இஸ்லாமிய பொருளாதாரம் 2
நபித்தோழர்களில் மிகவும் செல்வந்தராக இருந்தவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்பு ரலி அவர்கள்
ஒருசமயம் " உங்களுக்கு எப்படி இவ்வளவு செல்வம் கூவிகிறது ? என்று வியாபார நுட்பத்தைப் பற்றி கேட்கப்பட்டது
"நான் குறைவான இலாபம்தானே கிடைக்கிறது என்று வியாபாரத்தில் ஒரு போதும் எண்ணியது இல்லை "
ஒரு நாள் நான் ஆயிரம் ஒட்டகங்களை வாஙகிய விலைக்கே விற்றிருக்கிறேன் அவற்றின் கால்களில் கட்டிருந்த கயிறுகளைத் தவிர நான் வேறெதையும் எதிர்ப்பார்க்கவில்லை
அக்கயிறுகள் ஒவ்வொன்றையும் அதையும் ஒரே ஒரு திர்ஹத்துக்கு (வெள்ளிக்காசு) விற்றேன்
ஆகவே எனக்கு ஆயிரம் திர்ஹம் லாபமாயிற்று அதுமட்டும் விற்காமல் அதிக இலாப நோக்கில் வைத்திருந்தால் ஒட்டகத்தின் தீனிச் செலவும் ஆகி இருக்கும் இதனால் தீனிச் செலவு செய்யாமல் அதிலும் எனக்கு ஆயிரம் திர்ஹம் கிடைத்திருக்கிறது ஆம் அன்று எனக்கு 2000 திர்ஹம் ஒரே ஒரு நாளில் கிடைத்திருக்கிறது " என்று விளக்கம் கொடுத்தார்கள்
இன்னொரு கிதாபில் மேற்கண்ட வியாபாரத்தில் வாங்கிய ஒட்டகத்தை பராமரிக்கும் செலவும் மிச்சம் இதனால் இலாபம் முழுவதும் கிடைத்திருக்கிறது மேலும் எந்த வியாபாரத்தையும் சொற்ப நாட்களுக்குள் விற்று தீர்த்துவிட்டு அடுத்த வியாரத்திற்கு உடனே முதலீடு செய்திடுவேன்
ஒரு நாளைக்கு எத்தனை வியாபாரம் செய்தோம் என்று கணக்கிடுவேனேத் தவிர எவ்வளவு லாபம் என்று ஒரு போதும் பார்த்தே இல்லை "
இதை வியாபார நண்பர்கள் கவனத்தில் கொள்ளவும்
ரஹ்மத் ராஜகுமாரன்
944 344 6903 (அவசியப்பட்டால் மட்டும் தொடர்பு கொள்ளவும் )
No comments:
Post a Comment