முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு நாட்களில் நோன்பு வைப்பதின் சிறப்புகள்
முஹர்ரம் பிறை 10-ம் நாளுக்கு ஆஷுரா என்று கூறப்படும்.
ஆஷுரா நாளில் நோன்பு வைப்பதின் சிறப்பை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க்கப்பட்ட போது "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாகும்"
எனக் குறிப்பிட்டார்கள்.(முஸ்லிம்)
"நான் அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதிலும் நோன்பு வைப்பேன் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டு வருமுன் மரணித்துவிட்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
எனவே முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல)அவர்கள் அங்கீகரித்த நடைமுறையாகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
30-09-2017,01-10-2017 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் (முஹர்ரம் பிறை 9,10) நோன்பு நோற்பது நபிவழி சுன்னத் ஆகும்.
குறிப்பு:ஒவ்வொரு பள்ளிவாசலின் கரும்பலகையிலும் மேற்சொன்ன விஷயங்களை எழுதிபோட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென உலமாக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment