நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 3
அந்த அரசனிடம் சென்று அவனுக்கு நற்போதனைகள் செய்யுமாறும்> பிறர் பொருளைக் காரணமின்றிப் பறிப்பது பெருங்குற்றமென்றும் உடனே அந்தத் தோட்டத்தை இறந்தவருடைய வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைத்து விடுமாறும், விக்கிரகத் தொழும்பை விட்டு அல்லாஹ்விற்கு மட்டும் சிரம்பணியுமாறும் இதற்கு உடன்படாவிடிலல் கடுமையான சிறைத் தண்டனையைச் சந்திக்க வேண்டி வருமென்றும் எச்சரிக்குமாறு அல்லாஹ், ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்தான்.
நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்வாறே செய்தார்கள். ஆனால் தமக்கு புத்தி சொல்ல இவர் யார் என்று கடும் கோபம் கொண்டார். எனவே இல்யாஸ் நபி அவர்களுக்கு கடும் தொல்லை கொடுத்து அவர்களைக் கொன்றுவிடவும் திட்டமிட்டான். இதனையறிந்த இல்யாஸ் நபி அவர்கள் மிகவும் மனவேதனையடைந்து பொறுமையிழந்தவர்களாய் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியில் போய்த் தங்கிக் கொண்டார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பல ஒற்றர்களை ஏவியிருந்தான் அரசன் அஹப். நபி அவர்கள் அந்த மலைப்பகுதியில் 7வருடகாலம் வாழ்ந்தார்கள்.
இந்நிலையில் அரசனுக்கு பிறந்த ஒரே மகன் கடும் நோய்வாய்ப்பட்டான். மனம் பதைபதைத்துப் போன அரசன், தேவதை பஅலுக்கு இரவும்> பகலும் பூஜை போட்டுப் பார்த்தான். நோய்தான் குணமானபாடில்லை. பூஜாரிகள் இதற்கெல்லாம் காரணம் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் என்று அரசரிடம் சொன்னார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 12-09-2017
No comments:
Post a Comment