Friday, 16 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 9


அய்யூப் நபியின் வரலாற்றிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்

அடியான் மகிழ்ச்சியிலும்,துன்பத்திலும்,வெற்றியிலும்,தோல்வியிலும் இவ்வாறு அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டும் என்பதையும்;முறையீட்டு செவிசாய்ப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்றும்;கஷ்டத்தை நீக்குபவன் அவன் ஒருவன் மட்டுமே என்றும் உறுதி பூண்டிருக்க வேண்டும்.

இந்த உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் தான் முஃமினுடைய உள்ளத்தில் நிம்மதி ஏற்படும்.அவனுடைய வாழ்க்கை அமைதியாக இருக்கும்.எந்த பதட்டமும்,கலக்கமும் இருக்காது.அவனுடைய உள்ளம் அல்லாஹ் தனக்கு விதித்ததை ஏற்றுக் கொள்ளும்.அவனுக்கென்று அல்லாஹ் பங்கிட்டதை பொருந்திக் கொள்ளும்.

இரண்டாவது படிப்பினை:அய்யூப் நபியிடமிருந்து பொறுமையை நாம் கற்க வேண்டும்.தனக்கு ஏற்படும் துன்பத்தின் மீது பொறுமை,நோயின் மீது பொறுமை,பொருளையும் குழந்தைகளையும் இழப்பதின் மீது பொறுமை இவ்வாறு தன் டியார்களை அல்லாஹ் எதன்மூலம் சோதிக்கிறானோ அப்படிப்பட்ட அனைத்திலும் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்;என்பதை அய்யூப் நபியின் வரலாற்றிலிருந்து நாம் புரிகிறோம்.

இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களை சோதிக்க காரணம்:அவர்களில் பொறுமையுள்ளவர்கள் யார்?பொறுமையற்றவர்கள் யார்?என்பதை தெளிவாக கண்டறிவதற்காகத்தான்...
அல்லாஹ் கூறுகிறான்:(விசுவாசிகளே!)உங்களில் அறப்போர் புரிவோரையும்,பொறுமையாளர்களையும் நாம் அறிந்து (அறிவித்து) விடும் வரை,உங்களைநிச்சயமாக நாம் சோதிப்போம்;இன்னும் உங்களுடைய செய்திகளையும் நிச்சயமாக நாம் வெளிப்படுத்துவோம்.
(அல்குர்ஆன்:47-31)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:அறிந்துகொள்! நிச்சயமாக சிரமமான காரியத்தின் மீது பொறுமையாக இருப்பதில் பல நன்மைகள் உள்ளன.நிச்சயமாக பொறுமையுடன்தான் அல்லாஹ்வின் உதவி இருக்கிறது.நிச்சயமாக துனபத்துடன்தான் இன்பமும் இருக்கிறது.நிச்சயாக கஷ்டத்துடன்தான் இலேசும் இருக்கிறது.(அஹ்மத்)

அய்யூப் நபி வரலாறு நிறைவுபெற்றது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:17-2-2018

No comments:

Post a Comment