சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு PART 4
*எனக்குத் தெரியாத ஒரு ஹதீஸ் இன்னு மொரு நபித்தோழரிடம் இருக்கிறது என்று எனக்கு எத்திவைக்கப்பட்டால் அந்த நபித் தோழரை அழைத்து குறித்த அந்த ஹதீஸை எனக்கு பெற்றுக் கொள்ள முடியும். என்றாலும் நான் அந்நபித் தோழரை தேடிச் சென்று அவர் வீட்டுவாசலில் காத்து நின்று ஹதீஸை தெரிந்து கொண்டு திரும்பி விடுவேன் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறி னார்கள். (நூல்: ஜாமிஉல் பயானில் இல்மி)*
*இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழர் கள், நபியின் பெயரால் பொய்யான செய் திகளை அறிவித்ததாக எந்த குறிப்பும் கிடை யாது.* *மேலும் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அதில் தவறுகள் கலந்து விடுமோ என்று அஞ்சி யே அவர்கள் வாழ்ந்தார்கள்.*
*என்மீது பொய் சொல்லாதீர்கள். எவர் என்மீது பொய் சொல் கிறாரோ அவர் நரகம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்.* *அறிவிப்பவர் அலி (ரலி) (நூல்: புகாரி, முஸ்லிம்-02)*
*எவர் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி)- (நூல்: முஸ்லிம்-03)*
*என் மீது பொய் சொல்வது உங்களில் ஒருவர் மற்றவர் மீது பொய் சொல்வது போலல்ல. எவர் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பி டத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: முஸ்லிம்-05)*
*நபியவர்கள் மீது பொய்யுரைப்பது நரகத் திற்கு கொண்டு செல் லக் கூடிய பெரும் குற்றம் என்பதை நன்கு அறிந்த ஸஹாபாக் கள் தங்களது வாழ்க்கையிலும் நேர்மையாக நடந்ததுடன் ஹதீஸ்களை அறிவிப்பதிலும் பேணுதலாக இருந்தார்கள்.*
*அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தனது தந்தையைப் பார்த்து அருமைத் தந்தை யே! இன்னார், இன்னார் ஹதீஸ்களை அறிவிக் கிறார்கள், ஆனால் நீங்கள் ஹதீஸ் அறிவிப் பதை நான் கேட்டதில்லையே என கூறினேன். அதற்கவர் அருமை மகனே! நான் நபி (ஸல்) அவர்களை விட்டும் பிரியாமல் இருந்தவன். “யார் என் மீது பொய் சொல்லுகிறாரோ அவர் ஒதுங்கும் இடம் நரகம்தான்” என நபி(ஸல்) கூற நான் செவியுற்றேன். அதன் காரண மாகத்தான் ஹதீஸ்களை அறிவிக்க அஞ்சுகி றேன் என்றார். (நூல்: கிதாபுல் இல்ம்)*
*ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களிடம், எங்களுக்கு ஹதீஸ் களைக் கூறுங்களேன் என்று கேட்கப்பட்டால் நாங்கள் முதிய வயதை அடைந்து விட்டோம், மறந்து விட்டோம். ஹதீஸ்களை அறிவிப்பது சாதாரண விடய மல்ல என்று கூறுவார்கள். (நூல்: இப்னுமாஜா)*
*பராஉ (ரழி) அறிவிக்கிறார்கள்: (நபித் தோழர்களாகிய) நாங்கள் எல்லோரும் நபியவர் களிடத்திலிருந்து ஹதீஸ்களை (மொத் தமாக) கேட்டதில்லை. எங்களில் வேலைக்கு போவோ ரும், வேலையில் ஈடுபடுவோரும் இருந்ததே இதற்குக் காரணம். என்றாலும் மக்கள் (ஹதீஸின் பெயரால்) பொய் சொல்பவர் களாக இருந்ததில்லை. வேலையில் ஈடுபட்டவருக்கு வேலைக்குப் போகாமல் நபியவர்களுடன் இருந்தவர் அவர் கேட்ட (ஹதீஸை) செய்தியை எத்திவைப் பார். (நூல்: பைஹகி)*
*கதாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்: ஒரு முறை அனஸ் (ரழி) அவர்கள் மக்களுக்கு ஹதீஸ்களை சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் உங்கள் காதால் கேட்டீர்களா? என்று அனஸ் (ரழி)யிடம் கேட்டார். அதற்கவர்கள் ஆம்! அவர் கள் சொல்ல நான் கேட்டேன். அல்லது இந்த ஹதீஸை (நபிய வர்களின் பெயரால்) பொய் சொல்லாதவர்கள்- சஹாபாக்கள்- என்னிடம் அறிவிப்பார்கள். அல்லாஹ்வின் மீது ஆணை யாக பொய் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். (நூல்: மிப்தாஹுல் ஜன்னாஹ். பக்கம் 62, அஸ் ஸுன்னாஹ் வமகானதுஆ பித்தஷ்ரீஹில் இஸ்லாம். பக்.78)*
*அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் ஹதீஸ்களை அறிவியுங்கள் என்று கூறப் பட்டால் நான் உங்களுக்கு அதிக எண்ணிக் கையில் ஹதீஸ்களை அறிவிக்க விடாமல் தடுப்பது எதுவென்றால் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியாகும். அதாவது நீங்கள் என்மீது கூறும் பொய் மற் றொருவர் மீது கூறும் பொய்யைப் போன்ற தல்ல. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யு ரைக்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்ற ஹதீஸாகும் (நான் கூறும் செய்தி நபியவர்கள் கூறாத செய்தி யாகி விடுமோ என்று அஞ்சு கிறேன்) என்றார்கள். (நூல்: முஸ்லிம்)*
*அஸ்த் ஷனுஆ குலத்தை சேர்ந்த சுப்யான் பின் அபீஸூஹைர் (ரலி) அவர்கள் என்னிடம் விவசாயப் பண்ணையையோ அல்லது கால் நடைகளையோ பாதுகாக்கும் தேவை இன்றி எவர் நாய் வளர்க்கிறாரோ அவரது நற்செயல் களிலிருந்து ஒரு கீராத் அளவிற்கு (நன்மை) குறைந்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள். அப் போது நான் இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டீர்களா? என்று கேட் டேன். ஆம். இப்பள்ளி வாசலின் அதிபதியாகிய அல்லாஹ் வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என சுப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். (அறிவிப்பவர்: சாயிப் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி 2323)*
*நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் அவர்களது நேரடித்தோழர் களால் முறையாக பாதுகாக்கப் பட்டன. ஹதீஸின் நம்பகத் தன் மையை பாதுகாத்திடவும் உறுதிப்படுத் திடவும் வழிகாட்டப் பட்டது.*
தாவுஸ் பின் கைசான் அல் யமானீ(ரஹ்) கூறியதாவது:
புஷைர் பின் கஅப் அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து ஹதீஸ்களை அறிவிக்கலானார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இன்ன இன்ன நபிமொழிகளை மீண்டும் அறிவியுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர் மீண்டும் அறிவித்து விட்டுத் தொடர்ந்து ஹதீஸ்களை அறிவிக்கலானார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர் கள் மறுபடியும் இன்ன இன்ன ஹதீஸ் களை மீண்டும் அறிவியுங்கள்” என்றார்கள். அவ் வாறே அவர் மீண்டும் ஹதீஸ்களை அறிவித்து விட்டு, நான் அறிவித்த எல்லா ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்டு விட்டு (குறிப்பிட்ட) இந்த ஹதீஸை மட்டும் மறுக் கிறீர்களா? அல்லது நான் அறிவித்த எல்லா ஹதீஸ்களையும் மறுத்து விட்டு (குறிப்பிட்ட) இந்த ஹதீஸை மட்டும் ஏற்கிறீர்களா எனக்குத் தெரியவில்லை” என்றார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நாங்களும் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ் களை அறிவித்துக் கொண்டிருந்தோம். அப்போ தெல்லாம் அல்லாஹ் வின் தூதர் மீது பொய்யு ரைக்கப் பட்டதில்லை. பின்னர் மக்கள் பிடி வாதம் பிடிக்கும் ஒட்டகங்கள் மீதும் கட்டுப் படும் ஒட்டகங்கள் மீமும் பயணம் செய்ய தொடங்கிய போது (அதாவது அவர்கள் நினைத்தமாதிரி ஹதீஸ்களை அறிவிக்க தொடங்கிய போது அத்தகையவர்களை அடை யாளம் காண்பிப்தற்காக) ஹதீஸ்களை அறிவிப்பதையே நாங்கள் நிறுத்தி விட்டோம்.” என்று கூறினார்கள். (நூல்: முகத்திமது முஸ்லிம்)
ஊர்ஜிதமற்ற போலியான ஹதீஸ்களை அறி விப்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எடுத்த நட வடிக்கை மூலம் உண்மையான ஹதீஸ்கள் பாது காக்க வழிவகுக் கப்பட்டது.
மார்க்கச் செய்திகள் பலபாகங்களுக்கும் பரவிய போது அவை களை உறுதி செய்து கொள்வதற்கு அக்கால மக்கள் நபித் தோழர் களை தேடி மதீனா வந்தார்கள்.
உமர்(ரலி) அவர்கள் மூலம் அறிவிக் கப்படும் ஹதீஸை பெற்றுக் கொண்ட அல்க மா(ரஹ்) மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோர் உமர் (ரலி)யை நேரடியாக சந்தித்து அவர்க ளிடமிருந்து அதனை செவியேற்காத வரை திருப்தி அடையமாட்டார்கள். (நூல்: தத் வீனுஸ் சுன்னா அன்னபவிய்யா பக்கம்38.)
அபூஆலியா (ரஹ்) கூறுகிறார்கள்: நபித் தோழர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட செய்தி களை நாம் பஸராவில் செவியுறுவோம். அவை களை உறுதிசெய்தி கொள்வதற்காக நாம் மதீனாவுக்கு வருவோம். அவைகளை நபித் தோழர்களின் வாய்களின் மூலமாகவே கேட் டுக் கொள்வோம். (நூல்: தாரமி பாகம்01 பக் கம்.465)
சஹாபாக்களிடமிருந்து ஹதீஸ்களை பெற்றுக் கொண்ட அவர்களுடைய மாணவர் களும் (தாபியீன்களும்) அவர்களுக்குப் பின் வந்தவர்களும் (தபஉத் தாபியீன்களும்) ஹதீஸ் களை தொகுப் பதிலும் அறிவிப்பதிலும் மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
சஹாபாக்களின் நம்பத் தன்மை அன்று வாழ்ந்த மக்களால் உரசிப்பார்க் கப்பட்டு உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் (சுன்னாக்கள்) அப்பழுக்கற்றவை என்று நிரூபிக்கப் பட்டது.
இறைத்தூதரின் நேரடி தோழர்களான சஹாபாக்கள் காலத்திலே சுன்னா பாதுகாக் கப்பட்டது என்பது இந்த மார்க்கத்தின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக் காட்டாகும்.*
சுன்னா என்ற பெயரில் ஒரு செய்தியை ஒருவர் அறிவிப்பதாக இருந்தால் அது சஹா பாக்களிடமிருந்து வந்தாகவும் உறுதி செய்யப் பட்டதாகவும் இருந்தால் மட்டுமே அங்கீ கரிக்கப்படும். இல்லையேல் நிராகரிக்கப்படும்.
No comments:
Post a Comment