தொழுகையை எவ்வாறு உயிரோட்டமாக தொழுவது.
1. தொழுகைக்கு வுழு செய்யும் போது நம் உறுப்புகள் முலம் செய்த பாவங்கள் மற்றும் இச்சைகள் முற்றாக நீங்குகிறது என்ற மன நிலை இருக்கவேண்டும் . மேலும் உயர்ந்த அல்லாஹ்வின் முன் நிற்க என்னை தூய்மை படுத்துகிறேன் என்ற அச்ச உணர்வும் இருக்கவேண்டும் .
2. தொழுகைக்கு வந்து நிற்கும்போது இறையச்ச உணர்வோடு மஹ்சர் வெளியில் அல்லாஹ்வின் முன் நிற்பதாக நினைத்துகொண்டு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும் .
3. சூரா அல்-பாத்திஹா உண்மையில் ஒரு பிரார்த்தனையே “ இஹ்தினசிராதல் சிராதல் முஸ்தகீன் ” எனக்கு நேர்வழி காட்டுவாயாக என்ற பிரார்த்தனையே அதனாலதான் கடைசியில் ஆமீன் ( அங்கீகரித்துவிடு ) என்று கடைசியில் எல்லோரும் கூருகின்றோம் . எனவே சூரா பாத்திஹாவை ஓதும்போது அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டு பிரார்த்திப்பதாக நினைவில் வைத்துகொள்ள வேண்டும். ( நேர்வழி என்றால் அல்குரான் அதாவது அல்குரான் கூறும் அனைத்து விடயங்களையும் பின்பற்றுவதை குறிக்கும் ) .
4. தொழுகையில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு வரும்போது “அல்லாஹுஅக்பர் “ (அல்லாஹ் மிகபெரியவன் ) என்று கூறுகிறோம் . அல்லாஹுஅக்பர் என்று ஒவ்வொரு தடவை கூறும் போதும் நம்மளை அறியாமலேயே என் தொழில் , என் மனைவி, பிள்ளைகள் , குடும்பம் . என் பிரச்சனை , என் பணம் இது எல்லாவற்றையும்விட அல்லாஹ்வே மிகபெரிசு என்று கூ றுகிறோம் . இந்த மன நிலையே அல்லாஹ அக்பர் என கூறும்போது எமது உள்ளத்தில் இருக்கவேண்டும் .
5. ருகூஹ் செயும்போது நாம் குனிந்த நிலையில் இருப்போம் . அந்த நிலை அல்லாஹ்விற்கு பணிவதயே காட்டும் . அல்லாஹ்வுக்கு பணிகிறேன் என்ற மன நிலையோடு ஓத வேண்டும் . ஒவ்வொரு நிலையிலும் ஓதும்போது பொருள்தெரிந்து ஓதவேண்டும் .
6. சுஜுது செய்யும் நிலை ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சுவது போல . அதாவது அடிமை நிலை . நாம் யாரின் காலில் விழுந்து கெஞ்சுவோமா ? இல்லவே இல்லை . ஆனால் இங்கு அல்லாஹ்வின் காலில் விழுந்து கெஞ்சும் உணர்வு வரவேண்டும் . அதாவது அல்லாஹ்வுக்கு தற்போது அடிமை பட்டிருகிறேன் என்ற உணர்வு சுஜுதின் போது எமக்கு வரவேண்டும் . பிறகு ஓத வேண்டும் . சுஜுதின் போதே ஒரு அடியான் அல்லாஹ்விற்கும் அவனுக்கும் உள்ள உறவை வெளிபடுத்துகிறான் . அதனையே அல்லாஹ்வும் அதிகம் விரும்புகிறான் . அல்லாஹ்வுக்கு மிக நெருங்கிய நிலை அதுவே ....!!
No comments:
Post a Comment