அய்யூப் நபியும் இரு சகோதரர்களும்
பஜ்ஜார் மற்றும் பிற ஹதீஸ் நூற்களில் அனஸ் பின் மாலிக் அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது:
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:அய்யூப் அலை அவர்கள் 18 ஆண்டுகள் சோதனையில் ஆழ்த்தப்பட்டார்கள். மிக நெருக்கமான அவர்களின் இரு சகோதரர்களைத் தவிர நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் அனைவரும் விலகிச் சென்றுவிட்டனர்.
அவ்விருவரும் அன்னாரிடம் காலையிலும், மாலையிலும் அய்யூப் நபியிடம் வந்து செல்வார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரிடம், அல்லாஹ்வின் மீதாணையாக!உலகில் யாரும் செய்யாத ஒரு குற்றத்தை அய்யூப் செய்துள்ளார் என்பதை நீ அறிவாயா? என்று கேட்டார்.
மற்றவர், அது என்ன குற்றம்? என்று கேட்க "அவர் அதன் காரணமாகத்தான் 18 ஆண்டுகளாக அல்லாஹ் அய்யூபுக்கு கருணை காட்டாமலும், அவரது துன்பத்தை அகற்றாமலும் இருக்கிறான் என்றார்."
பேசிக்கொண்டிருந்த அந்த இருவரும் அவர்களிடம் வந்தனர். அய்யூப் நபியின் மீது தம் சகோதரர் குற்றம் சாட்டியதைக் கேட்ட அந்த இரண்டாமவர் பொறுமை இழந்து அதை அய்யூப் அலை அவர்களிடம் கூறிவிட்டார்.
அதற்கு அய்யூப் அலை அவர்கள் கூறினார்கள்: நீர் சொல்வது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அனைத்தையும் அறிகின்றான்.
நான் ஒரு முறை சர்ச்சை செய்து கொண்டிருந்த இரு மனிதர்களை கடந்து சென்றேன். அவ்விருவரும் உண்மைக்கு புறம்பான ஓர் விஷயத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறி சத்தியம் செய்து தர்க்கம் செய்து கொண்டிருந்தனர்.
நான் அதை தடுக்காமல் என் வீட்டுக்கு சென்று விட்டேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:17-2-2018
No comments:
Post a Comment