Tuesday, 19 September 2017

நாற்காலி தொழுகை கூடுமா?

நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு இஸ்லாத்தில் பொதுவான அனுமதியோ நேரடியான ஆதாரங்களோ இல்லை.

ஒரு மூலநோயாளியான இம்றான் இப்னு ஹுசைன் (றழி) அவர்கள் தன்னால் நின்று கொண்டு தொழ முடியாத நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது உன்னால் நின்று தொழ முடியா விட்டால் உட்கார்ந்து தொழு அதுவும் முடியாவிட்டால் ஒருக்கணித்து படுத்துக் கொண்டு தொழு என்று நபியவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார்கள். (நூல்: புகாரி)

இந்த ஹதீஸை வைத்துக்கொண்டு சின்ன சின்ன வலிகள் வருத்தங்களுக்கெல்லாம் நாற்காலியில் அமர்ந்து தொழுவதும் அதற்காக பள்ளிவாசல்களில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருப்பதும் கூடாது என்பதை பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நின்று தொழ சக்தி உள்ளவர்கள் பர்ழான தொழுகைகளில் நாற்களாலிகள் அமர்ந்து தொழுதால் அத்தொழுகை கூடாது என்பதை தொழுகையாளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் உட்காருதல் என்று ஹதீஸில் வரும் வாசகம் நேரடியாக தரையில் உட்காருவதையே குறிக்கும். தகுந்த காரணங்களுக்காக தரையில் உட்காரமுடியாக நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நாற்காலிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவேண்டும் என்பதை எமது முப்திமார்களுக்கும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

- அஷ்-ஷேக் இர்ஷாத் மூமீன் -
27 துல்ஹிஜ்ஜா 1438

No comments:

Post a Comment