நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 4
ஸிரியா நாட்டில் உள்ள தேவதை மிகவும் சக்தி வாய்ந்தது. அங்கு இளவரசனை அழைத்துச் சென்றால் குணம் கிடைக்கும் என்று பூஜாரிகள் சொன்னார்கள். இதனால் ஒரு கூட்டம் சிரியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இல்யாஸ் நபி அவர்கள் தங்கியிருந்த பகுதிவழியாக செல்ல நேரிட்டது. அவர்களை இடைமறித்து, நல்லுபதேசம் செய்தார்கள்.
அந்த நல்லுபதேசங்களை கேட்ட அந்தக் கூட்டத்தினர் ஸிரியா செல்லும் நோக்கத்தை கைவிட்டு முஸ்லிமாகி> மறுபடியும் பஃலபக் நகருக்கே திரும்பிவிட்டனர். இவர்கள் மூலம் இல்யாஸ் நபி இருந்த இடத்தை அரசன் தெரிந்து கொண்டான்.
இதனால் ஒரு 50பேர் கொண்ட கூட்டத்தைத் தயாரித்தான். நாங்கள் அனைவர்களும் உங்கள் பேரில் விசுவாசம் கொண்டோம். எனவே தாங்கள் நகருக்குள் வந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு நற்போதனை செய்து அவர்களையும் விசுவாசம் கொள்ள வேண்டும் என்றும்> இதில் நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் கூறி அவர்களை ஊருக்குள் வரவைக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 12-09-2017
No comments:
Post a Comment