Friday, 16 February 2018

நபி அய்யூப் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு - 6


ஹதீஸின் தொடர்ச்சி...

பிறகு அவர்கள் உண்மைக்குப் புறம்பான விஷயத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறியது எனக்கு பிடிக்காததால் அவ்விருவருக்காகவும் நானே குற்றப் பரிகாரம் செய்தேன்.

(ஹதீஸின் தரம்:ஹய்ஸமீ மஜ்மவுஜ் ஜவாயிதில் கூறுகிறார்கள்:பஜ்ஜாரின் அறிவிப்பாளர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.இது நபிமொழி என்று கூறப்பட்டாலும்,இது முற்றிலும் ஃகரீப் வகை ஹதீஸாகும்.
-தஃப்சீர் இப்னு கஸீர்)

அய்யூப் நபி சுயதேவையை அவர்களின் மனைவியுடைய உதவியுடன நிறைவேற்றி வந்தார்கள்.ஒருநாள் மனைவியும் அவர்களை விட்டும் பின்வாங்கிய பொழுது அல்லாஹ் அய்யூப் நபிக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்:
உம்முடைய காலால் பூமியில் அடியும்"என்று கூறினோம்;அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது;அவரிடம்,இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும்,பானமும் இருக்கின்றன என்று கூறினோம்,அதனால் அவருடைய நோய் குணமாகி விட்டது.
(அல்குர்ஆன் 38:42)

இதற்கு பின் அய்யூப் நபியின் மனைவி அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் அல்லாஹ் நீக்கிவிட்டான்.அவர்கள் முன்பிருந்தது போல அழகிய தோற்றமுடையவர்களாக ஆனார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


  • 🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴


பதிவு நாள்:17-2-2018

No comments:

Post a Comment