Friday, 13 January 2017


💠 _அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....._ 💠

✔ _*வலிமா விருந்தின் சட்டங்களும்,ஒழுக்கங்களும்*_

வலிமா பாடத்தின் முக்கியத்தும்:
மார்க்கத்தில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் விருந்து வலிமாவாகும்.ஹதீஸ் கலை வல்லுநர்கள் வலிமா பாடத்திற்கு கீழ்தான் விருந்தின் ஒழுக்கங்களை கூறியிருப்பார்கள்.

‼ *குர்ஆனில் பேசப்பட்ட வலிமா:*

நபியவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை திருமணம் முடித்த பின் வலிமா கொடுத்தார்கள்.அந்த வலிமாவை முடித்த பின் ஸஹாபாக்களில் சிலர் எழுந்த செல்லாமல் அங்கேயே உட்கார்ந்து நபியுடன் பேச ஆசைப்பட்டனர்.அப்பொழுது அல்லாஹ் நீங்கள் விருந்து சாப்பிட்வுடன் புறப்பட்டு சென்றுவிடுங்கள் என்ற வசனத்தை இறக்கி வைத்து விருந்தின் ஒழுக்கத்தை சமுதாயத்திற்கு கற்றுக்கொடுத்தான்.

📚 _அல்குர்ஆன் 33:53_

வலிமா விருந்து எப்பொழுது கொடுக்க வேண்டும்:
திருமண ஒப்பந்தம் நடைபெற்று கணவனும் மனைவியும் உறவாடியபின் வலிமா விருந்து கொடுக்க வேண்டும்.

ஹஜ்ரத் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் அன்னை ஜைனப் ரலி அவர்களின் வலிமாவை உறவை தொடங்கிய பின் கொடுத்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📚 _புகாரி :5154_
                 

♻ *வலிமா கொடுப்பது சுன்னத்:* ♻

வலிமா கொடுப்பவர் இது நபியின் வழிமுறை (சுன்னத்) என்ற நிய்யத்தில் கொடுக்க வேண்டும்.தன் பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக விருந்து அமையக் கூடாது.

நபியவர்கள் கூறினார்கள்:எவர் மக்களிடம் பாராட்டைப் பெறவேண்டுமென ஒரு காரியத்தில் ஈடுபடுவாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்து மக்களின் முன்னிலையில் அவரின் குறைகளை வெளிப்படுத்தில் கேவலப்படுத்தி விடுவான்.

📕ஸஹிஹுல் புகாரி

💰 *சக்திக்கு உற்பட்டு வலிமா கொடுத்தால் போதுமாகும்:❓*

அனஸ்( ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.நபியவர்கள் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்து வலிமா விருந்து கொடுத்தார்கள்.அதில் பேரிச்சம்பழம்,பாலாடைக்கட்டி,நெய் போன்றவை இடப்பட்டன.அதுவே அன்னாரின் வலிமா விருந்தாக அமைந்தது.

📚 _புகாரி 5159_

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:நபியவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்தபின் வலிமா விருந்து கொடுத்தார்கள்.அதில் ஒரு ஆட்டை விருந்தளித்தார்கள்.வேறு யாருக்கும் இதைவிட பெரியதாக நபியவர்கள் விருந்தளிக்கவில்லை.

📚 _புகாரி :5171_

வீண்விரயத்தை தவிர்க்க வேண்டும்:
இன்று நம் விருந்துகளில் மிச்சமாகுவதைக் கொண்டு பல ஏழைகளின் பசியை நிவர்த்தி செய்யலாம்.அந்தளவு உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.

நீங்கள் சாப்பிடுங்கள்;குடியுங்கள்;ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்.ஏனெனில் வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான்.

📚 _அல்குர்ஆன்:7-31_
       

👨‍👨‍👦‍👦 *விருந்துக்கு யாரை அழைப்பது❓*

பணக்காரர்கள் அழைக்கப்பட்டு,ஏழைகளை விட்டுவிடக் கூடிய வலிமா விருந்து, உணவுகளில் மிகக்கெட்டதாகும் என நபியவர்கள் கூறினார்கள்.

📚 _புகாரி :5177_

விருந்துக்கு பதில்கொடுப்பது வாஜிபாகும்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்று செல்லட்டும்.என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📚 _புகாரி :5173_

நோன்பு நோற்றவரும் அழைப்பை ஏற்க வேண்டும்:
நபியவர்கள் கூறினார்கள்,உங்களில் ஒருவர் வலிமாவுக்கு அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளவும்.நோன்பாளியாக இருந்தால் அவருக்காக துஆ செய்யவும்.நோன்பில்லாதவர் உணவுசாப்பிடவும்.

📚 _முஸ்லிம் :1431_

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நஃபிலான நோன்பு நோற்றிருந்த நிலையில் கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்று சென்று வந்தார்கள்

📚 _புகாரி:5179_

மார்க்கத்திற்கு முரணாக நடக்கும் வீட்டில் விருந்து உண்ணலாமா?

ஒரு சமயம் நபியவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள்.அவர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது வாசலில் உருவப்படம் போட்ட திரை தொங்கவிடப்பட்டிருந்தது.அதைப் பார்த்தவுடன் நபியவர்கள திரும்பி விட்டார்கள்.
📚 _அபூதாவூத் :3755_

வலிமா எத்தனை நாட்கள் கொடுக்கலாம்?
பழக்கத்தில் உள்ளதைவிட அதிகமான நாட்கள் வலிமா கொடுக்கத் தேவையில்லை.

ஒரு நாள்,இரண்டு நாள் என ஏழு நாட்கள் வலிமா கொடுக்கலாம் என புகாரி ஷரீபில் கூறப்பட்டுள்ளது.அல்லாமா அய்னி,இமாம் அல்அஸ்கலானி வலிமா ஏழு நாட்கள் வரை கொடுக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்களையும் கூறியுள்ளனர்.

என வே,உலமாக்கள் இதன் மூலம் நடைமுறை எப்படி ள்ளதோ அதுபோன்று வலிமாவை அமைத்துக் கொள்ளவேண்டுமென கூறுகின்றனர்.

நம் வழக்கில் வலிமா விருந்து ஒரு நாள் அனைவரையும் அழைத்து கொடுக்கப்படுகிறது.இது நபியின் சுன்னத்தை நிறைவேற்றியதாக ஆகிவிடும்.

🌴 *_கியாமத் நாளை நோக்கி குழுமம்_*🌴
பதிவு நாள் : 12 - 01 - 17

No comments:

Post a Comment