Friday, 16 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 8


சத்தியத்தை நிறைவேற்றிய அய்யூப் நபி

அய்யூப் அலை ஒரு தேவைக்காக தன் மனைவியை வெளியே அனுப்பி வைத்தார்கள்.மனைவி தாமதமாக வந்ததால் அய்யூப் அலை அவர்களின் மீது கோபம் கொண்டு"நான் நோயிலிருந்து விடுபட்ட பின் நூறு அடி அடிப்பேன்"என சத்தியம் செய்து விட்டார்கள்.

அய்யூப் அலை நோயிலிருந்து விடுபட்ட பின் அந்த சத்தியத்தை இலகுவாக நிறைவேற்றினார்கள்.நூறு புற்களை ஒன்று திரட்டி ஒரே அடி அடிப்பதின் மூலம் அவர்களின் சத்தியம் நிறைவேறியது.

அல்லாஹ் சத்தியத்தில் அய்யூப் நபிக்கு சலுகை அளித்த காரணம்:அவர்களின் மனைவி அய்யூப் நபி நோயுற்று இருந்த பொழுது பல ஆண்டுகள் உடனிருந்துள்ளார்கள்.அவர்களின் பணிவிடை காரணமாக சத்தியம் எளிதாக நிறைவேற்றப்பட்டது.

இதைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது:புல்லிலிருந்து ஒரு பிடியை உமது கையில் எடுத்து,அதனைக் கொண்டு உம் மனைவயை அடியும்;நீர் உம்முடைய சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்"என்று கூறினோம்.நிச்சயமாக நாம் அவரை மிக்க பொறுமையாளராகவே கண்டோம்;அவர் மிக்க நல்லடியார்.நிச்சயமாக அவர் நம்பால் அதிகமாக மீளக்கூடியவராக இருந்தார்.
(அல்குர்ஆன் 38-44)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:17-2-2018.

No comments:

Post a Comment