நபி இல்யாஸ் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 5
அந்த 50பேர் கொண்ட கூட்டம் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து அரசன் சொன்னவாறு சொன்னார்கள். நபி அவர்களுக்கு அவர்களின் பேச்சுக்களில் நம்பிக்கை ஏற்படவில்லை. அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள். உடனே வானிலிருந்து ஒரு தீப்பிழம்பு அந்நயவஞ்சகக் கூட்டத்தினர் மீது பாய்ந்து அவர்களனைவரையும் சுட்டுக் கரித்து விட்டது.
பின் சில முரடர்களை அனுப்பி அவர்களை கட்டி கொண்டு வருமாறு அனுப்பினான். அவர்களும் அவ்வாறு முயற்சிக்கவே நபியவர்கள் அல்லாஹ்விடம் கேட்க> வானிலிருந்து தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து அவர்களனைவரையும் ஒருசில நொடிகளில் சுட்டுக் கரித்து சாம்பலாக்கிவிட்டது.
அரசனின் அவையில் இருந்த ஒரு முஸ்லிம் மந்திரியை அழைத்து அவர் மாதிரி சிலர் முஸ்லிமாக விரும்புவதாகவும் எனவே நகருக்குள் வருமாறும் கேட்டு அவர்களை நகருக்குள் அழைத்து வர அனுப்பினான். அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை கொலை செய்துவிட சில முரடர்களை மறைமுகமாக அனுப்பினான். அவரும் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து பஃலபக் நாட்டு நிலவரங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினார். ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹ் முஸ்லிம் மந்திரியுடன் செல்லுமாறும் அவ்வாறு செல்லவில்லையென்றால் உங்களை கொலை செய்ய அரசன் ஆளனுப்பி உள்ளார் என்றும் வஹீ அறிவித்தான்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 12-09-2017
No comments:
Post a Comment