Tuesday, 20 February 2018

மறுமை வாழ்க்கையே நிரந்தரமானது - 2


அல்ஹாபிழ் அ.சதாம் உசேன் ஹசனி (B.A Arabic)

இவ்வுலகில் மனிதனுக்கு கிடைத்த எல்லா அருட்கொடைகளும் அவனுக்கு நிரந்தரமாக கொடுக்கப்பட்டது கிடையாது என்பதை மனிதர்களுக்கு நேரான பாதையை காட்டுவதற்கு இறக்கப்பட்ட குர்ஆன் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

"(விசுவாசிகளே)பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும்,
செல்வங்கள், உயிர்கள், கனிவிலைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்.மேலும் (நபியே இவற்றைப்)பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)

அன்பானவர்களே!
நாம் உலகில் பெறக்கூடிய எந்த இன்பமாக இருக்கட்டும் அல்லது துன்பமாக இருக்கட்டும் எதுவுமே நிலையானது கிடையாது என்ற அடிப்படைத் தத்துவத்தை மிகத் துள்ளியமாக இந்த வசனம் நமக்கு போதிக்கிறது..

இன்றைக்கு மனிதர்களில் பலர் இவ்வுலக இன்பமே நிறந்தரமானது என்ற எண்ணத்தில் மூழ்கி விடும் சமயம் அவற்றை இறைவன் நிரந்தரமற்றது என்பதை புரிய வைக்க பிடுங்கி விடுகின்றான்.

ஆனால் அதை புரியாத மனிதனோ வாழ்க்கை முழுவதும் முடிந்துவிட்டது என்று எண்ணி தன் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறான்..

இன்னும் ஒருசில மனிதர்கள் பெரும் பெரும் துண்பங்களில் சிக்குன்டு சின்னா பின்னமாகிய பின்பு இறைவன் அவனுக்கு இன்பத்தை அனுபவிக்க வைக்கும் சமயம் தன்னிலை மறந்து வாழ ஆரம்பித்து
விடுகின்றான்..

பிறகு இறப்பு வந்து அவனை கவ்விக் கொள்ளும் சமயம் இவ்வுலகை விட்டும் பிரியமுடியாத துயரத்தோடு விடை பெறுகிறான்.

அவன் பெற்ற செல்வங்களோ அல்லது செல்வாக்கோ ஒருபோதும் அவனை இவ்வுலகில் நிலைக்கச் செய்வது கிடையாது.
இவ்வாறு மனிதனுக்கு இவ்வுலகில் எவ்வாறு பற்றற்று வாழ வேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலம் பரிசுத்த குர்ஆன் மனிதனுக்கு விளக்குகிறது..

மனிதனின் வாழ்வும் இன்னும் வாழ்வாதாரமும் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சோதனை என்பதாக மனிதனை படைத்த இறைவன் குறிப்பிடுகிறான்.

ஆனால் மனிதன் அவசரக்காரனாக இருப்பதால் முன்னுள்ள காய்களை எடுத்துக் கொண்டு பின் கிடைக்கவிருக்கும் கனிகளை புறக்கணித்து விடுகின்றான்.
இதனால் அவன் பெறும் நஷ்டமோ ஈடுஇனை செய்யப்பட முடியாததாக மாறிவிடுகிறது..

ஆம்! உலகை மட்டுமே சம்பாரிக்க வேண்டும் என்ற வேட்கையோடு வாழ்ந்தவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வு என்று ஒன்று இருக்கிறது என்பதை மறுமையில் கண்டு கொண்டவுடன் அவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை இறைவன் பதிவு செய்து வைத்திருக்கின்றான்.

"மனிதன் அவனுடைய இரு கரங்கள் முற்படுத்தியதை அன்றய நாள் காண்பான்"மேலும் நிராகரிப்பாளனோ (அந்நாளில்)நான் (உலகில்)மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே! என்று கூறுவான்.
 (78:40)

அன்பானவர்களே!

உலகில் வாழ்ந்த காலமெல்லாம் உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது என்று எண்ணியவன்  இறப்பிற்கு பிறகு இறைவன் வாக்களித்த வாழ்க்கையை நேரில் கண்டு மிகப் பெரும் கைசேதத்தை வெளிப்படுத்துவதையே மேற்கூறிய வசனம் விளக்குகிறது.
எனவே நம் கண்ணில் பட்ட வாழ்க்கையை அனுபவிக்கும் எண்ணம் இருப்பது தவறல்ல.

ஆனால் உலகத்தை சம்பாரிப்பது மட்டும்தான் வாழ்க்கை என்று எண்ணி நிரந்தரமான மறுமை வாழ்வை மறப்பதுதான் மிகப் பெரும் தவறாகும்.

வல்ல இறைவன் நம் அனைவரையும் நிரந்தரமான மறுமை வாழ்விலும் இவ்வுலக வாழ்விலும் வெற்றியாளர்களாக ஆக்கி அருள் புரிவானாக..

Monday, 19 February 2018

சோதனைகள் மூலம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்


கப்பல் ஒன்று கடலில் வழிதவறி
செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.

அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.

அருகிலுள்ள தீவில் அவன்
கரையேறுகிறான்.

“இறைவா… இங்கிருந்து
எப்படியாவது என்னை தப்பிக்க
வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த
தீவில் எத்தனை நாள் நான்
இருப்பது?

என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??”  என்று பிரார்த்திக்கிறான்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு
உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து
எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும்
உதவி கிடைத்தபாடில்லை.
இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக்கொள்ள,
தீவில் கிடைத்த பொருட்கள்,
மற்றும் கப்பலின் உடைந்த
பாகங்கள் இவற்றை கொண்டு
ஒரு சிறிய குடிசை ஒன்றை
கட்டுகிறான்.

அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த
தனது பொருட்கள் மற்றும்
உடமைகள் சிலவற்றை மட்டும்
பத்திரப்படுத்தி, தானும் தங்கி
வந்தான்..

இப்படியே சில நாட்கள்
ஓடுகின்றன.

இவன் பிரார்த்தனையை மட்டும்
விடவில்லை.

இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவான் என்று தன்னை
தேற்றிக் கொண்டான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு
திரும்புகையில், அவன் கண்ட
காட்சி அவனை திடுக்கிட
வைத்தது.

பட்ட காலிலே படும் என்பது
போல… எது நடக்ககூடாதோ அது நடந்து விட்டது.

இவன்  தங்குவதுகென்று இருந்த ஒரே
குடிசையும் வானுயுறஎழும்பிய புகையுடன்
தீப்பிடித்துஎரிந்துகொண்டிருந்தது.

குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன
அதை பார்த்த இவன் அலறித்
துடித்தான். எல்லாம்
போய்விட்டது. இவனிடமிருந்த
மிச்ச சொச்ச பொருட்களும்
போய்விட்டது.

“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே
உன்னை மன்றாடினேன். நீ
என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக்
கொண்டாயே… இது தான் உன்
நீதியோ…?” என்று கதறி
அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின்
சப்தம் இவனை எழுப்பியது.

இவன் தீவை நோக்கி அது
வந்து கொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு
வழியாக இங்கிருந்து
தப்பித்தோம்.
யாரோ நம்மை
காப்பாற்ற வருகிறார்கள்.”
என்று உற்சாகத்தில் துள்ளி
குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் இவனை,
லைஃப் போட்டில் வந்து
அழைத்து சென்றார்கள்.

தான் இங்கே தீவில்
மாட்டிக்கொண்டிருப்பது
எப்படி தெரியும் என்று
அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை
எழும்பியதை பார்த்தோம்….

யாரோ தீவில் கரை ஒதுங்கி
காப்பாற்ற வேண்டி சிக்னல்
கொடுக்கிறார்கள் என்று
நினைத்தோம்” என்கிறார்கள்
அவர்கள்.

அப்போது இறைவன் குடிசையை
எரித்த காரணம் இவனுக்கு
புரிந்தது. இறைவனுக்கு நன்றி
சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே
மிக மிக அரிதான நிலையில்,
குடிசை மட்டும் தீப்பிடித்து
எரியவில்லை என்றால் தன்
நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.

அவசரப்பட்டு இறைவனை
நிந்தித்ததை நினைத்து
வெட்கினான்.

வாழ்க்கையில் பல
சந்தர்ப்பங்களில் நாம்
இப்படித்தான் இறைவனை
அவசரப்பட்டு தவறாக
எடைபோட்டுவிடுகிறோம்.

நம்மை காக்கவே அவன்
ஒவ்வொரு கணமும்
காத்திருக்கிறான். அவன் தரும்
சோதனைகள் அனைத்தும் நம்மை
வேறொரு மிகப் பெரிய
ஆபத்திலிருந்து காக்கவே
என்று நாம்
புரிந்துகொண்டால், எதைப்
பற்றியும்
அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

சோதனை
என்றால்… இறைவனின்
அருட்பார்வை உங்கள் மீது
விழுந்துவிட்டது விரைவில்
நல்லது நடக்கும் என்று
நம்புங்கள்.

👇👇👇

مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

11. எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன்  64:11

நன்றி இணையம்.

உண்மையான அறிவு எது?


அருமை அண்ணன் Siraj Ul Hasan அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

புத்தக ஆய்வுக்காக வந்திருந்த ததப்புருல் குர்ஆன் என்கிற புத்தம் புதிய குர்ஆன் விரிவுரை நூலின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே, ‘நினைத்தாலே வியப்பாக இருக்கின்றது. ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் தமிழில் இந்த அளவுக்கு மூலாதார நூல்கள் கிடைக்கின்ற நாள் வரும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. புகாரி, முஸ்லிம் என்று நபிமொழி தொகுப்பு நூல்கள் முதல் குர்ஆன் விரிவுரை நூல்கள் வரை வந்துவிட்டுள்ளன’ என்று வியந்தார்.

‘உண்மைதான். இன்று கூகுளில் தட்டினாலே இஸ்லாத்தைப் பற்றிய அருமையான நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் ஆய்வுகளும் வாசிக்கக் கிடைக்கும்’ என்று ஒப்புக் கொண்டு ‘என்றாலும்... ஒன்றைக் கவனித்தீர்களா? இத்துணை தகவல்கள் கிடைக்கின்ற தொலைவில் இருந்தும் மக்கள் மத்தியில் அறியாமை தானே இருக்கின்றது? நபிமொழி, ஆதாரம் என்று அழகாகப் பேசினாலும் அது மனத்தை ஈர்ப்பதாக இல்லையே, ஏன்?’ என்றேன்.

சிராஜுல் ஹஸன் சாகிப் யோசனையில் மூழ்கிவிட்டார்.

என்னுடைய அறைக்குத் திரும்பிய பிறகும் அந்தக் கேள்வியும் உரையாடலும் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.

முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு இன்று இஸ்லாத்தைப் பற்றிய நூல்கள் மிக அதிக அளவில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அவை பெரும்பாலும் விற்றுத் தீர்ந்தவாறு இருக்கின்றன.  என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளிவாசல்தோறும் குர்ஆன் விரிவுரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நபிமொழி விளக்க வகுப்புகளும் நடக்கின்றன.  என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு வர்ட் டூ வர்ட் சொல்லுக்கு சொல் குர்ஆனைப் புரிந்துகொள்கின்ற வகுப்புகளும் பெரும் அளவில் நடக்கின்றன. இதில் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்று வருகின்றார்கள். என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நம்முடைய இளவல்கள் நபிமொழிகளை வாசிக்கின்றார்கள். ஆதாரங்கள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்கள். அழகாக வாதிடவும் செய்கின்றார்கள். என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

நமக்கு முன்பு வாழ்ந்தர்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பு கிடைக்காத நிலையிலும் ஈமானிய ஒழுக்கத்திலும், நடைமுறை வாழ்விலும் நம்மை விட சிறந்த முஸ்லிம்களாய் முத்திரை பதித்திருக்கின்றார்கள்.

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு கூகுளில் தேடித் தெரிந்து கொள்கின்ற வாய்ப்பு இருக்கவில்லை. முகநூலில் உடனுக்குடன் ஆழிய செய்திகளைக் கற்றுக்கொள்கின்ற நற்பேறு கிடைத்திருக்கவில்லை. என்றாலும் அவர்களுடைய பேச்சும் வாக்கும் பெரும் வலிமை பெற்றிருந்தன.

எதனை மிஸ் செய்திருக்கின்றோம்? எங்கு தவறு இழைக்கின்றோம்? நம்முடைய பலவீனத்தின் ஆணிவேர் எது?
கேள்விகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.

இறுதியில் அண்ணல் நபிகளாரின் அமுத வாக்கு ஒன்றில் அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்துவிட்டது.

ஒரு முறை அண்ணல் நபிகளார்(ஸல்), ‘ஒரு காலம் வரும். அப்போது மக்களிடமிருந்து அறிவு அகற்றப்பட்டு விடும்’ என்று சொன்னார்கள்.

ஜியாத் பின் லபீத்(ரலி) என்ற தோழர் வியப்புடன், ‘இறைத்தூதரே. நாங்கள் குர்ஆன் ஓதுகின்றோம். எங்களுடைய பிள்ளைகளுக்கும் ஓதக் கற்றுத் தருகின்றோம். அவர்களும் ஓதுகின்றார்கள். அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஓதக் கற்றுக்கொடுப்பார்கள். மறுமை நாள் வரை (சங்கிலித் தொடர் போல) இது நடந்து கொண்டே இருக்குமே..’ என்றார்.

அண்ணல் நபிகளார்(ஸல்) , ‘ஜியாதே! உம்மை மதீனாவிலேயே சிறந்த அறிவாளி என்று நினைத்திருந்தேனே. யூதர்களும் கிறித்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அதிகமாக ஓதி வருவதை நீர் பார்க்கவில்லையா? நாள்தோறும் ஓதி வந்தாலும் அவற்றிலிருந்து பயனீட்டிக் கொள்வதில்லையே’ என்றார்.

மனத்துக்குள் வெளிச்சம்...

எது அறிவு? ஏடுகளை வாசிப்பதால் மட்டுமே அறிவு கிடைத்துவிடுவதில்லை. வாசித்தபடி வாழ்வதற்குப் பெயர்தான் அறிவு. அறிந்துகொண்டதை வாழ்வில் கடைப்பிடிப்பதற்குப் பெயர்தான் அறிவு. கற்றதற்கேற்ப செயல்படாமல் போகும் போது கற்றதால்தான் என்ன பயன்?

இன்று நாம் எப்படி நடந்துகொள்கின்றோம்?

அதிகமாக ஓதுகின்றோம். நாள்தோறும் ஓதுகின்றோம். மற்றவர்களுக்கும் கொடுக்கின்றோம். குர்ஆனிய செய்தியை விளக்குகின்ற கருத்துப் படங்களைப் பதிவிடுகின்றோம். ஒருவருக்கொருவர் குர்ஆனின் செய்தியைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் நின்றுவிடுகின்றோம்.

அதனைப் பின்பற்றி நடக்கின்றோமா? ஓதுகின்ற வசனத்தை வாழ்வில் கடைப்பிடிக்கின்றோமா?

செயல் செயல் செயல் ஒன்றே வெற்றி தரும். குர்ஆன் ஓதுவோம். குர்ஆனின்படி வாழ்வோம் வாருங்கள்.

Azeez luthfullah

இறையச்சமுள்ள சிறுகதை


அந்தக் காலத்தில் பெண்வீட்டார் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பதில் சில விதிமுறைகள் வைத்தீருந்தனர்.. அதன் படி வசதியுள்ள ஒரு பெண்ணிண் தகப்பன் பள்ளிவாசலில் காத்திருக்கிறார்.. பாங்கு சொன்னதும் யார் பள்ளிக்கு முதலில் தொழுக வருகிறார்கள் என கவனிக்கிறார்.. அப்போது ஒரு இளைஞன் தொழுக வருகிறான்.. அழகான தாடியோடு வந்தவன் ஒழுச் செய்து தொழுகையை நிறைவேற்றுகிறான்.. சுன்னத்தான தொழுகையையும் அவன் முடிக்கிறான்.. அவனின் ருக்கு,  சஜ்தா மற்றும் சுன்னத்தான தொழுகைகள் எல்லாம் சரியாக இருந்ததால் இவருக்கு மிகவும் திருப்தி..

அந்த இளைஞனிடம் சென்று தம்பி என் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் தான் சரியான மாப்பிள்ளை.. என் பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.. அதற்கு அந்த இளைஞன் ஐய்யா  நான் மிகவும் ஏழை.. சோத்துக்கே வழியில்லாதவன்.. நீங்களோ பெரிய பணக்காரர் அதனால் ஒத்து வராது என்று  கூற அதற்கு அவர் இறையச்சம் உள்ள மாப்பிள்ளை தான் எனக்கு  தேவை பணக்கார மாப்பிள்ளை அல்ல என கூறி  அன்று மாலையே தன் பெண்ணிற்கு நிக்காஹ் செய்து வைத்துவிடுகிறார்..*

 அன்று முதல் இரவு கணவன் அமர்ந்திருக்க மனைவி உள்ளே வருகிறாள்.. ஒரு கோப்பையில் ஏதோ ஊறிக் கொண்டிருக்க பக்கத்தில் ஒரு பொட்டளம் மடித்து வைக்கப்பட்டிருந்தது.. உள்ளே வந்தவள் கணவணிடம் இது என்ன என்று கேட்க அவன் மதியம் உன் அத்தா என்னை உனக்கு திருமணம் செய்து தருகிறேன் என்று சொன்ன போதே உனக்கு உணவளிப்பது என் கடமையாகிவிட்டது ..எனக்கு மதியம் இரண்டு ரொட்டி துண்டுகள் கிடைத்தன.. ஒன்றை இந்த கோப்பை நீரில் ஊறப்போட்டுள்ளேன்.. இரவு நேரம் சாப்பிடும்போது சத்தம் கேட்கும் என்பதால்.. இன்னொன்றுதான் இந்த பொட்டளத்தில் மடித்துள்ளேன்.. நாளை உணவுக்காக என்று கூறினான் ..

இதைக் கேட்டதும் மனைவி உங்களை நிக்காஹ் செய்தது தப்பா போச்சு என சொல்ல கணவண் அதிர்ச்சி அடைந்தான்.. கணவன் உடனே மனைவியிடம் இதைத்தான் உன் தந்தையி
டமும் சொன்னேன் உங்கள் வசதிக்கெல்லாம் நான் ஈடாக வரமுடியாது என்று கூறினான்.. அதைக்கேட்ட மனைவி நான் அதை சொல்வில்லை ஒரு ரொட்டி நமக்கு போதுமென்றால் இன்னொரு ரொட்டியை நீங்கள் தர்மம் செய்திருக்க வேண்டும்.. இன்னைக்கு கொடுத்த அல்லாஹ் நாளைக்கு கொடுக்கமாட்டான் என்ற நம்பிக்கை இல்லையா??  நம்பிக்கை இல்லையேனில் ஈமானும் இல்லை என கூற தன் தவறை உணர்ந்த அவன் தன் மனைவியை நினைத்து அகமகிழ்ந்தான்.. ஒரு ரொட்டியை சேர்ந்து சாப்பிட்ட அவர்கள் இன்னொரு ரொட்டியை தானம் செய்தனர்!

நான் நல்ல மனைவியாக இருப்பதை விட சாலிஹான மனைவியாக இருப்பதையே விரும்புகிறேன்.

- நன்றி இணைம்.

ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள் – அடிக்கடி கோபப்படுகிறீர்களா? பாதுகாவல் தேடுங்கள்!


“அற்ப விஷயங்களுக்கெல்லாம் எனக்குக் கோபம் வருகிறது….

கேள்விப்பட்டது போல் இல்லை? கடந்த முறை உங்களுக்கு கோபம் வந்த போது என்ன செய்தீர்கள்?  கத்த ஆரம்பித்தீர்களா அல்லது சாபம் கொடுத்தீர்களா?  இது உண்மையில்  பலவீனமான ஈமானின் அடையாளம் என அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்!

கோபம் வரும் தான், ஆனால் அதை மாற்றி ஒரு நற்கூலி தரும் சுன்னத்தாக ஆக்குங்கள்: அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுதல்.

கோபத்தின் போது ஓத வேண்டிய துஆ!

َ أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ

அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி 3282)

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ

அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்றும் கூறலாம். (ஆதாரம்: புகாரி 6115)

அதனால், குர்’ஆன் ஓதத்தொடங்கும்போதும், தொழுவதற்கு முன்னாலும் மட்டும் இஸ்தி’ஆதா (பாதுகாவல் தேடுதல்) சொன்னால் போதாது, உங்களுடைய கோபத்தை அடக்கவும் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துங்கள்!

அடுத்தமுறைஉங்களுக்குக்கோபம்வரும்போது, ஏதாவதுசெய்வதற்குஅல்லது பேசுவதற்குமுன்னால்,‘அ’வூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’என்றுகூறுங்கள்!

மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் சாதனைகள்


ஏவுகணை தந்தை திப்பு சுல்தான்!!!

இந்தியாவில் முதன்முதலில் பீரங்கியை அறிமுகப்படுத்தியவர் பாபர்!!!

அணு சக்தி துறையை இந்தியாவில் நிறுவியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா!!!

உயர் கல்வி நிறுவனங்களை நிறுவிய நவீன கல்வியின் சிற்பி அபுல் கலாம் ஆசாத்.!!

ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனை நாயகன் அப்துல்கலாம்!!

48 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த 48 வயதான அப்துல் ரசாக்!!!

18 வகையான விமான மாதிரிகளை கண்டுபிடித்த 18 வயதான ரய்யான்!!!

14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது  இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம் !!!

64 கிராம் உலகின் சிறிய செயற்கைகோள் கண்டறிந்த 18 வயதான கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சார்ந்த ரிபாத் சாரூக்!!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல Project -களை  வருடத்திற்கு 500-1000 Project களை வெற்றிமாக முடித்து மாணவர்களை வெளிகொடுக்கும் நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த தாஜுதீன் சார்.

அதுபோல பாரதிதாசனில் பணிபுரிந்த
புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட Retired  அக்பர்ஷா அவர்கள்!!

மண்புழு  இயற்கை உரம் உருவாககிய டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்’ (சென்னை புதுக்கல்லூரி!!

பாசுமதி அரிசி  ரக கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’ (இளையான்குடி)!!!

ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’ (அண்ணாமலை பல்கலைக்கழகம்-)!!

சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்)!!!!

பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்)!!!

மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’ (பாண்டிச்சேரி பல்கலைகழகம்)!!!

மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர்கல்லூரி – பாளையங்கோட்டை) .

உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் , இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்குவராமலேயே உள்ளனர்.

சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்திஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர். (நபி மொழி- திர்மிதி).

பூதலூர் அப்துல்மாலிக்
91-9842351894.

Sunday, 18 February 2018

நாமும் சர்காரி முசல்மான்களில் ஒருவரா?


- அஹ்மத் அன்சார் இப்னு முஹம்மத் சர்புதீன்

குறிப்பு: இந்த கட்டுரை யாரையும் நீ தான் உண்மையான முஸ்லிம், நீ காஃபிர் என்று சான்றிதழ் கொடுக்கும் பதிவல்ல. நம்மை நாமே சுய ஆய்வு செய்யும் ஒரு உளவியல் பயிற்சியே. (Psychological Exercise)

2010-க்கு பிறகு ஏற்பட்ட சமூக ஊடகங்களின் எழுச்சிக்கு பின்னர் இந்தியாவை மையமாகக் கொண்டு வெளிவரும் வலைதள செய்திகள், முகநூல், ட்விட்டர் பதிவுகளில் புதிய வடிவிலான சொல்லாடல்கள் உருவெடுத்தன. உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோதிக்கு துதி பாடுபவர்கள் பக்த் (Bhakt) என்று அழைக்கப்படுகின்றனர். இதுவே மருவி தமிழ் அரசியல் விமர்சகர்கள், மீம் மற்றும் நையாண்டி ட்ரோல் செயற்பாட்டாளர்களால் பக்தாள் என்று பரவலாக பகிரப்படுகிறது.

சங்பரிவார், RSS, இந்துத்துவ சிந்தனையாளர்களை ‘சங்கி’ (Sanghi), ‘ஐட்டி கேங்’  (Chaddi Gang) மற்றும் ‘டவுசர்கள்’ என்றும், தங்களுடைய அரசியல் தலைவர்களை அல்லது கொள்கைகளை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களை அவர்கள் விபச்சாரம் புரிவோர் என்னும் தொனியில் ப்ரஸ்டிட்யூட் (Presstitute) என்றும், ஒருதலைபட்ச  மதச்சார்பின்மை (Secularism) பேசி அசிங்கப்படுவோர்களை ‘சிக்யூலர்ஸ்’ (Sickulars) என்றெல்லாம் பட்டப்பெயர்களை இந்த சமூக ஊடக உலகம் வழங்குகிறது.

நம் முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு பெயரை அவர்கள் வைத்துள்ளனர். தமிழ் முஸ்லிம்களுக்கு ஏற்கனவே துலுக்கன், துலுக்கச்சி என்ற பெருமையான வார்த்தைகள் இன்றளவும் இருப்பது போக, வட இந்தியர்களால் மிக வீரியமாக ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களை குறிக்கும் சொல்லாக இன்று திகழ்ந்துவருகிறது ‘முல்லா’ (Mullah). முஸ்லிம் பெண்களை அழைக்கும் போது ‘பீபி’ (Beebi) என்பர். நம்மில் பலருக்கு இதுபோன்ற பலவார்த்தைகள் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கலாம்.

சரி, விடயத்திற்கு வருவோம். மார்கத்தையும், இந்திய அரசியலையும் ஓரளவிற்காவது விளங்கிய முஸ்லிம்கள் தங்கள் உம்மாவில் அங்கம் வகிக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை விமர்சிக்கும் சொல்லொன்றும் இருக்கிறது. அதுதான் ‘சர்காரி முசல்மான்’ (Sarkari Musalman). தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும்பொழுது ‘அரசாங்க முஸ்லிம்’ என்ற பொருளில் வரும். அதாவது சுய இலாபத்திற்காக அரசாங்கத்திற்கு அடிவருடும் முஸ்லிம்கள். இன்னும் புரியும்படி சொன்னால், இஸ்லாத்தில் நாங்கள் மிதவாதத்தை கடைபிடிக்கிறோம் என்று மார்தட்டும் நவநாகரீக ‘மாடரேட், நடுநிலை முஸ்லிம்கள்’ (Moderate Muslims).

இவர்களின் பிரச்சினை இரண்டே இன்மையை தவிர வேறு ஒன்றும் இருப்பதாக தெரிவதில்லை. முதலாவது மார்க்க அறியாண்மை. இரண்டாவது அரசியல் தெளிவின்மை. இதில் ஏதாவது ஒன்றில் புலமை பெற்றிருந்தால் கூட சர்காரி முசல்மான் பட்டியலிலிருந்து நாம் தப்பித்திருப்போம். அப்படியானால் மார்க்க அறிவில்லாமல் வெறும் அரசியல் விழிப்புணர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு நாம் சுவனத்தை அடைந்துவிடமுடியுமா? என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். நான் கூறியதற்கு அது பொருளல்ல. மார்க்க விடயத்தில் அரைவேக்காடாக இருந்தாலும், அந்த அரைவேக்காட்டுத்தனம் தொடராமல் நம்மை பாதுகாக்கும் மிகப்பெரும் அரணாக அரசியல் நகர்வுகளை பகுப்பாயும் நமது ஆற்றல் விளங்குகிறது.

எவனொருவன் தான் நேசிக்கும் சமூகம், தான் பெருமைப்படும் கலாச்சாரத்திற்கு எதிராக பின்னப்படும் அரசியல் சதிவலைகளை இனம் கண்டு கொள்கிறானோ, அவனே மார்க்க விவகாரங்களில் தன்னுடைய பங்களிப்புகளை சீர்படுத்த முயற்சி மேற்கொள்வான்.

நானோ, நீங்களோ தொழுகைகளிலும், இன்னபிற வழிபாடுகளை தாண்டிய இஸ்லாமிய நற்காரியங்களிலும் குறையுடையவர்களாக இருக்கலாம். இந்த குறைகளையெல்லாம் சிறிது. சிறிதாக நிவர்த்தி செய்யும் ஊக்கியாக அரசியல் புரிதல் விளங்குகிறது என்பதை சுய அனுபவத்தின் மூலமாக உணருபவன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்களை பகிர்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் இந்த நயவஞ்ச போரில் சிக்குண்டு பலவருடங்களாக சர்காரி முசல்மானாக இருந்து கடந்த ஆண்டில் செயல்படும் முஸ்லிமாக (Practising Muslim) மார்க்த்தை தழுவியோர்களில் நானும் ஒருவன். அல்ஹம்துலில்லாஹ்.

அப்போ, நம் அரசியல் பார்வைகளை எவ்வாறு மெருகேற்றிக்கொள்வது? இந்த சதிகளையெல்லாம் எப்படி இனம்கண்டு கொள்வது? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகளும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளத்திடமே உள்ளது. நம்மில் பலர் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளின் தலைப்புகளை மட்டுமே வாசித்து அவசர கதியில் கோபப்படுவோராக அல்லது மகிழ்ச்சியில் மெய்சிலிர்பவர்களாக உள்ளோம். இந்த போக்கை களைந்து சமூக ஊடகங்களில் வரும் அப்பட்டமான முஸ்லிம் விரோத பதிவுகள், பாராட்டுவது போல் வரும் நயவஞ்சக செய்திகளையெல்லாம் இஸ்லாமிய வரலாற்றோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு மார்க்கத்தில் கற்றறிந்த மிகப்பெரும் ஆலிமாக நாம் உருவாக வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

அடிப்படை இஸ்லாமிய வரலாறு கூட தெரியாமல் நம்மில் இன்னும் நிறைய பேர் இருக்கிறோம்???/!!! முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை வரலாறு கூட ஒரு பகுதி மறைக்கப்பட்டு மற்றொரு பகுதி மட்டும் ஊடகங்களால் அவர்களின் இலட்சியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அறியாண்மைக்காரர்களான நாமும் BBC-யோ அல்லது CNN தொலைக்காட்சியோ, ஏதேனும் ஒரு ஈத் பெருநாள் தினத்தன்றோ அல்லது ரமலான் மாதத்திலோ Prophet Muhammad என்று தலைப்பிட்டு ஏதேனும் ஒரு செய்தி ஒளிபரப்பினால் உடனே, நம்ம நபிய பத்தி BB-லயே கட்டுரை எழுதீருக்காங்க என்று பெருமைப்பட்டுக்கொள்வோம். இன்றைக்கு ஈத் பெருநாள் தொழுகைகளை எத்துணை தமிழ் ஊடகங்கள் ஒளிபரப்பியது தெரியுமா? என்றெல்லாம் நமக்கு நாமே தன்னிறைவு அடைந்து மகிழ்ச்சி கொள்வோம்.

சேத்தன் பாகத் (Chetan Bhagat) என்ற இன்றைய கல்லூரி இளசுகளால் விரும்பப்படும் ஒரு எழுத்தாளரின் ஆங்கில புத்தகம் வெளிவந்த உடனேயே, அதை தானும் வாங்கி அட்டைப்படத்தை புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்து பெருமையடிக்கும் முஸ்லிம்களில் எத்துணை பேர், ரசூலுல்லாஹ்வின் வரலாற்று நூல்களையோ அல்லது நேர்வழிகாட்டப்பட்ட நான்கு கலீஃபாக்களின் சரித்திர புத்தகங்களையோ படிப்பதில் ஆர்வம் காட்டியிருப்போம்? ஏன் நமது தாய்மொழியான தமிழில் இந்த இஸ்லாமிய புத்தகங்களெல்லாம் வந்ததே இல்லையா? அல்லது ஆங்கிலத்தில் தான் நான் படிப்பேன் என்றாலும், இந்த சஹாபாக்களின் தியாக வரலாறு குறித்தான படைப்புக்களை வாங்குவதில் எந்தளவிற்கு நாம் முயற்சி எடுத்திருப்போம்?

இப்போது நம்மில் பலருக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கும் நாம் எதில் பின்தங்கியிருக்கின்றோம் என்று.

இறுதியாக ‘சர்காரி முசல்மான்’ பட்டியலில் நாம் இருக்கின்றோமா, இல்லையா? எந்த அளவிற்கு நம் நோய் அதிகமாகி விட்டது? யாரெல்லாம் சர்காரி முசல்மான்கள் என்பன போன்ற சந்தேகங்களுக்கு உளவியல் ரீதியான பார்வைகள் கீழே தரப்பட்டுள்ளன. இதனை படித்து, புரிந்து நம்மை நாம் சீர்படுத்திக்கொள்வோம். நான் உட்பட.

1. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:

நயவஞ்சக ஊடக செய்தி: உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நவீனமயமாக்கப்படாத மதரசாக்களை இழுத்து மூடுவேன் என சூளுரை.

மறைக்கப்படும் செய்தி: போலிச்சாமியாருமான யோகி முஸ்லிம்களை வேரறுக்க சூளரை.

சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: அவரு முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றாலும், இந்த மேட்டர்ல நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்றேன். நம் சமுதாயத்தில் மதரசா வகுப்பிற்கு செல்வோர்கள், இந்த டிஜிட்டல் இந்தியாவில் வெறும் மார்க்க கல்வியை மட்டும் வைத்துக்கொண்டு பொழப்பு நடத்த முடியாது.

2. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:

நயவஞ்சக ஊடக செய்தி: மாணிக்க மலராய பூவி பாடலில் வெடித்தது சர்ச்சை. ஹைதராபாத் இஸ்லாமிய அமைப்பு ப்ரியாவிற்கெதிராக ஃபத்வா.

மறைக்கப்படும் செய்தி: பத்மாவத் திரைப்பட சர்ச்சை போல எந்த ஒரு அமைப்பும் வீதியில் வந்திறங்கி பொது சொத்துக்களை சேதப்படுத்தவில்லை. எந்தவொரு சுன்னி உலமா பேரவையும் ஃபத்வா விடுக்கவில்லை. வெறும் நான்கு இளைஞர்களின் புகாரால் இதுவரை FIR மட்டுமே அரசியலமைப்பு உரிமையின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஒமர் லுலு என்பன், இதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டு ஆபாச நடிகையை தன் ஆபாச படமொன்றில் நடிக்க வைக்க முயற்சி எடுத்து அதை தன் வாயாலேயே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன்.

சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: இந்த ஹஜ்ரத்மார்களுக்கு வேற வேலையே இல்லையா? ஏன் சமுதாயத்தின் மானத்தை வாங்குகிறார்கள்? நபியையும், அவரு மனைவியையும் புகழ்ந்து தான பாட்டு வந்திருக்கு?
குறிப்பு: பல சர்காரி முசல்மான்கள், RSS சங்கிகளைப்போலவே ஆலிம்களை முல்லாக்கள் என்று அழைக்கின்றனர் என்பது கொசுறு செய்தி.

3. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:

நயவஞ்சக ஊடக செய்தி: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இஸ்லாமியர்களின் முகமது நபி குறித்த ஈரானிய இயக்குனர் மாஜித் மஜீதியின் திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்.

மறைக்கப்படும் செய்தி: தன்னுடைய தொழிலின் ஆரம்ப கட்டத்தில், 90-களில் எதுக்கு பொண்டாட்டி, என்ன சுத்தி வப்பாட்டி என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார் A.R. ரகுமான். ஏன் ஓரிரு வருடத்திற்கு முன்பு கூட நபி (ஸல்) எதிர்த்த திருமணமில்லா பாலியல் உறவுமுறை குறித்தான மணிரத்தினத்தின் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் அமெரிக்கர்களும், யூதர்களும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் அந்த இயக்குனர் ராஃபிதி ஷியா பிரிவை சேர்ந்தவர். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹூ அக்பர். ங்கொக்கா, மக்கா. பாய், இந்த படம் மட்டும் வெளீல வந்திருச்சுனா வைங்க, அப்புறம் எல்லாரும் நம்ம ஆளுகளா மாறிடுவானுக. ச்செ, சான்ஸே இல்ல. நம்ம தமிழ் பையன் ரஹ்மான் சமுதாயத்த வேற லெவலுக்கு கொண்டு போயிட்டிருக்காரு. எவன் பாய் சொல்லீருக்கான் இதுவரையும், ஆஸ்கார் மேடையில எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று?

4. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:

நயவஞ்சக ஊடக செய்தி: “முஸ்லிம்களும் எங்க அப்பத்தாவுக்கு பொறந்தங்கதான். தமிழ்நாட்டுல எங்களை பிரிக்க யாராலும் முடியாது. தமிழர்களுக்கு எங்க அப்பன் முருகன்தான்டா கடவுள். உங்க ராமனின் ஆட்டம் இங்கே செல்லுபடியாகாது”, கோவையில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டில் சீமான் அனல் பறக்கும் பேச்சு.

மறைக்கப்படும் செய்தி: தப்பித்தவரி நாளை அதிசயமாக ஆட்சியை பிடித்தால் இப்படி மாற்றி பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பன் முருகனின் தம்பி விநாயகன், ஆகையால் எனது முஸ்லிம் சகோதரர்களும் தங்களது தமிழ் பெருமையை போற்றும் வகையில் விநாயகனை வணங்க வேண்டும்.

சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: மாப்ள, எனக்கென்னமோ இப்ப இருக்குற தமிழ்நாட்டோ அரசியல் வெற்றிடத்த சீமான் அண்ணன் வந்தாதான் சரியா நிரப்புவாருனு தோணுது. ஹூமாயுன்னு பேர வச்சிருக்கு ஒரு முஸ்லிம் கூட என்ன அருமையா நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். பேசாம, இந்த ம.ம.க. முஸ்லிம் லீக்லயெல்லாம் இருந்து வெலகீட்டு சீமான் கூட போய் சேரலாம் வா.

5. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:

நயவஞ்சக ஊடக செய்தி: “முஸ்லிம் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பார்த்து ஒரு பிரதமராத என்னால் இன்னும் அமைதியா இருக்கமுடியாது” முத்தலாக் குறித்தான பாராளுமன்ற விவாதத்தில் நரேந்திர மோதி உணர்ச்சி மல்க கண்ணீர் விடுத்தார்.

மறைக்கப்படும் செய்தி: மார்க்கத்தை விளங்காத வெளிநாட்டில் வசிக்கு வடஇந்திய முஸ்லிம்களே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதுவு வெகு சிலரே. மற்ற மதங்களில் மனைவிகளுக்கெதிராக கொலைவெறித் தாக்குதல், மண்ணெண்ணை ஊற்றி எரிப்பு போன்ற சம்பவங்களெல்லாம் அரங்கேறுகின்றது. இந்த சட்டம் நிறைவேறினால் இதுநாள் வரையில் சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் ஆண்களை கைது செய்து கொண்டும் போக்கு இன்னும் அதிகமாகும். மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி முத்தலாக் விடுத்தார் என போலியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறையிலடைப்பார்கள்.

சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: என்னதான் குஜராத்தில் 2000 முஸ்லிம்களை கொன்றாலும், இப்ப அவரு நம்ம நாட்டோட பிரதமர். அவரு செய்யுற நல்ல விஷயத்தையும் பாராட்டலாம்ல? நாளைக்கு நம்ம வீட்டுக்காரனும் முத்தலாக் கூறி மிரட்டினால் என்ன பண்ணுறது?

குறிப்பு: வளர்ந்துவரும் மார்க்க விழிப்புணர்வின் காரணமாக கணவன்மார்கள் ஒருவேளை வழிதவறி போனாலும் கூட இவர்களே அவர்களுக்கு இறையச்சத்தை ஊட்டுவதை தமிழகத்தில் எத்தனையோ மொஹல்லாக்களில் பார்க்கமுடிகிறது. இருந்தாலும் இந்த தேவையில்லா முத்தலாக்கோஃபோபியா.

முடிவுரை:

நான் குறிப்பிட்டது வெறும் ஐந்து உதாரணங்கள் மட்டுமே. இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கலாம். அதை மார்க்க வரலாற்றோடு தொடர்புபடுத்தி சரி எது, தவறு எது என்பதை பகுத்தறிய முயற்சிப்போமாக. இன்ஷா அல்லாஹ். வல்ல இறைவன் நம் அனைவரையும் அறியாண்மையிலிருந்து பாதுகாத்து, நம் கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக. ஆமீன்.

Friday, 16 February 2018

🔰🔰எது உலகப்பொதுமறை🔰🔰

--ஆலிமா எஸ்.நஜ்மா சித்தீக்கிய்யா M.A

மனிதன் உயிர் வாழ காற்று, நீர், உணவு, இருப்பிடம் ஆகியவை இன்றியமையாதது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இவ்வாறு உயிர் வாழும் மனிதன் அவனது சிந்திக்கும் ஆற்றலால் மட்டுமே இன்ன பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுகின்றான். மனிதர்களை "மாக்களாய்"அல்லாமல் மக்களாய் வாழ வைக்க வேண்டும் என்றால் நன்மை,தீமையை பகுப்பாய்வு செய்யக்கூடிய சிந்திக்கும் ஆற்றலால் மட்டுமே சாத்தியமான விஷயம் எனலாம்.உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான கொள்கைகளும், கோட்பாடுகளும், வேதங்களும், சித்தாத்தங்களும், தத்துவங்களும் நிறைந்திருக்கின்றன. இதில் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் தாங்கள் வாழும் காலக்கட்டத்திற்கும், சூழலுக்கும் ஏற்றார் போல் ஒரு கொள்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் மூதாதையர்கள் பின்பற்றியதை முன்னிறுத்தி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ தனக்கென கொள்கையோ, கோட்பாடோ இல்லாமல் மனம் போல வா(வீ)ழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக எல்லா தரப்பு மக்களும் தாங்கள் பின்பற்றும் கொள்கையோ அல்லது சித்தாந்தமோ மட்டும் உலகம் முழுவதற்கும் ஏற்றமிகு சிந்தைகளை அள்ளித்தரும் அரிய பொக்கிஷம் என்று எண்ணுகின்றனர்.

இத்தகைய சூழலில் நம் இந்திய நாட்டில் பரவலாக மக்களால் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சில வேதங்களையும்,புத்தகங்களையும் உலக பொதுமறை என்ற இந்த தலைப்பில் அலச  கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு புத்தகத்தை உலக பொதுமறை என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் கருத்துக்கள் உலகம் முழுவதாலும் பின்பற்றத்தக்க சிந்தனைகளை ஊட்டிடும் புத்தகமாக இருக்க வேண்டும் என்பது தலையாய விஷயம். உதாரணமாக இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களாக கருதப்படும் இந்துக்களின் வேதமான பகவத் கீதையை எடுத்துக் கொண்டோமேயானால்  கீழ்சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)“நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாகஇருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெறவிருப்பும் வாழ் வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செ ய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ , ஒரு சிறந்த கல்வி மானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தா யானால், அடுத்த பிற வியில் உனக்கு விடிவு உண்டு” (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்: வீ.ஆர். நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)
கீதையின் மேற்சொன்ன வசனம் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாய் உள்ளது.மனிதர்களின் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்றார்போல் அவரவரது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள உத்தரவிடுவதாய் மட்டுமே ஒரு உலகப்பொதுமறை இருக்க வேண்டும்.மாறாக குலத்தொழில்கள் மட்டுமே சந்ததிகள் செய்ய வேண்டும் என்றால் நவீன விஞ்ஞான வளர்ச்சி,இயந்திரமாக்குதல் போன்றவை சில குலத்தொழில்களையே இல்லாமல் ஆக்கி விட்டது.இந்நிலையில் அந்த சந்ததிகள் நிலமை என்ன?இந்திய அளவில் கூட வட நாட்டுக்கு ஒரு விதமாகவும் தென்னாட்டுக்கு ஒரு விதமாகவும் இப்புத்தகம் இருக்கிறது.எனவே இந்நூலை நாம் எப்படி உலக பொதுமறை என அங்கீகரிப்பது??.

மேலும் இந்திய மக்களில் சிறுபான்மை சமூகமாகிய கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பைபிளை உலகப் பொதுமறை என அங்கீகரிக்க இயலுமா என அலசுவோம்.ஒரு வேதம் அல்லது உலகப்பொதுமறை என்பது உலக மக்கள் யாவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க முக்காலத்திற்கும் ஏற்ற அம்சங்களை உள்ளடக்கியதாய் இருக்க வேண்டும்.உதாரணமாக “சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.(லேவியராகமம் 15:19-24) என்ற இவ்வசனம் பெண்களுக்கு இயற்கையாய் ஏற்படும் மாதவிடாயை மாபெரும் தீட்டு என்று சித்தரிக்கிறது.இவ்வித இயற்கை உபாதை ஏற்பட்ட பெண்கள் உட்காரும் இடம் முதல் படுக்கும் இடம் வரை தீட்டு ஏற்படும் என்றால் மனிதர்கள் எப்படி பொதுவான இடங்களிலும் வெளிப்பகுதிகளிலும் சஞ்சரிப்பார்கள்??. மனிதர்கள் பொது இடங்களுக்கு செல்வதையும் பஸ்களில் பிரயாணம் செய்வதையும் கூட தடை செய்ய நேரிடுமே!!!.உலகளாவிய மக்களுக்கு உபதேசம் செய்யும் ஓர் இறைமறை ஏற்றமிகு கருத்துக்களை எடுத்தியம்ப வேண்டுமே தவிர ஏற்கத்தக்கா கருத்துக்களை விதைக்க கூடாது.தமிழ் மொழி இலக்கியங்களில் தலையாயதாய் கருதப்படும் திருக்குறள் பரவலாக தமிழ் மக்களால் உலகப்பொதுமறை என ஏற்றுக்கொள்ளப்படுவதால் அதைப் பற்றியும் ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்."கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்(அதிகாரம்:புலால் மறுத்தல்,திருக்குறள்.) உயிரைக் கொல்லாதவனையும்,ஊனை உண்ணாதவனையும் உலக உயிர்கள் வணங்கி நிற்கும் என்பது இக்குறளின் பொருள்.மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் பல சிறந்த கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கியது என்றாலும் உலகப்பொதுமறை என ஏற்றுக்கொள்ள இயலாது என்பதற்கு இதுவே ஓர் சிறந்த உதாரணம்.புலால் உண்ணாமையை வலியுறுத்தி ஒரு அதிகாரமே இருக்கிறது என்றால் பனிப்பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களின் நிலை என்ன?அங்கு என்ன விளைச்சல்கள் செய்ய முடியும்?பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து சைவ உணவுகள் என்பது சாத்தியமற்றதே.இவ்வாறு உலகளாவிய அளவில் செயல்படுத்துவதற்கு முடியாத சில முரண்பாடுகள் திருக்குறளிலும் இடம்பெறுகிறது.
இத்தகைய சூழலில் முக்காலத்திற்கும் பொருந்துவதாய்,உலகம் முழுமைக்கும் உகந்ததாய்,எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாய் இன்றளவும் எவ்வித மாற்றமும் இன்றி அரிய பல கருத்துக்களை உள்ளடக்கியதாய் ஒரு அற்புதம் இருக்கிறது என்றால் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட அல் குர்ஆன் மட்டுமே எனலாம்.இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. அல்குர்ஆன் 10:37-38இத்தகு மேன்மைமிகு மாமறை கூறும் வழியில் வாழ்ந்து  ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!

வெற்றியை நோக்கி - 2


குமரி அன்ஸாரி MCA

"உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன்.” (திருக்குர்ஆன் 58:11)

குர்ஆன் இறங்கிய அந்த பொழுதிலேயே கற்றலை முன் வைத்தே ஆரம்பமாகிறது. அது கல்விக்கு குர்ஆன் தரும் முக்கியத்துவம். கிபி ஏழாம் நூற்றாண்டில் ஹிரா குகையில் கல்வி என்பது என்னவென்று தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களை தன் தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். அன்றே நபி (ஸல்) அவர்களுக்கு தன் வானவர் மூலம் வஹி என்ற இறை செய்தியை அறிவிக்கின்றான்.
 நபி (ஸல்) அருகில் வந்த வானவர் ஜிப்ரீல் ‘ஓதுவீராக’ என்கிறார்.
கல்வி ஞானம் இல்லாத ‘உம்மி’ யான (எழுத வாசிக்க தெரியாத) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படி ஓதுவார்?
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஓதத் தெரியாதே’ எனத் தன்  நிலையை வெளிப்படுத்துகிறார். ஜிப்ரீல் கட்டியணைத்து, ஓதுவீராக என அவரை ஓதவைக்கிறார். அன்றுதான் அகிலத்தை மாற்றி அமைத்த, அறியாமையை அடியோடு சாடி அழித்த, அடிமைத் தனத்தை இருந்த இடம் தெரியாது இல்லாது ஒழித்த, பெண் விடுதலையைக் கண்போன்று தந்த, அறிவுப் புரட்சியை, சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தி அறிவொளி பரப்பி காட்டுமிராண்டி தனமான அரேபியாவில் அகிலத்தின் முதல் கல்வி புரட்சியை தொடக்கி வைத்த அந்தப் புனிதமிகு குர்ஆனின் முதல்  வசனம் இறங்கி  அருளப்பட்டது.

இன்றைய உலகம் மார்க்க கல்வியைப் உலகக் கல்வியில் இருந்து வேறுபடுத்தியே பார்க்கின்றது. மார்க்க கல்வி வேறு.  விஞ்ஞானக் கல்வி, அறிவியல் கல்வி, பௌதிகக் கல்வி, வானியல் கல்வி, இரசாயனக் கல்வி, பொறியியற் கல்வி, மருத்துவக் கல்வி, உடற்கூற்றுக் கல்வி, தத்துவக்கல்வி, பொருளாதாரக் கல்வி, வணிகக்கல்வி, கணனிக் கல்வி, நிர்வாகக் கல்வி போன்ற ஒவ்வொன்றையும் வேறு, வேறு என்றவாறு பிரித்துப் பார்க்கின்றது.

மார்க்கக் கல்வி என்பது மேலே கூறிய  கல்விகளுக்கு உட்பட்டதல்ல  என்ற எண்ணத்தில், பள்ளிகளில் அவை அப்படியே பிரித்து நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. முஸ்லிம்கள்கூட மார்க்கக் கல்வி பிற கல்விகளோடு தொடர்பற்றவை அல்லது அவற்றுக்கு எதிரான அல்லது ஈடு கொடுக்க முடியாதவை போன்ற மாயையில் உள்ளனர் என்பது வருத்தம் தரும் கசப்பான செய்தி. இத்தன்மை, மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் குர் ஆனைச் சரியாக விளங்கிக் கொள்ளாமையை வெளிப்படுத்தி நிற்கின்றது. மார்க்க கல்விக்குள் அனைத்து அறிவியற் கல்விகளும் அடக்கம் என்பதே இஸ்லாமிய குர்ஆனின் நிலைப்பாடு.

குர்ஆன் முழுவதிலும் கற்றலை, கல்வியை, சிந்தனையை, படிப்பினையை,  வானியலில், உளவியலில், மருத்துவத்தில், உடற்கூற்றில், பௌதிகத்தில், பொருளாதாரத்தில், வணிகத்தில், நிதியில், நீதியில், நில, நீர் வளத்தில், மழையில், கடலில், நிர்வாகத்தில், போரில், சமாதானத்தில், தாவரத்தில், வியாபாரத்தில்  இப்படி வகை தொகையின்றி எல்லையற்றுப் பேசிக்கொண்டே போகின்றது.

சிந்திக்கும் திறன் கொண்டவர்களை அல்லாஹ் பார்வைத்திறன் கொண்டவர்கள் என்றும் நல்ல செவிப்புலனுடையவர்கள் என்றும் கூறுகின்றான். சிந்திக்காத மனிதனை அல்லாஹ் பார்வையிருந்தும் அவன் குருடனைப்போல மற்றும் செவிகள் இருந்தும் அவன் செவிடனைப்போல என்று சிந்திக்காதவர்களை அல்லாஹ் தாழ்மைப்படுத்திக் கூறுகின்றான். மனிதன் படைப்பால் ஒன்றுபட்டாலும் அவனுடைய செயல்களால் வேறுபடுகின்றான்.


மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

இவை அனைத்திலும் அறிவு கொட்டிக் கிடப்பதாகக் கூறி,
நம்மையெல்லாம் அதனைப் பற்றிச் சிந்திக்க மாட்டீர்களா? அவற்றிள்ள அறிவைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்களா? உய்த்துணர்ந்து நல்லறிவு பெற்றிட மாட்டீர்களா? படிப்பினை பெறமாட்டீர்களா? இதயங்களில் பூட்டுப் போடப்பட்டுள்ளனவா? பார்வைகள் திரையிடப்பட்டுள்ளனவா? செவிகளில் அடைப்பான் போடப்பட்டுள்ளனவா? என வினாக்களை விடுத்து, தட்டி எழுப்பி, தயவாகவும், அதட்டலாகவும் கூறி, எம்மைச் செயற்பட உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும், விழிப்புணர்வையும் தருகிறது.

பள்ளிக் கல்வி வேறு, மத்ரஸாக் (மார்க்க ) கல்வி வேறு என்ற தவாறான எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இன்றைய நவீன கல்வி முறை கல்வியாளர்களை உருவாக்குவதல்லாமல் நல்ல மனிதர்களை உருவாக்கவில்லை. உதாரணமாக பள்ளி பாடபுத்தகங்களில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வின் தத்துவம் போதிக்கப்படுகிறது. ஆனால் இதை  அறிவியல் இன்று வரை நிரூபிக்கவும் இல்லை. உலகம் படைக்கப்பட்டு பல லட்சம் வருடங்களாகியும் இன்று வரை ஒரு குரங்கும் மனிதராக மாறிய சரித்திரமும் இல்லை. இந்த தவறான கல்வி முறையை தான் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இதைப் போன்று ஏராளமான முரண்பாடுகளை இன்றைய நவீன பாடத்திட்டத்தில் காணலாம். கல்வி சாலைகளில்
 ஆண், பெண் கலப்பு, ஆண், பெண் தனிமை, இஸ்லாமிய கலாசாரத்திர்க்கு அப்பால் செல்லுதல், அடிப்படையான ஹலால், ஹராமை மீறுதல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. ஆனால் அது நிச்சயமாக தவிர்க்கப்பட முடியுமானவை. அதைப்போன்று கல்வி சுற்றுலாவின் போது முஸ்லிம் மாணவர்கள் மதுபானம் அருந்துவதும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இடையில் தகாத உறவுகள் ஏற்படுவதும் சகஜமாக நடக்ககூடிய நிகழ்வுகள். அதுபோக சில கல்வி கூடங்களில் மாணவர்கள் போதைப் பொருள்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்கள் வேடம் அணிவதும், இசை போன்ற ஹராமான செயல்களை செய்வதும் கண்கூடாக பார்க்கிறோம்.
இவற்றை இஸ்லாமிய சிந்தையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது. எடுத்துக் காட்டாக ஒரு கல்விச் சுற்றுலாவின் போது சுற்றுலா பற்றிய இஸ்லாமிய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்து வைக்கலாம். பிரயாணத்தின் போது ஓதவேண்டிய துஆக்களை நினைவுப் படுத்தலாம். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குப் பதிலாக பிற மத கலாச்சாரங்களை  புகுத்தபடுவதே இன்றைய நவீன கல்வி சாலைகளில் உள்ள நிலை.
நபி(ஸல்)கூறினார்கள்

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
 நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
 என்பது நபிமொழி.

நூல்: அபூதாவூத் 3512.

இன்றைய இந்திய கல்வி முறைப் பற்றி தொடரில் கண்டோம் இன்ஷா அல்லாஹ்   காலங்களில் கல்வி எவ்வாறு இருந்தது என்பதை தொடராக பார்ப்போம்.

      தொடரும்

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 9


அய்யூப் நபியின் வரலாற்றிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்

அடியான் மகிழ்ச்சியிலும்,துன்பத்திலும்,வெற்றியிலும்,தோல்வியிலும் இவ்வாறு அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டும் என்பதையும்;முறையீட்டு செவிசாய்ப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்றும்;கஷ்டத்தை நீக்குபவன் அவன் ஒருவன் மட்டுமே என்றும் உறுதி பூண்டிருக்க வேண்டும்.

இந்த உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் தான் முஃமினுடைய உள்ளத்தில் நிம்மதி ஏற்படும்.அவனுடைய வாழ்க்கை அமைதியாக இருக்கும்.எந்த பதட்டமும்,கலக்கமும் இருக்காது.அவனுடைய உள்ளம் அல்லாஹ் தனக்கு விதித்ததை ஏற்றுக் கொள்ளும்.அவனுக்கென்று அல்லாஹ் பங்கிட்டதை பொருந்திக் கொள்ளும்.

இரண்டாவது படிப்பினை:அய்யூப் நபியிடமிருந்து பொறுமையை நாம் கற்க வேண்டும்.தனக்கு ஏற்படும் துன்பத்தின் மீது பொறுமை,நோயின் மீது பொறுமை,பொருளையும் குழந்தைகளையும் இழப்பதின் மீது பொறுமை இவ்வாறு தன் டியார்களை அல்லாஹ் எதன்மூலம் சோதிக்கிறானோ அப்படிப்பட்ட அனைத்திலும் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்;என்பதை அய்யூப் நபியின் வரலாற்றிலிருந்து நாம் புரிகிறோம்.

இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களை சோதிக்க காரணம்:அவர்களில் பொறுமையுள்ளவர்கள் யார்?பொறுமையற்றவர்கள் யார்?என்பதை தெளிவாக கண்டறிவதற்காகத்தான்...
அல்லாஹ் கூறுகிறான்:(விசுவாசிகளே!)உங்களில் அறப்போர் புரிவோரையும்,பொறுமையாளர்களையும் நாம் அறிந்து (அறிவித்து) விடும் வரை,உங்களைநிச்சயமாக நாம் சோதிப்போம்;இன்னும் உங்களுடைய செய்திகளையும் நிச்சயமாக நாம் வெளிப்படுத்துவோம்.
(அல்குர்ஆன்:47-31)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:அறிந்துகொள்! நிச்சயமாக சிரமமான காரியத்தின் மீது பொறுமையாக இருப்பதில் பல நன்மைகள் உள்ளன.நிச்சயமாக பொறுமையுடன்தான் அல்லாஹ்வின் உதவி இருக்கிறது.நிச்சயமாக துனபத்துடன்தான் இன்பமும் இருக்கிறது.நிச்சயாக கஷ்டத்துடன்தான் இலேசும் இருக்கிறது.(அஹ்மத்)

அய்யூப் நபி வரலாறு நிறைவுபெற்றது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:17-2-2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 8


சத்தியத்தை நிறைவேற்றிய அய்யூப் நபி

அய்யூப் அலை ஒரு தேவைக்காக தன் மனைவியை வெளியே அனுப்பி வைத்தார்கள்.மனைவி தாமதமாக வந்ததால் அய்யூப் அலை அவர்களின் மீது கோபம் கொண்டு"நான் நோயிலிருந்து விடுபட்ட பின் நூறு அடி அடிப்பேன்"என சத்தியம் செய்து விட்டார்கள்.

அய்யூப் அலை நோயிலிருந்து விடுபட்ட பின் அந்த சத்தியத்தை இலகுவாக நிறைவேற்றினார்கள்.நூறு புற்களை ஒன்று திரட்டி ஒரே அடி அடிப்பதின் மூலம் அவர்களின் சத்தியம் நிறைவேறியது.

அல்லாஹ் சத்தியத்தில் அய்யூப் நபிக்கு சலுகை அளித்த காரணம்:அவர்களின் மனைவி அய்யூப் நபி நோயுற்று இருந்த பொழுது பல ஆண்டுகள் உடனிருந்துள்ளார்கள்.அவர்களின் பணிவிடை காரணமாக சத்தியம் எளிதாக நிறைவேற்றப்பட்டது.

இதைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது:புல்லிலிருந்து ஒரு பிடியை உமது கையில் எடுத்து,அதனைக் கொண்டு உம் மனைவயை அடியும்;நீர் உம்முடைய சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்"என்று கூறினோம்.நிச்சயமாக நாம் அவரை மிக்க பொறுமையாளராகவே கண்டோம்;அவர் மிக்க நல்லடியார்.நிச்சயமாக அவர் நம்பால் அதிகமாக மீளக்கூடியவராக இருந்தார்.
(அல்குர்ஆன் 38-44)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:17-2-2018.

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 7

சோதனைக்குப் பின் அய்யூப் நபிக்கு கிடைத்த வெகுமதிகள்

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்  நபி அய்யூப் அலை அவர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கிய போது அவர்கள் மீது தங்கத்தினாலான வெட்டுக்கிழியை மழைபோல் பொழியச் செய்தான்.உடனே அவர்கள் அவற்றைத் தம் கரத்தால் எடுத்து தமது ஆடையில் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது அவர்களிடம்,அய்யூபே!நீர் மனநிறைவடையவில்லையா?"என்று கேட்கப்பட்டது.அவர்கள்,இறைவா!உன் அருள்வளத்திலிருந்து யார்தான் மனநிறைவடைய முடியும் என்று பதிலளித்தார்கள்.
(நூல்:ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் ஹதீஸ் எண் 279,3391,7493)

அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் கூடுதலாக அவர்களைப் போன்ற மற்றவர்களையும் வழங்கினோம்.நம்மிடமிருந்து ஓர் அருளாகவும்,வழிபடுவோருக்கு நினைவூட்டதலாகவும் அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம்.
(அல்குர்ஆன் 21:84)

இவ்வசனத்தில் அல்லாஹ் நோயிலிருந்து மீண்டபின் அய்யூப் நபிக்கு வழங்கிய அருட்கொடைகளை கூறுகிறான்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:அய்யூப் அலை அவர்களுக்கு,அவர்கள் இழந்த அதே செல்வங்களும் மக்களும் கூடுதலாக அவர்களைப் போன்ற மற்றொரு குழுவினரும் திரும்பக் கிடைத்தனர்.
(தஃப்ஸீர் தப்ரி)

மற்றொரு ரிவாயத்தில் இவ்வாறு அறிவிக்கப்படுகிறது:அவர்களின் மனைவியை அல்லாஹ் அவர்களுடன் சேர்த்தான்.மேலும் அவர்களின் துணைவியின் வாலிபத்தை அல்லாஹ் அதிகப்படுத்தினான்.இதன்மூலம் அவர்கள் 26 குழந்தைகள் வரை பெற்றெடுத்தார்கள்.
(நூல்:இப்னு அஸாகிர்
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் ரலி)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:17-2-2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 6


ஹதீஸின் தொடர்ச்சி...

பிறகு அவர்கள் உண்மைக்குப் புறம்பான விஷயத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறியது எனக்கு பிடிக்காததால் அவ்விருவருக்காகவும் நானே குற்றப் பரிகாரம் செய்தேன்.

(ஹதீஸின் தரம்:ஹய்ஸமீ மஜ்மவுஜ் ஜவாயிதில் கூறுகிறார்கள்:பஜ்ஜாரின் அறிவிப்பாளர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.இது நபிமொழி என்று கூறப்பட்டாலும்,இது முற்றிலும் ஃகரீப் வகை ஹதீஸாகும்.
-தஃப்சீர் இப்னு கஸீர்)

அய்யூப் நபி சுயதேவையை அவர்களின் மனைவியுடைய உதவியுடன நிறைவேற்றி வந்தார்கள்.ஒருநாள் மனைவியும் அவர்களை விட்டும் பின்வாங்கிய பொழுது அல்லாஹ் அய்யூப் நபிக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்:
உம்முடைய காலால் பூமியில் அடியும்"என்று கூறினோம்;அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது;அவரிடம்,இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும்,பானமும் இருக்கின்றன என்று கூறினோம்,அதனால் அவருடைய நோய் குணமாகி விட்டது.
(அல்குர்ஆன் 38:42)

இதற்கு பின் அய்யூப் நபியின் மனைவி அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் அல்லாஹ் நீக்கிவிட்டான்.அவர்கள் முன்பிருந்தது போல அழகிய தோற்றமுடையவர்களாக ஆனார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


  • 🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴


பதிவு நாள்:17-2-2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 5

அய்யூப் நபியும் இரு சகோதரர்களும்

பஜ்ஜார் மற்றும் பிற ஹதீஸ் நூற்களில் அனஸ் பின் மாலிக் அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது:
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:அய்யூப் அலை அவர்கள் 18 ஆண்டுகள் சோதனையில் ஆழ்த்தப்பட்டார்கள். மிக நெருக்கமான அவர்களின் இரு சகோதரர்களைத் தவிர நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் அனைவரும் விலகிச் சென்றுவிட்டனர்.

அவ்விருவரும் அன்னாரிடம் காலையிலும், மாலையிலும் அய்யூப் நபியிடம் வந்து செல்வார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரிடம், அல்லாஹ்வின் மீதாணையாக!உலகில் யாரும் செய்யாத ஒரு குற்றத்தை அய்யூப் செய்துள்ளார் என்பதை நீ அறிவாயா? என்று கேட்டார்.

மற்றவர், அது என்ன குற்றம்? என்று கேட்க "அவர் அதன் காரணமாகத்தான் 18 ஆண்டுகளாக அல்லாஹ் அய்யூபுக்கு கருணை காட்டாமலும், அவரது துன்பத்தை அகற்றாமலும் இருக்கிறான் என்றார்."

பேசிக்கொண்டிருந்த அந்த  இருவரும் அவர்களிடம் வந்தனர். அய்யூப் நபியின் மீது தம் சகோதரர் குற்றம் சாட்டியதைக் கேட்ட அந்த இரண்டாமவர் பொறுமை இழந்து அதை அய்யூப் அலை அவர்களிடம் கூறிவிட்டார்.

அதற்கு அய்யூப் அலை அவர்கள் கூறினார்கள்: நீர் சொல்வது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அனைத்தையும் அறிகின்றான்.

நான் ஒரு முறை சர்ச்சை செய்து கொண்டிருந்த இரு மனிதர்களை கடந்து சென்றேன். அவ்விருவரும் உண்மைக்கு புறம்பான ஓர் விஷயத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறி சத்தியம் செய்து தர்க்கம் செய்து கொண்டிருந்தனர்.

நான் அதை தடுக்காமல் என் வீட்டுக்கு சென்று விட்டேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:17-2-2018


ஜனவரி 2018 வெற்றியாளர்கள்

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கியாமத் நாளை  நோக்கியின் ஜனவரி மாதம் 2018 வெற்றியாளர்கள்:

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

🎁🎁🎁 முதல் பரிசு🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர் :👇

      🥇: அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் (தஞ்சை மாவட்டம்) 74

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈

💰 இரண்டாம் பரிசு💰

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🥇: முஹம்மது ஹனிபா - சேலம் 73

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🥈: அப்பாஸ் அலி - சென்னை 73

🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

 🚏 மூன்றாம் பரிசு🚏

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

இரண்டாவது குழுமத்தில்  உள்ள சகோதரர்கள்:

🥉: சுல்தான் - திருநெல்வேலி 73

🥉: நஜ்முதின் - கூத்தாநல்லூர் 72

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

❇❇ சிறப்பு பரிசு ❇❇

இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

☂🥇 யாசர் அரஃபாத் காயல்பட்டணம் 73

☂ 🥈 முகம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 73

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁 ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🍋 அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர் (தஞ்சை மாவட்டம்) 72

🍋 பீர் முஹம்மது - திருநெல்வேலி 72

🍋 முகம்மது முஸ்தபா - சென்னை (பட்டபிராம்) 72

🍋 ராஜா முஹம்மது - கட்டுமாவடி

🍋 முஹம்மது சஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)

🍋 மஹதி - திருச்சி

இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதர்கள்:

🍋 சாதிக் - சவூதி 72

🎁🎁🎁 ஊக்கப் பரிசு 🎁🎁🎁

🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

🥇முதல் குழுமத்தில் உள்ளா நபர்கள்:

1. அப்துல் பாசித் - காயல்பட்டணம் 71

2. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் 71

3. முஹம்மது பயாஸ் - சென்னை 71

 4. ரம்ஜான் - திருநெல்வேலி 70

5. அப்துல் சலீம் - சென்னை 60

6. ஜாகிர் உசேன் - சென்னை 58

7. காதர் உசேன் - மலேசியா 40

8. _அப்துல் ஹக்கிம் - தென்காசி 18

9. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி 14

10. _அபுதல் ஹா - திருநெல்வேலி 09

11. முஹம்மது இர்ஃபான் - பண்டாரவடை 03

 🥇இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்:

11. _நெய்னா முஹமம்மது அலி - ஜெகதாப்பட்னம் 72

12.  அஜாருதீன் - கும்பகோணம் 71

 13. பதுருசமான் - கீழக்கரை 69

14. முகம்மது ஆசிக் - வழுத்தூர் 68

15. அல்லாபாகஷ் - சென்னை 62

16. நூர் முகமது அஜீஸ் - சிவகாசி 58

17. அப்துல் காதர் - திருநெல்வேலி 24

18. முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 21

19. அஷ்ரஃப் அலி - சென்னை 09

20. பீர் முஹம்மது - இராஜகிரி 04

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள் கியாமத் நாளை நோக்கி_யின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..

"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்

கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்

பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் அருள்புரிவானாக..

கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்.

💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉

இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்

சகோதரர்கள் அனைவருக்கும்

ஜஜகல்லாஹ் ஹைர்

🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் _"இல்மிற்கு  உதவும் கரங்கள் "_ இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼*

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
 இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).

01. முதல் பரிசு 900 ₹;
மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி இரண்டாவது பாகம் (அல்லது) முஸ்லிம் இரண்டாவது பாகம்(1நபருக்கு)
         
02: இரண்டாம் பரிசு 450₹:
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்
( 2 நபர்களுக்கு)

03. மூன்றாம் பரிசு 300₹: மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)

 04. சிறப்பு பரிசு 200₹:
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)

05. ஆறுதல்  பரிசு 100₹:
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)

06:  ஊக்கப் பரிசு: 20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
 அட்மின் குழு .

Wednesday, 14 February 2018

இஸ்லாத்தை விட்டும் தடம்புரளும் இஸ்லாமிய சமுதாயம் - 2

இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அல்லாஹ் மிக அழகாக தன் திருமறையில் கூறுகிறான்:-

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் -23:1,2,9)

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளை அல்லாஹ் இவ்வாறு மிகத் தெளிவாகக் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தாமும் செயல்பட்டு, தம் குழந்தைகளை அறியாமையினால் சில பெற்றோர்கள் செலுத்துகின்றனர்.

இன்றைய சூழலில் நம்முடைய சமுதாய மக்களில் யாருக்கேனும் இஸ்லாத்தை பற்றியும், மறுமையைப் பற்றியும் போதனை செய்தால், சிலர் கூறுகின்றார்கள் எப்படியென்று தெரியுமா?.
"மரணித்து போன பின்பு உயிரோடு எப்படி எழுப்பப்படுவோம்?.. '' இதையெல்லாம் இக்காலத்தில் நாம் எப்படி நம்புவது? - என்றும் கேட்கக்கூடியவர்களை நாம் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?.. இதில் கொஞ்சம் படிப்பினை பெற வேண்டாமா?..

"நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?'' என்று மனிதன் கேட்கிறான்.
"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
(அல்குர்ஆன்  19:66,67,68)

எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே!.. பின்பற்றி நடப்பதற்கோ இறைவேதமும், நபிகளாரின் போதனையும் நம் கையிலே இருக்கும்போது, அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டபடி எதை நோக்கி உங்களது பயணம் போய்க்கொண்டு இருக்கின்றது?..

எதற்கும் பயன்பெறாத இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியா???
இக்கவர்ச்சியில் நீங்கள் மயங்கியது ஏன்?. ஷைத்தான் உங்களது செயல்களை உங்களுக்கு  மிகவும் அழகானதாக்கி காட்டியுள்ளானா?..

இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் :-

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன்  35:5)

இவ்வுலகில் வாழக்கூடிய நாம் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவழிக்கின்றோம்.

வீட்டிலே  தொலைக்காட்சி பார்த்து பொழுது போக்குதல்,
நண்பர்களோடு சுற்றுதல், விளையாட்டு என பல்வேறான பயனற்ற வழிகளிலே நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கும் நாம்,  அல்லாஹ்வை வணங்குவதற்கு  என்றைக்கேனும் நேரம் ஒதுக்கியுள்ளோமா??

ஏன் நாம்!. இறைவனை தொழ மறுக்கின்றாய்?.
தொழவில்லையெனில் நாம் சுவனம் செல்லமுடியாது என்ற சிந்தனை நம்மை விட்டும் ஷைத்தானால் மறக்கடிக்கப்பட்டுவிட்டதா?.

அல்லாஹ் கூறும் அழகிய அறிவுரையை பாருங்கள் :

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.
  (அல்குர்ஆன் 30:31)

 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன்  4:103)

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன்  11:114)

 (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன்  29:45)

இறைநம்பிக்கை முஸ்லிமாகிய நமக்கு தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்றும், இதன் மூலமாக வெட்கக்கேடான செயல்களிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் நம்மைப் படைத்த இறைவன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மில் பலரும் இன்றைக்கு தொழுகைக்கான அழைப்பை பரிகாசமாக ஆக்கிக்கொள்கிறோமே? இது ஏன்?

 இவ்வாறு  செய்வதால் நமக்கு கேடு என்றல்லவா... அல்லாஹ் கூறுகிறான்!

தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன்  5:58)

அல்லாஹ்வை அன்றி வேரெவராலும் உதவி செய்யப்படாத அந்த நாளில் நம்மிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே - தொழுதாயா?. என்பதுதான்;

இக்கேள்விக்கு பதிலளிக்கும்படி நாம் சரியாக இருக்க வேண்டாமா??

ஆதலால், இஸ்லாத்தை நம்மால் இயன்றவரை சரியாக கடைப்பிடித்து தொழுகையையும், இன்னபிற வணக்க வழிபாடுகளையும்  நிறைவேற்றக் கூடிய மக்களாக நாமெல்லாம் மாற வேண்டும். அப்போதுதான் இறைவனின் நெருக்கமான அடியானாகவும் நாம் இருக்க முடியும் என்பதை உணருங்கள்!

விளதை - R. ரய்யான்.

அல்அக்ஸாவை மீட்போம் தொடர்- 10

பாலஸ்தீனம் வாக்களிக்கப்பட்ட பூமி

பாலஸ்தீன பூமியும், அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகும். ஹிஜ்ரத்துக்கு முன்பு மக்காவில் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜ் நடந்த இரவில் பாலஸ்தீன புனித பூமிக்கு வந்துள்ளார்கள். அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் நபிமார்களுக்கு தலைமை தாங்கி தொழுகை நடத்தினார்கள்.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இருந்து தான் படைத்த ஏக இறைவனான அல்லாஹ்வை சந்திக்க புறப்பட்டும் சென்றார்கள்.

பாலஸ்தீனமும், அல்அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களின் ஈமான் எனும் மத நம்பிக்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.

ஆதலால், பாலஸ்தீனமும் – அல்அக்ஸா பள்ளிவாசலும் இன்றி முஸ்லிம் உம்மத்தை நினைத்துப் பார்க்கவும் இயலாது.

முஸ்லிம்களின் கைகளில் பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகவும், , அல்அக்ஸா பள்ளிவாசல் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் இருந்ததால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களால் கி.பி. 634 ஆம் ஆண்டு நடந்த அஜ்னாதைன் யுத்தத்தில் பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது.

புகழ்பெற்ற ஜெருசேலம் ஒப்பந்தத்தின்படி கி.பி. அல்அக்ஸா பள்ளிவாசலும், ஜெருசேலம் நகரும் பாலஸ்தீனம் சென்ற கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு (கி.பி.636) ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்றொரு பயங்கரவாத நாடு உருவாக்கப்படும் வரை பாலஸ்தீனமும், ஜெருசேலம் நகரும், அல்அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களின் கரத்தில் தான் இருந்தன.

கலீஃபா உமர். ஜெருசலேமில் இஸ்லாமிய ஆட்சி . 

ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717-ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான்.

ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, "உமையாக்கள்" என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.)

அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது.

ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது.

யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.

ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான்.

கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது.
வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.

ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.

யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள்.

(உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!)

கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள்.

இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு.

இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்? மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும்.

அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.

ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.

ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."
நகர்வலத்தின் இறுதியில் மக்களிடையே உரையாற்றிய உமர், ஒரே ஒரு விஷயத்தை மிகவும் அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

"யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருமே இப்ராஹிமின் (ஆபிரஹாம்) வழித்தோன்றல்கள். சண்டையின்றி ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம்."

இந்தச் சொற்பொழிவு, அதுநாள் வரை ஜெருசலேமை ஆட்சி செய்துவந்த கிறிஸ்துவர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைத் தந்தது.

பொதுவாகப் போரில் வெல்லும் மன்னர்கள், தமது மதத்தை அனைவரும் ஏற்றே தீர நிர்ப்பந்தம் செய்வதே அந்நாளைய வழக்கம்.

ஒரு மாறுதலுக்கு உமர், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல், அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் யூதர்களையும் திரும்பவந்து அங்கே வாழும்படி அழைப்பு விடுத்தார்.

"நீங்கள் தைரியமாக ஜெருசலேத்துக்குத் திரும்பிவரலாம். யாராலும் உங்களுக்குத் தீங்கு நேராமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு" என்கிற உமரின் உத்தரவாதத்தை நம்பி சுமார் எழுபது யூதக் குடும்பங்கள் அன்று ஜெருசலேம் திரும்பியதாகத் தெரிகிறது.

இதோடு நிறுத்தவில்லை.

ஜெருசலேத்திலிருந்து யூதர்களை கிறிஸ்துவர்கள் விரட்டியபிறகு, அங்கிருந்த யூத தேவாலயங்கள் நகரசபையின் கழிவுப்பொருள் சேகரிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

அதாவது, கிறிஸ்துவர்கள் தமது யூதவெறுப்பை அப்படியாக வெளிக்காட்டியிருந்தார்கள்.

ஜெருசலேம் கைப்பற்றப்பட்டபிறகு அங்கே உமர் வெளியிட்ட முதல் அரசு உத்தரவு, அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதுதான்.

உத்தரவிட்டதுடன் நின்றுவிடாமல், குப்பை அள்ளும் பணியில் முதல் கரம் கொடுத்ததும் அவரேதான்.

இதுவும் பல யூத சரித்திர நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவமே. (ஆனால் கிறிஸ்துவ ஆசிரியர்களின் நூல்களில் இந்தச் சம்பவம் எழுதப்பெறவில்லை.)

ஆனால் இத்தனை பரந்த மனம் படைத்தவராக இருந்த உமர், முஸ்லிம் அல்லாத பிற இனத்தவர் அனைவரையும் இஸ்லாமியப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்தும், மெக்கா, மதினா ஆகிய நகரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வேறு இடங்களில் வசிக்க நிர்ப்பந்தித்ததாக ஒட்டுமொத்த யூத, கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்களும் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் இருந்தார்களா?

வரலாற்றில் ‘ அல் அஹ்ததுல் உமரிய்யா’ (Umar's Assurance –உமர் வாக்குறுதி உத்தரவாத ஒப்பந்தம்) என்றழைக்கப்படும் ஒப்பந்தம் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு (கி.பி. 636) கலீஃபா உமர் (ரழி) அவர்களுக்கும் ஜெருசேலம் நகர கிறிஸ்தவ மதத் தலைவராக கி.பி.634 முதல் 638 வரை பதவி வகித்த சாஃப்ரானியூஸ் (sophronius) க்கும் இடையே புகழ் பெற்ற கியாமா தேவாலயத்தில் (ஆங்கிலத்தில் Church of the Holy Sepulchre  தமிழில் திருக்கல்லறைத் தேவாலயம்) வைத்து நடந்ததாகும்.

அதில் கிறிஸ்தவர்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று யூதர்களை ஜெருசேலம் நகரில் தங்கிட இஸ்லாமிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதாகும். உமர் (ரழி) அதனை ஏற்றார்கள்.


(மேற்கண்ட அத்தேவாலயத்தில் வைத்து ஒப்பந்தம் நடந்த பொழுது தொழுகை நேரம் வந்தது. உமர் (ரழி) தொழுவதற்கு பள்ளிவாசலுக்கு செல்ல முற்பட்டார்கள். பாதிரியார் சாஃப்ரானியூஸ் இங்கேயே தொழுங்கள் என்று வேண்டினார். அதனை ஏற்க மறுத்த உமர் (ரழி) இவ்வாறு காரணம் சொன்னார்கள்.

நான் இங்கு தொழுதால் வரும் காலத்தில் இது எங்களின் கலீஃபா தொழுத இடம் என்று சொந்தம் கொண்டாடுவார்கள். ஆதலால், வேண்டாம் என்றார்கள். இன்று வரை இது கிறிஸ்தவ தேவாலயமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது)

நாடற்ற அனாதைகள்

இறைவனுக்கும், இறைத்தூதர்களுக்கும் செய்த துரோகத்தினால் வரலாற்றில் நீண்ட நெடிய காலமாக நாடற்ற அனாதைகளாக அலைந்தவர்கள் யூதர்கள்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 1948 வரை யூதர்களுக்கென்று தனிநாடு உலகில் இருந்ததில்லை.

யூதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்நாட்டின் மீது எதிரி நாடு போர் தொடுத்தால் அவர்கள் எதிரி நாட்டுடன் சேர்ந்து கொள்வார்கள். இது அவர்களின் பிறவி இயல்பு. இதனால் பன்னெடுங்காலமாக ஐரோப்பிய நாடுகள் யூதர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தின.

மேலும் யூதர்கள் தங்களின் நாடுகளில் வாழ்வதை ஐரோப்பாவில் எந்த நாடும் எப்போதும் விரும்பியதில்லை. அவர்களை ஆட்சிக்கு ஆபத்தாகவே ஐரோப்பிய அரசுகள் கருதின.

ஆதலால் தான் யூதர்கள் ஐரோப்பாவில் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள். அடக்கப்பட்டார்கள். விரட்டப்பட்டார்கள்.

யூதர்களுக்கு புகலிடம் தந்த முஸ்லிம்கள்

ஐரோப்பாவில் யூதர்கள் விரட்டப்பட்ட காலங்களில் அவர்களுக்கு இஸ்லாமிய நாடுகள் தாம் அடைக்கலம் தரும் தேசங்களாக விளங்கின.

இஸ்லாமிய நாடுகளில் அடைக்கலம் புகுந்த யூதர்கள் அங்கே எந்த பாகுபாடும் காட்டப்படாமல் மனிதநேயத்துடன் கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இஸ்லாமிய அரசு வீழ்ந்து கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆட்சியை பிடித்த சமயத்தில் யூதர்கள் அந்நாட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

அச்சமயத்தில் துருக்கி இஸ்லாமிய கிலாஃபா அரசு தான் அவர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது.
இன்ஷா அல்லா இனி வரும் காலங்களில் ஒரு சிறந்த ஆட்சியாளரை பாலஸ்தீன நாட்டில் கொண்டு அல்அக்ஸா பள்ளி வாசலை உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்க
அல்லாவிடம் துவா செய்வோம்.

முஹம்மது சலீம் - அமெரிக்கா.

Monday, 12 February 2018

இஸ்லாமிய திருமண தகவல் மையம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானி ர்ரஹீம்

இஸ்லாமிய திருமண தகவல் மையம்

1. மணமகள் தேவை:          
பெயர்: நிிஜாமுதீன்
வயது: 33       ‌ ‌  ‌ ‌ ‌
வேலை: சூப்பர் வைசர் (டின் பேக்டரி)    
ஊர்: மொட்டமலை (இராஜபாளையம்)        
மணமகள் எதிர்பார்ப்பு: குணமுள்ள மணமகள் தேவை (வரதட்சணை மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லை)        தொடர்புக்கு: +91-8825876896

2. மணமகள் தேவை:
வயது: 27, உயரம்: 5.10
கல்வித் தகுதி: Bsc.It
தொழில்: மென்பொருள் / நெட்வர்க்கிங்
வசிப்பிடம்: சென்னை
தகப்பனர்: வியாபாரம்
தாய்: இல்லத்தரசி
பெண் எதிர்பார்ப்பு: மார்க்க  கல்வி கற்ற, நல்ல மார்க்கப்பற்றுள்ள, தொழுகை, குர்ஆன் மற்றும் சுன்னா பேணக்கூடிய, குடும்பப்பாங்கான, எளிமையான, ஸாலிஹான பெண்.
தொடர்புக்கு: 98414160795. (வாட்ஸப்பிலும்).

3. மணமகள் தேவை:          
பெயர்: ஹாபிழ் N. முஹம்மது ராஜா ரப்பானி
வயது: 36
வேலை: சுய தொழில்
ஊர்: திருநெல்வேலி - புதுப்பேட்டை, தற்போது சித்தமல்லி வசிக்கிகிறார்.
திருமணம்: மறுமணம்
மணமகள் எதிர்பார்ப்பு: 28 வயது, முதல் மற்றும் மறுமணம். மார்க்க  கல்வி கற்ற/கற்காத, நல்ல மார்க்கப்பற்றுள்ள, தொழுகை, குர்ஆன் மற்றும் சுன்னா பேணக்கூடிய, குடும்பப்பாங்கான, எளிமையான, ஸாலிஹான பெண்.
தொடர்புக்கு98414160795. (வாட்ஸப்பிலும்).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும் பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் - புஹாரி 1905.

🖊📖தங்களது விவரங்களை எங்களுடைய இஸ்லாமிய திருமண தகவல் மையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

நமது 🌴கியாமத் நாளை நோக்கி🌴 மாத இதழில் உங்களுடைய விவரங்களை பதியப்படும்.

இன்ஷா அல்லாஹ் உங்களுக்ககான பொருத்தமானவர்கள்  அமைந்தால் உங்களிடம் தெரிவிப்போம்.

விவரங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் + 91-9841460795. (சென்னை)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்    ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக.           
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.                             
3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள் புஹாரி - 5090.

- முஹம்மது முஸ்தபா - சென்னை.

Thursday, 8 February 2018

ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் இப்னு ஹிப்பான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

இப்னு ஹிப்பான்

இயற்பெயர் : முஹம்மத் பின் ஹிப்பான்

குறிப்புப்பெயர் : அபூஹாதிம்

தந்தையின் பெயர்  : ஹிப்பான்

குலம்  : பனூ தமீம் குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு  : ஆப்கானிஸ்தானில் உள்ள புஸ்த் என்ற ஊரில் ஏறத்தாழ ஹிஜ்ரீ 280 ல் பிறந்தார்.

கல்வி  : ஹிஜ்ரீ 300 ல் கல்வி கற்க ஆரம்பித்தார். சஜஸ்தான் நைசாபூர், ஷாம், மிஸ்ர், ஹிஜாஸ், போன்ற ஊர்களுக்குக் கல்வியைத் தேடி பயணம் செய்தார். இந்தப் பிரயாணத்தின் மூலம் 2000 க்கும் மேலான ஆசிரியர்களைப் பெற்றார். ஹதீஸ் கலையிலும் சட்டத் துறையிலும் சிறந்து விளங்கியதால் நஸா, சமர்கன்த், புல்தான் போன்ற இடங்களில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இல்லாமல் மருத்துவம் வாணியல் ஆகிய கலையிலும் சிறந்து விளங்கினார். இவர் காலத்தில் இவருக்கும் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். இமாம் அபூஹனீஃபாவை விமர்சித்து பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

ஆசிரியர்கள் : அபூ யஃலா இப்னு ஹுஸைமா, ஹசன் பின்   சுஃப்யான், அபூ அரூபா இன்னும் பலர்.

இவரது மாணவர்கள்: இவர் கல்விக் கடலாக அந்தக் காலத்தில் விளங்கியதால் பெரும் பெரும் அறிஞர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் ஹாகிம், இப்னு முன்தஹ், இன்னும் பல மேதைகள் இவரிடம் கற்று இவருக்கு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

படைப்புகள் : இவர் அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றிய விபரங்களை மக்களுக்குத் தருவதற்கு அத்தாரீஹ் (வரலாறு) என்ற பெரும் புத்தகத்தைத் தொகுத்தார். பின்பு கிதாபுஸ்ஸிகாத் (நம்பகமானவர்கள்) என்ற பெயரில் சரியான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். பிறகு கிதாபுல் மஜ்ரூஹீன் மினல் லுஅஃபாயி வல்மத்ரூகீன மினர்ருவாத் (பலஹீனமானவர்கள் மற்றும் குறை காணப்பட்டவர்கள்) என்ற பெயரில் பலஹீனமான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். இந்த இரண்டு புத்தகமும் அவருடைய அத்தாரீஹ் என்ற பெரும் நூலின் சுருக்கம் தான்.  இமாம் புகாரி, முஸ்லிம், இப்னு ஹுஸைமா ஆகியோரைப் போல் ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் தொகுக்கும் பாணியில் சஹீஹு இப்னி ஹிப்பானை தொகுத்தார். இது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூல். அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமையால் பலஹீனமான ஹதீஸ்களைக் கடைபிடித்ததைக் கண்டு உத்வேகத்துடன் இப்புத்தகத்தைத் தொகுத்தார். இன்னும் மஷாஹீரு உலமாயில் அம்சார், மற்றும் ரவ்ளதுல் உகலாயி வ நுஸ்ஹதுல் ஃபுளலாயி ஆகிய புத்தகங்களையும் நமக்குக் கிடைக்காத பல புத்தகங்களையும் படைத்துள்ளார்.

குறைகள் : நல்லவரா கெட்டவரா என்று அறியப்படாத அறிவிப்பாளர்களையெல்லாம் இவர் நல்லவர் என்று சான்று தந்துள்ளார். ஒருவரைப் பற்றி நிறை வராவிட்டாலும் குறையில்லாமல் இருந்தால் அவரை நல்லவர் என்று முடிவுகட்டி விடுவார். நல்ல அறிவிப்பாளர்கள் விஷயத்தில் தேவையில்லாத குறைகளையும் கூறியுள்ளார்.

மரணம்: ஹிஜ்ரீ 354 வது வருடத்தில் புஸ்த் என்ற ஊரில் இறந்தார்.

Wednesday, 7 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 4


அய்யூப் நபியின் பிரார்த்தனை

நிச்சயமாக துன்பம் என்னை பிடித்துக் கொண்டது; நீயோ கிருபையாளர்களில்லாம் மிகக் கிருபையாளன். (அல்குர்ஆன் 21:83)

மற்றொரு வசனத்தில்,
நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையைக் கொண்டும் தீண்டி விட்டான். (அல்குர்ஆன் 38:41)

நோயிலிருந்து அய்யூப் எவ்வாறு விடுபட்டார்கள்?

கிருபையாளனான அல்லாஹ் அவர்களின் துஆவை அங்கீகரித்தான். ஓர் இடத்தில் தன் காலால் பூமியை அடிக்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு கூறினான். அய்யூப் நபி அவ்வாறு செய்தவுடன் பூமியிலிருந்து ஓர் ஊற்று வெளியானது. அதிலே அவர்களை குளிக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அய்யூப் நபி அவ்வூற்றின் தண்ணீரிலிருந்து குளித்தவுடன் உடலின்  வெளிப்பகுதியிலிருந்த அனைத்து நோய்களும் குணமாகிவிட்டது.

பிறகு, அல்லாஹ் வேறொரு இடத்தில் நின்று பூமியை தன் காலால் அடிக்குமாறு அய்யூப் நபிக்கு கூறினான். அய்யூப் நபி அவ்வாறு செய்தவுடன் பூமியிலிருந்து மற்றொரு ஊற்று வெளியானது. அந்த தண்ணீரை குடிக்குமாறு அல்லாஹ் அய்யூப் நபிக்கு கட்டளையிட்டான். அதன் மூலம் அய்யூப் நபியின் உடலின் உட்பகுதியிலிருந்து அனைத்து நோய்களும் சரியாகி விட்டது.

உடலின் வெளிப்பகுதி, உட்பகுதியிலிருந்து அனைத்தும் நோயிலிருந்து அய்யூப் நபி பூரண சுகமடைந்தார்கள்.

அல்லாஹ் இதை பின்வரும் வசனத்தில் கூறிக்காட்டுகிறான்:

"உம்முடைய காலால் பூமியில் அடியும்" என்று கூறினோம்;அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது; அவரிடம், இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் இருக்கின்றன என்று கூறினோம்; அதனால் அவருடைய நோய் குணமாகிவிட்டது.
(அல்குர்ஆன் 38:42)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

*பதிவு நாள்: 08-02-2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 3


தன் அடியாரும், நபியுமான அய்யூப் அவர்களைப் பற்றி அல்லாஹ் மேற்கூறப்பட்ட வசனங்களில் கூறிக் காட்டுகிறான்.

அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தால் உடலின் மூலமும், பொருளின் மூலமும், குடும்பத்தார்களின் மூலமும் சோதிக்கப்பட்டார்கள். அவர்களின் இதயத்தைத் தவிர மற்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் நோய் பரவி இருந்தது. உடலின் ஊசிதுளை அளவு மட்டும் தான் சரியாக இருந்தது. மற்ற அனைத்து இடங்களிலும் நோய் பரவி இருந்தது. கடுமையான நோயின் தாக்கத்தால் எவரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்களின் மனைவி மட்டும் அல்லாஹ், ரஸுலின் மீதுள்ள பயத்தால் அய்யூப் நபியுடன் இருந்து பணிவிடை செய்தார்கள். அவர்களின் மனைவி மக்களிடத்தில் கூலிக்கு வேலை செய்து வாங்கும் கூலியிலிருந்து அய்யூப் நபிக்கு உணவு கொடுப்பார்கள்.

மனைவி, வேலைக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அவர்களுடனையே இருப்பார்கள். இவ்வாறு சுமார் 18 வருடங்கள் பணிவிடை செய்து வந்தார்கள்.

நோய் கடுமையாகி, மிகவும் மோசமான நிலையை அடைந்த பொழுது அய்யூப் நபி தன் இரட்கனிடத்தில் நோயைப் பற்றி முறையிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:08-02-2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 2


அய்யூப் நபி வரலாறு குர்ஆனின் 21-வது அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது.

நபியே! அய்யூபையும் நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனிடம் நிச்சயமாகத் துன்பம் என்னை பீடித்துக் கொண்டது;நீேயா கிருபையாளர்களில்லாம் மிகக் கிருபையாளன்" என்று பிரார்த்தனை செய்து அழைத்த போது,

நாம் அவருக்கு பதிலளித்து;பின்னர் அவருக்கிருந்த துன்பத்தை நீக்கி விட்டோம்;அவருடைய குடும்பத்தையும்,அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம்;இது, நம்மிடமிருந்துள்ள கிருபையாகவும் நம்மை வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்:21-83,84)

38-வது அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது:

மேலும் நபியே! நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனை அழைத்துப் பிரார்த்தனை செய்து "நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும்,வேதனையைக் கொண்டும் தீண்டிவிட்டான்"என்று கூறிய போது,அதற்கு நாம்

"உம்முடைய காலால் பூமியை அடியும்"என்று கூறினோம்;அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது;அவரிடம்,இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும்,பானமும் இருக்கின்றன என்று கூறினோம்;அதனால் அவருடைய நோய் குணமாகி விட்டது.

மேலும், நம்மிடமிருந்த அருளாகவும்,அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும்,அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம்.
(அல்குர்ஆன் 38:41-43)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 08-2-2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 1



✍முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி

நபி அய்யூப் அலை அவர்கள் இஸ்ஹாக் நபியின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் ஆவார்கள். மூஸா நபிக்கும், யூசுஃப் நபிக்கும் இடையே நபியாக அனுப்பப்பட்டவர்கள். இவர்களின் வரலாறு குர்ஆனில் சுருக்கமாக 21-வது மற்றும் 38-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சுருக்கம்:

அய்யூப் நபி மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய பிள்ளைகளும் இருந்தனர். அல்லாஹ் அவர்களின் பொருளைக் கொண்டும், குழந்தைகளைக் கொண்டும், உடலைக் கொண்டும் சோதித்தான். அதன்மூலம் ஏற்பட்ட துன்பங்களில் அய்யூப் நபி மிகப் பொறுமையாக இருந்தார்கள். அவர்களின் பொறுமைக்கு அல்லாஹ் சிறந்த கூலியை கொடுத்தான். அவர்களின் இறைஞ்சுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். மேலும் அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தையும் மீட்டிக் கொடுத்தான். அவர்களுக்கு அளவில்லா செல்வத்தையும் வழங்கினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:08-2-2018