Monday, 11 September 2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 2

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 2. 

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அரசன் அஹபிற்கு புத்திமதி கூறி நேர்வழிப்படுமாறு உபதேசித்து வந்தார்கள். இதேபோல் பல்வேறு சிற்றரசர்களுக்கும் உபதேசித்து வந்தார்கள். அத்தனைப் பேரில் ஒரே ஒருவர் மட்டும் அதைக் கேட்டு முஸ்லிமானார்.

அரசன் அஹபின் மனைவி அஸ்பீல் அரசன் வெளிநாட்டிற்குச் சென்றுவிடும்போதெல்லாம் இவள்தான் அரசாட்சியைக் கவனித்து வந்தாள். இதற்குமுன் 7மன்னர்களை மணம் முடித்து அதன் மூலம் எழுபது ஆண்மக்களை பெற்றாள். நல்லடியார்களையும்> நபிமார்களையும் கொன்றுள்ளாள். கடைசிக் கணவனை முடிக்கும் போது மூப்பு வந்து விட்டதால் அஹபை கொல்ல முயற்சிக்க முயலவில்லை.

அரசன் அஹபுடைய அரண்மனைக்கு அருகாமையிலேயே இறைநேசர் மஸ்தகியின் வீடும்> தோட்டமும் இருந்தது. மஸ்தகி மிகவும் கண்ணியமானவர். எவர் பொல்லாப்புக்கும் போகமாட்டார். சர்வகாலமும் இறைதியாத்திலேயே இருந்து வந்தார். அவருடைய தோட்டம் எல்லோரையும் கவரக் கூடியதாக இருந்து வந்தது. அதனை தம் வசப்படுத்திட அரசி முடிவு செய்தாள். ஆனால் அதற்கு அரசர் தடை செய்து வந்தார். ஒருமுறை அரசர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தபோது அரசி மஸ்தகியை கொலை செய்துவிட்டு அந்த தோட்டத்தை தன் வசப்படுத்திக் கொண்டாள்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

No comments:

Post a Comment