Monday, 11 September 2017

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 1

நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 1



பனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் ஹழ்ரத் அல் யஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூன்றாவது தலைமுறையில் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றினார்கள்.

ஹழ்ரத் ஹர்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மரணத்திற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் விக்கிரகத் தொழும்பர்களாகவும், எல்லாவிதத் தீமையில் ஈடுபடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள். இவர்களை நேர்வழிப்படுத்தவே அல்லாஹ் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பினான். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்ராத் வேதத்தையே பின்பற்றினார்கள்.

யூஷஃ இப்னு நூன் ஸிரியா நாட்டை வென்ற பிறகு பனீ இஸ்ரவேலர்களுக்கு அதனைப் பங்கிட்டுக் கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு பகுதியாக இருந்ததுதான் ஸமாரியா என்ற சிறு நாடு. இதனை அஹப் என்பவன் ஆண்டு வந்தான். அதன் தலைநகரின் பெயர் ‘பஃலபக்’ ஆகும். இந்தப் ‘பஃலபக்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம் ‘பஅல்’ என்ற 60அடி உயர விக்கிரகம் ஒன்று இருந்தது. இது வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தூய்மைப்படுத்த 400பேரை அரசன் நியமித்திருந்தான். இது சக்தி வாய்ந்தது என்றும்> நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் என்றும் அவர்கள் நம்பி அதற்கு அளவுக்கு மீறிய மரியாதையும் அளித்து வந்தனர். அந்த விக்கிரகத்தின் வயிற்றுக்குள் ஷைத்தான் புகுந்து கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தான். இந்த மக்களை திருத்தவே அல்லாஹ் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பியிருந்தான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 12-09-2017

No comments:

Post a Comment