சோதனைக்குப் பின் அய்யூப் நபிக்கு கிடைத்த வெகுமதிகள்
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் நபி அய்யூப் அலை அவர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கிய போது அவர்கள் மீது தங்கத்தினாலான வெட்டுக்கிழியை மழைபோல் பொழியச் செய்தான்.உடனே அவர்கள் அவற்றைத் தம் கரத்தால் எடுத்து தமது ஆடையில் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது அவர்களிடம்,அய்யூபே!நீர் மனநிறைவடையவில்லையா?"என்று கேட்கப்பட்டது.அவர்கள்,இறைவா!உன் அருள்வளத்திலிருந்து யார்தான் மனநிறைவடைய முடியும் என்று பதிலளித்தார்கள்.
(நூல்:ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் ஹதீஸ் எண் 279,3391,7493)
அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் கூடுதலாக அவர்களைப் போன்ற மற்றவர்களையும் வழங்கினோம்.நம்மிடமிருந்து ஓர் அருளாகவும்,வழிபடுவோருக்கு நினைவூட்டதலாகவும் அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம்.
(அல்குர்ஆன் 21:84)
இவ்வசனத்தில் அல்லாஹ் நோயிலிருந்து மீண்டபின் அய்யூப் நபிக்கு வழங்கிய அருட்கொடைகளை கூறுகிறான்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:அய்யூப் அலை அவர்களுக்கு,அவர்கள் இழந்த அதே செல்வங்களும் மக்களும் கூடுதலாக அவர்களைப் போன்ற மற்றொரு குழுவினரும் திரும்பக் கிடைத்தனர்.
(தஃப்ஸீர் தப்ரி)
மற்றொரு ரிவாயத்தில் இவ்வாறு அறிவிக்கப்படுகிறது:அவர்களின் மனைவியை அல்லாஹ் அவர்களுடன் சேர்த்தான்.மேலும் அவர்களின் துணைவியின் வாலிபத்தை அல்லாஹ் அதிகப்படுத்தினான்.இதன்மூலம் அவர்கள் 26 குழந்தைகள் வரை பெற்றெடுத்தார்கள்.
(நூல்:இப்னு அஸாகிர்
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் ரலி)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:17-2-2018
No comments:
Post a Comment