தீர்வு தான் என்ன?
ரஸ்யாவில் செச்சீனியர்கள் …
இந்தியாவில் காஷ்மீரியர்கள்…
பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்கள்…
சிரியாவில் சிரியர்கள்…
இப்போது….
பர்மாவில் ரொஹிங்கியர்கள் ….
உலகம் முழுதும் முஸ்லீம் மக்கள் இப்படி அல்லல் பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்…
தீர்வுதான் என்ன…?
இஸ்லாத்தின் நிழலில் ஆட்சி செய்யக் கூடிய தலைவர்களை நாம் எப்போது இழந்தோமோ…
இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் விதிமுறைகளினை எப்போது மீறினோமோ….
இஸ்லாமிய பொருளாதாரத்தின் மீது தளர்வுகளை விதித்தோமோ….
இஸ்லாமிய அழைப்புப் பணியில் இருந்து மிக தூரமாக ஒதுங்கிக் கொண்டோமோ….
உலகத்தின் மீதான ஆசைகளில் மிதமிஞ்சி மூழ்கி உலோகாயுத மனிதர்களாக ஆகிப் போனோமோ…..
அப்போதே நாம் கோழைகளாக, மூடர்களாக, அடிமைகளாக ஆகிப் போனோம்….
இஸ்லாமிய சமூக அமைப்பியல் என்பது அல்லாஹ்வின் பாதுகாப்பை அவனது கட்டளைகளின் அடிப்படையில் வாழ்வதின் மூலமாக அடைந்து கொள்ளக் கூடியது.
நாம் உண்மை முஸ்லிம்களாக மூமின்களாக இல்லாத போது அல்லாஹ்வுடைய சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாவோம்.
இஸ்லாமிய வரலாற்றில் காணக் கிடைக்காத முன்னுதாரணங்களா இப்போது பர்மாவில் நடப்பது….
சிலுவை யுத்தத்தின் ரணங்களை மறந்து போனோம்…
மொங்கோலியா தாத்தாரியர்களின் படையெடுப்பினை மறந்து போனோம்….
பாக்தாத்தின் கொடூரங்களை மறந்து போனோம்….
பைத்துல் முகத்தஸை இழந்ததை மறந்து போனோம்…
காலித் இப்னு வலீதை மறந்து போனோம்…
கலீபா உமரை மறந்து போனோம்…
ஸலாஹுத்தீன் அய்யூபியை மறந்து போனோம்…
சவூதி மன்னர் பைசலை மறந்து போனோம்………
நாளை இந்த ரொஹிங்கியார்களையும் மறந்து போவோம்….
பாலஸ்தீனத்துத் தளிர்களைக் கொய்யும் கோரக் காட்சிகள் எப்போதோ தொடங்கியதுதானே….
காஷ்மீரியாக் கொடூரங்களை மறந்து விட்டோமா….
அப்படியானால்…
நாளை இந்த ரோஹிங்கியார்களையும் மறந்துதானே விடுவோம்…..
சிந்தியுங்கள்….
அல்லாஹ்வின் பாதுகாப்பில் அவனது வழிகாட்டலில் வாழும் உன்னத சமூகத்துக்காக உழைப்போம்….!
இறையச்சமுள்ள ஈமானிய ஆட்சியாளனே நமது தேவை.
எதா அத் துர்கானின் குரலுக்கு இவ்வளவு மகிமை என்றால்….
அமீருல் முஃமினின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குரலுக்கு எவ்வளவு மதிப்பிருக்கும்….!
சிந்தியுங்கள்….!
யா அல்லாஹ்…யா ரஹ்மானே,,,,! உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கு உனது அச்சமும் அறிவும் உள்ள தலைவர்களை நஸீபாக்குவாயாக…!
No comments:
Post a Comment