Tuesday, 31 January 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


🌲⛩🌷💞31-1-17🌲🌻🌹🎄

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்."

     📚 அல்குர்ஆன் 57:4

🌻🌲🌲🌹💞🌹💢🎄💖🌹💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

”இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்ததுஇ தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் ”இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)” என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக் கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று விடையளித்தார்கள். "

🎭அறிவிப்பவர்:
பராவு இப்னு ஆஸிப்(ரலி)

📓நூல்:
ஷஹீஹ் புகாரி-965

  🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

🕋💕💖⛩🌻💖⛩🌹⛩🌳🌹

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்* 365:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
365:

🎯 *அ) இப்ராஹிம் (அலை) அவர்கள் இவை எனக்கு விரோதிகளே என்று எவற்றைக் கூறினார்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:71-80"*

✅பதில் :
*_“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் எதை வணங்கினீர்களோ அவை_*

ஆதாரம்:-
*அல்குர்ஆன்:* 26:76,77

📚“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
(அல்குர்ஆன் : 26:76)

📙“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
(அல்குர்ஆன் : 26:77)

🎯 ஆ) *மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்க்கும் எதில் நிவாரணம் உள்ளது என்று பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில் :
*கருஞ்சீரக விதையில்*

ஆதாரம்:-
*புகாரி: 5687,5688*
*முஸ்லிம்: 4451,4452*

📕5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📙5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
ஸஹீஹ் புகாரி.

📋4451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கருஞ்சீரகத்தில் "சாமை"த் தவிர, அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா, யூனுஸ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் கருஞ்சீரகத்துக்கு (பாரசீக மொழியில் அளிக்கப்பட்டுள்ள) "ஷூனீஸ்" எனும் விளக்கம் இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம்.

!!!! 4452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த நோயானாலும் அதற்குக் கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. சுஹைல் - திமிரி 2
5. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 1
6. ஹக்கிம் - தென்காசி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. நூகு அமீர் -கீழக்கரை 2
2. ஹுசைன் - நாகர்கோவில் 2
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
4. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
7. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

💠💠💠💠💠💠💠💠💠💠💠

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💠💠💠💠💠💠💠💠💠💠💠

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *01-02-2017*

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! - தொடர் :5


🕋 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*

                தொடர் :5
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

 👩‍👩‍👦‍👦 உணரவேண்டும்.
சரி கோபப்படாமல் அந்தக் கோபத்தை அடக்கினால் என்ன நன்மை? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது கோபத்தை செயல்படுத்த சக்தியிருந்தும் யார் அதை மென்று விழுங்குகிறாரோ அவரை மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்புகின்ற ஹுருல் ஈன் என்னும் கன்னியரைத் தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழங்குவான் என்று கூறினார்கள். (முஅத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ (ரலி) - திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்).

💪🏻 வீரன் என்று சொன்னால் பலத்தால் மற்றவர்களை அடக்குபவன் என்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீரனுக்கு இலக்கணம் கூறினார்கள்: பலத்தால் வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தின் போது கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன் என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
கோபத்தை எப்படி அடக்கமுடியும்? என்று தோன்றலாம். நபி (ஸல்) அவர்கள் கோபம் தணிவதற்கான வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள்.

 🚶🏼🙅🏻‍♂ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து விடவும், கோபம் போய்விட்டால் சரி, இல்லையென்றால் படுத்துவிடவும் என்று கூறியிருக்கிறார்கள். (அபூதர் (ரலி) - திர்மிதீ, அஹம்த்). மற்றொறு ஹதீஸில்: கோபம் ஷைத்தானால் ஏற்படுகிறது. ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டவன்.
💥⛈ நெருப்பு தண்ணீரால் அணைக்கப்படுகிறது. எனவே கோபம் கொள்பவர் உளூச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தியா அஸ் ஸஅதீ (ரலி) - அபூதாவூத்). மேலும் கோபம் வரும் போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம் என்று கூறினால் கோபம் போயிவிடும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்படியானால், கோபம் கொள்ளவே கூடாதா? கோபமில்லாமல் மனிதனால் வாழ முடியுமா? என்று பல கேள்விகள் நமக்கும் எழும். கோபம் என்பது மனிதனின் பண்புகளில் ஒன்று.
🐒 🙅🏻‍♂ கோபம் வரவில்லையென்றால் அவன் மனிதன் கிடையாது. ஐந்து அறிவு உள்ள மிருகங்களுக்கே கோபம் வருகிறது என்றால், ஆறு அறிவுள்ள மனிதனுக்கு கோபம் வராமல் இருக்குமா? அத்தியாவசிய, அவசியத் தேவைகளுக்காக கோபம் ஏற்படுவது இயல்பு. அது அவ்வபோது ஏற்படுகிற ஒன்றுதான். அதை அடக்கிக் கொள்வதுதான் சரியான செயல். அதே வேளையில் கோபப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் கோபம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்தக் கோபம் நியாயமானதாக இருக்கவேண்டும். நம்முடைய கோபத்தில் நியாயம் உண்டு என்பதை யார் மீது கோபம் கொள்கின்றோமோ அவருக்குப் புரிய செய்ய வேண்டும். இதில்தான் நாம் தவறிவிடுகிறோம். அதனால் பல விளைவுகளைச் நாம் சந்திக்கின்றோம். நம்முடைய கோபத்தின் நியாயத்தை புரியவைத்துவிட்டால், அக்கோபம் நமக்கு நன்மையில் முடியும். இல்லையென்றால், பெரும் இழப்புக்கள் ஏற்படும்.

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🎗 மீதி இன்ஷா அல்லாஹ்  தொடரும்....நாளை  பார்க்கலாம்‼
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✍🏻 பதிவு நாள்:31-1-17
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*🎯கியாமத் நாளை மறைத்து வைத்த மர்மம் என்ன❓❓❓


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் -5 🌍🌍*


*🎯மறைத்து வைத்த மர்மம் என்ன❓❓❓*

🔘அந்த நாள் நிச்சயம் வரத்தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

🔘அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.

🔘ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.

🔘மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்குச் சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான்.

🔘நல்லவனையும், கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனையும்,கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி மறைத்து வைப்பதும் அவசியமே.

🔘நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக்கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியமுடியும்.


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!*
*(திருக்குர்ஆன் 20:15,16)*


🔘ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதை இரகசியமாக வைத்திருக்கிறான்.
🔘இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை.
🔘அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டா லும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.


🔘அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கி யுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இனி வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


(பதிவுவநாள்:31-01-2017).


*🕋 மார்க்க கேள்வி எண்* 364


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
364:

🎯 *அ) மூஸா (அலை) அவர்கள் கைத்தடியால் கடலை அடித்தவுடன் என்ன ஆயிற்று❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:61-70"*

✅பதில் :
*_கடல் பிளந்தது; பிளவுண்ட ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது_*

ஆதாரம்:-
*அல்குர்ஆன்:* 26:63

📙உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
(அல்குர்ஆன் : 26:63)

🎯 ஆ) *மற்றவர்களுக்காக செலவிடுபவருக்கு அல்லாஹ் என்ன கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்❓*

✅பதில் :
*மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்*

ஆதாரம்:-
 *புகாரி:* 5352

📕5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2
4. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சுஹைல் - திமிரி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. ஹுசைன் - நாகர்கோவில் 2
3. நூகு அமீர் -கீழக்கரை 2
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
5. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

💠💠💠💠💠💠💠💠💠💠💠

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💠💠💠💠💠💠💠💠💠💠💠

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *31-01-2017*

Monday, 30 January 2017

!!கியாமத் நாள் எப்போது வரும் என்பதை எவரும் அறிய முடியாது!!


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் - 4🌍🌍*

*🎯யாராலும் அறிய முடியாது*

🔘'அந்த நாள் எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்'' என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும் விடை 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது'' என்பது தான்.


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*'அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.'இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். 'இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறு வீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.*
*(திருக்குர்ஆன் 7:187)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக் கேட்கின்றனர்.'அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே'' எனக் கூறுவீராக!*
*(திருக்குர்ஆன் 67:25, 26)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்) தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்'' என்று கூறுவீராக!*
*(திருக்குர்ஆன் 72:25)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*'அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்?'' என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ, அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.*
*(திருக்குர்ஆன் 79:42-46)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ,அவர்கள் அறியாத நிலையில் திடீரென அந்த நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?*
*(திருக்குர்ஆன் 12:107)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூ கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!*
*(திருக்குர்ஆன் 20:15,16)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*
*(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?*
*(திருக்குர்ஆன் 33:63)*


🔘'அது எப்போது நிகழும்'' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் அறிந்திருக்கவில்லை; அது இறைவன் மாத்திரமே அறிந்த ஒரு விஷயமாகும் என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்:30-01-2017.

நூஹ் அலை அவர்களின் வரலாற்றுத் தொடர் : G


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

 நூஹ் அலை அவர்களின் வரலாற்றுத் தொடர் : G

⛵கப்பல் எங்கே சென்றடைந்தது❓

அக்கப்பல் ஜுதி மலை மீது நிலைகொண்டது.


📚 அல்குர்ஆன்:11:44

முஜாஹித் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:ஜுதி என்பது இப்னு உமர் தீவில் உள்ள ஒரு மலைக்குன்றாகும். இறைத்தூதர் நூஹ் அலை அவர்களின் கப்பல் அதன்மீது தான் நிலை கொண்டது.

ஜுதி என்பது கிழக்குத் துருக்கியில் குர்திஸ்தானில் உள்ள மலைக்குப் பெயராகும்.இது இப்னு உமர் தீவிற்கு வடகிழக்கே அமைந்துள்ளது.அநேகமாகஇதையே 'அரராத்'(Ararat mount) மலை என்று விவிலியம் கூறுகிறது.துருக்கியின் கிழக்கில் 'வான்'(van)எனும் ஏரிக்கு  தென்மேற்கே உள்ள எரிமலை முகடுதான் 'அரராத்' எனப்படுகிறது.இதை துருக்கிய மொழியில் 'அக்ரிடேகி' என்பர். இதன் உயரம் 16,853 அடி(5,137 கி.மீ) ஆகும்.இதுவே துருக்கியின் மிக உயர்ந்த இடமாகும்.
(அல்முன்ஜித்,தஃப்ஸீர் மாஜிதி,பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)

நூஹே!(கப்பலிலிருந்து) இறங்குவீராக!

நூஹே!(கப்பலிலிருந்து) இறங்குவீராக! உமக்கும் உம்முடன் இருக்கும் (இறைநம்பிக்கை) கொண்ட சமுதாயங்களுக்கும் நம்மிடமிருந்து சாந்தியும் வளங்களும் பொழியட்டும்!(பிற்காலத்தில் தோன்றும் இறைமறுப்பாளர்களான) சமுதாயங்களுக்கு (சிறிது காலம்) நாம் சுகங்களை வழஙகுவோம் பிறகு நம்மிடமிருந்து வரும் வதைக்கும் வேதனை அவர்களைத் தீண்டும் என்று சொல்லப்பட்டது.

📕 அல்குர்ஆன்:11:48

கதாதா (ரஹ்) போன்றோர் கூறுகிறார்கள்:இறைத் தூதர் நூஹ் (அலை )அவர்களும் அவருடன் இருந்த இறைநம்பிக்கை யாளர்களும் ரஜப் மாதம் பத்தாவது நாள் கப்பலில் ஏறினர்.நூற்றி ஐம்பது நாட்கள் அதில் அவர்கள் பயணம் செய்தனர்.

பின்னர், அந்நக் கப்பல் ஜீதி மலையில் அந்த மக்களுடன் ஒரு மாதம் நின்றிருந்தது. பிறகு முஹர்ரம்மாதம் பத்தாவது நாள் (ஆஷீரா) அன்று அவர்கள் அதிலிருந்து வெளியேரினர்.

இப்னு ஜரீர் (ரஹ்) அறிவித்துள்ள நபிமொழியில் இதைப் போன்றதொரு தகவல் இடம்பெற்றுள்ளது.அத்துடன் அந்த (ஆஷீரா) நாளில் அவர்கள் நோன்பு நோற்றதாகவும் அதில் வந்துள்ளது.
(நூல்:தஃப்ஸீர் தப்ரீ,இது ஒரு 'முர்ஸல் 'வகை (அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் விடுபட்ட) ஹதீஸ் ஆகும்.)

அல்லாஹ் நன்கறிந்தவன்.

இவையெல்லாம் மறைவான செய்திகள் ஆகும்!

(நபியே!) இவை மறைவான செய்திகளில் அடங்கும். இவற்றை நாம் (தான் )உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரும் உம்முடைய சமூகத்தாரும் இவற்றை அறிந்திருக்கவில்லை.

📒 அல்குர்ஆன் 11:49

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 30/ 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂G

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : F


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

 ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : F

⛵உலகின் முதல் கப்பல் பயணம்

அவர் (தம்மோடு இருந்தவர்களிடம் ),இதில் (அல்லாஹ்வின் பெயர்கூறி) ஏறிச் கொள்ளுங்கள்.இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே நடக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மிகவும் மன்னிப்பவனும் மிகவும் கருணையாளனும் ஆவான் "என்று கூறினார்.

அது மலைகள் போன்ற அலைகளில் அவர்களை (சுமந்து) கொண்டு சென்றது.

📘 அல்குர்ஆன்:11:41,42

அந்தக் கப்பல் குறைந்த எண்ணிக்கையிலான அந்த மக்களை சுமந்து கொண்டு தண்ணீரின் மேல் செல்லத் தொடங்கியது.

தண்ணீரோ பூமி முழுவதையும் மூடிவிட்டிருந்தது.மலைகளின் உச்சியையும் தாண்டி, பதினைந்து முழங்களுக்கு மேல், மற்றொரு தகவலின் படி எண்பது மைல்களுக்கு மேல் தண்ணீர் சென்றுவிட்டது.

அந்தக் கப்பல் மட்டும் அல்லாஹ்வின் ஆணையின் பேரிலும் அவனது கண்கானிப்பிலும் தண்ணீரின் மேல் (அமைதியாகச் )சென்று கொண்டிருந்தது.

பூமியே!விழுங்கி விடு;வானமே!நிறுத்தி விடு!

அதையடுத்து "பூமியே! உன் தண்ணெரை நீ விழுங்கி விடு; வானமே நீ நிறுத்திக் கொள்"பின்னர் வெள்ளம் வடிந்தது.காரியம் முடிக்கப்பட்டது.

📗 அல்குர்ஆன்:11:44

வரலாற்றாசிரியர் முஹம்மது பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு அல்லாஹ் நாடிய போது, பூமியின் மேல் ஒரு காற்றை அனுப்பி வைத்தான்.அதையடுத்து அலைகள் ஓய்ந்தன. வானத்தின் வாசல்கள் மூடிக் கொண்டன.பூமியின் ஊற்றுக் கண்கள் தூர்ந்தன.

இதையே! மேற்கூறப்பட்ட வசனம் தெளிவுபடுத்துகிறது.அதையடுத்து தண்ணீர் படிப்படியாக குறையவும் வற்றவும் உள்வாங்கவும் தொடங்கியது.
     

🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 கியாமத் நாளை நோக்கி  🌴
பதிவு நாள்: 30 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : E


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

 ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : E

நுஹே! (பூமியில் தண்ணீர் பெருக்கெடுக்கும் பொழுது) கப்பலில் ஏற்றுவீராக!

இறுதியில் நமது ஆணை பிறந்தது;பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் பொங்கியது, அப்போது நாம், "ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண்,பெண் இரு இனங்களில் )ஒரு ஜோடியையும், உம்முடைய குடும்பத்தாரில் யாருக்கெதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக" என்று கூறினோம்.

📙 அல்குர்ஆன்:11:40


பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் பொங்கியது என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வாறு விளக்கம் தருகிறார்கள்:பூமி முழுவதும் பொங்கி வழியும் நீரூற்றுகளாக மாறியது. இறுதியில் நெருப்புப் பற்றவைக்கும் இடங்களாகிய அடுப்புகளிலிருந்து கூட நீர் பீறிட பூமி முழுவதும் வெள்ளக் காடானது.

அப்போதுதான், நூஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்,உயிரினங்கள்,தாவர வர்க்கங்கள் ஆகிய பலவகைப் படைப்புகளில் ஒரு ஜோடியை அதாவது ஆணும் பெண்ணுமாக இரண்டு பொருட்களை தம்முடன் கப்பலில் ஏற்றும்படி ஆணையிட்டாண்.

நூஹ் (அலை) அவர்களின் குடும்பத்தாரில் மகன் 'யாம்' என்பவரும் அவர்களின் (ஒரு) மனைவியும் கப்பலில் ஏற்றப்படவில்லை.ஏனெனில் அவர்கள் ஏக இறைவனை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஈமான் கொண்ட மக்கள் எத்தனை பேர்❓

950 ஆண்டுகள் நூஹ் (அலை) அவர்களிடையே தங்கி அழைப்புப் பணி செய்திருந்தாலும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே இறைநம்பிக்கை கொண்டனர்.

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவர்கள் மொத்தம் எண்பது பேர் இருந்தனர்.அதில் அவர்களின் மற்றொரு துணைவியரும் அடக்கம் என்று கூறியுள்ளார்கள்.

கஅப் அல்அஹ்பார் (ரஹ்) அவர்கள், அவர்கள் மொத்தம் எழுபத்து இரண்டு பேர் இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார்கள்.
         
அல்லாஹ் நன்கறிந்தவன்.
     

🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 30 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

Sunday, 29 January 2017

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! - தொடர் :4


🕋 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*

                தொடர் :4
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🚶🏼நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்த‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*

                தொடர் :4 சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) - அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபுதர் (ரலி) - புகாரி).

📚 பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) - திர்மிதீ, அஹ்மத்)
இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள்.

👬 இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம்.
கோபம் வந்தால் நாம் என்ன பேசுகிறோம் என்று சிந்திப்பதில்லை. இப்படி கோபம் வந்து சிந்திக்காமல் பேசுவதால் எவ்வளவு பெரிய பாதிப்பு நமக்கு மறுமையில் ஏற்படும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் வணக்கசாலி, மற்றவர் அலட்சியவாதி. இந்த வணக்கசாலி எப்பொழுதும் மற்றவருக்கு உபதேசம் செய்து வந்தார்.

👀 ஒரு நாள் அந்த அலட்சியவாதி இவரைப் பார்த்து என்னை கண்காணிப்பவனாக அல்லாஹ் உன்னை அனுப்பவில்லை. நீ உன் வேலையைப்பார் என்றார் இதைக் கேட்ட அந்த வணக்கசாலி, நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கமாட்டான் என்று கூறிவிட்டார். நாளை மறுமையில் அந்த இரண்டு பேரும் நிறுத்தப்படும் போது அல்லாஹ் அந்த அலட்சியவாதியை மன்னித்து, வனக்கசாலியைப் பார்த்து, நான் மன்னிக்கமாட்டேன் என்று கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உன் அமல்களை நான் அழித்துவிட்டேன் என்று கூறி நரகுக்கு அனுப்பினான். (ஜுன்துப் (ரலி) - முஸ்லிம்). கோபத்தால் சிந்தனையில்லாமல் பேசப்படும் சிறு வார்த்தைக் கூட நம் மறுமை வாழ்வை சீரழித்துவிடும். கோபத்தால் சிந்திக்காமல் பேசப்படும் ஒரு வார்த்தையாக இருந்தாலும் அது நரகத்தின் எல்லைக்கே கொண்டுசெல்கிறது என்பதை உணரவேண்டும்.

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🎗 மீதி இன்ஷா அல்லாஹ்  தொடரும்....நாளை  பார்க்கலாம்‼
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✍🏻 பதிவு நாள்:30-1-17
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மார்க்க கேள்வி எண்* 363:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
363:

🎯 *அ) ஃபிர்அவ்ன் கூட்டத்தார் மூஸா (அலை) அவர்களை எவ்வேளையில் பின் தொடர்ந்தார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:51-60"*

✅பதில் :
*_சூரியன் உதிக்கும் நேரத்தில்_*

ஆதாரம்:-
 *அல்குர்ஆன்:* 26:60

📙பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
(அல்குர்ஆன் : 26:60)

🎯ஆ) *பெருமானார் அவர்கள் தம் வாழ்நாளில் எதில் உட்கார்ந்து உணவு அருந்தியதில்லை❓*

✅பதில் :
*_உணவு மேசையில்_*

ஆதாரம்:-
 *ஸஹீஹ் புகாரி :5386,5415,6450*

📙5386. அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📕5415. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், 'எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், '(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📕6450. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை; இறக்கும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.40
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. சுஹைல் - திமிரி 2
4. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
7. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
8. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
9. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
7. பத்ருத்தீன் -கடையநல்லூர் 2

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *30-01-2017*

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்* 362:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
362:

🎯 *அ) ஃபிர் அவ்னுடன் இருந்த சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவுடன் ஃபிர்அவ்ன் அவர்களை சிலுவையில் அறைந்து கொன்று விடுவதாக கூறிய போது, அவர்கள் அவனுக்கு என்ன பதில் கூறினார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:41-50"*

✅பதில்:
அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.

ஆதாரம்:-
 *அல்குர்ஆன்:*26:50

📕“(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 26:50)

🎯ஆ) *தன்னை நபியாக வாதம் செய்தவனின் பெயர் என்ன❓*

✅பதில்:
முசைலிமா

ஆதாரம்:-
📕 *புகாரி:*4072,4373,7461

📙4072. ஜஅஃபர் இப்னு அம்ர் இப்னி உமய்யா அள்ளம்ரீ(ரஹ்) அறிவித்தார்.
நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் இப்னு அதீ அவர்கள், '(உஹுதுப் போரின்போது ஹம்ஸா - ரலி - அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!' என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்சில் வசித்துக் கொண்டிருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். 'அவர் தம் அந்த கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல்பை போன்று (பருமனாக) இருப்பார்' என்று எங்களிடம் கூறப்பட்டது.
பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு, அவருக்கு சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் கூறினார்.
உபைதுல்லாஹ்(ரலி) தம் தலைப்பாகைத் துணியினால், தம் இரண்டு கண்களையும் கால்களையும் தவிர வேறெவதையும் வஹ்ஷீ அவர்கள் பார்க்காத முடியாத அளவிற்கு சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ்(ரலி), 'வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?' என்று கேட்டார்கள்.
அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு, 'அல்லாஹ்வின் மீதாணையாக!' இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் கியார் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார். அவருக்கு, 'உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ்' என்று சொல்லப்படும். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஓர் ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டுபிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது பார்த்தேன்.) உன் இரண்டு பாதகங்களைப் பார்த்தல் அது போன்றே இருக்கிறது' என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ்(ரலி), மூடியிருந்த தம் முகத்தைத் திறந்தார்கள். பிறகு, 'ஹம்ஸா(ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். வஹ்ஷீ, 'சரி' (சொல்கிறேன்)' என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா(ரலி) பத்ருப்போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா இப்னு அதீ இப்னி கியார் என்பாரைக் கொலை செய்தியிருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் இப்னு முத்யிம் என்னிடம், 'என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்' என்று கூறினார்.
எனவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் - அய்னைன் என்பது உஹுது மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரண்டு மலைகளுக்குடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ இப்னு அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியைவிட்டு) முன்னால் வந்து, '(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?' என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின்அப்தில் முத்தலிப்(ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள்.
பிறகு ஹம்ஸா(ரலி) அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போய் விட்ட நேற்யை தினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (க் கவனனிக்காமல்) நெருங்கி வந்தபோது, என்னுடைய ஈட்டியை அவரின் மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரின் புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார்கள்: (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)' என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டபோது, 'நீ வஹ்ஷி தானே?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று கூறினேன். 'நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், 'உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்' என்று கூறினேன். அப்போது அவர்கள், '(உன்னைக் காணும்போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?' என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.
நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போரிடுவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), 'நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்தற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்' என்று கூறிக் கொண்டேன். (அபூ பக்ர் - ரலி அவர்கள அனுப்பிய போர்ப்படையிலிருந்து) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது.
அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்றிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) என்னுடைய ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனுடைய இரண்டு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனுடைய பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தம் வாளால் அவனுடைய உச்சந்தலை மீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முஸைலிமா)
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:
(முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, 'அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்' என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.
ஸஹீஹ் புகாரி.

📖4373. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) 'முஸைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், 'முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி(ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, 'இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📚7461. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புடைசூழ (தன்னை நபி என வாதிட்ட மகா பொய்யன்) முசைலிமாவுக்கு அருகே நின்றார்கள். அப்போது (தலைமைப் பதவியை உங்களுக்குப் பின் எனக்குத் தர வேண்டும் என அவன் கேட்டான்.அதற்கு) நபி(ஸல்) அவர்கள் 'நீ இந்தப் பேரீச்ச மட்டையின் துண்டை என்னிடம் கேட்டாலும் நான் அதை உனக்குத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் விதித்துள்ள கட்டளையை உன்னால் தாண்டிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. சுஹைல் - திமிரி 2
3. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
6. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
9. அமீன் - திருநெல்வேலி 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 1
5. ஹுசைன் - நாகர்கோவில் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. நூகு அமீர் -கீழக்கரை 2

🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *30-01-2017*

*🎯அந்த நாள் அருகிலேயே உள்ளது*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் -3 🌍🌍*


*🎯அந்த நாள் அருகிலேயே உள்ளது*

🔘அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் சீக்கிரமே அந்த நாள் வந்து விடும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது.

*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.*

*(திருக்குர்ஆன் 78:40)*

*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.*

*(திருக்குர்ஆன் 70:6,7)*

*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.*

*(திருக்குர்ஆன் 54:1)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?*

*(திருக்குர்ஆன் 42:17)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*


*(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?*

*(திருக்குர்ஆன் 33:63)*

*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*


*உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். 'எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை நாங்கள் அநீதி இழைத்தோம்'' (என்று கூறுவார்கள்).*

*(திருக்குர்ஆன் 21:97)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*


*மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து,கவனமின்றி உள்ளனர்.*

*(திருக்குர்ஆன் 21:1)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*


*'எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். 'முதல் தடவை யார் உங்களைப் படைத்தான்?'' என்று கேட்பீராக! உம்மிடம் தங்கள் தலைகளைச் சாய்த்து, 'அது எப்போது வரும்?'' என்று கேட்கின்றனர். 'அது சமீபத்தில் வரக் கூடும்'' என்று கூறுவீராக!*

*(திருக்குர்ஆன் 17:51)*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?*

*(திருக்குர்ஆன் 7:185)*


*📚ஹதீஸ்👇🏻👇🏻*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி 'நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),*

*நூல்: புகாரி 4936, 5301, 6503*

🔘அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் அறிவித்த பின் இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

🔘இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

🔘இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம் தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமை நாள் வந்தாலும் 'அது சமீபத்தில் தான் உள்ளது'' என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்29-01-2017.

-

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம் - தொடர் :3!!*


🕋 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*

                தொடர் :3
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🙇🏻மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) - முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள்.

✍🏻 தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி  சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.
சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
📚(அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) - அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) - திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.
சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

இன்ஷா அல்லாஹ்  தொடரும்.

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✍🏻 பதிவு நாள்:29-1-17
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : D


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : D

நூஹே! கவலைப்பட வேண்டாம்!

🍎நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார், இறைவனின் தண்டனையையும் வேதனையையும் வேகமாக தமக்கு வரட்டும் என்று அவசரப்படுத்திய போது, அவர்களுக்கெதிராக நூஹ் அவர்கள் இவ்வாறு பிராத்தித்தார்கள்;

🌾என் இறைவா! இந்தப் பூமியில் இறைமறுப்பாளர்களில் ஒருவரைக் கூட விட்டு வைக்காதே!

📙 அல்குர்ஆன்:71:26

🍓நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். எனக்கு நீ உதவி செய்வாயாக! என்று அவர் (நூஹ் )தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

📒 அல்குர்ஆன்:54:10

அப்போதுதான் அல்லாஹ், (நூஹே!) உன் சமூகத்தாரில் (ஏற்கனவே) இறைநம்பிக்கை கொண்டோரத் தவிர வேறுயாரும் (இனி) ஒருபோதும் இறைநம்பிக்கை கொள்ளப்போவதில்லை.எனவே அவர்களுக்காக நீர் கவலைப்படவோ,அவர்களின் நிலை குறித்து வருத்தப்படவோ வேண்டாம்"என்று அறிவித்தான்.

📚 அல்குர்ஆன் 11:36

அல்லாஹ்வின் அறிவிப்பிற்கு பின் நூஹ் அலை அவர்களின் கப்பல் கட்டும் பணி ஆரம்பம்!

🍏மேலும், நாம் (உமக்கு) அறிவித்தபடி நம்கண்ணெதிரில் நீர் ஒரு கப்பலைக் கட்டுவீராக.அநீதியிழைத்தோர் தொடர்பாக நீர் என்னிடம் (எதுவும் )பேசாதீர். நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவோர் ஆவர் (என்றும் அறிவிக்கப்பட்டது.

📕 அல்குர்ஆன் 11:36

அனைத்து குர்ஆன் விரிவுரையாளர்கள் கருத்துப்படி:

⛵அக்கப்பலின் உயரம் முன்னூறு முழம் ஆகும்.அதில் மூன்று அடுக்குகள் இருந்தன.ஒவ்வொரு அடுக்கும் பத்து முழம் உயரம் கொண்டதாகும்.

🍒அவற்றில் கீழ் அடுக்கு ஊர்வன மற்றும் மிருகங்களுக்காகவும்,நடு அடுக்கு மனிதர்களுக்காகவும்,மேல் அடுக்கு பறவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டன.அதன் வாசல் அகலவாக்கில் அமைந்திருந்தது.மேற்புறத்திலிருந்து மூடிக்கொள்ளக்கூடிய மூடி ஒன்றும் அக்கப்பலுக்கு இருந்தது.

📒 தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பாகம்:4,பக்கம்:623

🍁கிறித்தவ அறிஞர்களின் ஆய்வுப்படி அதன் நீளம்:535 அடி;அகலம் 57.5 அடி;52.5 அடி ஆகும்.

 (தஃப்ஸீர் மாஜித்)

 
🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 29 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : C


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : C

 நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தாரின் விமர்சனங்கள்:

  🍂 நிச்சமயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாருக்கு (தூதராக அனுப்பியிருந்தோம்,)( அவர் தம் சமூகத்தாரிடம்), நிச்சயமாக நான் உங்களை பகிரங்கமாக எச்சரிப்பவன் ஆவேன் (என்றார்).

🍁"அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வழிபடக்கூடாது;உங்களின் விஷயத்தில் வதைக்கின்ற நாளின் வேதனை குறித்து நான் அஞ்சுகிறேன்."என்றும் (நூஹ் கூறினார்).

அதற்கு அவருடைய சமூகத்தாரில் (ஏக இறையை) மறுத்த பிரமுகர்கள், "எங்களைப் போன்ற மனிதராகவே உம்மை நாம் காண்கிறோம்;எங்களில் மேம்போக்கான கருத்துடைய தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மை பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை;எங்களை விட உங்களுக்கு தனிச் சிறப்பேதும் இருப்பதாகவும் எமக்குத் தெரியவில்லை;மாறாக நாங்கள் உங்களைப் பொய்யர்கள் என்றே கருதுகிறோம் "எனக் கூறினார்கள்.
           (அல்குர்ஆன்,அத்தியாயம் 11,வசனங்கள் 25-27)

🌾விமர்சனங்களுக்கு பதிலடி:

💐"எங்களில் மேம்போக்கான மக்கள்தான் உன்னைப் பின்பற்றுகின்றனர்."

☘மேம்போக்கான கருத்துடையவர்களாக இருப்பது ஒன்றும் குறைவோ,கேவலமோ அல்ல.ஏனெனில் உண்மைக் தெளிவாக தெரியும்போது,அதில் தனிப்பட்ட கருத்துகளுக்கும் 🍒சிநத்னைகளுக்கும் இடமில்லை. எல்லா இறைத்தூதர்களும் வெளிப்படையான தெளிவான கொள்கையைத்தான் போதித்தார்கள்.

🍓"தாழ்ந்த மக்கள் தான் உம்மை பின்பற்றுகின்றனர்."

உண்மையின் ஆதரவாளர்கள், அவர்கள் எவ்வளவு வறியவர்களாக இருந்தாலும் உயர்ந்தவர்கள் ஆவர்.அவ்வாறே, உண்மையின் எதிரிகள் , எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள்தான் தாழ்ந்தவர்கள் ஆவர். பிரமுகர்களும், பெரிய மனிதர்களும் பெரும்பாலும் சத்தியத்திற்கு எதிர்த்திசையிலேயே இருந்துள்ளனர்.

🍏கிழக்கு ரோமானிய பைசாந்திய மன்னர் ஹீரக்லீயஸ் அபூஸுஃப்யானிடம் "அவரை (அதாவது முஹம்துவைப் பின்பற்றுவோர் மேட்டுக்குடி மக்களா? அல்லது நலிந்த பிரிவினரா என்று கேட்டார்.அதற்கு அபூஸுஃப்யான் "அல்ல நலிந்த பிரிவினரே (அவரைப் பின்பற்றுகின்றனர்.)" என்று பதிலளித்தார்கள்.
🍎அதற்கு ஹிரக்லீயஸ் (பெரும்பாலும் )நலிந்த பிரிவினர்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்." என்று கூறினார்.

(அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் ரலி,
நூல் ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் ஹதீஸ் -7,2941,4533
ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் ஹதீஸ் 3637)

     

🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 29 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

Saturday, 28 January 2017

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம் - தொடர் -2 !!!*


🐬 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*

                தொடர் :2

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🚶🏼ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள்.

 📒 அபூஹுரைரா (ரலி) - புகாரி, திர்மிதீ, அஹ்மத்

கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள்.

👂🏻அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📚 ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்

அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல.

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🎗 மீதி இன்ஷா அல்லாஹ்  தொடரும்....நாளை  பார்க்கலாம்‼

 🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✍🏻 பதிவு நாள்:28-1-17

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் - முன்னுரை🌍🌍*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள்-2🌍🌍*


*🎯முன்னுரை*


🔘முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும்.


*1 அல்லாஹ்வை நம்ப வேண்டும்.*

*2 வானவர்களை நம்ப வேண்டும்.*

*3 வேதங்களை நம்ப வேண்டும்.*

*4 தூதர்களை நம்ப வேண்டும்.*

*5 இறுதி நாளை நம்ப வேண்டும்.*

*6 விதியை நம்ப வேண்டும்.*


🔘'இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும், தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்'' என்பது அந்த ஆறு விஷயங்களில் ஒன்றாகும்.

🔘மேற்கண்டவாறு நம்புவது தான் இறுதி நாளை நம்புதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.

🔘இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேராகத் திகழ்கிறது.

🔘இப்படி ஒரு நியாயத் தீர்ப்பு நாள் தேவை தான் என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வும் ஒப்புக் கொள்கிறது.

🔘இவ்வுலகில் ஒருவன் மிகவும் நல்லவனாக வாழ்கிறான். ஆனாலும் அவன் மிகவும் சிரமப்படுகிறான். அவன் செய்த நன்மைகளுக்கான பரிசு இவ்வுலகில் அவனுக்குக் கிடைப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காண்கிறோம்.

🔘அது போல் ஒரு மனிதன் அனைத்து தீமைகளிலும் மூழ்கிக் கிடக்கிறான். எல்லா விதமான அக்கிரமங்களையும் செய்கிறான். ஆனாலும் இவன் சொகுசாக வாழ்ந்து மரணித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இவன் செய்த தீமைகளுக்கான தண்டனையை இவ்வுலகில் இவன் அனுபவிக்கவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

🔘பத்து கொலை செய்த ஒருவன் மரண தண்டனை பெற்றால் கூட அது அவனது குற்றத்திற்குத் தகுந்த தண்டனை அல்ல. ஒரு உயிரைக் கொன்றதற்குப் பகரமாக அவனது உயிரை வாங்குகிறோம். ஆனால் மீதி ஒன்பது கொலைகள் செய்ததற்கு என்ன தண்டனை?அதற்கான தண்டனையை இவ்வுலகில் அவனுக்கு யாராலும் வழங்க முடியாது.

🔘எனவே இது போன்றவர்கள் தமது செயலுக்கேற்ற தண்டனையை அல்லது பரிசை அடைய வேண்டுமானால் அது இவ்வுலகில் அறவே சாத்தியமற்றதாகி விடுகிறது.

🔘இதன் காரணமாக தீயவர்களைப் பார்த்து மற்றவர்களும் தம்மைத் தீய செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

🔘'யாரும் தன்னைப் பார்க்காத வகையில் குற்றம் செய்து விட முடியும்'' என்று குற்றம் செய்யும் மனிதன் நம்புகிறான். அப்படி யாராவது பார்த்து விட்டாலும் அவர்களைச் சரிக்கட்ட முடியும் எனவும் நினைக்கிறான். இதன் காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

🔘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், மனிதன் நல்லவனாகவே வாழ வேண்டுமானால் நியாயத் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது என்று நம்புவது தான் அதற்கான ஒரே வழி.

🔘அதைத் தான் இறுதி நாளை நம்புதல் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. அந்த நாளில் நமது செயல்களின் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் எச்சரிக்கை.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்).


-

Friday, 27 January 2017

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்* 361


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
361

🎯 *அ) ஃபிர்அவ்ன் தன்னுடைய தலைவர்களிடம் கேட்ட யோசனைக்கு, அவர்கள் கூறிய யோசனை என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்❓*("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:31-40"*

✅பதில்:
 “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்குச் சூனியக்காரர்களைத் திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக என்று கூறினார்கள்.

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 26:36

📕அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
(அல்குர்ஆன் : 26:36)

🎯ஆ) *இவ்வுலகத்தில் எந்த ஆடையை அணிபவர் மறுமை நாளில் அதை அணியமாட்டார் என்று பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
பட்டாடையை

ஆதாரம்:-
📕 *புகாரி:*5832,5833,5834
📕 *முஸ்லிம்:*4202,4212,4213

📒5832. ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) அவர்கள், 'நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்' என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்கலானார்கள். உடனே நான், 'நபி(ஸல்) அவர்களிடமிருந்தா?' என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், '(ஆம்) நபி(ஸல்) அவர்களிடமிருந்துதான்' என்று கூறிவிட்டு, '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனறார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📙5833. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் 'முஹம்மத்(ஸல்) அவர்கள், '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்' என்றார்கள்' எனக் கூறக் கேட்டேன்.
ஸஹீஹ் புகாரி.

📕5834. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்' என்று கூறினார்கள் என உமர்(ரலி) அவர்கள் சொல்ல கேட்டேன்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📚4202. கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்" என்று கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📃4212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் பட்டு அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📖4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இம்மையில் பட்டு அணிந்தவர், மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. சுஹைல் - திமிரி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. நூகு அமீர் -கீழக்கரை 2

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) - 1
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *28-01-2017


*🌍கியாமத் நாளின் அடையாளங்கள்🌍*


*🌍கியாமத் நாளின் அடையாளங்கள் -1🌍*

🔘உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது.


🔘 ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர். அந்த அடையாளங்களை  கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்துச் சொல்கிறோம்.


*🎯சிறிய அடையாளங்கள்*

*⭕மகளின் தயவில் தாய்*

*⭕பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

*⭕குடிசைகள் கோபுரமாகும்*

*⭕விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

  *⭕தகுதியற்றவர்களிடம் பெறுப்பு*

 *⭕பாலை வனம் சோலை வனமாகும்*

*⭕காலம் சுருங்குதல்*

*⭕கொலைகள் பெருகுதல்*

*⭕நில அதிர்வுகளும்,  பூகம்பங்களும் அதிகரித்தல்*

*⭕பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

*⭕நெருக்கமான கடை வீதிகள்*

*⭕பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

*⭕ஆடை அணிந்தும் நிர்வாணம்*

*⭕உயிரற்ற பொருட்கள் பேசுவது*

*⭕பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

*⭕தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

*⭕பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

*⭕சாவதற்கு ஆசைப்படுதல்*

*⭕இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

*⭕முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*


*🎯இது வரை நிகழாத அடையாளங்கள்*



*⭕யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

*⭕கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

*⭕யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

*⭕கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

*⭕அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

*⭕எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

*⭕செல்வம் பெருகும்*

*⭕மாபெரும் யுத்தம்பைத்துல் முகத்தஸ் வெற்றி*

*⭕மதீனா தூய்மையடைதல்*

*⭕அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*



*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*

*⭕புகை மூட்டம்*

*⭕தஜ்ஜால்*

*⭕ஈஸா நபியின் வருகை*

*⭕யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

*⭕அதிசயப் பிராணி*

*⭕மேற்கில் சூரியன் உதிப்பது*

*⭕மூன்று பூகம்பங்கள்*

*⭕பெரு நெருப்பு*



*🔘இன்ஷா அல்லாஹ் இவையனைத்தையும்  ஒவ்வொன்றாக பார்ப்போம்* -1

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!* தொடர் :1


🕋 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*
             தொடர் :1
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

⚡ கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

👨‍👩‍👧 தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது.
அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது.

🐆சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது.
சில உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உப்புச் சப்பு இல்லாத விஷயங்களுக்காக குடும்ப உறவைத் துண்டித்து வாழ்கிறார்கள். மேலும் கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.
அல்லாஹ் தன்
📗ஆதாரம் அல்குர்ஆன் 📗 *திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, *(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.*


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳        

🎗 இன்ஷா அல்லாஹ் தொடரும்....நாளை பார்க்கலாம்‼

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✍🏻பதிவு நாள்:27-1-17
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Thursday, 26 January 2017

*ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் :B


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

 *ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின்  வம்சத் தொடர் :B

நூஹ் நபியவர்களின் அழைப்புப் பணி

🌴மக்களின் நிராகரிப்பும்,சிலை வணக்கமமும் பரவலாகிய போது,அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களை நபியாக அல்லாஹ் அனுப்பினான். அவர்கள், மக்களிடம் சென்று  "இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்." என அறிவுரை கூறி அழைப்பு விடுத்தார்கள்.

🌿இதைக் கேட்ட சமுதாயத் தலைவர்கள், "நாங்கள் உம்மை இறைத் தூதராக ஏற்க மாட்டோம். ஏனெனில், நீரும் எங்களைப் போன்ற மனிதர்தானே? மேலும் உம்மை இழிவான, கீழ்த்தரமான மக்களே பின்பற்றுகிறார்கள்" என பதில் கூறினர்.

☘நூஹ் அலை அவர்கள் மக்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் நெருக்கமும் நற்பாக்கியமும் செல்வத்தால் ஏற்படுவதில்லை. மாறாக அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் மனத் தூய்மையும் எண்ணத்தைக் கொண்டே அமைவதாகும்.

செல்வத்தை ஆதரவு வைத்து நான் உங்களை அழைக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் ஆணைப்படி அவன் திருப் பொருத்தத்திற்காகவே அழைக்கின்றேன்.அவனே எனது உழைப்பிற்கு நற்கூலி வழங்குபவன்" என பதிலளித்தார்கள்.

🍁ஆக இரவு, பகலாக தனிப்பட்ட முறையிலும், பொது இடங்களிலும் நீண்ட நெடுங்காலமாக சமுதாயத்தினரை இணைவைத்தல், நிராகரிப்பு, மற்றும் இறை மறுப்பு ஆகியவற்றிலிருந்து எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள்.

🌾ஆனால் மக்கள் அவர்கள் அழைப்புப் பணி செய்யும் பொழுது தங்களுடைய விரல்களை காதுக்குள் வைத்துக் கொள்வர்.ஆடைகளால் மூடிக் கொள்வார்கள்.மிகவும் பிடிவாதக் காரர்களாகவும்,பெருமையடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

🍃"அல்லாஹ்வின் வேதனையை இறக்கிக் காட்டு பார்ப்போம்"என்று நூஹ் நபியிடம் அம்மக்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
       

🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴  கியாமத் நாளை நோக்கி  🌴
பதிவு நாள்: 27 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
360(பதில்)

🎯 *அ) ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை சிறைபடுத்துவதாக கூறிய போது மூஸா (அலை) அவர்கள் எதைக் கொண்டு வந்தாலுமா என்று கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான்❓*

("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:21-30"*

✅பதில்:
*தெளிவான அத்தாட்சிப் பொருளை*

ஆதாரம்:-
 *அல்குர்ஆன்:*26:30

📙(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
(அல்குர்ஆன் : 26:30)

🎯ஆ) *சிறு குழந்தைகளை முத்தம் இடுவதில்லை என கூறியவருக்கு பெருமானார் அவர்கள் என்ன கேட்டார்கள்❓*

✅பதில்:
*“அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?“*
✅பதில்:
*உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால் என்ன செய்ய முடியும்?“*

ஆதாரம்:-
 *புகாரி:*5998
 *முஸ்லிம்:*4636

📒5998. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📕4636. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?" என்று கேட்டனர். மக்கள் "ஆம்" என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் "ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையைப் பறித்துவிட்டால்,என்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால், (என்னால் என்ன செய்ய முடியும்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

⚓1. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
⚓2. சுஹைல் - திமிரி 2
⚓3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
⚓4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
⚓5. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
⚓6. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
⚓7. ஹக்கிம் - தென்காசி 2
⚓8. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
⚓9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

💠1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
💠2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
💠3. ஹுசைன் - நாகர்கோவில் 2
💠4. நூகு அமீர் -கீழக்கரை 2
💠5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
💠6. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
💠7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

❇1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *27-01-2017*

Wednesday, 25 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
359

🎯 *அ)மூஸா (அலை) அவர்கள்  தவறியவர்களில் இருந்த நிலையில் எதைச் செய்து செய்துவிட்டதாக கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:11-20"*

✅பதில் :
*_கொலைச் செயலை_*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 26:19, 26:20


“ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
(அல்குர்ஆன் : 26:19)


(மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
(அல்குர்ஆன் : 26:20)



🎯ஆ) *அல்லாஹ் எவன் மீது கருணை காட்டமாட்டான் என பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில் :
*“படைப்பினங்களின் மீது"* & *மக்கள் மீது*


6013. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.


7376. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.7
ஸஹீஹ் புகாரி.


4638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
-  மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.




ஆதாரம்:-
📕 *புகாரி:* 6013 ,7376
📕 *முஸ்லிம்:* 4638

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2
5. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. ஹக்கிம் - தென்காசி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. நூகு அமீர் -கீழக்கரை 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *25-01-2017*

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் :A


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

 ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் :A

🍒நூஹ் பின் லாமக் பின் மதூஸலஹ் பின் அஹ்னூஹ் (இவர்தான் இத்ரீஸ் அலை) பின் யரித் பின் மஹாபீல் பின் கைனான் பின் அனூஸ் பின் ஷீஸ் பின் ஆதம் (அலை)

🍓ஆதம் (அலை) அவர்களுக்கும்,நூஹ் (அலை) அவர்களுக்கும் மத்தியில் கிட்டதட்ட 10 நூற்றாண்டுகள் கடந்துள்ளன.

இப்னு ஹிப்பான் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

🍎ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பிறகு 1000 ஆண்டுகள் வரை மக்கள் ஓரிறைக் கொள்கையில் நிலைத்திருந்தனர்.பிறகு நல்லடியார்கள் சிலர் இறந்ததும் அவர்களின் உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டனர்.பிறகு மெல்ல மெல்ல அவற்றுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர்.இதுபோன்றுதான் அரபு மற்றும் பிறநாடுகளில் சிலை வணக்கம் வேரூன்றியது.மக்கள் அல்லாஹ்வின் வணக்கத்தை மறந்துவிட்டு,இணை வைப்பதிலும்,சிலை வணக்கத்திலும் மூழ்கிய போது,அவர்களின் நேர்வழிக் காட்டுதலுக்காக நூஹ் (அலை) அவர்களை அல்லாஹ் நபியாக ஆக்கினான்.

🍇சிறப்பு வாய்ந்த நபிமார்களின் வரிசையில் நூஹ் (அலை) அவர்களும் இடம் பெறுகிறார்கள்.இவர்கள் முதல் நபியும்,ரஸுலும் ஆவார்கள்.

🍋புகாரியில் பதிவாகியுள்ள ஹதீஸ்:
பூமியில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த இறைத்தூதர் ஆவார்கள்.

📚 புகாரி:3340

🍏இத்ரீஸ் (அலை) அவர்களின் மூன்றாவது தலைமுறையாக ஆதம் (அலை) அவர்களின் பிறப்புக்கு,1025 ஆண்டுகளுக்குப் பிறகு,இராக்கில் தஜ்லா மற்றும் ஃபுராத் பள்ளத்தாக்குகளிடையே பிறந்தார்கள்.அல்லாஹ் புனித குர்ஆனில் 43 இடங்களில் இவர்களைப் பற்றி கூறியுள்ளான்.
     

🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴  கியாமத் நாளை நோக்கி  🌴
பதிவு நாள்: 25 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

Tuesday, 24 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
358:

🎯 *அ)அல்லாஹ் மூஸா நபியிடம் எத்தகைய சமூகத்தாரிடம் செல்ல சொன்னதை நினைவு கூறுமாறு நபியிடம் கூறுகிறான் ❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:01-10"*

✅பதில் :
_“அநியாயக்கார சமூகத்திடம்"_

ஆதாரம்:-
📒 *அல்குர்ஆன்:*26:10

🎯ஆ) *பெருமானார் அவர்கள்  எந்த சூழ்நிலையில் தாம் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன், அஞ்சி நடப்பவன் என்று கூறினார்கள்❓*

✅பதில் :
_நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்து, மற்றவர்களுக்கும் அதைச் செய்ய அனுமதி அளித்தபோது, ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்துகொண்டனர்  அப்போது_

ஆதாரம்:-
📒 *ஸஹீஹ் புகாரி: 6101,7301*
📒 *ஸஹீஹ் முஸலிம்: 4699,4700*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
4. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சுஹைல் - திமிரி 2
7. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. ஹுசைன் - நாகர்கோவில் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *24-01-2017*

Monday, 23 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
357

🎯  *அ)வாழ்வதற்கும், வசிப்பதற்கும் அழகிய இடம் எது❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:71-77"*

✅பதில்:
சுவனபதியில் உன்னதமான (உயர்ந்த) மாளிகை

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:75, 25:76

🎯ஆ) *குமுஸ் என்றால் என்ன❓*

✅பதில்:
ஐந்தில் ஒரு பாகம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு

ஆதாரம்:-
📕 *முஸ்லிம்:1945,1946,3596,3610,3924*
📕 *புகாரி: 3144,4229,4305,6176*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. சுஹைல் - திமிரி 2
6. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
7. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. ஹுசைன் - நாகர்கோவில் 2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *23-01-2017*

*🕋 மார்க்க கேள்வி எண் 356*


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
*356:(மூன்று மதிப்பெண் கேள்வி - ஹதீஸ் கேள்விக்கு இரண்டு மதிப்பெண்)*

🎯 *அ)எவருடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:61-70"*

✅பதில்:
தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான நற் செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்.

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:70

🎯ஆ) *மறுமையில் எந்த நபியிடம் இறைத் தூதுச் செய்தியை மக்களுக்கு எடுத்து கூறிவிட்டீர்களா என்று விசாரிக்கப்படும்? அவர் எடுத்துக் கூறிவிட்டேன் என்று கூறுவார், ஆனால் அவருடைய சமுதாய மக்கள் இல்லை என்று பொய் கூறுவார்கள். அப்போது எந்த சமுதாயத்தினர் அந்த நபிக்காக சாட்சி சொல்வார்கள் என்று பெருமானார் கூறுகிறார்கள்❓*

✅பதில்:
நூஹ் (அலை) அவர்களிடம் கேட்கப்படும்.

நாம் (நபி முஹம்மது நபியுடைய சமுதாயம்) சாட்சி சொல்வோம்.

ஆதாரம்:-
📕 *புகாரி:* 3339,4487,7349

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி 3
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 3
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 3
5. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 3
6. ஹக்கிம் - தென்காசி 1
7. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 3
8. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 3
9. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 3

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 3
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 3
3. ஹுசைன் - நாகர்கோவில் 1
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 3
5. நூகு அமீர் -கீழக்கரை 3
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 1
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 1

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *22-01-2017*

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
355:

🎯 *அ)ஆறு நாட்களில் அல்லாஹ் எவற்றைப் பபடைத்தான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:51-60"*

✅பதில் :
*_வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும்_*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:59

🎯ஆ) *அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசுபவரை பெருமானார் என்ன செய்ய சொன்னார்கள்❓*

✅பதில் :
*"அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்” என்று கூறினார்கள்”*

ஆதாரம்:-
📕 *முஸ்லிம்:* 5730, 5731

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
3. சுஹைல் - திமிரி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 1
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6.  நூகு அமீர் -கீழக்கரை 1
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *21-01-2017*

Friday, 20 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
354:

🎯 *அ)படிப்பினை பெறுவதற்காக எதனை தெளிவுபடுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்❓*("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:41-50"*

✅பதில்:
குர்ஆனை

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*25:50

🎯 ஆ) *முஸ்லிம்களிலேயே பெரும் குற்றம் புர்ந்தவர் ஆவார் என்று யாரை பெருமானார் கூறுகிறார்கள் ❓*

✅பதில்:
 தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்.

ஆதாரம்:-
📕 *புகாரி:* 7289
📕 *முஸ்லிம்:*4704,4705

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. சுஹைல் - திமிரி 2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
9. ஹக்கிம் - தென்காசி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஹுசைன் - நாகர்கோவில் 2
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1

🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *20-01-2017*

Thursday, 19 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
353:

🎯 *அ)எந்த சமுதாயத்தினரை அல்லாஹ் மூழ்கடித்தான் எதனால்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:31-40"*

✅பதில்:
நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தை
தூதர்களை பொய்ப்பித்ததனால்.

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:37

🎯 ஆ) *எது இல்லாமல் இருந்திருந்தால் பாவம் செய்யக்கூடிய மற்றொரு சமூகத்தை அல்லாஹ் கொண்டு வருவான் என்று பெருமானார் குறுகிறார்கள் ❓*

✅பதில்:
பாவங்களை மன்னிக்கும் நிலை இல்லாதிருந்தால்.

ஆதாரம்:-
📕 *முஸ்லிம்:*5302,5303,5304

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2
3. ஹக்கிம் - தென்காசி2
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
5. சுஹைல் - திமிரி 2
6. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
7. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 1
8. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2
7. நூகு அமீர் -கீழக்கரை 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2

☘☘☘☘☘☘☘☘☘☘☘

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *19-01-2017*

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
352:

🎯  *அ)எப்பொழுது அநியாயக்காரர்கள் தங்கள் இரு கைகளையும் கடித்துக் கொள்வார்கள், அப்பொழுது என்ன கூறுவார்கள் ❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:21-30"*

✅பதில்:
மறுமையில்,அத்தூதருடன் நானும்  நேரான வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா எனக் கூறுவான்.

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*25:27

🎯ஆ) *மறுமை நாளில் முதலில் மயக்கம் தெளிந்து எழுப்பப்டுபவர் யார்? ❓*

✅பதில்:
*முஹம்மது நபி(ஸல்) அவர்கள்*

ஆதாரம்:-
📘 *ஸஹீஹ் புகாரி: 2411,3408,3414,6517,6518,7428,7472*
📘 *ஸஹீஹ் முஸ்லிம்: 4731,4732*


💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி2
2. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி2
3. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
4. சதாம் உசேன் - திருநெல்வேலி2
5. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2
6. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2
9. ஹக்கிம் - தென்காசி2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2
2. ஹுசைன் - நாகர்கோவில்2
3. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2
4.  நூகு அமீர் -கீழக்கரை2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி2

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1⃣

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *18-01-2017

Tuesday, 17 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
351:

🎯 *அ)அல்லாஹ் யாரை பெரியதொரு சோதனையைச் சுவைக்கச் செய்வோம் என்று கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:11-20"*

✅பதில் :
*_உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை_*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:19

🎯 ஆ) *பின்னால் நடக்கக் கூடிய விளைவைப் பற்றி சிந்திக்காமல் பேசிவிடுபவர் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகுவதாக  பெருமானார் கூறுகிறார்கள்❓*

✅பதில் :
*(இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்*

ஆதாரம்:-
📕 *ஸஹீஹ் முஸ்லிம்: 5711,5712*
📕 *ஸஹீஹ் புகாரி: 6477*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
2. சதாம் உசேன் - திருநெல்வேலி2⃣
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
5. ஹக்கிம் - தென்காசி2⃣
6. சுஹைல் - திமிரி2⃣
7. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
9. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
2. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
3. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
6. நூகு அமீர் -கீழக்கரை2⃣
7. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *17-01-2017*

Monday, 16 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
350:

🎯 *அ)நபியுடைய கட்டளைக்கு மாறு செய்பவர்கள் எதைக் குறித்து அஞ்சிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்❓*

✅பதில் :
*1) தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:63

✳ *"முஷ்ரிக்குகள்" நபிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? உண்டாயிருக்க வேண்டாமா? என்று கூறுவனவற்றைக் குறிப்பிடவும்❓*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி) *24: 61- 64 & சூரத்துல் ஃபுர்கான் (பிரித்தறிவித்தல்) 25:01-10"*

✅பதில்:
*மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா*

*புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா*

*ஒரு பழத் தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 25:7, 25:8

🎯ஆ) *காபாவை சுற்றி எத்தனை சிலைகள் இருந்த போது பெருமானார் அவர்கள் மக்கா நகரில் நுழைந்தார்கள்❓*


✅பதில் :
*முந்நூற்று அறுபது சிலைகள்*

ஆதாரம்:-
📕 *ஸஹீஹ் புகாரி: 2478,4287,4720*
📕 *ஸஹீஹ் முஸ்லிம்:3650*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
4. சாதம் உசேன் - திருநெல்வேலி2⃣
5. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
6. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
7. சுஹைல் - திமிரி2⃣
8. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி2⃣
9. ஹக்கிம் - தென்காசி2⃣
10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)1⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
2. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
3. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
4.  நூகு அமீர் -கீழக்கரை2⃣
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
7. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
         *_அட்மின் குழு_*
பதிவு நாள்: *16-01-2017*.

Sunday, 15 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
349

🎯 *அ)வயது முதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு எது மிகவும் நலமாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?*("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" *24: 51- 60)*

✅பதில்:
வயது முதிர்ச்சி அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தைப் பிறருக்கு வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் இதனையும் அவர்கள் தவிர்த்து ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும்.

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:60

🎯ஆ) *இறைத்தூதர்களில் எவருக்கு அறுபது   மனைவிமார்கள் இருந்தார்கள்?*


✅பதில்:
சுலைமான் (அலை) அவர்களுக்கு

ஆதாரம்:-
📕 *புகாரி:* 7469
📕 *முஸ்லிம்:*3401

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. சுஹைல் - திமிரி2⃣
4. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
5. ஹக்கிம் - தென்காசி2⃣
6. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி2⃣
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
10. அஜீம் - கீழ்க்கரை2⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
2. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
4. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
6. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
8. நூகு அமீர் -கீழக்கரை2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *15-01-2017*

*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*: 348

🎯 *அ)உயிர்ப்பிரணிகள் எவ்விதங்ளாக நடப்பதாக அல்லாஹ் கூறுகிறான்❓*

✅பதில்:
1.தன் வயிற்றின் மீது நடப்பவை

2.இரு கால்களால் நடப்பவை

3.நான்கு கால்களால் நடப்பவை

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*24:45

✳ *சிந்தனை உடையவர்களுக்கு எதில் தக்க படிப்பினை இருக்கிறது*❓
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" *24: 41- 50)*

✅பதில்:
_இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்வதில் சிந்தனை உடையவர்ளுக்கு தக்க படிப்பினை இருக்கிறது._

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*24:44

🎯ஆ) *பெருமானார் அவர்கள் நின்ற நிலையில் எந்தக் கிணற்றிலிருந்து நீரை அருந்தினார்கள்❓*

✅பதில்:
 _"ஸம் ஸம்" கிணற்றிலிருந்து._

ஆதாரம்:-
📕 *புகாரி:*5617
📕 *முஸ்லிம்:*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
2. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
4. சுஹைல் - திமிரி2⃣
5. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
7. ஹக்கிம் - தென்காசி2⃣
8. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
2.  நூகு அமீர் -கீழக்கரை2⃣
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
4. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
6. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
8. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
*அட்மின் குழு*
*பதிவு நாள்: *14-01-2017*

Saturday, 14 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
347

🎯 *அ)காஃபிர்களின் செயல்ளைக் குறித்து அல்லாஹ் கூறும் உதாரணங்கள் யாவை ❓*("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" *24: 31- 40)*

✅பதில்:
😱 _பாலைவனத்தில் தோன்றும் கானல் போன்றது._

😱 _ஆழ்கடலில் ஏற்படும் பல இருள்களைப் போன்றது._

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:39,24:30

🎯ஆ) *யாரை அல்லாஹ் மார்க்கத்தில் விளக்கம் உடைய அறிஞராக்குவதாக பெருமானார்  கூறினார்கள்?*

✅பதில்:
_நன்மையை நாடுவோருக்கு_

ஆதாரம்:-
📕 *புகாரி:* 71,7312
📕 *முஸ்லிம்:*3888

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி2⃣
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
3. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
6. ஹக்கிம் - தென்காசி2⃣
7. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2⃣
8. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
9. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣


🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. நூகு அமீர் -கீழக்கரை2⃣
2. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
4. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
5. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
8. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣

🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை)1⃣

🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *13-01-2017*

Friday, 13 January 2017


💠 _அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....._ 💠

✔ _*வலிமா விருந்தின் சட்டங்களும்,ஒழுக்கங்களும்*_

வலிமா பாடத்தின் முக்கியத்தும்:
மார்க்கத்தில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் விருந்து வலிமாவாகும்.ஹதீஸ் கலை வல்லுநர்கள் வலிமா பாடத்திற்கு கீழ்தான் விருந்தின் ஒழுக்கங்களை கூறியிருப்பார்கள்.

‼ *குர்ஆனில் பேசப்பட்ட வலிமா:*

நபியவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை திருமணம் முடித்த பின் வலிமா கொடுத்தார்கள்.அந்த வலிமாவை முடித்த பின் ஸஹாபாக்களில் சிலர் எழுந்த செல்லாமல் அங்கேயே உட்கார்ந்து நபியுடன் பேச ஆசைப்பட்டனர்.அப்பொழுது அல்லாஹ் நீங்கள் விருந்து சாப்பிட்வுடன் புறப்பட்டு சென்றுவிடுங்கள் என்ற வசனத்தை இறக்கி வைத்து விருந்தின் ஒழுக்கத்தை சமுதாயத்திற்கு கற்றுக்கொடுத்தான்.

📚 _அல்குர்ஆன் 33:53_

வலிமா விருந்து எப்பொழுது கொடுக்க வேண்டும்:
திருமண ஒப்பந்தம் நடைபெற்று கணவனும் மனைவியும் உறவாடியபின் வலிமா விருந்து கொடுக்க வேண்டும்.

ஹஜ்ரத் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் அன்னை ஜைனப் ரலி அவர்களின் வலிமாவை உறவை தொடங்கிய பின் கொடுத்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📚 _புகாரி :5154_
                 

♻ *வலிமா கொடுப்பது சுன்னத்:* ♻

வலிமா கொடுப்பவர் இது நபியின் வழிமுறை (சுன்னத்) என்ற நிய்யத்தில் கொடுக்க வேண்டும்.தன் பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக விருந்து அமையக் கூடாது.

நபியவர்கள் கூறினார்கள்:எவர் மக்களிடம் பாராட்டைப் பெறவேண்டுமென ஒரு காரியத்தில் ஈடுபடுவாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்து மக்களின் முன்னிலையில் அவரின் குறைகளை வெளிப்படுத்தில் கேவலப்படுத்தி விடுவான்.

📕ஸஹிஹுல் புகாரி

💰 *சக்திக்கு உற்பட்டு வலிமா கொடுத்தால் போதுமாகும்:❓*

அனஸ்( ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.நபியவர்கள் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்து வலிமா விருந்து கொடுத்தார்கள்.அதில் பேரிச்சம்பழம்,பாலாடைக்கட்டி,நெய் போன்றவை இடப்பட்டன.அதுவே அன்னாரின் வலிமா விருந்தாக அமைந்தது.

📚 _புகாரி 5159_

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:நபியவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்தபின் வலிமா விருந்து கொடுத்தார்கள்.அதில் ஒரு ஆட்டை விருந்தளித்தார்கள்.வேறு யாருக்கும் இதைவிட பெரியதாக நபியவர்கள் விருந்தளிக்கவில்லை.

📚 _புகாரி :5171_

வீண்விரயத்தை தவிர்க்க வேண்டும்:
இன்று நம் விருந்துகளில் மிச்சமாகுவதைக் கொண்டு பல ஏழைகளின் பசியை நிவர்த்தி செய்யலாம்.அந்தளவு உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.

நீங்கள் சாப்பிடுங்கள்;குடியுங்கள்;ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்.ஏனெனில் வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான்.

📚 _அல்குர்ஆன்:7-31_
       

👨‍👨‍👦‍👦 *விருந்துக்கு யாரை அழைப்பது❓*

பணக்காரர்கள் அழைக்கப்பட்டு,ஏழைகளை விட்டுவிடக் கூடிய வலிமா விருந்து, உணவுகளில் மிகக்கெட்டதாகும் என நபியவர்கள் கூறினார்கள்.

📚 _புகாரி :5177_

விருந்துக்கு பதில்கொடுப்பது வாஜிபாகும்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்று செல்லட்டும்.என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📚 _புகாரி :5173_

நோன்பு நோற்றவரும் அழைப்பை ஏற்க வேண்டும்:
நபியவர்கள் கூறினார்கள்,உங்களில் ஒருவர் வலிமாவுக்கு அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளவும்.நோன்பாளியாக இருந்தால் அவருக்காக துஆ செய்யவும்.நோன்பில்லாதவர் உணவுசாப்பிடவும்.

📚 _முஸ்லிம் :1431_

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நஃபிலான நோன்பு நோற்றிருந்த நிலையில் கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்று சென்று வந்தார்கள்

📚 _புகாரி:5179_

மார்க்கத்திற்கு முரணாக நடக்கும் வீட்டில் விருந்து உண்ணலாமா?

ஒரு சமயம் நபியவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள்.அவர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது வாசலில் உருவப்படம் போட்ட திரை தொங்கவிடப்பட்டிருந்தது.அதைப் பார்த்தவுடன் நபியவர்கள திரும்பி விட்டார்கள்.
📚 _அபூதாவூத் :3755_

வலிமா எத்தனை நாட்கள் கொடுக்கலாம்?
பழக்கத்தில் உள்ளதைவிட அதிகமான நாட்கள் வலிமா கொடுக்கத் தேவையில்லை.

ஒரு நாள்,இரண்டு நாள் என ஏழு நாட்கள் வலிமா கொடுக்கலாம் என புகாரி ஷரீபில் கூறப்பட்டுள்ளது.அல்லாமா அய்னி,இமாம் அல்அஸ்கலானி வலிமா ஏழு நாட்கள் வரை கொடுக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்களையும் கூறியுள்ளனர்.

என வே,உலமாக்கள் இதன் மூலம் நடைமுறை எப்படி ள்ளதோ அதுபோன்று வலிமாவை அமைத்துக் கொள்ளவேண்டுமென கூறுகின்றனர்.

நம் வழக்கில் வலிமா விருந்து ஒரு நாள் அனைவரையும் அழைத்து கொடுக்கப்படுகிறது.இது நபியின் சுன்னத்தை நிறைவேற்றியதாக ஆகிவிடும்.

🌴 *_கியாமத் நாளை நோக்கி குழுமம்_*🌴
பதிவு நாள் : 12 - 01 - 17