Monday, 11 September 2017

இஸ்லாமியர்களும்... இனவாதமும்!


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

இஸ்லாமியர்களும்... இனவாதமும்!

========================

இருள் அகற்றிய அருள் மனிதர்!

“உள்ளமும் உலகமும் பல
வகையான இருள்களில்
மூழ்கியிருக்கின்ற.
அந்த இருள்கள் சிலபோது ஒன்றின்
மேல் ஒன்றாகப் படர்ந்து
அடர்த்தியாகின்றன” (24: 40)

அத்தகைய அடர்த்தியான
இருள்களில் அகப்பட்டுக் கொண்ட
மனிதர்களோ சமூகங்களோ
அவற்றிலிருந்து
வெளியேறுவது சிரமமே.
காரணம், ஓர் இருளைத்
தாண்டும்போது மற்றுமோர் இருள் சூழ்ந்து கொள்கிறது. ஓர் இருளை அகற்ற
முயற்சிக்கையில் மற்றுமோர்
இருள் அந்த இடத்தைக் கவ்விக்
கொள்கிறது.
இவ்வாறு அடர்ந்த இருள்களுக்கு
மத்தியில் உலகம் இருந்த ஒரு
காலப் பகுதிதான் கி.பி. 5, 6ஆம்
நூற்றாண்டுகள். அன்றைய
காலப்பகுதி எவ்வாறிருந்தது
என்பதை நீங்கள் அறிய
விரும்பினால் முஸ்லிம்களின்
வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன? என்ற நூலை
வாசிக்கலாம். அறியாமை இருள்கள் அனைத்தும்
ஒட்டுமொத்தமாக உலகை எவ்வாறு ஆக்கிரமித்திருந்தன
என்ற விளக்கத்தை அந்த நூலின்
ஓர் அத்தியாயம் விரிவாக
ஆராய்கிறது. அது மௌலானா
அபுல் ஹஸன் அலி நத்வி
அவர்களின் நூலாகும்.
அந்த இருள் யுகத்தில்
அகிலத்தாருக்கு அருளாக வாழ்ந்த மாமனிதர்தான்
முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அன்னார் வெறும் 23
வருடங்களில் அனைத்து
இருள்களையும் அகற்றி ஒரு
தெளிவான, வெளிச்சமான
வாழ்க்கைப் பாதைக்கு மனித
சமூகத்தைக் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்தவர்கள்
தனது இறுதித் தருவாயில்
கூறிவிட்டுச் செல்கிறார்கள்:
நான் உங்களை, இரவும் பகலைப்
போல் பிரகாசிக்கும் ஒரு பாதையில் விட்டுச்
செல்கிறேன். (அதிலிருந்து
விலகி விடாதீர்கள்) விலகியவர் நிச்சயம் அழிந்தார்.
அவர் சாதித்தது அந்தக் குறுகிய வாழ்க்கையில் ஒரு
மனித சாதனையல்ல. அழிந்து
போகும் மனிதனின்
சக்தியோடு அழியாத
நிலையான நித்திய சக்தியும்
இணைந்து கொண்டதனால்
விளைந்த மகத்தான சாதனையே
அது.

மலைகள் அனைத்தையும்
பெயர்த்து விடலாம்,
சமுத்திரங்களை வற்றி வரண்டு
போகச் செய்யலாம். எனினும், அந்த மாமனிதரின் சாதனை
அதனைவிடக் கடினமானது.
அது மனிதனால்
சாதிப்பதற்கில்லை. அவனோடு
அவனைப் படைத்தவனின்
பங்களிப்பும் இணைந்து
விட்டால், அந்த இணைப்பைப்
பலப்படுத்தியிருந்தார்கள் மாநபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அறுந்து போகாத
அல்லாஹ்வுடனான அந்த இணைப்பின் பலமே அந்த
சாதனையின் பின்புலம்.

*ஷிர்க் எனும் இருள் நீங்கியது!*

அந்த சாதனையின் முதற் பெறு பேறு அல்லாஹ்வை
மனிதர்களின் கண்களுக்கு
மறைத்திருந்த ஷிர்க் எனும்
இருளை நீக்கியதாகும்.
மனிதனைப் படைத்தவன்
அவனுக்குள் ஓர் உள்ளுணர்வை
வைத்திருக்கிறான். அதுதான்
இறையுணர்வு. அந்த உணர்வு
இயற்கையானது. அது தனக்கு
மேலால் இருக்கும் வல்லமை மிக்க ஒரு சக்தியின்
பக்கபலத்தைத் தேடுகிறது.
அதன் தயவை நாடி நிற்கிறது.
மனிதனது உள்ளுணர்வில்
அவனது படைப்பாளனால்
வைக்கப்பட்ட இந்த உணர்வை சரியான திசையில்
செல்லவிடாமல் தடுத்து தங்களது உலகியல்
நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தியவர்கள் ஏராளம்.
அவர்கள் சூரியனையும்
சந்திரனையும்
சமுத்திரத்தையும்
நெருப்பையும் கல்லையும்
மண்ணையும் மனிதனுக்குக்
காட்டி, இதுதான் உனது தெய்வம் இதனை அஞ்சி
வழிபடும் என்று கூறினார்கள்.
அந்த வழிபாடுகளாலும்
பூஜைகளாலும்
காணிக்கைகளாலும்
படையல்களாலும்
பயனடைந்தவர்கள் மக்களல்ல.
மாறாக, மனித தெய்வங்களே.
இந்தப் பின்னணியில்தான்
படைத்தவனுக்கு இணை கற்பிக்கும் இருள்…
படைப்புகளைப் பூஜிக்க வைத்த
இருள் உலகெங்கும் பரவியது.
அந்த இருளுக்குள்
மூழ்கியவர்கள் படைப்பினங்களின்
அடிமைகளாக மாறினார்கள்.
இதன் விபரீதம் யாதெனில்,
அனைத்து
கௌரவங்களுக்குமுரிய மனிதன் தன்னைவிட அற்பமான
படைப்புகளுக்கு முன்னால்
மண்டியிட்டு தனது
கண்ணியத்தை அடகு வைத்ததே.

மாநபியின் கடின உழைப்பால் இந்த இருளிலிருந்து 23
வருடங்களில் அறபுத் தீபகற்பம்
விடுதலை பெற்றது. அதனைத்
தனது அந்திம காலத்தில் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் இவ்வாறு
கூறினார்கள்:
அறபு மண்ணில் நான்
வணங்கப்படுவேன் என்ற நம்பிக்கையை ஷைத்தான்
இன்று இழந்து விட்டான்.
வெறிகள் நீங்கின
மாநபியின் சாதனைகளுள்
மற்றொன்று மாசற்ற மனித
நேயத்தை உயிர்ப்பித்து,
மண்ணுலகைப் பற்றிக் கிடந்த
வெறிகள் அனைத்தையும்
நீக்கியதாகும்.
நிற வெறி, இன வெறி, கோத்திர வெறி, பிரதேச
வெறி, மத வெறி என உலகை
ஆட்டிப் படைத்துக்
கொண்டிருந்த இருள்மயமான
வெறிகள் அனைத்தையும்
அன்ணலார் தனது பாதங்களின் கீழ்
புதைத்து விட்டதாக பிரகடனம்
செய்தார்கள், தனது இறுதி ஹஜ்ஜின் பிரியா விடை
உரையில்…
அதன் மூலம் மனித கண்ணியம்
தோலின் நிறத்திலல்ல…
பிறக்கும் குடும்பத்திலல்ல…
பேசும் மொழியிலல்ல…
மாறாக, அல்லாஹ்வின் மீது
கொண்ட காதலில்… அவனது கோபம் பற்றிய அச்சத்திலேயே
படைப்பினங்களது கண்ணியம்
இருப்பதாக அல்குர்ஆன் முரசம்
கொட்டியது.

மனிதர்களே! நாங்கள் உங்களை ஓர்
ஆணிலிருந்தும்
பெண்ணிலிருந்தும் படைத்து (பின்னர்) கோத்திரங்களாகவும்
சமூகங்களாகவும் ஆக்கினோம்.
நீங்கள் ஒருவருக்கொருவர்
அறிமுகம் செய்து கொள்வதற்காக…
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
கண்ணியமானவர் உங்களில் அதிகம் அவனை அஞ்சி நடந்து
கொள்பவரே.
(49: 23)

மேலும் அல்லாஹ்
கூறுகின்றான்:
மனிதர்களே! ஓர்
ஆன்மாவிலிருந்து உங்களைப்
படைத்து… அந்த
ஆன்மாவிலிருந்தே அதன்
சோடியைப் படைத்து… அந்த
இருவரிலிருந்தும் ஏராளமான
ஆண்களையும் பெண்களையும்
பரவச் செய்தவனைப் பயந்து
கொள்ளுங்கள்.
(4: 2)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
எந்தவொரு வெறியின் பக்கம்
அழைப்பவனும் எம்மைச்
சேர்ந்தவன் அல்ல. எந்தவொரு
வெறிக்காகப் போரிடுபவனும்
எம்மைச் சேர்ந்தவனல்ல.
எந்தவொரு வெறிக்காக
மரணிப்பவனும் எம்மைச்
சேர்ந்தவனல்ல. (அபூ தாவூத்)

முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது இரட்சகனிடமிருந்து
சுமந்து வந்த
இறைத்தூதிலிருந்து பயன் பெறாத சமூகங்கள் இன்னும் இந்த
வெறிகளால் அல்லல்பட்டுக்
கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள்,
ஆபிரிக்காவின் கறுப்பர்கள்
உலகில் தமது கண்ணியத்தைத்
தொலைத்தவர்களுக்கு
உதாரணங்களாகும். அதேநேரம்
உயர்ந்தவரின் தலைமையில்
உதயமாகிய நாஸிகள்,
கடவுளின் செல்லப் பிள்ளைகள் என தம்மைக் கூறிக் கொள்ளும்
இஸ்ரவேலர்கள் தம்மைத் தவிர
உலகில் வாழ்கின்ற வேறு எவரையும் மனிதர்களாகக்
கருதுவதில்லை என்பது நவீன
உலகின் வெறித்தனங்களது
அடையாளங்களாகும்.

*மத வெறி நீங்கியது!*

நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள்
இல்லாதொழித்த வெறிகளில்
முதன்மையானது மத வெறி
என்று கூறலாம். ஒரு மனிதனின் மத சுதந்திரத்தில்
வேறொருவர் தலையிட முடியாது என்று பிரகடனம்
செய்த மார்க்கத்தையல்வா
அவர்கள் தமது
இரட்சகனிடமிருந்து சுமந்து
வந்தார்கள்.

இது விடயத்தில்
அல்குர்ஆனின் பிரகடன வசனம்
பிரபல்யமானது.
மார்க்கத்தில்
(எந்தவொருவரையும்) பலவந்தப்படுத் துவதற்கு
(அனுமதி) இல்லை. (2: 256)
மாறாக, நல்லதையும்
தீயதையும் வேறுபடுத்தி
விளக்கிக் கூறும்
பொறுப்புதான் ஒரு மனிதன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நேர்வழி, வழிகேட்டிலிருந்து
தெளிவாகி விட்டது. (2: 256)
என்பதன் மூலம் வசனத்தின்
அடுத்த பகுதி அதனையே
கூறுகிறது.
அல்லாஹ், தனது தூதை சுமந்து வந்த நபியை நோக்கி
எழுப்புகின்ற வினா இந்த உண்மையை மேலும்
வலியுறுத்துகின்றது.
நபியே! உமதிரட்சகன்
நாடியிருந்தால்
பூமிப்பந்திலிருக்கும்
அனைவரும் ஈமான்
கொண்டிருப்பார்கள். (அல்லாஹ்
அதனை நாடவில்லை.
அவ்வாறிருக்கையில்) மக்கள்
அனைவரையும்
விசுவாசிகளாக்கி
விடுவதற்காக நீங்கள் அவர்களை
நிர்ப்பந்திக்க முடியுமா? (10:
99)

மதச் சுதந்திரம்
அனைவருக்குமானது. அது உலகில் பாதுகாக்கப்படல்
வேண்டும். மத வெறி முற்றாக
அகற்றப்பட்ட ஒரு சூழலை
உருவாக்குவது இஸ்லாத்தின்
நோக்கங்களுள் ஒன்றாகும்.
அன்று யுத்தம்
கடமையாக்கப்படுவதற்கான முதல் காரணியாகவும்
அதுவே இருந்தது என்பதை
அல்குர்ஆன் ஆணித்தரமாக
கூறுகின்றது.

யுத்தம் (ஏற்கனவே)
தொடுக்கப்பட்டவர்கள்
அநீதியிழைக்கப்பட்டுள்ளார்கள்
என்ற காரணத்தால் (பதில் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான)
அனுமதி அவர்களுக்கு
வழங்கப்படுகிறது. நிச்சயமாக
அல்லாஹ் அவர்களுக்கு உதவி
செய்யும்
வல்லமையுடையவனாக
இருக்கிறான். (22: 39) ஆக, அநீதிகளைத் தடுப்பதற்கே
யுத்தம் கடமையாக்கப்பட்டது எனப் பொதுவாகக் கூறிவிட்டு
இழைக்கப்பட்ட அநீதிகளை அடுத்த
வசனம் தெளிவுபடுத்துகிறது.
…அவர்கள் எந்த நியாயமுமின்றி
தங்களது
வாழ்விடங்களிலிருந்து
வெளியேற்றப்பட்டார்கள்… எங்களது இரட்சகன் அல்லாஹ்
என்று கூறியதைத் தவிர (அவர்கள் செய்த பாவம் வேறு
எதுவுமில்லை).
(22: 40)

அல்லாஹ்வை ஈமான்
கொண்டதனால் மதச் சுதந்திரம்
பறிக்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து வாழ்விடங்களும்
பறிக்கப்பட்டன. இந்த அநீதி உலகில்
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,
எந்த மதத்தினருக்கும்
இழைக்கப்படக் கூடாது. எனவே,
அல்லாஹ் அநீதிகளைத் தடுக்க
வேண்டும்.
அல்லாஹ் மனிதர்களில்
(அநீதியிழைக்கும்) சிலரை வேறு சிலரைக் கொண்டு
தடுக்காவிட்டால்
துறவிகளினதும்
கிறிஸ்தவர்களினதும்
யூதர்களினதும் அல்லாஹ்
அதிகமாக நினைவு கூறப்படும்
முஸ்லிம்களினதும்
வணக்கஸ்தலங்கள்
நிர்மூலமாக்கப்பட்டு விடும்.
(22: 40)
இந்த வசனத்தில் அனைத்து
மதங்களினதும் சுதந்திரத்திற்கு
உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பது
வெளிப்படை.
மத வெறிகளை முற்றாக
அகற்றி மத சுதந்திரத்திற்கு
வழியமைத்த இது
போன்றதொரு கொள்கையை
இஸ்லாம் தவிர வேறு எதிலும்
காண முடியாது. இஸ்லாமிய
வரலாறும் இதற்கு உன்னத
சான்றாக திகழ்கிறது.
வெறிகளை அகற்றுவோம்
என்று அரங்குக்கு வந்தவர்களும்
தங்களது சித்தாந்தங்களை
ஏற்காதவர்களை ஈவிரக்கமின்றிக்
கொன்று குவித்தார்கள் என்பது வரலாறு. லெனின் என்ன
செய்தார் என்பதை உலகம்
அறியுமல்லவா? அவர்
தன்னோடும் தனது
கொள்கையோடும்
முரண்பட்டவர்களுக்கு
ஸைபீரியாவில்
வனாந்தரங்களை
சமாதிகளாக்கினார். அதற்குப் பெயர் வெறியகற்றலா?
நிச்சயமாக இல்லை. வெறி என்ற இருளை உலகிலிருந்து
அகற்றிய ஒரே மாமனிதர் மாநபி
முஹம்மத் (ஸல்லல் லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களே.

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 11-09-2017.

No comments:

Post a Comment