Tuesday, 19 September 2017

பர்மாவின் அழுகுரல்!

பர்மாவின் அழுகுரல்!

உடைந்துவிட்ட என் உள்ளமே !வேண்டாம் போதும்..
அழுத கண்ணீர் ஆறாய் ஓடி பலகீனமான என் உறுப்புகளே போதும்..

இனியும் என்னால் அழ முடியாது.

வெறிபிடித்த என் புத்த சகோதரன் (பினந்திண்ணியாக மாறி)

என் குழந்தைகளை உயிரோடு எரித்தான் ,
என் இறையில்லங்களை கரித்தான்.
,என் பரிசுத்த வேதத்தை தூளாய் கிழித்தான்,(இருந்தும்)

என் இஸ்லாமிய உடன்பிறப்பே.... !!!( நீ அமைதியாய் இருக்கிறாய்)
உன் மனம் மட்டும்,
இருண்டுகிடக்கின்றது

எனது கவலையும் கஷ்டமும் உனக்கு கவலையளிக்கவில்லையோ.. ?

தயவு செய்து கேள்!!!
 அந்த குப்ரின் ஓநாய்கள் எங்கள் பிள்ளைகளில் எத்தனை பேரை கொன்றார்கள் என்று ?..

அவர்களின் கஃபனிற்கு கூட  ஆடை இருக்கவில்லை ...

*ஈமான் கொண்ட காரணத்தால் மட்டுமே என் சகோதரி ஈவின்றி ,
இரக்கமின்றி விலங்கிட்டு கெடுக்கப்பட்டாள்*

என் சொந்தங்களே ! நாங்களும் முஸ்லிம்களே !!!

என் காயத்திற்கு மருந்திட மறந்தீர்கள் ! இன்றும் நொண்டி சாக்குகளை மட்டுமே கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் ...

அல்லாஹவின் மீது சத்தியமாய் !

ஏன் இன்னும் மெளனம் ,இனியாவது எனக்கு உதவ மாட்டீர்களா ???....

(கண்ணீருடன் - பர்மா சகோதரன் )

translated by _✍🏽moulavi  *ilyas bilali

No comments:

Post a Comment