررالبغووي பாகம் 4 பக்கம்.49

ஆகையால்தான் நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்!
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத்.
பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

அவற்றில் ஒரு சில பாடங்களை - படிப்பினைகளைப் பார்ப்போம்.

முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள்.

மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.

தன் வீட்டில் தன்னுடைய படுக்கையில் அலி(ரலி)அவர்களை படுக்க வைத்தார்கள்.

قال لعلى رضى الله عنه « نم على فراشى واتشح بردائى هذا الحضرمى فانه لن يخلص اليك شيء تكرهه منهم

ஹிஜ்ரத் இரவில் இறைத்தூதர் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று எதிரிகள் எண்ணிக் கொள்வதற்காக அறிவுப்பூர்வமான ஒரு திட்டம் வகுத்தார்கள். அன்று இரவு இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி) அவர்களை படுத்து உறங்க வைத்தார்கள். .

எதிலும் நிதானம்.

நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அமைதியுடனும் நிம்மதியுடனும் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய பயணத்தை தன்னுடைய வீட்டின் தலை வாயில் வழியாகவே, எதிரிகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே தான் வீட்டை விட்டு வெளியேறினார்கள்..

عن ابن عباس وعلي وعائشة بنت أبي بكر رضي الله عنهم وعائشة بنت قدامة وسراقة بن جعشم دخل حديث بعضهم في بعض قالوا : « خرج رسول الله صلى الله عليه وسلم والقوم جلوس على بابه ، فأخذ حفنة من البطحاء فجعل يدرها على رؤوسهم ويتلو { يس . والقرآن الحكيم } [ يس : 1 - 2 ] الآيات ومضى ، فقال لهم قائل ما تنتظرون؟ قالوا : محمداً . قال : قد - والله - مر بكم . قالوا : والله ما أبصرناه! وقاموا ينفضون التراب عن رؤوسهم ،


அப்போது இறைத்தூதர் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொண்டே வெளியேறினார்கள். .

மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லவிருந்த இரவுக்கு முன் மதிய உச்சி வேளையில் எதிர்பாரா விருந்தாளியாக அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் இல்லத்திற்கு இறைத்தூதர் சென்றார்கள். வழக்கமாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களது வீட்டிற்கு காலையிலோ அல்லது மாலையிலோ தான் வருவார்கள், ஆனால் அவர்கள் எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். வழக்கத்துக்கு மாற்றமாக மதியம் உச்சி வேளையில் சென்றதும் திட்டமிட்ட செயலாகும். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் கலந்து  ஆலோசனை செய்தார்கள்.

வழித் துணைக்கு அபூபக்கர் சித்தீக் (ரலி).

அப்போது இறைத்தூதருடன் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்வது என்று முடிவை தெரிவித்தார்கள். அதாவது தனித்து செல்லாமல் வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஹிஜ்ரத் பயணத்திற்கென்றே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் திட்டமிட்டு வளர்த்து வந்த இரு ஒட்டகங்களை தங்களின் வாகனமாக தேர்வு செய்தார்கள்.

 பயண வழிகாட்டி.

அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மதினா பயணத்திற்கு வழிகாட்டுவதற்கென்றே ஒருவரையும் தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த பயண வழிகாட்டி  முஸ்லிமல்லாதவராக இருந்தார். ஆனாலும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அது மட்டுமல்ல அன்றைய கால பாலைப் பயணத்திற்கு வழி காட்டுவதில் மிகவும் தேர்ந்தவராகவும் அவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லா இப்னு அர்கத் என்பதாகும்.

குகையில் மூன்று நாட்கள்   தங்க திட்டம்.

عن مجاهد قال: مكث أبو بكر مع النبي صلى الله عليه وسلم في الغار ثلاثًا
இருவரும் மூன்று நாட்கள் குகையில் தங்கினார்கள்.

நூல்:تفسير طبري.பாகம்.14 பக்கம்.260

வடக்கு நோக்கிய அந்தப் பயணத்தில், ஏதாவது ஒரு குகையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். எனவே அவர்கள் திட்டப்படி மக்காவின் வெளிப்புறத்தில் தென்பக்கமாக இருந்த ஸவ்ர் மலையில் இருந்த ஒரு குகைளில் தங்கி இருந்தார்கள். அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது..

ஸவ்ர் குகையில் நடந்த அற்புதம்.

إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். அல்குர் ஆன்:9-40

لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا } لم يكن حزن أبي بكر جُبْنًا منه، وإنما كان إشفاقًا على رسول الله صلى الله عليه وسلم.

அபூபக்கர்(ரலி)அவர்கள் கோழைத்தனத்தால் பயப்படவில்லை.மாறாக நபியின் மீது வைத்த அளவில்லாத அன்பால் நபிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பயம்தான் காரணம்.

عمرو بن الحارث، عن أبيه: أن أبا بكر الصديق رحمة الله تعالى عليه حين خطب قال: أيُّكم يقرأ "سورة التوبة"؟  قال رجل: أنا. قال: اقرأ. فلما بلغ:(إذ يقول لصاحبه لا تحزن)، بكى أبو بكر وقال: أنا والله صاحبُه

அபூபக்கர்(ரலி) அவர்கள் ஒரு நாள் பிரசங்கம் செய்யும்போது உங்களில் யார் சூரத்துத் தௌபாவை எனக்கு ஓதிக்காட்டுவார் என்று கேட்டார்கள். அப்போது ஒருவர் நான் ஓதுகிறேன் என்று கூறி ஓத ஆரம்பித்தார். إذ يقول لصاحبه لا تحزن என்ற வார்த்தையை ஓதக்கேட்டதும் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த தோழர் நான் தான் என்றார்கள்.

 நூல்: درالمنثور. பாகம்.5 பக்கம்.77


ஹிஜ்ரி ஆண்டு துவக்கம்…

 இந்த ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப்படுகிறது.


எனவே இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறிய ஆண்டாகிய கி.பி. 622ம் வருடம் ஹிஜ்ரியின் முதல் ஆண்டாகவும் அவ்வாறே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் மாதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.


நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'
என்று குறிப்பிட்டார்கள்.
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது

(பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ
مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا مِنْ وَفَاتِهِ مَا عَدُّوا إِلَّا مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: புகாரி (3934)

அல்அக்ஸா வை மீட்போம்

அல்அக்ஸா வை மீட்போம்
என்ற தலைப்பில் இந்த பதிவு

அல்லா நாடினால் கூடியவிரைவில் அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு

அதற்கான முயற்சி நம் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் எண்ணங்களில்....
ஆக பைத்துல்முகத்தஸ் உலக இஸ்லாமியர்களுக்கு தான் முழு சொந்தமாக வர வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஒரு சிறந்த கலிஃபா இஸ்லாமியர்களுக்காக வர வேண்டும்

கலிஃபா என்றால் உடனே அது அரபு நாட்டில் சௌதியில் இருந்து தான் வர வேண்டும் என்று நினைக்காதீர்கள்,
இப்போது இருக்கும் இஸ்லாமிய ஆட்சி அதாவது சௌதி அரேபிய ஆட்சியாளர்கள் முயற்சித்தால் நிச்சயம் அல்அக்ஸாவை யூதர்களிடம் இருந்து மீட்டுஇருக்கலாம்,
ஆனால் அதற்கு பல அரசியல் இடையூறுகள்
இது மட்டுமே இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது,
உதாரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதத்திற்கு முன் சௌதி அரேபிய நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டார்,
இந்த முஷ்ரிக்கை சிறந்த முறையில் வரவேற்றார்கள்,
ஏன் டொனால்டு ட்ரம்ப் அவரை முஷ்ரிக் என்று சொல்வதற்கு காரணம் அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களும் சொந்தமாக கூடாது என்ற ஒரே நோக்கம் கொண்டவர்களின் தூது தான் இந்த
ட்ரம்ப் ,
அதற்காக டொனாடு ட்ரம்ப் தான் இதற்கு முக்கியமான முஷ்ரிக் என்று அர்த்தம் இல்லை,இவனை இயக்கும் அந்த ஒரு சில நபர்களே (ஃப்ரீமேசன்கள்)இவர்கள் தான் உண்மையான முஷ்ரிக்குகள்,

ஆக இந்த ஃப்ரீமேசன்களின் இவர்களின் வாரிசு வாரிசாக தமது செயல்களை 
அல்அக்ஸா பள்ளிவாசல் இஸ்லாமியர்களுக்கு சொந்தம் ஆக கூடாது என்ற ஒரே நோக்கங்களாக வாழ்ந்து வருகிறார்கள்,

ஆக இப்படிபட்ட இந்த ஃப்ரீமேசன்களால் தேர்ந்தெடுக்பட்ட
டொனால்டு ட்ரம்பை அவர்களை பாதுகாக்கும் விதமாக அல்அக்ஸா பள்ளிவாசல் இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்கவிடாமல் காலத்தை தூரமாக்கி கொண்டே வருகின்றார்கள்.

அதற்காக பல அரசியல் தந்திரங்களோடு ட்ரம்ப் சௌதி அரேபிய நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட விதமாக அங்குள்ள அரபுநாட்டு ஆட்சியாளரிடம் நட்புகொண்டார் அந்த அரபு மன்னரும் இந்த அமெரிக்க அதிபர் மன்னரும் இருவரும் சேர்ந்து பெண்களுடன் நடனம் ஆடி கூத்தாடி வந்ததை நாம் அனைவருமே பார்க்கும் படி மீடியாக்களில் ஒளிபரப்பு செய்தார்கள் ,

இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும், இந்த ஃப்ரீமேசன்கள் நினைத்ததை தான் மீடியாக்களில் கொண்டுவந்தனர்,காரணம் உலக மக்கள் பார்ப்பதற்காக,உலக மக்களிடம் இஸ்லாமிய அரசர் என்பவர் கோமாளி என்பதை போல் அப்போது மீடியாக்களில் கொண்டுவந்தார்கள்,

இஸ்லாமிய சொந்தங்களே
நாம் சிந்திக்க வேண்டும்,
இப்படிபட்ட இஸ்லாமிய மன்னர் இந்த முஷ்ரிக்குகளுடன் கூத்தடித்தால் எப்படி அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமயர்களுக்கு சொந்தமாகும்,

யூதர்கள்,கிறித்தவர்கள்,
இஸ்லாமியர்கள் உள்ள இஸ்ரேல் எனும் பாலஸ்தீனத்தில் அல்அக்ஸாவிற்காக தினந்தோறும் பல உயிர்களை இழந்துவருகிறார்கள்,

இப்படிபட்ட பிரச்சனைகள் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் தேவையா?
என்றால் ஆம் தேவைதான்
பிரச்சனைகள் இருப்பதால் மட்டுமே தேவை ஏன் என்றால் அப்போதுதான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்,
மனிதர்கள் ஒன்றினைவதே "அல்லா" மனிதர்களுக்கு இறைதூதர்கள் மூலம் அறிவித்தான் அந்த ஒன்றினைந்த கூட்டமே இஸ்லாமிர்கள்,
ஆனால் மனிதர்கள் ஒன்றினைய கூடாது என்பதற்காக அதற்கான முயற்சிகள் செய்பவர்கள் தான் முஷ்ரிக்குகள்,

மனிதர்கள் கருத்துக்கள் அடிப்படையில் பல இயக்கங்களாகவும்,
மொழிகள்,நிறங்கள் அடிப்படையிலாகவும் பிரிகிறோம்,ஆனால்
நாம் "அல்லா"வுக்காக (மனிதர்கள் பாவங்களில் இருந்து மீள)பள்ளிவாசலில்  மட்டுமே ஒன்றினைய முடியும் என்பதை நம்மால் யாராலும் மறுக்க முடியாது.
அப்படிபட்ட பள்ளிவாசல் உலகஇஸ்லாமியர்களுக்கு முதல் கிப்பலாவாக இருந்த
"அல்அக்ஸா"பள்ளிவாசலில்
உலக இஸ்லாமியர்கள் ஒன்றினைய வேண்டும்,
அதற்கான ஒரு சிறந்த ஆட்சியாளர் வர வேண்டும்,
இன்ஷா அல்லா அப்படி ஒரு சிறந்த ஆட்சியாளர் இஸ்லாமியர்களுக்காக வந்தால் இன்ஷா அல்லா எப்படி உலக இஸ்லாமியர்கள்
"காபத்துல்லா"வில் மனிதர்கள் ஒன்றினைவது போல
இதற்கு முன் முதல் கிப்லாவாக இருந்த அல்அக்ஸா பள்ளி வாசலிலும் மனிதர்கள் ஒன்றினைவார்கள் அல்லா நாடினால்...

Friday, 22 September 2017

முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு நாட்களில் நோன்பு வைப்பதின் சிறப்புகள்

முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு நாட்களில் நோன்பு வைப்பதின் சிறப்புகள்

முஹர்ரம் பிறை 10-ம் நாளுக்கு ஆஷுரா என்று கூறப்படும்.

ஆஷுரா நாளில் நோன்பு வைப்பதின் சிறப்பை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க்கப்பட்ட போது "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாகும்"
 எனக் குறிப்பிட்டார்கள்.(முஸ்லிம்)

"நான் அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதிலும் நோன்பு வைப்பேன் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டு வருமுன் மரணித்துவிட்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (முஸ்லிம்)  

எனவே முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல)அவர்கள் அங்கீகரித்த நடைமுறையாகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

30-09-2017,01-10-2017 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் (முஹர்ரம் பிறை 9,10) நோன்பு நோற்பது நபிவழி சுன்னத் ஆகும்.

குறிப்பு:ஒவ்வொரு பள்ளிவாசலின் கரும்பலகையிலும் மேற்சொன்ன விஷயங்களை எழுதிபோட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென உலமாக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொழுகையை எவ்வாறு உயிரோட்டமாக தொழுவது.

தொழுகையை எவ்வாறு உயிரோட்டமாக தொழுவது.

1. தொழுகைக்கு வுழு செய்யும் போது நம் உறுப்புகள் முலம் செய்த பாவங்கள் மற்றும் இச்சைகள் முற்றாக நீங்குகிறது என்ற மன நிலை இருக்கவேண்டும் . மேலும் உயர்ந்த அல்லாஹ்வின் முன் நிற்க என்னை தூய்மை படுத்துகிறேன் என்ற அச்ச  உணர்வும் இருக்கவேண்டும் .

2. தொழுகைக்கு வந்து நிற்கும்போது இறையச்ச உணர்வோடு  மஹ்சர்  வெளியில் அல்லாஹ்வின் முன் நிற்பதாக நினைத்துகொண்டு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும் .

3. சூரா அல்-பாத்திஹா  உண்மையில் ஒரு பிரார்த்தனையே “ இஹ்தினசிராதல் சிராதல் முஸ்தகீன் ” எனக்கு நேர்வழி காட்டுவாயாக என்ற பிரார்த்தனையே அதனாலதான் கடைசியில் ஆமீன் ( அங்கீகரித்துவிடு ) என்று கடைசியில் எல்லோரும் கூருகின்றோம் .  எனவே சூரா பாத்திஹாவை  ஓதும்போது அல்லாஹ்விடம்  நேர்வழியை கேட்டு பிரார்த்திப்பதாக நினைவில் வைத்துகொள்ள வேண்டும். ( நேர்வழி என்றால் அல்குரான்  அதாவது அல்குரான் கூறும் அனைத்து விடயங்களையும் பின்பற்றுவதை  குறிக்கும்  ) .

4. தொழுகையில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு வரும்போது “அல்லாஹுஅக்பர் “ (அல்லாஹ் மிகபெரியவன் ) என்று கூறுகிறோம் . அல்லாஹுஅக்பர்  என்று ஒவ்வொரு தடவை கூறும் போதும்   நம்மளை அறியாமலேயே என் தொழில் , என் மனைவி, பிள்ளைகள்  , குடும்பம் . என் பிரச்சனை , என் பணம் இது எல்லாவற்றையும்விட அல்லாஹ்வே மிகபெரிசு என்று கூ றுகிறோம் . இந்த மன நிலையே அல்லாஹ அக்பர் என கூறும்போது எமது உள்ளத்தில் இருக்கவேண்டும் .

5. ருகூஹ் செயும்போது நாம் குனிந்த நிலையில் இருப்போம் . அந்த நிலை அல்லாஹ்விற்கு  பணிவதயே காட்டும் .  அல்லாஹ்வுக்கு பணிகிறேன் என்ற மன நிலையோடு  ஓத வேண்டும் . ஒவ்வொரு நிலையிலும் ஓதும்போது பொருள்தெரிந்து ஓதவேண்டும் .

6. சுஜுது செய்யும் நிலை ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சுவது போல . அதாவது அடிமை நிலை . நாம் யாரின் காலில் விழுந்து கெஞ்சுவோமா ? இல்லவே இல்லை . ஆனால் இங்கு அல்லாஹ்வின் காலில் விழுந்து கெஞ்சும் உணர்வு வரவேண்டும் . அதாவது அல்லாஹ்வுக்கு தற்போது அடிமை பட்டிருகிறேன் என்ற உணர்வு சுஜுதின் போது எமக்கு வரவேண்டும் . பிறகு ஓத வேண்டும் . சுஜுதின் போதே ஒரு அடியான் அல்லாஹ்விற்கும் அவனுக்கும் உள்ள உறவை வெளிபடுத்துகிறான் . அதனையே அல்லாஹ்வும் அதிகம் விரும்புகிறான் . அல்லாஹ்வுக்கு மிக நெருங்கிய நிலை அதுவே ....!!

Tuesday, 19 September 2017

நாற்காலி தொழுகை கூடுமா?

நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு இஸ்லாத்தில் பொதுவான அனுமதியோ நேரடியான ஆதாரங்களோ இல்லை.

ஒரு மூலநோயாளியான இம்றான் இப்னு ஹுசைன் (றழி) அவர்கள் தன்னால் நின்று கொண்டு தொழ முடியாத நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது உன்னால் நின்று தொழ முடியா விட்டால் உட்கார்ந்து தொழு அதுவும் முடியாவிட்டால் ஒருக்கணித்து படுத்துக் கொண்டு தொழு என்று நபியவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார்கள். (நூல்: புகாரி)

இந்த ஹதீஸை வைத்துக்கொண்டு சின்ன சின்ன வலிகள் வருத்தங்களுக்கெல்லாம் நாற்காலியில் அமர்ந்து தொழுவதும் அதற்காக பள்ளிவாசல்களில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருப்பதும் கூடாது என்பதை பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நின்று தொழ சக்தி உள்ளவர்கள் பர்ழான தொழுகைகளில் நாற்களாலிகள் அமர்ந்து தொழுதால் அத்தொழுகை கூடாது என்பதை தொழுகையாளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் உட்காருதல் என்று ஹதீஸில் வரும் வாசகம் நேரடியாக தரையில் உட்காருவதையே குறிக்கும். தகுந்த காரணங்களுக்காக தரையில் உட்காரமுடியாக நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நாற்காலிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவேண்டும் என்பதை எமது முப்திமார்களுக்கும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

- அஷ்-ஷேக் இர்ஷாத் மூமீன் -
27 துல்ஹிஜ்ஜா 1438

சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு PART 4

சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு PART 4

*எனக்குத் தெரியாத ஒரு ஹதீஸ் இன்னு மொரு நபித்தோழரிடம் இருக்கிறது என்று எனக்கு எத்திவைக்கப்பட்டால் அந்த நபித் தோழரை அழைத்து குறித்த அந்த ஹதீஸை எனக்கு பெற்றுக் கொள்ள முடியும். என்றாலும் நான் அந்நபித் தோழரை தேடிச் சென்று அவர் வீட்டுவாசலில் காத்து நின்று ஹதீஸை தெரிந்து கொண்டு திரும்பி விடுவேன் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறி னார்கள். (நூல்: ஜாமிஉல் பயானில் இல்மி)*

*இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழர் கள், நபியின் பெயரால் பொய்யான செய் திகளை அறிவித்ததாக எந்த குறிப்பும் கிடை யாது.* *மேலும் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அதில் தவறுகள் கலந்து விடுமோ என்று அஞ்சி யே அவர்கள் வாழ்ந்தார்கள்.*
*என்மீது பொய் சொல்லாதீர்கள். எவர் என்மீது பொய் சொல் கிறாரோ அவர் நரகம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்.* *அறிவிப்பவர் அலி (ரலி) (நூல்: புகாரி, முஸ்லிம்-02)*

*எவர் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி)- (நூல்: முஸ்லிம்-03)*

*என் மீது பொய் சொல்வது உங்களில் ஒருவர் மற்றவர் மீது பொய் சொல்வது போலல்ல. எவர் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பி டத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: முஸ்லிம்-05)*

*நபியவர்கள் மீது பொய்யுரைப்பது நரகத் திற்கு கொண்டு செல் லக் கூடிய பெரும் குற்றம் என்பதை நன்கு அறிந்த ஸஹாபாக் கள் தங்களது வாழ்க்கையிலும் நேர்மையாக நடந்ததுடன் ஹதீஸ்களை அறிவிப்பதிலும் பேணுதலாக இருந்தார்கள்.*

*அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தனது தந்தையைப் பார்த்து அருமைத் தந்தை யே! இன்னார், இன்னார் ஹதீஸ்களை அறிவிக் கிறார்கள், ஆனால் நீங்கள் ஹதீஸ் அறிவிப் பதை நான் கேட்டதில்லையே என கூறினேன். அதற்கவர் அருமை மகனே! நான் நபி (ஸல்) அவர்களை விட்டும் பிரியாமல் இருந்தவன். “யார் என் மீது பொய்  சொல்லுகிறாரோ அவர் ஒதுங்கும் இடம் நரகம்தான்” என நபி(ஸல்) கூற நான் செவியுற்றேன். அதன் காரண மாகத்தான் ஹதீஸ்களை அறிவிக்க அஞ்சுகி றேன் என்றார். (நூல்: கிதாபுல் இல்ம்)*

*ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களிடம், எங்களுக்கு ஹதீஸ் களைக் கூறுங்களேன் என்று கேட்கப்பட்டால் நாங்கள் முதிய வயதை அடைந்து விட்டோம், மறந்து விட்டோம். ஹதீஸ்களை அறிவிப்பது சாதாரண விடய மல்ல என்று கூறுவார்கள். (நூல்: இப்னுமாஜா)*

*பராஉ (ரழி) அறிவிக்கிறார்கள்: (நபித் தோழர்களாகிய) நாங்கள் எல்லோரும் நபியவர் களிடத்திலிருந்து ஹதீஸ்களை (மொத் தமாக) கேட்டதில்லை. எங்களில் வேலைக்கு போவோ ரும், வேலையில் ஈடுபடுவோரும் இருந்ததே இதற்குக் காரணம். என்றாலும் மக்கள் (ஹதீஸின் பெயரால்) பொய் சொல்பவர் களாக இருந்ததில்லை. வேலையில் ஈடுபட்டவருக்கு வேலைக்குப் போகாமல் நபியவர்களுடன் இருந்தவர் அவர் கேட்ட (ஹதீஸை) செய்தியை எத்திவைப் பார். (நூல்: பைஹகி)*

*கதாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்: ஒரு முறை அனஸ் (ரழி) அவர்கள் மக்களுக்கு ஹதீஸ்களை சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் உங்கள் காதால் கேட்டீர்களா? என்று அனஸ் (ரழி)யிடம் கேட்டார். அதற்கவர்கள் ஆம்! அவர் கள் சொல்ல நான் கேட்டேன். அல்லது இந்த ஹதீஸை (நபிய வர்களின் பெயரால்) பொய் சொல்லாதவர்கள்- சஹாபாக்கள்- என்னிடம் அறிவிப்பார்கள். அல்லாஹ்வின் மீது ஆணை யாக பொய் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். (நூல்: மிப்தாஹுல் ஜன்னாஹ். பக்கம் 62, அஸ் ஸுன்னாஹ் வமகானதுஆ பித்தஷ்ரீஹில் இஸ்லாம். பக்.78)*

*அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் ஹதீஸ்களை அறிவியுங்கள் என்று கூறப் பட்டால் நான் உங்களுக்கு அதிக எண்ணிக் கையில் ஹதீஸ்களை அறிவிக்க விடாமல் தடுப்பது எதுவென்றால் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியாகும். அதாவது நீங்கள் என்மீது கூறும் பொய் மற் றொருவர் மீது கூறும் பொய்யைப் போன்ற தல்ல. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யு ரைக்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்ற ஹதீஸாகும் (நான் கூறும் செய்தி நபியவர்கள் கூறாத செய்தி யாகி விடுமோ என்று அஞ்சு கிறேன்) என்றார்கள். (நூல்: முஸ்லிம்)*

*அஸ்த் ஷனுஆ குலத்தை சேர்ந்த சுப்யான் பின் அபீஸூஹைர் (ரலி) அவர்கள் என்னிடம் விவசாயப் பண்ணையையோ அல்லது கால் நடைகளையோ பாதுகாக்கும் தேவை இன்றி எவர் நாய் வளர்க்கிறாரோ அவரது நற்செயல் களிலிருந்து ஒரு கீராத் அளவிற்கு (நன்மை) குறைந்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள். அப் போது நான் இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டீர்களா? என்று கேட் டேன். ஆம். இப்பள்ளி வாசலின் அதிபதியாகிய அல்லாஹ் வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என சுப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். (அறிவிப்பவர்: சாயிப் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி 2323)*

*நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் அவர்களது நேரடித்தோழர் களால் முறையாக பாதுகாக்கப் பட்டன. ஹதீஸின் நம்பகத் தன் மையை பாதுகாத்திடவும் உறுதிப்படுத் திடவும் வழிகாட்டப் பட்டது.*

தாவுஸ் பின் கைசான் அல் யமானீ(ரஹ்) கூறியதாவது:

புஷைர் பின் கஅப் அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து ஹதீஸ்களை அறிவிக்கலானார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இன்ன இன்ன நபிமொழிகளை மீண்டும் அறிவியுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர் மீண்டும் அறிவித்து விட்டுத் தொடர்ந்து ஹதீஸ்களை அறிவிக்கலானார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர் கள் மறுபடியும் இன்ன இன்ன ஹதீஸ் களை மீண்டும் அறிவியுங்கள்” என்றார்கள். அவ் வாறே அவர் மீண்டும் ஹதீஸ்களை அறிவித்து விட்டு, நான் அறிவித்த எல்லா ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்டு விட்டு (குறிப்பிட்ட) இந்த ஹதீஸை மட்டும் மறுக் கிறீர்களா? அல்லது நான் அறிவித்த எல்லா ஹதீஸ்களையும் மறுத்து விட்டு (குறிப்பிட்ட) இந்த ஹதீஸை மட்டும் ஏற்கிறீர்களா எனக்குத் தெரியவில்லை” என்றார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நாங்களும் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ் களை அறிவித்துக் கொண்டிருந்தோம். அப்போ தெல்லாம் அல்லாஹ் வின் தூதர் மீது பொய்யு ரைக்கப் பட்டதில்லை. பின்னர் மக்கள் பிடி வாதம் பிடிக்கும் ஒட்டகங்கள் மீதும் கட்டுப் படும் ஒட்டகங்கள் மீமும் பயணம் செய்ய தொடங்கிய போது (அதாவது அவர்கள் நினைத்தமாதிரி ஹதீஸ்களை அறிவிக்க தொடங்கிய போது அத்தகையவர்களை அடை யாளம் காண்பிப்தற்காக) ஹதீஸ்களை அறிவிப்பதையே நாங்கள் நிறுத்தி விட்டோம்.” என்று கூறினார்கள். (நூல்: முகத்திமது முஸ்லிம்)

ஊர்ஜிதமற்ற போலியான ஹதீஸ்களை அறி விப்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எடுத்த நட வடிக்கை மூலம் உண்மையான ஹதீஸ்கள் பாது காக்க வழிவகுக் கப்பட்டது.

மார்க்கச் செய்திகள் பலபாகங்களுக்கும் பரவிய போது அவை களை உறுதி செய்து கொள்வதற்கு அக்கால மக்கள் நபித் தோழர் களை தேடி மதீனா வந்தார்கள்.

உமர்(ரலி) அவர்கள் மூலம் அறிவிக் கப்படும் ஹதீஸை பெற்றுக் கொண்ட அல்க மா(ரஹ்) மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோர் உமர் (ரலி)யை நேரடியாக சந்தித்து அவர்க ளிடமிருந்து அதனை செவியேற்காத வரை திருப்தி அடையமாட்டார்கள். (நூல்: தத் வீனுஸ் சுன்னா அன்னபவிய்யா பக்கம்38.)

அபூஆலியா (ரஹ்) கூறுகிறார்கள்: நபித் தோழர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட செய்தி களை நாம் பஸராவில் செவியுறுவோம். அவை களை உறுதிசெய்தி கொள்வதற்காக நாம் மதீனாவுக்கு வருவோம். அவைகளை நபித் தோழர்களின் வாய்களின்  மூலமாகவே கேட் டுக் கொள்வோம். (நூல்: தாரமி பாகம்01 பக் கம்.465)

சஹாபாக்களிடமிருந்து ஹதீஸ்களை பெற்றுக் கொண்ட அவர்களுடைய மாணவர் களும் (தாபியீன்களும்) அவர்களுக்குப் பின் வந்தவர்களும் (தபஉத் தாபியீன்களும்) ஹதீஸ் களை தொகுப் பதிலும் அறிவிப்பதிலும் மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
சஹாபாக்களின் நம்பத் தன்மை அன்று வாழ்ந்த மக்களால் உரசிப்பார்க் கப்பட்டு உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் (சுன்னாக்கள்) அப்பழுக்கற்றவை என்று நிரூபிக்கப் பட்டது.

இறைத்தூதரின் நேரடி தோழர்களான சஹாபாக்கள் காலத்திலே சுன்னா பாதுகாக் கப்பட்டது என்பது இந்த மார்க்கத்தின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக் காட்டாகும்.*

சுன்னா என்ற பெயரில் ஒரு செய்தியை ஒருவர் அறிவிப்பதாக இருந்தால் அது சஹா பாக்களிடமிருந்து வந்தாகவும் உறுதி செய்யப் பட்டதாகவும் இருந்தால் மட்டுமே அங்கீ கரிக்கப்படும். இல்லையேல் நிராகரிக்கப்படும்.

நாங்களும் முஸ்லிம்கள்தான்

நாங்களும் முஸ்லிம்கள்தான் 
===========================

எங்களுக்கு நேரம் இருக்கிறது – ஆனால்
நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம்.

வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால்
விடியாமலே விரைந்து செல்வோம் விளையாட்டு மைதானத்துக்கு.

ஊர் முழுக்க வலம் வர உடம்பில் தெம்புண்டு – ஆனால்
ஒரு வக்து தொழுகைக்கும் இறையில்லம் வர மாட்டோம்.

மருந்து சாப்பிடுவதால் தொழ முடியவில்லை – ஆனால்
விருந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் தடையில்லை.

பள்ளிக்கு பக்கத்தில் பாங்கு சத்தம் கேட்போம் – ஆனால்
சத்தமே இல்லாமல் நடையைக் கட்டிவிடுவோம்.

வீதியில் சும்மாதான் இருப்போம் – ஆனால்
ஜும்ஆவுக்கு கடைக்கோடியில்தான் நிற்போம்.

ஒரு நாள் முழுக்க எங்களுக்கு ஓய்வுதான் – ஆனால்
உறங்குவது  என்னவோ ஜும்ஆவில்தான்.

விருந்தில் முதல் பந்திதான் பிடித்த இடம் – ஆனால்
ஜும்ஆவில் கடைசி இடம்தான் எங்கள் புகலிடம்.

அளவின்றி அரட்டை அடிப்போம் – ஆனால்
மருந்துக்குக் கூட மார்க்க அறிவுரைகள் கேட்கமாட்டோம்.

ஒழு  கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது – ஆனால்
உபதேசம் எங்களுக்கு அறவே பிடிக்காது.

பத்திரிகையை வரிக்கு வரி மேய்வோம் – ஆனால்
உலகப் பொது மறையில் ஒரு வரி கூடத் தெரியாது.

உலகப் பொதுமறை என்று முழங்குவோம்   – ஆனால்
அதில் ஒரு கட்டளையைக் கூட மதிக்க மாட்டோம்.

பர்தா பேணாதவர் பாவி என்போம் – ஆனால்
பர்தா அணிந்தே பல பாவங்கள் புரிவோம்.

உடம்பு முழுக்க வியாதி இருக்கும் – ஆனால்
உணவில் கட்டுப்பாடு ஒரு துளியும் பேண மாட்டோம்.

தட்சணை ஆகாது  என்று வீரம் பேசுவோம்  – ஆனால்
கொல்லைப்புற வழியாக கொத்தாகப் பிடுங்குவோம்.

மஸ்ஜிதில்தான் திருமணத்தை நடத்துவோம் – ஆனால்
மறைமுகமாக மார்க்கம் மீறுவோம்.

ஒரு பருக்கை சோறு கூட பரகத் என்போம்  – ஆனால்
திருமணத்தின்போது அண்டா சோற்றையே வீதியில் கொட்டுவோம்.

நீண்ட தேடலில் துணையை வசப்படுத்துவோம் – ஆனால்
நிமிடத்தில் ஜமாஅத்துக்கு வருவோம் விவாகரத்து மனுவோடு.

வீட்டின் சுற்றுபுறம் வரை சுத்தம் பேணுவோம் – ஆனால்
வீட்டுக் குப்பைகளை வீதியில் இறைத்து அசுத்தம் செய்வோம்

தாய் தந்தை நலம் பேண வேண்டும் என்போம் – ஆனால்
தாரம் வந்ததும் தாயகம் துறப்போம்.

என் பெற்றோர் மேல் எனக்கு உயிர் என்போம் – ஆனால்
அவர்தம் உயிர் பிரிந்த பின்னர்தான் ஊருக்கே வருவோம்.

குழந்தையின் உயர்வில் ஆர்வம் கொள்வோம் – ஆனால்
குர்ஆன் ஓத அனுப்பக் கூட நேரமில்லை என்போம்.

ஒருதாய் பிள்ளை  என உரக்கச் சொல்வோம் – ஆனால்
உள்ளவன் இல்லாதவன், உள்ளூர் வெளியூர் என பிரித்து மேய்வோம்.

அடுத்தவன் காசு எனகெதற்கு என்போம்  – ஆனால்
வடிகாலைக் கூட விட்டு வைக்காமல் வளைத்துப் போடுவோம்

இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்போம்   – ஆனால்
படித்து பட்டம் வாங்கியதும் வெளிநாடு பறப்போம்.

மழை இல்லை என கவலை கொள்வோம் – ஆனால்
குளிக்கும் நீரின் அளவில் ஒழு செய்வோம்.

ஏழைகள் மீது பரிவு காட்டு என்போம்  - ஆனால்
வட்டிக்கு பணம் விட்டு இரத்தம் உறிஞ்சுவோம்.

பகிர்ந்து உண்ண வேண்டும் என்று பேசுவோம் – ஆனால்
ஜகாத் பொருளை பதுக்கி வைப்போம்.

ஒற்றுமை கோஷங்கள் எழுப்புவோம் - ஆனால்
தேர்தலில் எங்களை நாங்களே தோற்கடிப்போம்

இவையெல்லாம் துணிச்சலாகச் செய்வோம் – ஆனால்
தயங்காமல் சொல்வோம் நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று.

எறும்பின் குற்றம்

🕊🌿 *القران والحديث* 🍀💐

 👇🏻🌷👇🏻🌷👇🏻🌷👇🏻🌷👇🏻🌷👇🏻

எறும்பின் குற்றம்
==================

எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். பொய் ஒரு குற்றமே அல்ல எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.

இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்…

ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன ஒரு வெட்டுக்கிளியின் இறக்கை கிடந்தது.

அதைத் தூக்கிச் செல்வதற்காக பல முறை அந்த எறும்பு முயன்றது .கனமாக இருந்ததால் முடியவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாக திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது). உடனே நான் அந்த இறக்கையை போட்டேன். அந்த எறும்பு மீண்டும் தூக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் தன் படைகளை கூட்டி வர சென்றது.

முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வந்தது. அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடக்காதபோது திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம முறையும் அது தனது படையை அழைக்கச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவாக எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறைக்கையை உயர்த்தினேன்.

அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களை முறித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டன.(லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்)
அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கைசேதப்பட்டன.ஆயினும் காலம் கடந்துவிட்டது.

உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். அவர் சொன்னார்: ”அல்லாஹ் உனது பாவங்களை மன்னிக்கட்டும்! மீண்டும் இவ்வாறு செய்யாதே! பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் அதற்கு என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன்..! பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்புகளின் உணர்வுகளுடன் கலந்துள்ளது”.

ஆயினும் மனிதர்கள்…?

இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை…! மறுமையில் காத்திருக்கும் தண்டனைகள்தான் எவையோ..? யார் அறிவார்..?

எழுதியவர்:நூஹ் மஹ்ழரி

தீர்வு தான் என்ன?

தீர்வு தான் என்ன?

ரஸ்யாவில் செச்சீனியர்கள் …

இந்தியாவில் காஷ்மீரியர்கள்…

பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்கள்…

சிரியாவில் சிரியர்கள்…

இப்போது….

பர்மாவில் ரொஹிங்கியர்கள் ….

உலகம் முழுதும் முஸ்லீம் மக்கள் இப்படி அல்லல் பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்…

தீர்வுதான் என்ன…?

இஸ்லாத்தின் நிழலில் ஆட்சி செய்யக் கூடிய தலைவர்களை நாம் எப்போது இழந்தோமோ…

இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் விதிமுறைகளினை எப்போது மீறினோமோ….

இஸ்லாமிய பொருளாதாரத்தின் மீது தளர்வுகளை விதித்தோமோ….

இஸ்லாமிய அழைப்புப் பணியில் இருந்து மிக தூரமாக ஒதுங்கிக் கொண்டோமோ….

உலகத்தின் மீதான ஆசைகளில் மிதமிஞ்சி மூழ்கி உலோகாயுத மனிதர்களாக ஆகிப் போனோமோ…..

அப்போதே நாம் கோழைகளாக, மூடர்களாக, அடிமைகளாக ஆகிப் போனோம்….

இஸ்லாமிய சமூக அமைப்பியல் என்பது அல்லாஹ்வின் பாதுகாப்பை அவனது கட்டளைகளின் அடிப்படையில் வாழ்வதின் மூலமாக அடைந்து கொள்ளக் கூடியது.

நாம் உண்மை முஸ்லிம்களாக மூமின்களாக இல்லாத போது அல்லாஹ்வுடைய சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாவோம்.

இஸ்லாமிய வரலாற்றில் காணக் கிடைக்காத முன்னுதாரணங்களா இப்போது பர்மாவில் நடப்பது….

சிலுவை யுத்தத்தின் ரணங்களை மறந்து போனோம்…

மொங்கோலியா தாத்தாரியர்களின் படையெடுப்பினை மறந்து போனோம்….

பாக்தாத்தின் கொடூரங்களை மறந்து போனோம்….

பைத்துல் முகத்தஸை இழந்ததை மறந்து போனோம்…

காலித் இப்னு வலீதை மறந்து போனோம்…

கலீபா உமரை மறந்து போனோம்…

ஸலாஹுத்தீன் அய்யூபியை மறந்து போனோம்…

சவூதி மன்னர் பைசலை மறந்து போனோம்………

நாளை இந்த ரொஹிங்கியார்களையும் மறந்து போவோம்….

பாலஸ்தீனத்துத் தளிர்களைக் கொய்யும் கோரக் காட்சிகள் எப்போதோ தொடங்கியதுதானே….

காஷ்மீரியாக் கொடூரங்களை மறந்து விட்டோமா….

அப்படியானால்…

நாளை இந்த ரோஹிங்கியார்களையும் மறந்துதானே விடுவோம்…..

சிந்தியுங்கள்….

அல்லாஹ்வின் பாதுகாப்பில் அவனது வழிகாட்டலில் வாழும் உன்னத சமூகத்துக்காக உழைப்போம்….!

இறையச்சமுள்ள ஈமானிய ஆட்சியாளனே நமது தேவை.

எதா அத் துர்கானின் குரலுக்கு இவ்வளவு மகிமை என்றால்….

அமீருல் முஃமினின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குரலுக்கு எவ்வளவு மதிப்பிருக்கும்….!

சிந்தியுங்கள்….!

யா அல்லாஹ்…யா ரஹ்மானே,,,,! உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கு உனது அச்சமும் அறிவும் உள்ள தலைவர்களை நஸீபாக்குவாயாக…!

​மஹர் கொடுக்குமாம் இந்த தூங்கனாக்குருவி

​மஹர் கொடுக்குமாம் இந்த தூங்கனாக்குருவி

ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது.

உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த பறவை கூட மஹர் என்ற திருமணக்கொடை கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா ?

கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன.

இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால் கீழே விழுவதில்லை, மழை நீர் உள்ளே இறங்குவதில்லை.

தூக்கனாங் குருவியின் இனத்தைப் பொறுத்தவரையில் ஆண் தூக்கனாங் குருவி தான் எப்போதுமே தனது வீடான
கூட்டைக் கட்டும் அதில் நாம் வசிப்பது போன்றே பல அறைகள் இருக்குமாம்.

கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும் (என்னை பார் என் கூட்டை பார்). பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும்.

ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. பின் கூடு முழுமையடையும்,.

பெண் தூக்கனாங் குருவியானது ஒவ்வொரு கூட்டிலும் நுழைந்து எந்த ஆண் தூக்கனாங் குருவி கட்டிய வீடு தனக்கு பிடித்திருக்கிறதோ அந்த ஆண் தூக்கனாங் குருவியை தன் துணையாக்கி அதனோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து இனப் பெருக்கம் செய்யுமாம்.

சுப்ஹானல்லாஹ் எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். ஆனால் மனித சமுதாயம் வரதட்சனை என்ற பெயரில் பெண்ணுடைய வாழ்க்கையையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. சாதாரண பறவையிலிருந்து எவ்வளவு பெரிய ஒரு படிப்பினையை அல்லாஹ் காட்டியுள்ளான்.

 ​​பறவைகளை பற்றி  அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்...​​

 ​பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.​
 ​(அல்குர்ஆன் : 6:38)​

 ​இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.​
 ​(அல்குர்ஆன்-67:19)​

முஸ்லிம்கள் சரியான தலைமையை கண்டுகொள்வது எப்படி? தொடர் -1

முஸ்லிம்கள் சரியான தலைமையை கண்டுகொள்வது எப்படி? தொடர் -1

ஒவ்வொரு மஹல்லாவிலும்   ஒவ்வொரு நகரிலும் முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் உருவாக்கித் தந்துள்ள ஒரே தலைமை எது?

பதில் :
உலகம் முழுவதிலும் நபியின் வாரிசாக மஸ்ஜித்களில் கோலோச்சும் இமாம்களுக்கு ‘தொழுகைக்கு’ முன்னோக்குவதற்காக உள்ள திசை  மஸ்ஜிதுல் ஹராமே ஆகும்.

ஆனால் மஹல்லாவிலுள்ள முஸ்லிம்களுக்கு ‘ஒரு தலைமையின் கீழ் ஒன்று சேர்வதற்கு’ முன்னோக்குவதற்காக உள்ள திசை மஹல்லாவின் மஸ்ஜித் ஆகும். எனவே முஸ்லிம்கள் எந்த மஹல்லாவில் இருந்தாலும் ஒரு சமுதாயம் என்ற வகையில் அவர்கள் தனது முகத்தை (ஒன்று சேர்தலை) மஸ்ஜிதின் பக்கமே திருப்ப வேண்டும். அங்கு அது தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்ளும்.

இவ்வாறாக, தர்க்கத்திற்கு இடமளிக்காத வகையில் முஸ்லிம் சமுதாயம் கண்டு கொள்ள வேண்டிய ஒரே தலைமை, ‘இமாம் – மஸ்ஜித் நிர்வாகமே’ ஆகும். நிச்சயமாக இதுதான் அவர்களின்  இரட்சகனிடமிருந்து உள்ள உண்மையாகும் என்றவாறாக ஒரு  பதிலை நாம் திருக்குர்ஆன் அத்தியாயம் 2 : 149,150  வசனங்களிலிருந்து ஒரு ஞானமாகப் பெற்றுக் கொள்வோம்.

பின்னர் இதற்குப் பின்பும் முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய ஒரே தலைமையைக் கண்டு கொள்வதில் தயக்கம் இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பபட்டுள்ளது.

இந்த கட்டுரையில் முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய ஒரே தலைமையைக் கண்டு கொள்வதில் ‘எந்த வகையில் தயக்கத்தில்  இருக்கின்றது?’ என்பதைப் பார்ப்போம்.

அத்துடன் முஸ்லிம் சமுதாயம் தான் கண்டு கொண்ட அந்தத் தலைமையின் கீழ் ‘எப்போது ஒன்று சேர முடியும்?’ என்பதையும் பார்ப்போம்.

உண்மையில் ‘முஸ்லிம் சமுதாயம்’ தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. ஆனால்...
இமாம் – மஸ்ஜித் நிர்வாகம் எனும் கூட்டுத் தலைமை, ‘தான்தான் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே தலைமை’ என ஏற்றுக் கொள்வதிலும் செயல்படுவதிலும்தான் தடங்கல்கள் இருக்கின்றன.

அதாவது, இது சமுதாய மக்களின் குறைபாடால்ல; சமுதாயத் தலைமையின் குறைபாடே ஆகும்.

இமாம்களின் மீது இருக்கும் தடங்கல்கள் :

ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் அதை ‘விரும்பாமல்’ இருக்கலாம்.
அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அது அவர்கள் மீது ‘அனுமதிக்கப்படாமல்’ இருக்கலாம்.
ஆனால் இரண்டிற்கும் தீர்வுகள் உண்டு.

எதிராளிகளின் அசுரப் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தையும் தன்னையும் இமாம்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால்....
தனித்த ஒருவனாக அல்லாஹ் சதிகாரர்களை முறியடிக்க வேண்டுமென்றால்...
இமாம்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

முதலாவது தீர்வு :

முதலாவது தீர்வுக்காக திருக்குரானிலிருந்து கிடைக்கும் வழிகாட்டல் :

ஒவ்வொருவருக்கும் ஒரு திசை உண்டு. அவர் அதன் பக்கம் திரும்புபவராகவே இருக்கின்றார். நீங்கள் நன்மையானவற்றின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள். (2 ; 148)

இன்றைய அச்சுறுத்தல் சூழலில் இமாம்களும் முஸ்லிம் சமுதாயாமும் ஏங்க வேண்டிய அத்தியாவசிய நன்மை, எதிராளிகளிடமிருந்து பாதுகாக்கும் ‘அல்லாஹ்வின் பாதுகாப்பு’ ஆகும்.
அதற்காக இமாம்கள் மேற்கொள்ள வேண்டிய முதலாவது நன்மையான செயல், ‘நாங்கள் தொழிலாளிகள் அல்ல; நாங்கள் லீடர்கள்’ என்ற பொறுப்பை ‘வலித்தாலும்’ வலிய ஏற்றுக் கொள்வதாகும்.

இந்த நன்மைகளுக்காக இமாம்கள் ஒவ்வொருவரும் தாம் இருக்கும் ‘கருத்து வேறுபாடுகளால் பிரிந்தே இருப்பது’ என்ற திசையிலிருந்து வலுக்கட்டாயமாகத் திரும்ப வேண்டும். இது இமாம்கள் மேற்கொள்ள வேண்டிய ‘ஆரம்ப நன்மையான செயல்’ ஆகும்.

இல்லையென்றால் வெகு சீக்கிரம் சிரியா பர்மாவைப் போல் மனிதர்களுக்குக் கியாமத்தையும் –
ஸ்பெயின் நாட்டைப் போல் மார்க்கத்திற்குக் கியாமத்தையும் –
முஸ்லிம் சமுதாயம் அஞ்ச வேண்டி இருக்கும்.
அல்லாஹ் பாதுகாப்பானாக.

இரண்டாவது தீர்வு :

‘தாம் தலைமைப் பொறுப்பைப் பிரயோகிக்க அனுமதிக்கப் படுவதில்லை’ என்று இமாம்கள் கூறுகின்றார்களா?
அதற்கும் அல்லாஹ் வழிகாட்டலைத் தருகின்றான்.
நீங்கள் நன்மையானவற்றின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு வருவான். (2 ; 148)

மேலே கூறப்பட்ட இரண்டு நன்மைகளுக்காக ஒவ்வொரு மஸ்ஜிதின் இமாமும் ‘கருத்து வேறுபாடுகளைத் துறந்து’ ஒவ்வொரு நகரிலும் முந்திக் கொள்ளும்போது....
அங்கு அல்லாஹ் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ‘நகர இமாம்களின் கூட்டமைப்பை’ உருவாக்கி விடுகின்றான்.
இந்தக் கூட்டமைப்பு, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ‘வானளாவிய அதிகாரம் கொண்ட - பலம் பொருந்திய தலைமையாக’ உயர்ந்து விடுகின்றது.

இமாம்களின் இந்தத் தலைமை... ஆலிம்களின் கூட்டமைப்பு, ஹாஜிகளின் கூட்டமைப்பு மற்றும் இமாமைப் பின் தொடரும் ஜமாஅத் ஆகியவற்றின் துணையுடன் மஹல்லாவிலுள்ள ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் ஈமான் அமலுஸ் ஸாலிஹாத் உள்ளவர்களாக – முத்தக்கீன்களாக – உண்மையான முஸ்லிம்களாக ஆக்க வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்போது....
முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்வதில் எத்தகைய தடங்கலும் அல்லாஹ்வின் நாட்டத்தில் இருக்கப் போவதில்லை.

விளங்காத ஒரு விஷயம் :
அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் மஸ்ஜித்களை ஆதாரமாக வைத்து –
‘அதிகாரமும் பலமும்’ கொண்ட ஒரு உயரிய தலைமையை ‘முஸ்லிம் சமுதாயத்திற்கு’ உருவாக்கித் தரும் வாய்ப்பை அல்லாஹ் இமாம்களுக்கு  ஏற்படுத்திக் கொடுத்து –
அதற்கு வழிகாட்டியும் இருக்கும்போது...

மஸ்ஜிதிற்கு வெளியில் –
கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் –
சமுதாய மக்களின் மீது முறையாக அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பில்லாதிருந்தும் –
பிற ஆலிம்களுடன் இணைந்து சமுதாயத்திற்கு என இல்லாமல்  ‘தமக்கு’ என ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது ஏன் என்பது விளங்கவில்லை.

இது வரை ‘இமாம்கள் மனது வைத்தால்’ முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்ளும் என்பதை விளக்கமாக அறிந்தோம்.
இனி, முஸ்லிம் சமுதாயத்தை எவ்வாறு அந்தத் தலைமையின் கீழ் ஒன்று சேர வைப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இஸ்லாமிய அடிப்படையில் சொத்துக்களை பங்கிடுவது எப்படி?

இஸ்லாமிய அடிப்படையில் சொத்துக்களை பங்கிடுவது எப்படி?
பாடம்-1

பொதுமக்கள் சொத்துக்களை பங்கீடு செய்யும் முறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதற்காக, எளிய வடிவில் இந்த பகுதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பெரிய பாடமாக அமைக்காமல், சொத்துக்களை பெறுவோர் இருந்தால், இல்லாவிட்டால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உதாரணங்கள் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கணவன் (or) மனைவி மட்டும் இருந்தால்

முழு சொத்தும் இருக்கும் ஒருவருக்கே உரியது.


மனைவி இறந்து, பெற்றோர் இல்லாவிட்டால்?

இருப்பதில் கணவன் = (1/4)   மீதி உள்ளதில், மகன்   =  (2/3) மகள்   =  (1/3)

கணவன் இறந்து, பெற்றோர் இல்லாவிட்டால்?

இருப்பதில் மனைவி = (1/8)   மீதி உள்ளதில், மகன்   =  (2/3) மகள்   =  (1/3)

பிள்ளைகள் தவிர யாரும் இல்லை*,

இருப்பதில், மகன்   =  (2/3) மகள்    =  (1/3)

பெற்றோர் தவிர யாரும் இல்லை

இருப்பதில், தந்தை   =  (2/3) தாய்    =  (1/3)

கணவன் இறந்து, பிள்ளை இல்லாவிட்டால்

இருப்பதில் மனைவி = (1/4)   மீதி உள்ளதில், தந்தை   =  (2/3) தாய்    =  (1/3)  


*மனைவி இறந்து, பிள்ளை இல்லாவிட்டால்*

இருப்பதில் கணவன் = (1/2)   மீதி உள்ளதில், தந்தை   =  (2/3) தாய்    =  (1/3)  


*மனைவி இறந்து, அனைவரும் இருந்தால்?*

இருப்பதில் கணவன் = (1/4) தாய்          = (1/6) தந்தை     = (1/6)   மீதி உள்ளதில், மகன்   =  (2/3) மகள்   =  (1/3)

*கணவன் இறந்து, அனைவரும் இருந்தால்?*

இருப்பதில் மனைவி = (1/8) தாய்          = (1/6) தந்தை     = (1/6)   மீதி உள்ளதில், மகன்   =  (2/3) மகள்   =  (1/3)

தலாக்கும் சமநீதியும்

தலாக்கும் சமநீதியும்

இஸ்லாமிய  சட்டத்துறை அறிஞர்கள்  செய்யத் துணியாத காரியத்தை இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர்களோ, உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் உள்ளவர்களோ செய்யத் துணிவதா?

இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கும்,  நாடாளுமன்றத்திற்கும் உள்ளதா?

இந்திய இஸ்லாமிய  சமூகம் ஒப்புக் கொள்ளுமா?

 உச்சநீதிமன்றமும், முஸ்லிம் பெண்களை குஜராத்தில் கற்பழித்து , எரித்துக் கொன்றவர்களும் ”முத்தலாக்” முஸ்லிம் பெண்களுக்கு  எதிரானது போன்று பேசியுள்ள நிலையில் , தலாக்கும், முத்தலாக்கும் சமநீதியானதே என்பதை கடந்த 2016 ஆம்  ஆண்டு சென்னை மண்ணடி சலாமத் பதிப்பகம் வெளியீட்டில் நான் எழுதி வெளியிட்ட “பொதுசிவில் சட்டம்” எனும் நூலில் இருந்து இவ்விடம் தருகிறேன்.

தலாக்கும் சமநீதியும்

தலாக் எனும் விவாகரத்து முடிவு ஆண்கள் கையில் மட்டும் தரப்பட்டு, பெண்களுக்கு அத்தகைய விவாகரத்து பெறும் வாய்ப்பைத் தராமல் இருந்தால் மட்டுமே சமூக அநீதியாகும்.

ஆனால், முஸ்லிம் ஷரிஅத் சட்டம் 1937 (shariya Act 1937 or Muslim Personal Act 1937) இல் உள்ள குலா, ஃபஸ்கு எனும் இரண்டு விவாகரத்து முடிவுகள் பெண்ணின் வசம் தரப்பட்டுள்ளது.

குலா என்பது, பெண்ணே நேரடியாக கணவனிடம்  விவாகரத்து கோரும் முறையாகும். ஃபஸ்கு என்பது பெண், தன் தரப்பு திருமண முறிப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் அல்லது அரசு காஜியிடம் கூறிய பின்பு, காஜி மணமுறிவு செய்வதாகும்.

ஆக ஆண்களுக்கு தலாக் முறை விவாகரத்து முடிவு  தரப்பட்டிருப்பதைப் போன்று பெண்களுக்கும் குலா, ஃபஸ்கு என இரண்டு விவாகரத்து வாய்ப்புகள் ஷரிஅத் சட்டத்தில் தரப்பட்டுள்ளன. நிச்சயமாக இது சமூகநீதியாகும்.

மேலும், நியாயமான காரணங்களுக்காக ஒரு ஆண் தனது மனைவியை தலாக் விடும் முறைகளில் இரண்டு வழிமுறைகளை மட்டுமே இஸ்லாம் பாவமற்றதாகக் கருதுகின்றது. அவ்விரண்டு  வழிமுறைகள் பின்வருமாறு,

(அ) தலாக்கே அஹ்ஸன் : மனைவியின் தூய்மையான காலத்தில், அந்த தூய்மையான நாட்கள் முழுவதிலும் அவளை உடலுறவு கொள்ளாத நிலையில் இருக்கின்ற போது ஒற்றை தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒற்றை தலாக் கொடுத்து இத்தா காலம் முடிவடைந்து விடுகின்றது எனில், இந்த வகையான தலாக்குக்கு ‘தலாக்கே அஹ்ஸன்’ (மிக அழகிய விவாகரத்து) என்று கூறப்படும்.

இத்தகைய தலாக்கை ஒரு கணவன் நினைத்தவுடன் உடனே சொல்லிவிட முடியாது. ‘மாதவிடாயை விட்டும் பரிசுத்தமாக இருக்கின்ற, அதிலும் உடலுறவு கொள்ளாத நாட்களில் மட்டுமே பயன்படுத்த இயலும். அதுவரை அவன் காத்திருக்க வேண்டும். அதிலும் ஒரு தலாக்கை மட்டுமே அவன் பயன்படுத்த  வேண்டும்.

(ஆ) தலாக்கே ஹஸன் : மனைவி தூய்மையான நிலையில் இருக்கின்றபோது ஒரு தலாக் கொடுக்க வேண்டும். அவளுக்கு இரண்டாவது தடவை மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த நிலையில் இருக்கின்றபோது, இரண்டாவது தலாக் கொடுக்க வேண்டும்.

அடுத்து மூன்றாவது தடவை மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையான நிலையை அடைந்த பிறகு மூன்றாவது தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று தவணைகளில் இடைவெளி விட்டு மூன்று தலாக் சொல்வதைத் தான் ‘தலாக்கே ஹஸன்’ (அழகிய விவாகரத்து)  எனப்படும்.

இஸ்லாத்தில் இந்த வகையான தலாக்குக்கும் அனுமதி இருக்கின்றது. இவ்வாறு மூன்று தலாக்குகளை கூறுவதற்கு கணவனுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். மூன்றாவது தலாக் கூறும் முன்பு அவ்விருவருக்கும் மத்தியில் இணக்கம் உண்டானால், சேர்ந்து வாழ ஷரிஅத் சட்டம் அனுமதிக்கும்.

மேற்கண்ட இரண்டு வகையான தலாக் முறையையும் நியாயமான காரணங்களுக்காக ஆண் பயன்படுத்திட ஷரிஅத் அனுமதிக்கும். எனினும் இவ்விரண்டில் எதனையும் பயன்படுத்திட சில நாட்கள் அவன் காத்திருக்க வேண்டும்.
இவ்விரண்டு தலாக் கூறும் முறையுடன் மூன்றாவது ஒரு வகையும் இருக்கின்றது. அது ஷரிஅத் கடுமையாக கண்டித்துள்ள தலாக் வகையாகும். அது பின்வருமாறு,

(இ) தலாக்கே பித்அத்: மூன்றாவது வகை நூதனமான தலாக்  ஆகும். இது இஸ்லாத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்ட வகை. பின்வருபவை இப்பிரிவு தலாக்கில் அடங்கும்.

(1)ஒரே மூச்சில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலாக் கொடுத்தல்

(2) (மூன்று தூய்மையான காலத்தில் ஒவ்வொரு தலாக் ஆகக்கூறி மூன்று மாத இடைவெளியில் மூன்று தலாக்குகளையும் நிறைவு செய்யாமல்) ஒரு தூய்மையான நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலாக்குகளை இடைவெளி  விட்டு கூறி  விவாகரத்து செய்தல்

(3)மனைவியின் மாதவிடாய் காலத்தில் தலாக் கூறி விவாகரத்து செய்தல். ஒரு தலாக் இவ்வாறு சொன்னாலும் அது இப்பிரிவில் அடங்கவே செய்யும்.


(4) மாதவிடாய் ஏற்படாத அவளின் பரிசுத்த நாட்களில் உடலுறவு கொண்டுள்ள நிலையில் அவளை தலாக் கூறி விவாகரத்து செய்தல். இச்சமயம் அவன் ஒரு தலாக் கூறி விவாகரத்து செய்தாலும் இப்பிரிவில் அது அடங்கவே செய்யும்.

‘தலாக்கே பித்அத்’ பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நான்கில் ஏதாவது ஒன்றின்படி கணவன் மனைவியை தலாக் கூறுவதை இஸ்லாம் வன்மையாக கண்டித்துள்ளது. இவ்வாறு கூறுபவர் பாவியாக கருதப்படுவார்.

ஆக நியாயமான  காரணங்கள் இருந்தாலும் கூட ஓர் ஆண் பாவியாகாமல் தலாக் கூற வேண்டுமெனில், (அ) தலாக்கே அஹ்ஸன்,  (ஆ) தலாக்கே ஹஸன் ஆகிய இரண்டு வழிமுறைகளை மட்டுமே கடைபிடிக்க முடியும்.

ஆனால், அவ்விரண்டு தலாக்குகளிலும் அவனால் உடனே தலாக் கூறிவிட முடியாது. அதற்கு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆகவே செய்யும்.

ஆனால், பெண்ணுக்கு தரப்பட்டுள்ள குலா மற்றும் ஃபஸ்கு அடிப்படையிலான விவாகரத்தில் இத்தகைய கால தாமதங்கள் இல்லை.

குலா என்ற  அடிப்படையில் ஒரு பெண் தனது  கணவனை விவாகரத்து செய்தால், உடனே விவாகரத்து நிகழ்ந்துவிடும்.

அவ்வாறே ஃபஸ்கு  என்ற அடிப்படையில் நியாயமான காரணங்களுக்காக காஜியிடம்  விவாகரத்துக் கோரி, விசாரணைக்குப் பிறகு பெண் தரப்பில் நியாயம் இருப்பதாகக் அவர் கருதினால், உடனே அவரால் விவாகரத்து ஆணை பிற்பிக்க முடியும்.

ஆக நியாயமான, பாவமற்ற விவாகரத்து முடிவில், ஆணை விட பெண்ணுக்கே உடனே விவாகரத்து பெறும் சாதகமான சூழ்நிலை இருக்கின்றது.

முத்தலாக்கை ஏன் கைவிடக்கூடாது?

ஈரான், மொராக்கோ, எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முத்தலாக்கை கைவிட்டுள்ள  நிலையில், இந்தியாவில் ஏன் கைவிடக்கூடாது? இது முத்தலாக் குறித்து விவாதிப்போரின் கேள்வி.

இதற்கான பதில், (கைய்ருல் குரூன் எனும்) முகமது நபி (ஸல்) இன் தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை அதனை முழுமையாக தடை செய்யாமல் வைத்திருப்பதன் காரணம்
என்னவெனில், ‘அரிதினும் அரிது’ (Rarest of the rare) எனும் சில சூழ்நிலையிலும் மனிதனுக்கு ஷரிஅத் சமநீதியை வழங்க வேண்டும் என்பதினால்தான்.

“ ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து ஒருமாத காலம் தங்கியிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு, பின்பு அந்த ஒருமாத காலத்திற்குள் வெளிநாட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல  விரும்பினார். திருமணம் செய்த பின்பு அவள் மண வாழ்க்கைக்கு தகுதியற்றவள்  என்று தெரியவந்தது.

ஒரு தலாக் விட்டுவிட்டு பின்பு இரண்டாவது தடவை இந்தியா வந்து ஒரு தலாக், அதற்குப் பின்பு மூன்றாவது தடவையாக  இந்தியா வந்து மூன்றாவது தலாக் விடுவதற்கு  குறைந்தபட்சம் மூன்று மாதகாலம் ஆகும். அதுவரை கால அவகாசம் அவனுக்கில்லை.

ஒருதலாக் விடவும் அவன் மாதவிடாய் ஏற்படாத, உடலுறவு கொள்ளாத காலம் வரையில் அவன் காத்திருக்க வேண்டும். மேலும், ஒரு தலாக் விட்டால், சுமூகம் ஏற்படுத்தவதாகக் கூறி அவனது காலநேரத்தை வீணடிக்கவும் வாய்ப்புண்டு.

இத்தகைய சூழ்நிலையில், ஓர் ஆணுக்கு அநீதி நிகழாமல் இருக்கவே ‘அரிதினும் அரிது’ (Rarest of the rare) என்ற அடிப்படையில் ‘முத்தலாக்’ என்பது தலாக் முறைகளில் நீக்கப்படாமல் உள்ளது.

எவ்வளவு நுணுக்கமான சமநீதி, தலாக் விஷயத்தில் ஷரிஅத் சட்டத்தில் பேணப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல.. ஒரு  ஆண் தனது மனைவி இன்னொருவருடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருப்பதை நேரடியாகக் கண்டார். இப்போது ‘லிஆன்’ என்ற அடிப்படையில் மனைவியை நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கி, சத்தியம் செய்து விவகாரத்து செய்வதை விடவும் சிறந்தது முத்தலாக் விடுவதே ஆகும்.

(லிஆன்  என்றால், மனைவி இன்ன நபருடன் தவறான உறவில் இருந்தாள்.  நான் பார்த்தேன்  என்று நான்கு முறை சபையில் , காஜி முன்னிலையில் சத்திய செய்து,  ஐந்தாவது முறையில் அல்லாஹ்வின் மீதாணையாக எனது கூற்றில் நான்  பொய்யனாக இருப்பின் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக  என்று  கணவர்  கூறுவதாகும்.  இவ்வாறு செய்த  பின்பு காஜி  முத்தலாக் என்ற  அடிப்படையில்  கணவன்  - மனைவி இருவரிடையே (நிரந்தரமான  பிரிவாக) திருமண  உறவை ரத்து செய்வார்.)

திருக்குர்ஆனில்  அல்லாஹ் கூறுகிறான். “நல்ல முறையில் வாழுங்கள். அல்லது அழகிய முறையில் விவகாரத்து செய்துவிடுங்கள்.”                              (அல்குர்ஆன் 2:229)

ஆக  தேவையற்ற முறையில் முத்தலாக் மட்டுமல்ல.. ஒரு தலாக்கும் ஷரிஅத் அடிப்படையில், மகத்துவம் வாய்ந்த அல்லாஹ்விடம் பாவம் தான். அந்த பாவச்சுமையின் கனத்தினால் அல்லாஹ்வின் அரியணை அதிர்கிறது என்பது இறைத்தூதரின் (ஸல்) எச்சரிக்கை.

எனினும் தேவைக்கு பயன்படுத்தவே ஒருதடவை தலாக் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை.

அவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுக்குப் பின்பு நபித்தோழர்களும், தாபியீன்களும்,  தபவுத் தாபியீன்களும்,  பன்னெடுங்கால  இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் ‘தேவைக்கு பயன்படுத்தவே‘ முத்தலாக்கை ஷரிஅத் சட்டத்தில் இருந்து அகற்றவில்லை. முத்தலாக் என்ற நிகழ்வே இஸ்லாமிய  ஷரிஆவில் இல்லை என்று அறிவிக்கவில்லை.

இஸ்லாமிய  சட்டத்துறை அறிஞர்கள்  செய்யத் துணியாத காரியத்தை இந்திய  நாடாளுமன்றத்தினாலோ, உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் உள்ளவர்களோ செய்ய இயலுமா?  என்ன?

செய்தால்  இந்திய இஸ்லாமிய  சமூகம் ஒப்புக் கொள்ளுமா? என்ன?

தொகுப்பு :

பேராசிரியர் அபுல் ஹஸன் ஃபாஸி

சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி (பாளையங்கோட்டை)

(தலைமை இமாம்  ரஹ்மானிய்யா  ஜும்ஆ  பள்ளிவாசல் - மேலப்பாளையம்)

(பேராசிரியர்  - மன்பவுல் பாகியாத் மகளிர் அரபிக்கல்லூரி - மேலப்பாளையம்)

(மேலாய்வாளர்  - தப்சீர் ஹமீத்)

(காப்பாளர்  - சிராதுல் முஸ்தகீம் பதிப்பகம் - சென்னை)

மேலும் தகவல்களுக்கு.. காண்க: ”பொதுசிவில் சட்டம் ” நூல்

பர்மாவின் அழுகுரல்!

பர்மாவின் அழுகுரல்!

உடைந்துவிட்ட என் உள்ளமே !வேண்டாம் போதும்..
அழுத கண்ணீர் ஆறாய் ஓடி பலகீனமான என் உறுப்புகளே போதும்..

இனியும் என்னால் அழ முடியாது.

வெறிபிடித்த என் புத்த சகோதரன் (பினந்திண்ணியாக மாறி)

என் குழந்தைகளை உயிரோடு எரித்தான் ,
என் இறையில்லங்களை கரித்தான்.
,என் பரிசுத்த வேதத்தை தூளாய் கிழித்தான்,(இருந்தும்)

என் இஸ்லாமிய உடன்பிறப்பே.... !!!( நீ அமைதியாய் இருக்கிறாய்)
உன் மனம் மட்டும்,
இருண்டுகிடக்கின்றது

எனது கவலையும் கஷ்டமும் உனக்கு கவலையளிக்கவில்லையோ.. ?

தயவு செய்து கேள்!!!
 அந்த குப்ரின் ஓநாய்கள் எங்கள் பிள்ளைகளில் எத்தனை பேரை கொன்றார்கள் என்று ?..

அவர்களின் கஃபனிற்கு கூட  ஆடை இருக்கவில்லை ...

*ஈமான் கொண்ட காரணத்தால் மட்டுமே என் சகோதரி ஈவின்றி ,
இரக்கமின்றி விலங்கிட்டு கெடுக்கப்பட்டாள்*

என் சொந்தங்களே ! நாங்களும் முஸ்லிம்களே !!!

என் காயத்திற்கு மருந்திட மறந்தீர்கள் ! இன்றும் நொண்டி சாக்குகளை மட்டுமே கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் ...

அல்லாஹவின் மீது சத்தியமாய் !

ஏன் இன்னும் மெளனம் ,இனியாவது எனக்கு உதவ மாட்டீர்களா ???....

(கண்ணீருடன் - பர்மா சகோதரன் )

translated by _✍🏽moulavi  *ilyas bilali

இஸ்லாமிய பொருளாதாரம் 2

இஸ்லாமிய பொருளாதாரம் 2 

நபித்தோழர்களில் மிகவும் செல்வந்தராக இருந்தவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்பு ரலி அவர்கள்

ஒருசமயம் " உங்களுக்கு எப்படி இவ்வளவு செல்வம் கூவிகிறது ? என்று வியாபார நுட்பத்தைப் பற்றி கேட்கப்பட்டது

"நான் குறைவான இலாபம்தானே கிடைக்கிறது என்று வியாபாரத்தில் ஒரு போதும் எண்ணியது இல்லை "

ஒரு நாள் நான் ஆயிரம் ஒட்டகங்களை வாஙகிய விலைக்கே விற்றிருக்கிறேன் அவற்றின் கால்களில் கட்டிருந்த கயிறுகளைத் தவிர நான் வேறெதையும் எதிர்ப்பார்க்கவில்லை

அக்கயிறுகள் ஒவ்வொன்றையும்  அதையும்  ஒரே ஒரு திர்ஹத்துக்கு (வெள்ளிக்காசு) விற்றேன்
ஆகவே எனக்கு ஆயிரம் திர்ஹம் லாபமாயிற்று அதுமட்டும் விற்காமல் அதிக இலாப நோக்கில் வைத்திருந்தால் ஒட்டகத்தின் தீனிச் செலவும் ஆகி இருக்கும் இதனால் தீனிச் செலவு செய்யாமல் அதிலும் எனக்கு ஆயிரம் திர்ஹம் கிடைத்திருக்கிறது ஆம் அன்று எனக்கு 2000 திர்ஹம் ஒரே ஒரு நாளில் கிடைத்திருக்கிறது " என்று விளக்கம் கொடுத்தார்கள்

இன்னொரு கிதாபில் மேற்கண்ட வியாபாரத்தில் வாங்கிய ஒட்டகத்தை பராமரிக்கும் செலவும் மிச்சம் இதனால் இலாபம் முழுவதும் கிடைத்திருக்கிறது மேலும் எந்த வியாபாரத்தையும் சொற்ப நாட்களுக்குள் விற்று தீர்த்துவிட்டு அடுத்த வியாரத்திற்கு உடனே முதலீடு செய்திடுவேன்
ஒரு நாளைக்கு எத்தனை வியாபாரம் செய்தோம் என்று கணக்கிடுவேனேத் தவிர எவ்வளவு லாபம் என்று ஒரு போதும் பார்த்தே இல்லை "

இதை வியாபார நண்பர்கள் கவனத்தில் கொள்ளவும்

ரஹ்மத் ராஜகுமாரன்
944 344 6903 (அவசியப்பட்டால் மட்டும் தொடர்பு கொள்ளவும் )

Monday, 18 September 2017

ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய இமாம் இப்னுமாஜா

இமாம் இப்னுமாஜா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து இம்மார்க்கத்திற்கு தொண்டாற்றிய இமாம்களில் இமாம் இப்னுமாஜா ஒருவராவார்.

இயற்பெயர் : முஹம்மத்   பின் யஸீத்

குறிப்புப் பெயர் : அபூ அப்தில்லாஹ்

தந்தை பெயர் : யஸீத்.

இவரது பிரபலமான பெயர்  : இப்னு மாஜா

கோத்திரம் : ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு : ஹிஜ்ரீ 209 ஆம் ஆண்டு.

வளர்ந்த இடம் : கஸ்வீன் என்ற ஊர்

கல்வி  : இப்னு மாஜா அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தொகுத்த இப்னு மாஜா என்ற ஹதீஸ் புத்தகம் ஹதீஸ் கலையில் இவர்கள் பெற்றிருந்த பாண்டித்துவத்தை எடுத்துரைக்கிறது. அறிவிப்பாளர்களின் வரலாறுகள் தொடர்பாக இவர் எழுதிய அத்தாரீஹ் என்ற நூலும் இவரது அந்தஸ்தை உயர்த்துகிறது. மேலும் இவர் குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதிலும் மார்க்கச் சட்டங்களிலும் தலை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார் என இமாம்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்   : குராசான், ஈராக், ஹிஜாஸ்,  மிஸ்ர், ஷாம் மற்றும் பல ஊர்கள்.

இவரது ஆசிரியர்கள் : அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.

இவரது மாணவர்கள் : அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

இறப்பு  : ஹிஜ்ரீ 273 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார்.

Thursday, 14 September 2017

ஆகஸ்ட் 2017 வெற்றியாளர்கள்

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

கியாமத் நாளை  நோக்கியின் ஆகஸ்ட் 2017 வெற்றியாளர்கள்:

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁

2 வது குழுமத்தில் உள்ள சகோ :👇

      1: யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 62

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

💰 இரண்டாம் பரிசு 💰

முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇

1. ஹக்கிம் - தென்காசி 57

2 வது குழுமத்தில் உள்ள சகோ:👇

2. அம்மாா்
- அதிராம்பட்டினம் 58

💠💠💠💠💠💠💠💠💠💠💠
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕

 🚏 மூன்றாம் பரிசு🚏

2 வது குழுமத்தில் உள்ள சகோதரர்:👇

🍭1. நெய்னா முகம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 54

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்:👇

🍭2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 55

💙💙💙💙💙💙💙💙💙💙💙

❇❇ சிறப்பு பரிசு ❇❇

 முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇

☂ 1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 60

2வது குழுமத்தில் உள்ள சகோ:👇

☂ 2. அப்துல்காதர் - திருநெல்வேலி 60

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁  ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

🍋. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 58

🍋2. முஹம்மது யூசுஃப் சேட் - திருநெல்வேலி 47

🍋3. முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 26

🍋4. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 23

🍋5. ஆயிஷா ஃபர்வின் - ராஜகிரி (தஞ்ஞாவூர்) 19

🍋6. ஜாஹிர் உசேன் - சென்னை (பட்டாபிராம்) 12

🍋7. ஹரீஸ் - சென்னை 6

🍋8. முஹம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 6

💍💍💍💍💍💍💍💍💍💍💍
♻♻♻♻♻♻♻♻♻♻♻
💖💖💖💖💖💖💖💖💖💖💖

🔅 பதில் அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் ஜஸகல்லாஹு கைர்

🔅 நாம் பரிசுகள் வழங்குவது ஒரு ஊக்கத்திற்காக மட்டுமே. உண்மையில் கூலி அல்லஹ்விடம் மட்டுமே!

🔅 இன்ஷா அல்லாஹ் இனி மற்ற அனைத்து சகோதரர்களும், புதிதாக இணைந்துள்ள சகோதரர்களும் பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்

🌴 கியாம நாளை நோக்கி குழுமம்🌴

💖💖💖💖💖💖💖💖💖💖💖

இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)🌺

🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு  உதவும் கரங்கள் குழுமம் " இணைந்து மேற்கூறிய சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கிக் கொண்டு வருகிறோம்.

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

🌴 கியாம நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 14-09-2017

மதிப்பெண் பட்டியல்:



Monday, 11 September 2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 5

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 5

அந்த 50பேர் கொண்ட கூட்டம் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து அரசன் சொன்னவாறு சொன்னார்கள். நபி அவர்களுக்கு அவர்களின் பேச்சுக்களில் நம்பிக்கை ஏற்படவில்லை. அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள். உடனே வானிலிருந்து ஒரு தீப்பிழம்பு அந்நயவஞ்சகக் கூட்டத்தினர் மீது பாய்ந்து அவர்களனைவரையும் சுட்டுக் கரித்து விட்டது.

பின் சில முரடர்களை அனுப்பி அவர்களை கட்டி கொண்டு வருமாறு அனுப்பினான். அவர்களும் அவ்வாறு முயற்சிக்கவே நபியவர்கள் அல்லாஹ்விடம் கேட்க> வானிலிருந்து தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து அவர்களனைவரையும் ஒருசில நொடிகளில் சுட்டுக் கரித்து சாம்பலாக்கிவிட்டது.

அரசனின் அவையில் இருந்த ஒரு முஸ்லிம் மந்திரியை அழைத்து அவர் மாதிரி சிலர் முஸ்லிமாக விரும்புவதாகவும் எனவே நகருக்குள் வருமாறும் கேட்டு அவர்களை நகருக்குள் அழைத்து வர அனுப்பினான். அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை கொலை செய்துவிட சில முரடர்களை மறைமுகமாக அனுப்பினான். அவரும் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து பஃலபக் நாட்டு நிலவரங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினார். ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹ் முஸ்லிம் மந்திரியுடன் செல்லுமாறும் அவ்வாறு செல்லவில்லையென்றால் உங்களை கொலை செய்ய அரசன் ஆளனுப்பி உள்ளார் என்றும் வஹீ அறிவித்தான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 4

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 4

ஸிரியா நாட்டில் உள்ள தேவதை மிகவும் சக்தி வாய்ந்தது. அங்கு இளவரசனை அழைத்துச் சென்றால் குணம் கிடைக்கும் என்று பூஜாரிகள் சொன்னார்கள். இதனால் ஒரு கூட்டம் சிரியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இல்யாஸ் நபி அவர்கள் தங்கியிருந்த பகுதிவழியாக செல்ல நேரிட்டது. அவர்களை இடைமறித்து, நல்லுபதேசம் செய்தார்கள்.

அந்த நல்லுபதேசங்களை கேட்ட அந்தக் கூட்டத்தினர் ஸிரியா செல்லும் நோக்கத்தை கைவிட்டு முஸ்லிமாகி> மறுபடியும் பஃலபக் நகருக்கே திரும்பிவிட்டனர். இவர்கள் மூலம் இல்யாஸ் நபி இருந்த இடத்தை அரசன் தெரிந்து கொண்டான்.

இதனால் ஒரு 50பேர் கொண்ட கூட்டத்தைத் தயாரித்தான். நாங்கள் அனைவர்களும் உங்கள் பேரில் விசுவாசம் கொண்டோம். எனவே தாங்கள் நகருக்குள் வந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு நற்போதனை செய்து அவர்களையும் விசுவாசம் கொள்ள வேண்டும் என்றும்> இதில் நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் கூறி அவர்களை ஊருக்குள் வரவைக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 3

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 3

அந்த அரசனிடம் சென்று அவனுக்கு நற்போதனைகள் செய்யுமாறும்> பிறர் பொருளைக் காரணமின்றிப் பறிப்பது பெருங்குற்றமென்றும் உடனே அந்தத் தோட்டத்தை இறந்தவருடைய வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைத்து விடுமாறும், விக்கிரகத் தொழும்பை விட்டு அல்லாஹ்விற்கு மட்டும் சிரம்பணியுமாறும் இதற்கு உடன்படாவிடிலல் கடுமையான சிறைத் தண்டனையைச் சந்திக்க வேண்டி வருமென்றும் எச்சரிக்குமாறு அல்லாஹ், ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்தான்.

நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்வாறே செய்தார்கள். ஆனால் தமக்கு புத்தி சொல்ல இவர் யார் என்று கடும் கோபம் கொண்டார். எனவே இல்யாஸ் நபி அவர்களுக்கு கடும் தொல்லை கொடுத்து அவர்களைக் கொன்றுவிடவும் திட்டமிட்டான். இதனையறிந்த இல்யாஸ் நபி அவர்கள் மிகவும் மனவேதனையடைந்து பொறுமையிழந்தவர்களாய் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியில் போய்த் தங்கிக் கொண்டார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பல ஒற்றர்களை ஏவியிருந்தான் அரசன் அஹப். நபி அவர்கள் அந்த மலைப்பகுதியில் 7வருடகாலம் வாழ்ந்தார்கள்.

இந்நிலையில் அரசனுக்கு பிறந்த ஒரே மகன் கடும் நோய்வாய்ப்பட்டான். மனம் பதைபதைத்துப் போன அரசன், தேவதை பஅலுக்கு இரவும்> பகலும் பூஜை போட்டுப் பார்த்தான். நோய்தான் குணமானபாடில்லை. பூஜாரிகள் இதற்கெல்லாம் காரணம் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் என்று அரசரிடம் சொன்னார்கள்.



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 2

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 2. 

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அரசன் அஹபிற்கு புத்திமதி கூறி நேர்வழிப்படுமாறு உபதேசித்து வந்தார்கள். இதேபோல் பல்வேறு சிற்றரசர்களுக்கும் உபதேசித்து வந்தார்கள். அத்தனைப் பேரில் ஒரே ஒருவர் மட்டும் அதைக் கேட்டு முஸ்லிமானார்.

அரசன் அஹபின் மனைவி அஸ்பீல் அரசன் வெளிநாட்டிற்குச் சென்றுவிடும்போதெல்லாம் இவள்தான் அரசாட்சியைக் கவனித்து வந்தாள். இதற்குமுன் 7மன்னர்களை மணம் முடித்து அதன் மூலம் எழுபது ஆண்மக்களை பெற்றாள். நல்லடியார்களையும்> நபிமார்களையும் கொன்றுள்ளாள். கடைசிக் கணவனை முடிக்கும் போது மூப்பு வந்து விட்டதால் அஹபை கொல்ல முயற்சிக்க முயலவில்லை.

அரசன் அஹபுடைய அரண்மனைக்கு அருகாமையிலேயே இறைநேசர் மஸ்தகியின் வீடும்> தோட்டமும் இருந்தது. மஸ்தகி மிகவும் கண்ணியமானவர். எவர் பொல்லாப்புக்கும் போகமாட்டார். சர்வகாலமும் இறைதியாத்திலேயே இருந்து வந்தார். அவருடைய தோட்டம் எல்லோரையும் கவரக் கூடியதாக இருந்து வந்தது. அதனை தம் வசப்படுத்திட அரசி முடிவு செய்தாள். ஆனால் அதற்கு அரசர் தடை செய்து வந்தார். ஒருமுறை அரசர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தபோது அரசி மஸ்தகியை கொலை செய்துவிட்டு அந்த தோட்டத்தை தன் வசப்படுத்திக் கொண்டாள்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 1

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 1



பனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் ஹழ்ரத் அல் யஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூன்றாவது தலைமுறையில் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றினார்கள்.

ஹழ்ரத் ஹர்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மரணத்திற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் விக்கிரகத் தொழும்பர்களாகவும், எல்லாவிதத் தீமையில் ஈடுபடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள். இவர்களை நேர்வழிப்படுத்தவே அல்லாஹ் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பினான். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்ராத் வேதத்தையே பின்பற்றினார்கள்.

யூஷஃ இப்னு நூன் ஸிரியா நாட்டை வென்ற பிறகு பனீ இஸ்ரவேலர்களுக்கு அதனைப் பங்கிட்டுக் கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு பகுதியாக இருந்ததுதான் ஸமாரியா என்ற சிறு நாடு. இதனை அஹப் என்பவன் ஆண்டு வந்தான். அதன் தலைநகரின் பெயர் ‘பஃலபக்’ ஆகும். இந்தப் ‘பஃலபக்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம் ‘பஅல்’ என்ற 60அடி உயர விக்கிரகம் ஒன்று இருந்தது. இது வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தூய்மைப்படுத்த 400பேரை அரசன் நியமித்திருந்தான். இது சக்தி வாய்ந்தது என்றும்> நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் என்றும் அவர்கள் நம்பி அதற்கு அளவுக்கு மீறிய மரியாதையும் அளித்து வந்தனர். அந்த விக்கிரகத்தின் வயிற்றுக்குள் ஷைத்தான் புகுந்து கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தான். இந்த மக்களை திருத்தவே அல்லாஹ் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பியிருந்தான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

இஸ்லாமியர்களும்... இனவாதமும்!


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

இஸ்லாமியர்களும்... இனவாதமும்!

========================

இருள் அகற்றிய அருள் மனிதர்!

“உள்ளமும் உலகமும் பல
வகையான இருள்களில்
மூழ்கியிருக்கின்ற.
அந்த இருள்கள் சிலபோது ஒன்றின்
மேல் ஒன்றாகப் படர்ந்து
அடர்த்தியாகின்றன” (24: 40)

அத்தகைய அடர்த்தியான
இருள்களில் அகப்பட்டுக் கொண்ட
மனிதர்களோ சமூகங்களோ
அவற்றிலிருந்து
வெளியேறுவது சிரமமே.
காரணம், ஓர் இருளைத்
தாண்டும்போது மற்றுமோர் இருள் சூழ்ந்து கொள்கிறது. ஓர் இருளை அகற்ற
முயற்சிக்கையில் மற்றுமோர்
இருள் அந்த இடத்தைக் கவ்விக்
கொள்கிறது.
இவ்வாறு அடர்ந்த இருள்களுக்கு
மத்தியில் உலகம் இருந்த ஒரு
காலப் பகுதிதான் கி.பி. 5, 6ஆம்
நூற்றாண்டுகள். அன்றைய
காலப்பகுதி எவ்வாறிருந்தது
என்பதை நீங்கள் அறிய
விரும்பினால் முஸ்லிம்களின்
வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன? என்ற நூலை
வாசிக்கலாம். அறியாமை இருள்கள் அனைத்தும்
ஒட்டுமொத்தமாக உலகை எவ்வாறு ஆக்கிரமித்திருந்தன
என்ற விளக்கத்தை அந்த நூலின்
ஓர் அத்தியாயம் விரிவாக
ஆராய்கிறது. அது மௌலானா
அபுல் ஹஸன் அலி நத்வி
அவர்களின் நூலாகும்.
அந்த இருள் யுகத்தில்
அகிலத்தாருக்கு அருளாக வாழ்ந்த மாமனிதர்தான்
முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அன்னார் வெறும் 23
வருடங்களில் அனைத்து
இருள்களையும் அகற்றி ஒரு
தெளிவான, வெளிச்சமான
வாழ்க்கைப் பாதைக்கு மனித
சமூகத்தைக் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்தவர்கள்
தனது இறுதித் தருவாயில்
கூறிவிட்டுச் செல்கிறார்கள்:
நான் உங்களை, இரவும் பகலைப்
போல் பிரகாசிக்கும் ஒரு பாதையில் விட்டுச்
செல்கிறேன். (அதிலிருந்து
விலகி விடாதீர்கள்) விலகியவர் நிச்சயம் அழிந்தார்.
அவர் சாதித்தது அந்தக் குறுகிய வாழ்க்கையில் ஒரு
மனித சாதனையல்ல. அழிந்து
போகும் மனிதனின்
சக்தியோடு அழியாத
நிலையான நித்திய சக்தியும்
இணைந்து கொண்டதனால்
விளைந்த மகத்தான சாதனையே
அது.

மலைகள் அனைத்தையும்
பெயர்த்து விடலாம்,
சமுத்திரங்களை வற்றி வரண்டு
போகச் செய்யலாம். எனினும், அந்த மாமனிதரின் சாதனை
அதனைவிடக் கடினமானது.
அது மனிதனால்
சாதிப்பதற்கில்லை. அவனோடு
அவனைப் படைத்தவனின்
பங்களிப்பும் இணைந்து
விட்டால், அந்த இணைப்பைப்
பலப்படுத்தியிருந்தார்கள் மாநபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அறுந்து போகாத
அல்லாஹ்வுடனான அந்த இணைப்பின் பலமே அந்த
சாதனையின் பின்புலம்.

*ஷிர்க் எனும் இருள் நீங்கியது!*

அந்த சாதனையின் முதற் பெறு பேறு அல்லாஹ்வை
மனிதர்களின் கண்களுக்கு
மறைத்திருந்த ஷிர்க் எனும்
இருளை நீக்கியதாகும்.
மனிதனைப் படைத்தவன்
அவனுக்குள் ஓர் உள்ளுணர்வை
வைத்திருக்கிறான். அதுதான்
இறையுணர்வு. அந்த உணர்வு
இயற்கையானது. அது தனக்கு
மேலால் இருக்கும் வல்லமை மிக்க ஒரு சக்தியின்
பக்கபலத்தைத் தேடுகிறது.
அதன் தயவை நாடி நிற்கிறது.
மனிதனது உள்ளுணர்வில்
அவனது படைப்பாளனால்
வைக்கப்பட்ட இந்த உணர்வை சரியான திசையில்
செல்லவிடாமல் தடுத்து தங்களது உலகியல்
நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தியவர்கள் ஏராளம்.
அவர்கள் சூரியனையும்
சந்திரனையும்
சமுத்திரத்தையும்
நெருப்பையும் கல்லையும்
மண்ணையும் மனிதனுக்குக்
காட்டி, இதுதான் உனது தெய்வம் இதனை அஞ்சி
வழிபடும் என்று கூறினார்கள்.
அந்த வழிபாடுகளாலும்
பூஜைகளாலும்
காணிக்கைகளாலும்
படையல்களாலும்
பயனடைந்தவர்கள் மக்களல்ல.
மாறாக, மனித தெய்வங்களே.
இந்தப் பின்னணியில்தான்
படைத்தவனுக்கு இணை கற்பிக்கும் இருள்…
படைப்புகளைப் பூஜிக்க வைத்த
இருள் உலகெங்கும் பரவியது.
அந்த இருளுக்குள்
மூழ்கியவர்கள் படைப்பினங்களின்
அடிமைகளாக மாறினார்கள்.
இதன் விபரீதம் யாதெனில்,
அனைத்து
கௌரவங்களுக்குமுரிய மனிதன் தன்னைவிட அற்பமான
படைப்புகளுக்கு முன்னால்
மண்டியிட்டு தனது
கண்ணியத்தை அடகு வைத்ததே.

மாநபியின் கடின உழைப்பால் இந்த இருளிலிருந்து 23
வருடங்களில் அறபுத் தீபகற்பம்
விடுதலை பெற்றது. அதனைத்
தனது அந்திம காலத்தில் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் இவ்வாறு
கூறினார்கள்:
அறபு மண்ணில் நான்
வணங்கப்படுவேன் என்ற நம்பிக்கையை ஷைத்தான்
இன்று இழந்து விட்டான்.
வெறிகள் நீங்கின
மாநபியின் சாதனைகளுள்
மற்றொன்று மாசற்ற மனித
நேயத்தை உயிர்ப்பித்து,
மண்ணுலகைப் பற்றிக் கிடந்த
வெறிகள் அனைத்தையும்
நீக்கியதாகும்.
நிற வெறி, இன வெறி, கோத்திர வெறி, பிரதேச
வெறி, மத வெறி என உலகை
ஆட்டிப் படைத்துக்
கொண்டிருந்த இருள்மயமான
வெறிகள் அனைத்தையும்
அன்ணலார் தனது பாதங்களின் கீழ்
புதைத்து விட்டதாக பிரகடனம்
செய்தார்கள், தனது இறுதி ஹஜ்ஜின் பிரியா விடை
உரையில்…
அதன் மூலம் மனித கண்ணியம்
தோலின் நிறத்திலல்ல…
பிறக்கும் குடும்பத்திலல்ல…
பேசும் மொழியிலல்ல…
மாறாக, அல்லாஹ்வின் மீது
கொண்ட காதலில்… அவனது கோபம் பற்றிய அச்சத்திலேயே
படைப்பினங்களது கண்ணியம்
இருப்பதாக அல்குர்ஆன் முரசம்
கொட்டியது.

மனிதர்களே! நாங்கள் உங்களை ஓர்
ஆணிலிருந்தும்
பெண்ணிலிருந்தும் படைத்து (பின்னர்) கோத்திரங்களாகவும்
சமூகங்களாகவும் ஆக்கினோம்.
நீங்கள் ஒருவருக்கொருவர்
அறிமுகம் செய்து கொள்வதற்காக…
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
கண்ணியமானவர் உங்களில் அதிகம் அவனை அஞ்சி நடந்து
கொள்பவரே.
(49: 23)

மேலும் அல்லாஹ்
கூறுகின்றான்:
மனிதர்களே! ஓர்
ஆன்மாவிலிருந்து உங்களைப்
படைத்து… அந்த
ஆன்மாவிலிருந்தே அதன்
சோடியைப் படைத்து… அந்த
இருவரிலிருந்தும் ஏராளமான
ஆண்களையும் பெண்களையும்
பரவச் செய்தவனைப் பயந்து
கொள்ளுங்கள்.
(4: 2)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
எந்தவொரு வெறியின் பக்கம்
அழைப்பவனும் எம்மைச்
சேர்ந்தவன் அல்ல. எந்தவொரு
வெறிக்காகப் போரிடுபவனும்
எம்மைச் சேர்ந்தவனல்ல.
எந்தவொரு வெறிக்காக
மரணிப்பவனும் எம்மைச்
சேர்ந்தவனல்ல. (அபூ தாவூத்)

முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது இரட்சகனிடமிருந்து
சுமந்து வந்த
இறைத்தூதிலிருந்து பயன் பெறாத சமூகங்கள் இன்னும் இந்த
வெறிகளால் அல்லல்பட்டுக்
கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள்,
ஆபிரிக்காவின் கறுப்பர்கள்
உலகில் தமது கண்ணியத்தைத்
தொலைத்தவர்களுக்கு
உதாரணங்களாகும். அதேநேரம்
உயர்ந்தவரின் தலைமையில்
உதயமாகிய நாஸிகள்,
கடவுளின் செல்லப் பிள்ளைகள் என தம்மைக் கூறிக் கொள்ளும்
இஸ்ரவேலர்கள் தம்மைத் தவிர
உலகில் வாழ்கின்ற வேறு எவரையும் மனிதர்களாகக்
கருதுவதில்லை என்பது நவீன
உலகின் வெறித்தனங்களது
அடையாளங்களாகும்.

*மத வெறி நீங்கியது!*

நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள்
இல்லாதொழித்த வெறிகளில்
முதன்மையானது மத வெறி
என்று கூறலாம். ஒரு மனிதனின் மத சுதந்திரத்தில்
வேறொருவர் தலையிட முடியாது என்று பிரகடனம்
செய்த மார்க்கத்தையல்வா
அவர்கள் தமது
இரட்சகனிடமிருந்து சுமந்து
வந்தார்கள்.

இது விடயத்தில்
அல்குர்ஆனின் பிரகடன வசனம்
பிரபல்யமானது.
மார்க்கத்தில்
(எந்தவொருவரையும்) பலவந்தப்படுத் துவதற்கு
(அனுமதி) இல்லை. (2: 256)
மாறாக, நல்லதையும்
தீயதையும் வேறுபடுத்தி
விளக்கிக் கூறும்
பொறுப்புதான் ஒரு மனிதன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நேர்வழி, வழிகேட்டிலிருந்து
தெளிவாகி விட்டது. (2: 256)
என்பதன் மூலம் வசனத்தின்
அடுத்த பகுதி அதனையே
கூறுகிறது.
அல்லாஹ், தனது தூதை சுமந்து வந்த நபியை நோக்கி
எழுப்புகின்ற வினா இந்த உண்மையை மேலும்
வலியுறுத்துகின்றது.
நபியே! உமதிரட்சகன்
நாடியிருந்தால்
பூமிப்பந்திலிருக்கும்
அனைவரும் ஈமான்
கொண்டிருப்பார்கள். (அல்லாஹ்
அதனை நாடவில்லை.
அவ்வாறிருக்கையில்) மக்கள்
அனைவரையும்
விசுவாசிகளாக்கி
விடுவதற்காக நீங்கள் அவர்களை
நிர்ப்பந்திக்க முடியுமா? (10:
99)

மதச் சுதந்திரம்
அனைவருக்குமானது. அது உலகில் பாதுகாக்கப்படல்
வேண்டும். மத வெறி முற்றாக
அகற்றப்பட்ட ஒரு சூழலை
உருவாக்குவது இஸ்லாத்தின்
நோக்கங்களுள் ஒன்றாகும்.
அன்று யுத்தம்
கடமையாக்கப்படுவதற்கான முதல் காரணியாகவும்
அதுவே இருந்தது என்பதை
அல்குர்ஆன் ஆணித்தரமாக
கூறுகின்றது.

யுத்தம் (ஏற்கனவே)
தொடுக்கப்பட்டவர்கள்
அநீதியிழைக்கப்பட்டுள்ளார்கள்
என்ற காரணத்தால் (பதில் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான)
அனுமதி அவர்களுக்கு
வழங்கப்படுகிறது. நிச்சயமாக
அல்லாஹ் அவர்களுக்கு உதவி
செய்யும்
வல்லமையுடையவனாக
இருக்கிறான். (22: 39) ஆக, அநீதிகளைத் தடுப்பதற்கே
யுத்தம் கடமையாக்கப்பட்டது எனப் பொதுவாகக் கூறிவிட்டு
இழைக்கப்பட்ட அநீதிகளை அடுத்த
வசனம் தெளிவுபடுத்துகிறது.
…அவர்கள் எந்த நியாயமுமின்றி
தங்களது
வாழ்விடங்களிலிருந்து
வெளியேற்றப்பட்டார்கள்… எங்களது இரட்சகன் அல்லாஹ்
என்று கூறியதைத் தவிர (அவர்கள் செய்த பாவம் வேறு
எதுவுமில்லை).
(22: 40)

அல்லாஹ்வை ஈமான்
கொண்டதனால் மதச் சுதந்திரம்
பறிக்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து வாழ்விடங்களும்
பறிக்கப்பட்டன. இந்த அநீதி உலகில்
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,
எந்த மதத்தினருக்கும்
இழைக்கப்படக் கூடாது. எனவே,
அல்லாஹ் அநீதிகளைத் தடுக்க
வேண்டும்.
அல்லாஹ் மனிதர்களில்
(அநீதியிழைக்கும்) சிலரை வேறு சிலரைக் கொண்டு
தடுக்காவிட்டால்
துறவிகளினதும்
கிறிஸ்தவர்களினதும்
யூதர்களினதும் அல்லாஹ்
அதிகமாக நினைவு கூறப்படும்
முஸ்லிம்களினதும்
வணக்கஸ்தலங்கள்
நிர்மூலமாக்கப்பட்டு விடும்.
(22: 40)
இந்த வசனத்தில் அனைத்து
மதங்களினதும் சுதந்திரத்திற்கு
உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பது
வெளிப்படை.
மத வெறிகளை முற்றாக
அகற்றி மத சுதந்திரத்திற்கு
வழியமைத்த இது
போன்றதொரு கொள்கையை
இஸ்லாம் தவிர வேறு எதிலும்
காண முடியாது. இஸ்லாமிய
வரலாறும் இதற்கு உன்னத
சான்றாக திகழ்கிறது.
வெறிகளை அகற்றுவோம்
என்று அரங்குக்கு வந்தவர்களும்
தங்களது சித்தாந்தங்களை
ஏற்காதவர்களை ஈவிரக்கமின்றிக்
கொன்று குவித்தார்கள் என்பது வரலாறு. லெனின் என்ன
செய்தார் என்பதை உலகம்
அறியுமல்லவா? அவர்
தன்னோடும் தனது
கொள்கையோடும்
முரண்பட்டவர்களுக்கு
ஸைபீரியாவில்
வனாந்தரங்களை
சமாதிகளாக்கினார். அதற்குப் பெயர் வெறியகற்றலா?
நிச்சயமாக இல்லை. வெறி என்ற இருளை உலகிலிருந்து
அகற்றிய ஒரே மாமனிதர் மாநபி
முஹம்மத் (ஸல்லல் லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களே.

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 11-09-2017.