🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎
🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓
🌙நபிமார்கள் வரலாறு🌟
ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் : F
⛵உலகின் முதல் கப்பல் பயணம்
அவர் (தம்மோடு இருந்தவர்களிடம் ),இதில் (அல்லாஹ்வின் பெயர்கூறி) ஏறிச் கொள்ளுங்கள்.இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே நடக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மிகவும் மன்னிப்பவனும் மிகவும் கருணையாளனும் ஆவான் "என்று கூறினார்.
அது மலைகள் போன்ற அலைகளில் அவர்களை (சுமந்து) கொண்டு சென்றது.
📘 அல்குர்ஆன்:11:41,42
அந்தக் கப்பல் குறைந்த எண்ணிக்கையிலான அந்த மக்களை சுமந்து கொண்டு தண்ணீரின் மேல் செல்லத் தொடங்கியது.
தண்ணீரோ பூமி முழுவதையும் மூடிவிட்டிருந்தது.மலைகளின் உச்சியையும் தாண்டி, பதினைந்து முழங்களுக்கு மேல், மற்றொரு தகவலின் படி எண்பது மைல்களுக்கு மேல் தண்ணீர் சென்றுவிட்டது.
அந்தக் கப்பல் மட்டும் அல்லாஹ்வின் ஆணையின் பேரிலும் அவனது கண்கானிப்பிலும் தண்ணீரின் மேல் (அமைதியாகச் )சென்று கொண்டிருந்தது.
பூமியே!விழுங்கி விடு;வானமே!நிறுத்தி விடு!
அதையடுத்து "பூமியே! உன் தண்ணெரை நீ விழுங்கி விடு; வானமே நீ நிறுத்திக் கொள்"பின்னர் வெள்ளம் வடிந்தது.காரியம் முடிக்கப்பட்டது.
📗 அல்குர்ஆன்:11:44
வரலாற்றாசிரியர் முஹம்மது பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு அல்லாஹ் நாடிய போது, பூமியின் மேல் ஒரு காற்றை அனுப்பி வைத்தான்.அதையடுத்து அலைகள் ஓய்ந்தன. வானத்தின் வாசல்கள் மூடிக் கொண்டன.பூமியின் ஊற்றுக் கண்கள் தூர்ந்தன.
இதையே! மேற்கூறப்பட்ட வசனம் தெளிவுபடுத்துகிறது.அதையடுத்து தண்ணீர் படிப்படியாக குறையவும் வற்றவும் உள்வாங்கவும் தொடங்கியது.
🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....
📝 முஹம்மது ஃபாயஸ்🏅
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 30 / 1 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment