Monday, 19 February 2018

ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள் – அடிக்கடி கோபப்படுகிறீர்களா? பாதுகாவல் தேடுங்கள்!


“அற்ப விஷயங்களுக்கெல்லாம் எனக்குக் கோபம் வருகிறது….

கேள்விப்பட்டது போல் இல்லை? கடந்த முறை உங்களுக்கு கோபம் வந்த போது என்ன செய்தீர்கள்?  கத்த ஆரம்பித்தீர்களா அல்லது சாபம் கொடுத்தீர்களா?  இது உண்மையில்  பலவீனமான ஈமானின் அடையாளம் என அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்!

கோபம் வரும் தான், ஆனால் அதை மாற்றி ஒரு நற்கூலி தரும் சுன்னத்தாக ஆக்குங்கள்: அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுதல்.

கோபத்தின் போது ஓத வேண்டிய துஆ!

َ أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ

அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி 3282)

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ

அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்றும் கூறலாம். (ஆதாரம்: புகாரி 6115)

அதனால், குர்’ஆன் ஓதத்தொடங்கும்போதும், தொழுவதற்கு முன்னாலும் மட்டும் இஸ்தி’ஆதா (பாதுகாவல் தேடுதல்) சொன்னால் போதாது, உங்களுடைய கோபத்தை அடக்கவும் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துங்கள்!

அடுத்தமுறைஉங்களுக்குக்கோபம்வரும்போது, ஏதாவதுசெய்வதற்குஅல்லது பேசுவதற்குமுன்னால்,‘அ’வூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’என்றுகூறுங்கள்!

No comments:

Post a Comment