Wednesday, 14 February 2018

அல்அக்ஸாவை மீட்போம் தொடர்- 10

பாலஸ்தீனம் வாக்களிக்கப்பட்ட பூமி

பாலஸ்தீன பூமியும், அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகும். ஹிஜ்ரத்துக்கு முன்பு மக்காவில் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜ் நடந்த இரவில் பாலஸ்தீன புனித பூமிக்கு வந்துள்ளார்கள். அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் நபிமார்களுக்கு தலைமை தாங்கி தொழுகை நடத்தினார்கள்.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இருந்து தான் படைத்த ஏக இறைவனான அல்லாஹ்வை சந்திக்க புறப்பட்டும் சென்றார்கள்.

பாலஸ்தீனமும், அல்அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களின் ஈமான் எனும் மத நம்பிக்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.

ஆதலால், பாலஸ்தீனமும் – அல்அக்ஸா பள்ளிவாசலும் இன்றி முஸ்லிம் உம்மத்தை நினைத்துப் பார்க்கவும் இயலாது.

முஸ்லிம்களின் கைகளில் பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகவும், , அல்அக்ஸா பள்ளிவாசல் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் இருந்ததால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களால் கி.பி. 634 ஆம் ஆண்டு நடந்த அஜ்னாதைன் யுத்தத்தில் பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது.

புகழ்பெற்ற ஜெருசேலம் ஒப்பந்தத்தின்படி கி.பி. அல்அக்ஸா பள்ளிவாசலும், ஜெருசேலம் நகரும் பாலஸ்தீனம் சென்ற கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு (கி.பி.636) ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்றொரு பயங்கரவாத நாடு உருவாக்கப்படும் வரை பாலஸ்தீனமும், ஜெருசேலம் நகரும், அல்அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களின் கரத்தில் தான் இருந்தன.

கலீஃபா உமர். ஜெருசலேமில் இஸ்லாமிய ஆட்சி . 

ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717-ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான்.

ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, "உமையாக்கள்" என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.)

அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது.

ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது.

யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.

ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான்.

கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது.
வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.

ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.

யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள்.

(உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!)

கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள்.

இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு.

இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்? மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும்.

அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.

ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.

ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."
நகர்வலத்தின் இறுதியில் மக்களிடையே உரையாற்றிய உமர், ஒரே ஒரு விஷயத்தை மிகவும் அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

"யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருமே இப்ராஹிமின் (ஆபிரஹாம்) வழித்தோன்றல்கள். சண்டையின்றி ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம்."

இந்தச் சொற்பொழிவு, அதுநாள் வரை ஜெருசலேமை ஆட்சி செய்துவந்த கிறிஸ்துவர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைத் தந்தது.

பொதுவாகப் போரில் வெல்லும் மன்னர்கள், தமது மதத்தை அனைவரும் ஏற்றே தீர நிர்ப்பந்தம் செய்வதே அந்நாளைய வழக்கம்.

ஒரு மாறுதலுக்கு உமர், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல், அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் யூதர்களையும் திரும்பவந்து அங்கே வாழும்படி அழைப்பு விடுத்தார்.

"நீங்கள் தைரியமாக ஜெருசலேத்துக்குத் திரும்பிவரலாம். யாராலும் உங்களுக்குத் தீங்கு நேராமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு" என்கிற உமரின் உத்தரவாதத்தை நம்பி சுமார் எழுபது யூதக் குடும்பங்கள் அன்று ஜெருசலேம் திரும்பியதாகத் தெரிகிறது.

இதோடு நிறுத்தவில்லை.

ஜெருசலேத்திலிருந்து யூதர்களை கிறிஸ்துவர்கள் விரட்டியபிறகு, அங்கிருந்த யூத தேவாலயங்கள் நகரசபையின் கழிவுப்பொருள் சேகரிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

அதாவது, கிறிஸ்துவர்கள் தமது யூதவெறுப்பை அப்படியாக வெளிக்காட்டியிருந்தார்கள்.

ஜெருசலேம் கைப்பற்றப்பட்டபிறகு அங்கே உமர் வெளியிட்ட முதல் அரசு உத்தரவு, அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதுதான்.

உத்தரவிட்டதுடன் நின்றுவிடாமல், குப்பை அள்ளும் பணியில் முதல் கரம் கொடுத்ததும் அவரேதான்.

இதுவும் பல யூத சரித்திர நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவமே. (ஆனால் கிறிஸ்துவ ஆசிரியர்களின் நூல்களில் இந்தச் சம்பவம் எழுதப்பெறவில்லை.)

ஆனால் இத்தனை பரந்த மனம் படைத்தவராக இருந்த உமர், முஸ்லிம் அல்லாத பிற இனத்தவர் அனைவரையும் இஸ்லாமியப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்தும், மெக்கா, மதினா ஆகிய நகரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வேறு இடங்களில் வசிக்க நிர்ப்பந்தித்ததாக ஒட்டுமொத்த யூத, கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்களும் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் இருந்தார்களா?

வரலாற்றில் ‘ அல் அஹ்ததுல் உமரிய்யா’ (Umar's Assurance –உமர் வாக்குறுதி உத்தரவாத ஒப்பந்தம்) என்றழைக்கப்படும் ஒப்பந்தம் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு (கி.பி. 636) கலீஃபா உமர் (ரழி) அவர்களுக்கும் ஜெருசேலம் நகர கிறிஸ்தவ மதத் தலைவராக கி.பி.634 முதல் 638 வரை பதவி வகித்த சாஃப்ரானியூஸ் (sophronius) க்கும் இடையே புகழ் பெற்ற கியாமா தேவாலயத்தில் (ஆங்கிலத்தில் Church of the Holy Sepulchre  தமிழில் திருக்கல்லறைத் தேவாலயம்) வைத்து நடந்ததாகும்.

அதில் கிறிஸ்தவர்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று யூதர்களை ஜெருசேலம் நகரில் தங்கிட இஸ்லாமிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதாகும். உமர் (ரழி) அதனை ஏற்றார்கள்.


(மேற்கண்ட அத்தேவாலயத்தில் வைத்து ஒப்பந்தம் நடந்த பொழுது தொழுகை நேரம் வந்தது. உமர் (ரழி) தொழுவதற்கு பள்ளிவாசலுக்கு செல்ல முற்பட்டார்கள். பாதிரியார் சாஃப்ரானியூஸ் இங்கேயே தொழுங்கள் என்று வேண்டினார். அதனை ஏற்க மறுத்த உமர் (ரழி) இவ்வாறு காரணம் சொன்னார்கள்.

நான் இங்கு தொழுதால் வரும் காலத்தில் இது எங்களின் கலீஃபா தொழுத இடம் என்று சொந்தம் கொண்டாடுவார்கள். ஆதலால், வேண்டாம் என்றார்கள். இன்று வரை இது கிறிஸ்தவ தேவாலயமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது)

நாடற்ற அனாதைகள்

இறைவனுக்கும், இறைத்தூதர்களுக்கும் செய்த துரோகத்தினால் வரலாற்றில் நீண்ட நெடிய காலமாக நாடற்ற அனாதைகளாக அலைந்தவர்கள் யூதர்கள்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 1948 வரை யூதர்களுக்கென்று தனிநாடு உலகில் இருந்ததில்லை.

யூதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்நாட்டின் மீது எதிரி நாடு போர் தொடுத்தால் அவர்கள் எதிரி நாட்டுடன் சேர்ந்து கொள்வார்கள். இது அவர்களின் பிறவி இயல்பு. இதனால் பன்னெடுங்காலமாக ஐரோப்பிய நாடுகள் யூதர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தின.

மேலும் யூதர்கள் தங்களின் நாடுகளில் வாழ்வதை ஐரோப்பாவில் எந்த நாடும் எப்போதும் விரும்பியதில்லை. அவர்களை ஆட்சிக்கு ஆபத்தாகவே ஐரோப்பிய அரசுகள் கருதின.

ஆதலால் தான் யூதர்கள் ஐரோப்பாவில் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள். அடக்கப்பட்டார்கள். விரட்டப்பட்டார்கள்.

யூதர்களுக்கு புகலிடம் தந்த முஸ்லிம்கள்

ஐரோப்பாவில் யூதர்கள் விரட்டப்பட்ட காலங்களில் அவர்களுக்கு இஸ்லாமிய நாடுகள் தாம் அடைக்கலம் தரும் தேசங்களாக விளங்கின.

இஸ்லாமிய நாடுகளில் அடைக்கலம் புகுந்த யூதர்கள் அங்கே எந்த பாகுபாடும் காட்டப்படாமல் மனிதநேயத்துடன் கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இஸ்லாமிய அரசு வீழ்ந்து கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆட்சியை பிடித்த சமயத்தில் யூதர்கள் அந்நாட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

அச்சமயத்தில் துருக்கி இஸ்லாமிய கிலாஃபா அரசு தான் அவர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது.
இன்ஷா அல்லா இனி வரும் காலங்களில் ஒரு சிறந்த ஆட்சியாளரை பாலஸ்தீன நாட்டில் கொண்டு அல்அக்ஸா பள்ளி வாசலை உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்க
அல்லாவிடம் துவா செய்வோம்.

முஹம்மது சலீம் - அமெரிக்கா.

No comments:

Post a Comment