Tuesday, 20 February 2018
மறுமை வாழ்க்கையே நிரந்தரமானது - 2
அல்ஹாபிழ் அ.சதாம் உசேன் ஹசனி (B.A Arabic)
இவ்வுலகில் மனிதனுக்கு கிடைத்த எல்லா அருட்கொடைகளும் அவனுக்கு நிரந்தரமாக கொடுக்கப்பட்டது கிடையாது என்பதை மனிதர்களுக்கு நேரான பாதையை காட்டுவதற்கு இறக்கப்பட்ட குர்ஆன் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
"(விசுவாசிகளே)பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும்,
செல்வங்கள், உயிர்கள், கனிவிலைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்.மேலும் (நபியே இவற்றைப்)பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)
அன்பானவர்களே!
நாம் உலகில் பெறக்கூடிய எந்த இன்பமாக இருக்கட்டும் அல்லது துன்பமாக இருக்கட்டும் எதுவுமே நிலையானது கிடையாது என்ற அடிப்படைத் தத்துவத்தை மிகத் துள்ளியமாக இந்த வசனம் நமக்கு போதிக்கிறது..
இன்றைக்கு மனிதர்களில் பலர் இவ்வுலக இன்பமே நிறந்தரமானது என்ற எண்ணத்தில் மூழ்கி விடும் சமயம் அவற்றை இறைவன் நிரந்தரமற்றது என்பதை புரிய வைக்க பிடுங்கி விடுகின்றான்.
ஆனால் அதை புரியாத மனிதனோ வாழ்க்கை முழுவதும் முடிந்துவிட்டது என்று எண்ணி தன் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறான்..
இன்னும் ஒருசில மனிதர்கள் பெரும் பெரும் துண்பங்களில் சிக்குன்டு சின்னா பின்னமாகிய பின்பு இறைவன் அவனுக்கு இன்பத்தை அனுபவிக்க வைக்கும் சமயம் தன்னிலை மறந்து வாழ ஆரம்பித்து
விடுகின்றான்..
பிறகு இறப்பு வந்து அவனை கவ்விக் கொள்ளும் சமயம் இவ்வுலகை விட்டும் பிரியமுடியாத துயரத்தோடு விடை பெறுகிறான்.
அவன் பெற்ற செல்வங்களோ அல்லது செல்வாக்கோ ஒருபோதும் அவனை இவ்வுலகில் நிலைக்கச் செய்வது கிடையாது.
இவ்வாறு மனிதனுக்கு இவ்வுலகில் எவ்வாறு பற்றற்று வாழ வேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலம் பரிசுத்த குர்ஆன் மனிதனுக்கு விளக்குகிறது..
மனிதனின் வாழ்வும் இன்னும் வாழ்வாதாரமும் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சோதனை என்பதாக மனிதனை படைத்த இறைவன் குறிப்பிடுகிறான்.
ஆனால் மனிதன் அவசரக்காரனாக இருப்பதால் முன்னுள்ள காய்களை எடுத்துக் கொண்டு பின் கிடைக்கவிருக்கும் கனிகளை புறக்கணித்து விடுகின்றான்.
இதனால் அவன் பெறும் நஷ்டமோ ஈடுஇனை செய்யப்பட முடியாததாக மாறிவிடுகிறது..
ஆம்! உலகை மட்டுமே சம்பாரிக்க வேண்டும் என்ற வேட்கையோடு வாழ்ந்தவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வு என்று ஒன்று இருக்கிறது என்பதை மறுமையில் கண்டு கொண்டவுடன் அவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை இறைவன் பதிவு செய்து வைத்திருக்கின்றான்.
"மனிதன் அவனுடைய இரு கரங்கள் முற்படுத்தியதை அன்றய நாள் காண்பான்"மேலும் நிராகரிப்பாளனோ (அந்நாளில்)நான் (உலகில்)மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே! என்று கூறுவான்.
(78:40)
அன்பானவர்களே!
உலகில் வாழ்ந்த காலமெல்லாம் உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது என்று எண்ணியவன் இறப்பிற்கு பிறகு இறைவன் வாக்களித்த வாழ்க்கையை நேரில் கண்டு மிகப் பெரும் கைசேதத்தை வெளிப்படுத்துவதையே மேற்கூறிய வசனம் விளக்குகிறது.
எனவே நம் கண்ணில் பட்ட வாழ்க்கையை அனுபவிக்கும் எண்ணம் இருப்பது தவறல்ல.
ஆனால் உலகத்தை சம்பாரிப்பது மட்டும்தான் வாழ்க்கை என்று எண்ணி நிரந்தரமான மறுமை வாழ்வை மறப்பதுதான் மிகப் பெரும் தவறாகும்.
வல்ல இறைவன் நம் அனைவரையும் நிரந்தரமான மறுமை வாழ்விலும் இவ்வுலக வாழ்விலும் வெற்றியாளர்களாக ஆக்கி அருள் புரிவானாக..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment