Monday, 30 January 2017

ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : E


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

 ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : E

நுஹே! (பூமியில் தண்ணீர் பெருக்கெடுக்கும் பொழுது) கப்பலில் ஏற்றுவீராக!

இறுதியில் நமது ஆணை பிறந்தது;பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் பொங்கியது, அப்போது நாம், "ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண்,பெண் இரு இனங்களில் )ஒரு ஜோடியையும், உம்முடைய குடும்பத்தாரில் யாருக்கெதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக" என்று கூறினோம்.

📙 அல்குர்ஆன்:11:40


பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் பொங்கியது என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வாறு விளக்கம் தருகிறார்கள்:பூமி முழுவதும் பொங்கி வழியும் நீரூற்றுகளாக மாறியது. இறுதியில் நெருப்புப் பற்றவைக்கும் இடங்களாகிய அடுப்புகளிலிருந்து கூட நீர் பீறிட பூமி முழுவதும் வெள்ளக் காடானது.

அப்போதுதான், நூஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்,உயிரினங்கள்,தாவர வர்க்கங்கள் ஆகிய பலவகைப் படைப்புகளில் ஒரு ஜோடியை அதாவது ஆணும் பெண்ணுமாக இரண்டு பொருட்களை தம்முடன் கப்பலில் ஏற்றும்படி ஆணையிட்டாண்.

நூஹ் (அலை) அவர்களின் குடும்பத்தாரில் மகன் 'யாம்' என்பவரும் அவர்களின் (ஒரு) மனைவியும் கப்பலில் ஏற்றப்படவில்லை.ஏனெனில் அவர்கள் ஏக இறைவனை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஈமான் கொண்ட மக்கள் எத்தனை பேர்❓

950 ஆண்டுகள் நூஹ் (அலை) அவர்களிடையே தங்கி அழைப்புப் பணி செய்திருந்தாலும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே இறைநம்பிக்கை கொண்டனர்.

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவர்கள் மொத்தம் எண்பது பேர் இருந்தனர்.அதில் அவர்களின் மற்றொரு துணைவியரும் அடக்கம் என்று கூறியுள்ளார்கள்.

கஅப் அல்அஹ்பார் (ரஹ்) அவர்கள், அவர்கள் மொத்தம் எழுபத்து இரண்டு பேர் இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார்கள்.
         
அல்லாஹ் நன்கறிந்தவன்.
     

🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....

📝  முஹம்மது ஃபாயஸ்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 30 / 1 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

No comments:

Post a Comment