*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
361
🎯 *அ) ஃபிர்அவ்ன் தன்னுடைய தலைவர்களிடம் கேட்ட யோசனைக்கு, அவர்கள் கூறிய யோசனை என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்❓*("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:31-40"*
✅பதில்:
“அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்குச் சூனியக்காரர்களைத் திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக என்று கூறினார்கள்.
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 26:36
📕அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
(அல்குர்ஆன் : 26:36)
🎯ஆ) *இவ்வுலகத்தில் எந்த ஆடையை அணிபவர் மறுமை நாளில் அதை அணியமாட்டார் என்று பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
பட்டாடையை
ஆதாரம்:-
📕 *புகாரி:*5832,5833,5834
📕 *முஸ்லிம்:*4202,4212,4213
📒5832. ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) அவர்கள், 'நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்' என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்கலானார்கள். உடனே நான், 'நபி(ஸல்) அவர்களிடமிருந்தா?' என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், '(ஆம்) நபி(ஸல்) அவர்களிடமிருந்துதான்' என்று கூறிவிட்டு, '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனறார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📙5833. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் 'முஹம்மத்(ஸல்) அவர்கள், '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்' என்றார்கள்' எனக் கூறக் கேட்டேன்.
ஸஹீஹ் புகாரி.
📕5834. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்' என்று கூறினார்கள் என உமர்(ரலி) அவர்கள் சொல்ல கேட்டேன்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.
📚4202. கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்" என்று கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
📃4212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் பட்டு அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📖4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இம்மையில் பட்டு அணிந்தவர், மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. சுஹைல் - திமிரி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. நூகு அமீர் -கீழக்கரை 2
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) - 1
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *28-01-2017