Friday, 31 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
"

   📚 அல்குர்ஆன்  47:7

💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.
'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன். "

🎭அறிவிப்பாளர்:
இப்னு உமர்(ரலி)

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴


📓நூல்:
ஸஹீஹ் புகாரி

✨💧✨💧31-3-17✨💧✨💧

*அகீகாவின் சட்டங்கள்*


*அகீகாவின் சட்டங்கள்*



குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5472)

*எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?*

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : அஹ்மத் (6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.

ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹசனுக்கும் ஹுஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் (2458)

பதிவு நாள்: 01-04-2017

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 33


*🎯பட்டால் ஆன டை அணியலாமா❓❓*



🔘ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பட்டாடை அணிவதும் . தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.''*
*அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)*
*நூல் : திர்மிதி (1642)*


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாதரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறை மறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.''*
*அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)*
*நூல் : புகாரி (5426)*


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*நபி (ஸல்) அவர்கள் '' இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : உமர் (ரலி)*
*நூல் : புகாரி (5830)*

🔘ஆடையில் ஓரிரு வரிகள் பட்டு இருந்தால் அதை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடை செய்தார்கள் இந்த அளவைத் தவிர. (இதைக் கூறிய போது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.*
*அறிவிப்பவர் : உமர் (ரலி)*
*நூல் : புகாரி (5828)*

🔘ஆடையில் பட்டு சிறிதளவு இருந்தால் தவறில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. சிறிதளவு என்பது எவ்வளவு என்பது இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அணியும் டையில் இந்த அளவிற்குப் பட்டு இருந்தால் தவறில்லை. டை முழுவதும் பட்டால் செய்யப்பட்டிருந்தால் அணியக் கூடாது.

இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்.

பதிவு நாள்: 31-03-2017*

ஏப்ரல் 1 முட்டாள் தினம் அல்ல

ஏப்ரல் 1. முட்டாள் தினம் அல்ல

* அண்ணல் நபி ( ஸல் )அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்; நீர் உம் சகோதரரிடம் ஓரு விஷயத்தைச் சொல்லி அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்
அறிவிப்பாளர்: ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ (ரலி)
நூல்: அபூதாவூத்

ஏப்ரல் 1, "சர்வதேச முட்டாள்கள் தினம் ஆக அனுசரிக்கப்படுகிறது
இதனுடைய உண்மையான வரலாற்றுப்பிண்ணனி~
காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம். அதாவது கி.பி. 1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட் டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தன.
“கிரிகோரி” என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர். அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர்.
புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்து விட்டது.
இஸ்லாம் முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது?
 ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
“முஃமின்களே! 
ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. (அல்குர்ஆன் 49:11)

“மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளையில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)

ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்! என்று குர்ஆன் கூறுகிறது
குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும் ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன் 7:20,20:120)

அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப் அபீ ஷைபா)
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார்." (புகாரி 10)

பதிவு நாள்: 31-03-2017*

Thursday, 30 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

“ நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
"

  📚 அல்குர்ஆன் 45:32

🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.
'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன். "

🎭அறிவிப்பாளர்:
இப்னு உமர்(ரலி)

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴


🌟⭕💢💥30-3-17💢🌟⭕💥

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -1009
🍂🌱🍂🍃🌱🍂🌿🍂🌿🌿🍂

✍தொழுகையை பொடுபோக்கு செய்பவர்களுடைய தண்டனைகள்.




🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
யார் ஒருவர் தொழுகையை பொடுபோக்கு செய்கிறாறோ
அவரை அல்லாஹு தஆலா
15 விடையங்களைக் கொண்டு வேதனைப்படுத்துவான் .
😳😳😳😳😳
🕌----1
துன்யாவில் 6 தண்டனைகள் வழங்கப்படும்.....
1--😰-- அவனுடைய வாழ்க்கையில் பரகத்தை செலிப்பை நீக்கிவிடுவான்...
2--😰--அவனுடைய முகத்திலிருந்து ஸாலிஹீன்களுடைய அடையாளத்தை நீக்கிவிடுவான்.....
3--😰--அவனால் நிறைவேற்றப்படும் மற்றைய அமல்களுக்கு கூலியும் வழங்கப்பட மாட்டாது ...
4--😰-- அவனுடைய துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.....
5--😰--ஸலிஹீன்களுடைய துஆவிலே அவர்களுக்கு எவ்வித பங்கும் கிடைக்கமாட்டாது....
6--😰--மனிதர்கள் அவர்கள் மீது கோபத்தை காட்டுவார்கள்.....
🕌---2
மௌத்துடைய நேரத்தில் 3 தண்டனைகள் வழங்கப்படும் ....
1--😫-- அவருக்கு மரணம் இழிவான முறையில் ஏற்படும் ..
2--😫-- அவருக்கு பசித்த நிலையிலே மரணம் ஏற்படும்...
3--😫-- இன்னும் அவன் தாகித்த நிலையில் மரணிப்பான் ...
✍ அந்த தாகத்துக்கு
துன்யாவிலுள்ள கடல்களின் நீர் அணைத்தையும் புகட்டினாலும் தாகம் தீராத அளவுக்கு தாகித்தவனாக மரணிப்பான் .....
🕌---3 கப்ரிலே 3 தண்டனைகள் வழங்கப்படும்....
1--😖-- அவனை கப்ர் நெருக்கும்... (அவனுடைய விலா எலும்பு மாற்றமடையும் அளவுக்கு கப்ர் நெருக்கும்...)
2--😖-- கப்ரிலே அவருக்கு எதிராக நெருப்பு மூட்டப்பட்டும்... அந்த
நெருப்பு இரவு பகலாகவே தனலாகக் காணப்படும் ...
3--😖-- கப்ரில் அவருக்கு எதிராக ஒரு மலைப்பாம்பு சாட்டப்படும்...
♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢
மலைப்பாம்பின்
🐍----பெயர் ----
الشجاع الاقرع
அச்சுஜாஉல் அக்ரங்...
🐍----கண்----
நெருப்பாலானது....
🐍----நகங்கள்----
இரும்பாலானது.....
🐍----ஒரு நகம் ---
ஒவ்வொறு நகமும் ஒரு நாள் நடக்கும் தூரத்தின் அளவுக்கு விஷாலமானது ......
🐍----சத்தம் -----
பயங்கரமான
இடியுடைய
சத்தத்தைக்
கொண்டது......
🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉
இவ்வாறு அந்த பாம்பு மய்யத்துடன் கதைக்கும் ......
நான் தான் சுஜாஉல் அக்ரங் ...
அல்லாஹு தஆலா எனக்கு உன்னைத்தீண்டும் படி (உனக்கு அடிக்கும்) படி ஏவினான் ....
ஏனென்றால் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றாமல் வீணாக்கினதற்காக வேண்டி ஒரு அடயும் ...அவ்வாறே லுஹர் , அஸர் , மஃரிப்,இஷா தொழுகைகளை நிறைவேற்றாமல் வீணாக்கினதற்காக வேண்டி ஒவ்வோர் அடியாக உனக்கு அடிப்பதற்காகவே என்னை சாட்டினான்....என்று பாம்பு கூறும்.....
🙄🙄🙄 ---- ஒரு முறை அந்த மலைப்பாம்பு தீண்டினால் 70 முலங்கலளவுக்கு அவன் நிலத்திலே மூழ்குவான் .....
மீண்டும் மீண்டும் தீண்ட தீண்ட அவன் கியாமத்து நாள் வரை நிலத்திலே மூழ்கி அதாபு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்....
🐉😨😨😳😳😨😨🐉
🕌---4
மறுமையில்
கப்ரிலிருந்து வெளியேற்றப்படும்
நேரத்தில் 3
வேதனைகள்
வழங்கப்படும் .....
1--😡--அவனுக்கு கேள்விகணக்கு கடினமாக்கப்படும் ....
2--😡--அல்லாஹு தஆலாவுடைய கோபத்துக்கு சொந்தம் பெறுவான் ...
3--😡-- அவன் நரகத்தைப் பெற்றுக்கொள்வான்....
😰😰😰😰😰😰😰😰😰 சகோதர,
சகோதரிகளே சிந்தித்து
பாருங்கள்!! அவன்
சந்திப்பில் சித்தி பெற சிந்தனையை பேதனையாக மாற்றிக் கொள்ளுங்கள்.......
இறைவனிடத்தில் அவனின் கண்ணியத்தைப் பெற்று .....சுவர்க்கம் தனை பெற்றிட இறைஞ்சிடுவோமாக.....
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆by Moulavi irfan rashady

பதிவு நாள்: 31-03-2017

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -32





*🎯ஆல்கஹால் கலந்த மவுத்வாஷை பயன்படுத்தலாமா?*

*🔘வாய் கொப்பளிக்கபயண்டுத்தப்டும் மவுத்வாஷில்சிறிதளவு ஆல்கஹால்கலந்துள்ளது. இதைப்பயன்படுத்தலாமா❓❓*


🔘அனைத்து மவுத் வாஷ்களிலும்ஆல்கஹால் கலந்துள்ளதாஎன்பது தெரியவில்லை. அப்படிகலந்திருந்தால் அதன் மூலம்வாய் கொப்பளிக்க்க் கூடாது.

🔘ஆல்கஹால் போன்ற போதைபொருட்களை வெளிஉபயோகத்துக்கு பயன்படுத்ததடை இல்லை. பார்க்க

🌺ஆனால் உள் உபயோகத்துக்குபயன்படுத்தக் கூடாது

🔘ஒரு பொருளை அதிகமாக சாப்பிட்டால் போதை ஏற்படும் என்றால் அதில் குறைவானஅளவைச் சாப்பிடுவதும் கூடாது குறைவான அளவைச் சாப்பிட்டால் போதை ஏற்படாது என்றாலும் அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.  

*📚ஹதீஸ்👇🏻👇🏻*

*"அதிகம் (சாப்பிட்டால்) போதைதரக்கூடிய பொருளில்குறைவானதும் தடுக்கப்பட்டது(ஹராம்) தான்'' என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)*

*நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513*

🔘ஆல்கஹாலை உண்டால் போதைஏற்படும் என்பதால் இதில்சிறிதளவையும் பயன்படுத்தக்கூடாது. ஆல்கஹால் கலந்தபானத்தை வாய்கொப்பளிக்கும்போது வாய்க்குள் அந்தஆல்கஹால் சிறிதளவேனும்தங்கி இருக்கும்.

🔘இது எச்சிலின் வழியாகவோ நாம்உண்ணும் உணவின் வழியாகவோவயிற்றுக்குள் செல்லவாய்ப்புள்ளது. எனவேஉண்ணுவதற்கு தடைசெய்யப்பட்ட இது போன்றபொருட்களைக் கொண்டுவாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும்கூடாது.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)

பதிவு நாள்: *30-03-2017*

பெருமானாரைக் குறித்து இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.



இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
=======================
⭕பெருமானார் (ஸல்) அவர்களின்
மனைவிமார்கள்.
1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி).

⭕பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்.
பெண் மக்கள்
1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).

ஆண் மக்கள்.
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி).

⭕நீதி நபி (ஸல்) அவர்களின்
நிர்வாகஸ்தர்கள்.

1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்
(ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத் இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி).

⭕கவிஞர்கள்.
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).

⭕முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.
1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).

⭕பணியாளர்கள் ஆண்கள்.
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).

⭕பெருமானார் (ஸல்)அவர்களின்
குதிரைகள்
ஒட்டகங்கள்.
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்

⭕ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்
1 . பைளா.
1 . முஸ்னா.
2 . ரவ்ஹா.
2 . முஸ்வீ
3 . ஸ.:ப்ரா
4 . ஜவ்ரா.
5 . சதாத்.

⭕இஸ்லாமிய போர்.
போரின் பெயர்
பிறை ஹிஜ்ரி.
1 . பத்ரு போர் ரமலான்01
2 .உஹது போர் ஷவ்வால் 03
3 . சவீக்சண்டை ஷவ்வால் 03
4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான் 05
5 . அஹழ் போர் ஷ.:பான் 05
6 . கைபர் போர் ஷ.:பான் 07
7 . மூத்தாப் போர் ஷ.:பான் 07
8 . மக்கா வெற்றி ஷவ்வால் 08
9 . ஹூனைன் போர் ஷவ்வால் 09
10 . தபூக் போர் ரஜப் 09
11 . தாயிப் போர்.

⭕நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம்
பற்றி நபிமார்கள் வேதம் பாஷை.

🔘மூஸா (அலை)
தவ்ராத் இப்ரானி.

🔘தாவூத் (அலை)
ஸபூர் யூனானி.

🔘ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி.

🔘முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி.

⭕க.:பா கட்டுவதற்கு கல்
எடுக்கப்பட்ட மலைகள்.
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.

கட்டியவர் : இப்ராஹீம் (அலை) ,
இஸ்மாயில் (அலை).

⭕மனிதனின் அந்தஸ்துகள் (தரஜாக்கள் )
முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 . அப்தால்
10 . அக்யார்
11 . ஆரி.:பீன்
12 . அன்வார்
13 . அவ்தாத்
14 . முக்தார்
15 . இமாமனி
16 . குதுப்
17 . தாபியீ
18 . சஹாபி
19 . அன்சாரி
20 . முஹாஜிரி
21 . ஷஹீத்
22 . சித்திக்
23 . நபி
24 . ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும் ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்.

⭕நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
ரஸூல்மார்கள் -
313 பேர்.
குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்
- 25 பேர்.
313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர்.

1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).
திருக்குர்ஆனின் வசனம் - 6666
சொற்கள் - 75430
எழுத்துக்கள் - 326671.

⭕சுவர்க்கத்தின் பெயர்கள்.
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்.

⭕நான்கு வகை உயிர்கள்.
1 . ரூஹுல் ஜிமாத் -ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து - தாவர உயிர்
3 . ரூஹுல் ஹைவான் - பிராணி உயிர்
4 . ரூஹுல் இன்சான் - மனித உயிர்.

⭕நப்ஸின் ஏழு வகைகள்.
1 . நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா.

⭕மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்.
1 . தபக்கஹூத்துஸ் தூர்
2 . தபக்கத்துல் கல்பி
3 . தபக்கத்துஷ் ஷிகாப்
4 . தபக்கத்துல் .:புஆத்
5 . தபக்கத்து ஹூப்பத்துல்கல்லி
6 . இல்முல்லதுன்னி
7 . தபக்கத்த.

அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்...

நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 422*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 422*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரை யார்❓*

💠 *பதில் =*
 _முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்._

*ஆதாரம் = *அல்குர்ஆன்: 33:40*

📖முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 33:40)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எவர்களுடைய வீடுகளை எரித்து விடலாம் என நினைத்ததாக பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_தொழுகையை நிலைநிறுத்தும்படி கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது கூட்டுத் தொழுகைக்கு வருகை தராத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு._

*ஆதாரம் = *புகாரி: 657,2420,7224*
*முஸ்லிம்: 1154,1155,1156*

📑657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📃7224. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து கள்ளிகளாக உடைக்கும்படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக்கும்) மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. 84 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் 'இஷா' தொழுகையில் கலந்து கொள்வார்.
முஹம்மத் இப்னு சுலைமான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'மிர்மாத்' என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்பாட்டில்) 'மின்ஸாத்' மற்றும் 'மீளாத்' போன்றதாகும். இதிலுள்ள 'மீம்' எனும் எழுத்துக்கு 'இகர' அடையாளம் ('கஸர்') உண்டு.
ஸஹீஹ் புகாரி.

🗒1154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📜1156. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, "நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
2. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. சுல்தான் - திருநெல்வேலி 2
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
8. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
10. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30 - 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 421*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 421*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எவர்களை நோக்கி வேதனை இரட்டிப்பாக்கப்படும், எதனால் என்று என  அல்லாஹ் கூறுகிறான்*❓

💠 *பதில் =*
_நபியுடைய மனைவிகளை நோக்கி "உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின்"_

*ஆதாரம் = *அல்குர்ஆன்: 30:30*

📖 நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
(அல்குர்ஆன் : 33:30)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எந்த நிலை இல்லாமல் இருந்திருந்தால், எது செய்யும் மற்றொரு சமுதாயத்தை அல்லாஹ் கொண்டு வருவான் என பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_நீங்கள் பாவங்கள் செய்து, அவற்றை அல்லாஹ் உங்களுக்கு மன்னிக்கும் நிலை இல்லாதிருந்தால், பாவங்கள் செய்யும் மற்றொரு சமுதாயத்தை அல்லாஹ் கொண்டு வருவான்; அப்பாவங்களை அவர்களுக்கு மன்னிக்கவும் செய்வான்._

*ஆதாரம் = *முஸ்லிம்: 5303,5304*

📃5303. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பாவங்கள் செய்து, அவற்றை அல்லாஹ் உங்களுக்கு மன்னிக்கும் நிலை இல்லாதிருந்தால், பாவங்கள் செய்யும் மற்றொரு சமுதாயத்தை அல்லாஹ் கொண்டு வருவான்; அப்பாவங்களை அவர்களுக்கு மன்னிக்கவும் செய்வான்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📑5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
2. ஹக்கிம் - தென்காசி 2
3. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
5. அமீர் - அய்யம்பேட்டை(தஞ்சை) 1
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
7. சுல்தான் - திருநெல்வேலி 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
9. அப்துல் பாசித் - சவுதி 2
10. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
11. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2

🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30 - 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 420*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 420*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எவர்களுடைய நற்செயல்களையும் பாழாக்கிவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?*

💠 *பதில் =*
_உண்மையாக ஈமான்  கொள்ளாதவர்களுடைய நற்செயல்களையும்._

*ஆதாரம் =அல்குர்ஆன்: 33:19*

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எந்த இடத்திலிருந்து குழப்பம் தோன்றும் என பெருமானார் எந்த திசையை நோக்கி கூறினார்கள்❓*

📃(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
(அல்குர்ஆன் : 33:19)

💠 *பதில் =*
 _ஷைத்தானின் கொம்பு அல்லது சூரியனின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து தோன்றும்.கிழக்கு திசையை நோக்கி கூறினார்கள்._

*ஆதாரம் = புகாரி*  3104,3279,3301,3498,3511,5296,7092*
*முஸ்லிம்:5565,5566,5568,5569*

📜3104. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா(ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, 'இங்கிருந்து தான் குழப்பம் ஏற்படும்' என்று மூன்று முறை கூறிவிட்டு, 'ஷைத்தானின் கொம்பு (தலையின் ஓரப்பகுதி) எங்கிருந்து உதயமாகிறதோ அங்கிருந்து...' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

🗒7092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (ம்ழக்குத் திசையைக் சுட்டிக் காட்டி) 'குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். 'ஷைத்தானின் கொம்பு' அல்லது 'சூரியனின் கொம்பு' உதயமாகும் இடத்திலிருந்து' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📖5565. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்றுகொண்டு, கிழக்குத் திசையை நோக்கித் தமது கையால் சைகை செய்து, "குழப்பம்,  இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஹக்கிம் - தென்காசி 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. சுல்தான் - திருநெல்வேலி 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
6. அப்துல் பாசித் - சவுதி 2
7. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
10. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

1. ஆயிஷா பர்வின் -இராஜகிரி(தஞ்சை) 1

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30 - 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 419*


🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 419*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *இதயங்கள் எப்போது தொண்டைக் குழியை அடைந்ததாக அல்லாஹ் கூறுகிறான் ?*

💠 *பதில் =*
_எதிரிகள் படையெடுத்து வந்த போது._

*ஆதாரம் = அல்குர்ஆன்: 33:10*

📃உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்.
(அல்குர்ஆன் : 33:10)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எவர்கள் வேதத்தில், பல பொருட்கட்கு இடம் அளிக்கும் வசனங்களை கடைப்பிடிப்பர்? என பெருமானார் கூறிய குர்ஆன் வசனம் எது❓*

💠 *பதில் =*
_இதயத்தில் கோளாறு உள்ளவர்கள்._

*ஆதாரம் =புகாரி:4547*
*முஸ்லிம்: 5179*

📃4547. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் 'கோணல்' உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ 'இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை' எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, 'முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📜5179. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (அதில்) உள்ளன. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்கள், வேதத்தில் பல பொருள்களுக்கு இடமளிப்பவற்றையே பின்தொடர்வர். குழப்பம் செய்ய விரும்பியும், அவற்றுக்கு (சுயமாக) விளக்கம் அளிக்க விரும்பியுமே (அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்).
ஆனால், அவற்றின் (மெய்ப்)பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியார். கல்வியில் தேர்ந்தவர்கள், நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே" என்று கூறுவர். அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதை) உணர்வதில்லை" (3:7) எனும் இறை வசனத்தை ஓதிவிட்டு, "பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வோரை நீங்கள் கண்டால், அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஆட்கள் (என்பதை அறிந்து),அவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
2. ஹக்கிம் - தென்காசி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அமீர் - அய்யம்பேட்டை(தஞ்சை) 1
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. சுல்தான் - திருநெல்வேலி 2
9. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
11. அப்துல் பாசித் - சவுதி 2

💠💠💠💠💠💠💠💠💠💠💠

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💠💠💠💠💠💠💠💠💠💠💠

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 _மார்க்க மார்க்க_ *கேள்வி எண்: 418*


🕋 _மார்க்க மார்க்க_ *கேள்வி எண்: 418*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *ஆய்ந்து நோட்மிட வேண்டாமா என்று அல்லாஹ் கேட்பன யாவை❓*

💠 *பதில் =*
_நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்._

*ஆதாரம் =* அல்குர்ஆன்: 32:27*

📃அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
(அல்குர்ஆன் : 32:27)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எந்த இரண்டும் அல்லாஹ்வினுடைய சான்றில் இருப்பவையாகும் என பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_சூரியன், சந்திரன்_

*ஆதாரம் = *புகாரி:3201,3202,3203,3204*
_முஸ்லிம்_: *1643,1644,1645,1648,1651,1652, 1659,1663,1664,1670,1671*

📃3201. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

🗒3204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றை நீங்கள் காணும்போது (இறைவனைத்) தொழுங்கள்.
என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📜1659. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அவர்களுடன் மக்களும் தொழுதனர். அப்போது (குர்ஆனில்) ஏறக்குறைய "அல்பகரா" (எனும் இரண்டாவது) அத்தியாயத்தை ஓதும் அளவிற்கு நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (மீண்டும்) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவை விடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉ வான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவோ எவரது பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் (தொழும்போது) இந்த இடத்தில் நின்றுகொண்டு எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியை) கைவிட்டதையும் கண்டோமே (அது ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் (தொழுதுகொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து) பழக்குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால், இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதைப் புசித்திருப்பீர்கள். மேலும், நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை.  நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்" என்று கூறினார்கள். மக்கள் "ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்களின் நிராகரிப்பே காரணம்" என்றார்கள். அப்போது "இறைவனையா நிராகரிக்கிறார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் "உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை" என்று சொல்லிவிடுவாள்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு நீங்கள் பின்வாங்கி வந்ததையும் கண்டோமே (ஏன்?)" என்று மக்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
3. அபூதல்ஹா - திருநெல்வேலி 1
4. ஹக்கிம் - தென்காசி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அப்துல் பாசித் - சவுதி 2
2. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
9. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30 - 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 417*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 417*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *வரம்புகளை மீறி பாவம் செய்தவர்களிடம் என்ன சொல்லப்படும்❓*

💠 *பதில் =*
 _“எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த நரக நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்._

*ஆதாரம் = *அல்குர்ஆன்: 32:20*

📖ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
(அல்குர்ஆன் : 32:20)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எதன் காரணத்தினால் நபித் தோழர்களை திட்ட (ஏச) வேண்டாம் என பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் இறை வழியில் செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது._

*ஆதாரம் = புகாரி:3673*
*முஸ்லிம்: 4967,4968*

📄3673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📑4967. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

🗒4968. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காலித் (ரலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை) ஏசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோரைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. அப்துல் பாசித் - சவுதி 2

🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

1. ஆயிஷா பர்ஷன் - இராஜகிரி(தஞ்சை) 1

🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 416*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 416*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எத்தகைய இந்திரியத் சத்திலிருந்து அல்லாஹ் மனிதனை உண்டாக்குவதாக கூறுகிறான்❓*

💠 *பதில் =*
 _நழுவும் அற்பத் துளியாகிய இந்திரிய சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்._

*ஆதாரம் = *அல்குர்ஆன்: 32:08*

📃பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
(அல்குர்ஆன் : 32:8)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *தொழுகைக்கான அறிவிப்பு செய்ய ஆரம்பித்தவுடன் ஷைத்தான் எவ்வாறு ஓடுவதாக பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
 _தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்._

*ஆதாரம் = * புகாரி:608,1222,1231,3285*
*முஸ்லிம்:634,635,636,985,986*

📃608. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு  அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📜986. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகிறான்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றிருப்பதுடன் "மேலும், அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ள மனிதருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகிறான். அவர் இதுவரை நினைத்துப்பார்த்திராத பல அலுவல்களை அவருக்கு அவன் நினைவுபடுத்துகிறான்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. ஹக்கிம் - தென்காசி 2
4. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
2. அப்துல் பாசித் - சவுதி 2
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30 - 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🕋 மார்க்க *சிறப்பு கேள்வி* எண்19


🕋 மார்க்க *சிறப்பு கேள்வி* எண்19

🔮 _மலக்குகள் இப்ராஹிம் நபியவர்களுக்கு கூறிய நற்செய்தி என்ன❓_

✅பதில் :
_முதல் மனைவி சாராவுக்கு மகன் பிறப்பான் என்று கூறினார்கள்._

ஆதாரம்:
📖 *லூத்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (3) உள்ளது.*

🔮 _ஸதூம் நகர மக்களின் அடிப்படை தொழில் எதுவாக இருந்தது❓_

✅பதில் :
 _பிராணிகளை வழிமறித்து கொள்ளை அடிப்பது_

ஆதாரம்:
📖 *லூத்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (1)  உள்ளது.*

🔮 _ஹஜ்ரத் லூத் அலை அவர்களின் அடக்கஸ்தலம் எங்குள்ளது❓_

✅பதில் :
_பாலஸ்தீன் நாட்டில் பனி நாயிம்_

ஆதாரம்:
📖 *லூத்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (6)  உள்ளது.*

💐 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு  சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு  சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுல்தான் - திருநெல்வேலி 2
2. அப்துல் பாசித் - சவுதி 2
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
4. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2

💎💎💎💎💎💎💎💎💎💎💎

[கியாமத் நாளை நோக்கி...] ] is good,have a look at it! http://qnngrp.blogspot.in/2017/03/1_6.html?m=1

💎💎💎💎💎💎💎💎💎💎💎


🌴 *கியாமத் நாளை, நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *30- 03-2017*

🕋 மார்க்க_ *கேள்வி எண்: 415*


🕋 மார்க்க_ *கேள்வி எண்: 415*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எந்த விடயங்களை யாரும் அறிவதில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்❓*

💠 *பதில் =*
_நாளை தினம் தாம் செய்வது, சம்பாதிப்பது எது, எந்த பூமியில் இறப்போம், என்பதையும் எவரும் அறிவதில்லை._

*ஆதாரம் =அல்குர்ஆன்: 31:34*

📜நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எந்த காரணத்தினால் ஜனாஸா வேதனை செய்யப்படுவதாக பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
 _ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக_

*ஆதாரம் = *புகாரி:1286,1287,1288,1289,1290,1291,1292,1304*
*முஸ்லிம்:1688,1689,1690,1691,1692,1693*

📖1286 1287 1288. இப்னு உபைதுல்லாஹ்(ரஹ்) அறிவித்தார்.
மக்காவில் உஸ்மான் (ரலி)அவர்களின் மகள் இறந்தபோது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு இப்னு உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உஸ்மான்(ரலி) உடைய மகன் அம்ர்(ரலி) அவர்களிடம் 'நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது' எனக் கூறினார்கள்' என்றார். உடனே இப்னு அப்பாஸ்(ரலி) உமர்(ரலி) இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார். நான் உமர்(ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு சமுரா என்னும் ஒரு(வகையான காட்டு) மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். 'நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்துவா!' என உமர்(ரலி) என்னை அனுப்பினார். நான் அங்கு சென்று பார்த்தபோது அங்கே ஸுஹைப்(ரலி) இருந்தார். அதை உமர்(ரலி) கூறினார். நான் ஸுஹைப் இடம் சென்று, 'அமீருல் மூமீனின் அவர்களைச் சந்திக்கப் புறப்படு' எனக் கூறினேன். பின்னர் சிறிது காலம் கழித்து உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது' (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே' என்றும் கூறினார்கள்.
முடித்த பொழுது 'சிரிக்கச் செய்பவனும் அழவைப்பவனும் அவனே' (திருக்குர்ஆன் 53:43) என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
அல்லாஹ்வின்  மீது சத்தியமாக! இப்னு அப்பாஸ்(ரலி) உடைய இச்சொல்லைச் செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபணையும் செய்யவில்லை' என்று இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📃1688. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவருக்காக ஒப்பாரிவைத்து அழுவதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஹக்கிம் - தென்காசி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 1
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. அப்துல் பாசித் - சவுதி 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30- 03 - 2017  
    
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

Wednesday, 29 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" (அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
"

 📚 அல்குர்ஆன் 45:28,29

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்."

🎭அறிவிப்பாளர்:
நுஃமான் இப்னு பஷீர்(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -2051

 🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

🌴🎋🌴🎋29-3-17🌴🎋🌴🎋

🌟💥🌟💥🌟💥🌟💥🌟💥🌟

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -32*


*🎯ரெஸ்லின்(WWE) பார்க்கலாமா❓❓❓*



🔘எந்த ஒரு செயல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்கின்றதோ அச்செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஒரு காரியம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதாக இருந்தால் அதைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும்.

🔘இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே இதைப் பார்ப்பது கூடுமா? அல்லது கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும்.

🔘ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக போட்டி வைப்பது தவறல்ல. ஆனால் இஸ்லாம் தடை செய்த விஷயங்களில் போட்டி வைப்பது கூடாது.

🔘போரில் எதிரிகளை வீழ்த்தும் கட்டத்தில் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வைதையும் பிறரைத் துன்புறுத்துவதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. ரெஸ்லிங் விளையாட்டுப் போட்டியில் இஸ்லாம் தடை செய்த இந்த இரு அம்சங்களும் அடங்கியுள்ளன.

🔘போட்டியிடும் இருவரில் ஒருவர் மற்றவரின் முகத்தில் குத்துவது முதுகை முறிப்பது போன்ற கடுமையான தாக்குதல்களில் ஈடுபடுவர். சில நேரங்களில் பார்வையாளர் பகுதியில் இருக்கும் நாற்காலிகள் அல்லது கையில் கிடைக்கின்ற பொருட்களால் சரமாரியாக தாக்குவார். இறுதியில் யார் தனது போட்டியாளரை எழ முடியாமல் செயலிழக்கச் செய்கின்றாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்

🔘இதில் அரங்கேற்றப்படும் கொடூரத் தாக்குதல்களை ஆயிரக்கணக்கான மக்கள் ரசித்து ருசித்து பார்ப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

🔘மனிதாபிமானமும் இரக்கமும் வெளிப்பட வேண்டிய சூழ்நிலையில் சந்தோஷமும் ஆரவாரமும் ஏற்படுகின்றது என்றால் இந்த விளையாட்டு மக்களை இரக்கமற்ற கள்நெஞ்சக்காரர்களாக மாற்றுகின்றது என்பதே உண்மை.

*🔘ரெஸ்லிங்* என்பது பொய்யான நாடகம் என்று ஒரு கருத்து உள்ளது. யார் ஜெயிக்க வேண்டும்?யார் தோற்க வேண்டும்? என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்படும். ஒருவர் கடுமையாகத் தாக்குவது போல் பாவனை செய்ய மற்றவர் வலி ஏற்படுவது போல் நடிப்பார். மொத்தத்தில் இந்த விளையாட்டு பொய்யானது என்று கூறப்படுகின்றது.

🔘இஸ்லாம் தடைசெய்துள்ள ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு நடிப்பதும் தவறாகும்.

🔘மேலும் இந்த விளையாட்டைக் காணும் போது மார்க்கம் தடைசெய்துள்ள காட்சிகளைக் காணும் நிலை ஏற்படுகின்றது. போட்டியிடுபவர்கள் மறைவிடங்களை வெளிப்படுத்திக் காட்டும் ஜட்டியுடன் மக்களுக்குக் காட்சி தருகின்றனர். இவ்வாறு ஆடை அணிவது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

🔘சில நேரங்களில் பெண்கள் ஆபாச ஆடைகளுடன் மேடைக்கு வந்து அலங்கோலமாக காட்சி தருகின்ற நிலையும் இந்த விளையாட்டில் உள்ளது.

🔘இஸ்லாம் தடைசெய்துள்ள மேற்கண்ட அம்சங்கள் இந்த விளையாட்டில் உள்ளதால் இந்த விளையாட்டை நாம் பார்ப்பது கூடாது. இப்படிப்பட்ட போலியான விளையாட்டை கண்டு நமது பொன்னான நேரங்களை வீணடித்துவிடக் கூடாது.

*📖அல்குர்ஆன்👇🏻*

*"(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ,வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும்,வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்'' என கூறுவீராக!*

*(அல் குர்ஆன் 63:11)*

*📖அல்குர்ஆன்👇🏻*

*காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.*

*(அல்குர்ஆன் 104 வது அத்தியாயம்)*

🔘காலத்தை வீணாக கழித்தால் மறுமையில் அது குறித்து இறைவன் கேள்வி கேட்பான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே வீணான இது போன்ற விளையாட்டுகளை காண நமது நேரத்தை விரயம் செய்யக்கூடாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

பதிவு நிள்: 29-03-2017

💠 நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வாழ்க்கை வரலாறு தொடர்:8


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வாழ்க்கை வரலாறு தொடர்:8

🎀 அப்போது இருவரும் இறையில்லம் கஃபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கட்டளானார்கள். வயதான ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களுக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, “மகாமு இப்ராஹீம்” என்று அழைக்கப்படும் கல் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கற்களை எடுத்துத் கொடுத்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது.

பிறகு இருவரும் “இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்” என்று பிரார்த்தித்தார்கள். மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக! எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக! நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக! எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்!” என்றும் பிரார்த்தித்தார்கள்.

💦 இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் குர்பானி சம்பவம்
ஒருநாள், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கூறினார்கள்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக கனவு கண்டேன். இதை பற்றி உம் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள், “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்” என்று கூறினார்கள்.

🚧 (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்தி அறுக்க முற்பட்டபோது அவர்களது கத்தி அறுக்கவில்லை. அப்போது " யா இப்ராஹீமே! என்று அல்லாஹ்வின் அழைப்புக் குரல் கேட்டது. அல்லாஹ் அவர்கள் இருவரையும் சோதிக்கவே இவ்வாறு செய்ததாக கூறி ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுத்து பலியிடுமாறு கட்டளையிட்டான்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:7


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:7

🕰 அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிரார்த்திருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்றும் சொன்னார்கள்.

💎 மேலும் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள்.

🕸 ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, தன் மனைவியிடம் “உன்னிடம் எவரேனும் வந்தார்களா” என்று கேட்க, அதற்கு அவருடைய மனைவி “ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) “என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம், உங்களுக்கு ஸலாம் சொன்னார். உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிட்டார்” என்று சொன்னார். அதற்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “அவர் என் தந்தை. நீதான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்” என்றும் சொன்னார்கள்.

🍈 இப்ராஹிம் நபியின் மீள் வருகையும் கஃபாவை கட்டுதலும்
பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு நாள் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அங்கு வந்தார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டதும் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி இருவரும் நடந்துக் கொண்டார்கள். பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.

⚾ பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள்” என்று சொன்னார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுவதற்கு உதவுவாயா?” என்று கேட்க, ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “உஙகளுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:6


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:6

🎀 அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் குறைப்பட்டு முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

🎗 ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். என்னிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, பின்பு உன் நிலைப்படியை மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். அதற்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்கள்.

மறுமணம்
பின்னர் ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை தம் மகனைப் பார்க்க வராமல் விலகி வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு, மீண்டும் ஒரு முறை அவர்களிடம் வந்தார்கள். ஆனால் இந்த முறையும் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அவர் அங்கு காணவில்லை.

🔵 ஆகவே ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் “எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நீஙகள் எப்படியிருக்கிறீர்கள்? (நலம்தானா)” என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் “நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார். மேலும் “நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் தங்கி இருந்து ஏதேனும் உண்டுவிட்டும், குடித்துவிட்டும் செல்லுங்கள்” என்று சொன்னார். அப்போது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “உங்கள் உணவு எது?” என்று கேட்க, அதற்கு அவர் “இறைச்சி” என்று பதிலளித்தார். “உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்” என்று பதிலளித்தார். உடனே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

💠 நபி இஸ்மாயில் அலைஹிவஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:5


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹிவஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:5

🍮 பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை அருந்தினார்கள். இதனால் அவர்களது தாய்பால் அதிகரிக்கவே, குழந்தைக்கும் தாய்ப்பால் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஃபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.


🎯 ஜூர்ஹூம் குலத்தினரோடு சேர்ந்து வாழுதல்
இந்நிலையில் யமன் நாட்டைச் சேர்ந்த ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர் அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

திருமணம்
குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்கள். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர்கள் அரபு மொழியை கற்றுக்கொண்டார்கள். அவர்கள் வாலிபரானபோது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்கள். பருவ வயதை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். பின்னர் இஸ்மாயீலின் தாயார் அன்னை ஹாஜர் இறந்துவிட்டார்கள்.


இப்ராஹிம் நபியின் முதல் வருகை
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஒரு நாள் தம் மனைவியையும் மகனையும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது. எனவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி ஸாராவிடம்) “நான் (மக்காவில்) விட்டு வந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்து வரப் போகிறேன்” என்று கூறி மக்காவுக்கு புறப்பட்டார்கள்.

🎪 இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணவில்லை. ஆகவே ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவியிடம் ஹஸ்ரத் இஸ்மாயிலை குறித்து விசாரித்தார்கள்



🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:4


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:4

🌠 ஸஃபா, மர்வா
ஹஸ்ரத் இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அவர்கள் இஹ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த காலக்கட்டத்தில், தம்மிடம் இருந்த அந்த தண்ணீரிலிருந்து தாகத்திற்கு நீர் அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவர்களும் தாகத்திற்குள்ளானார்கள். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் தாகத்தில் புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் சிறிது தூரம் நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது ஏறி நின்று கொண்டு மனிதர்கள் யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது ஏறி நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் அழுதபடி இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார்கள். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அம்மையார் அவர்கள் (தமக்குள்) 'நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்" என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்கள். பார்த்தார்கள். பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் எவரும் அவருக்குத் தெரியவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.

ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் இன்று ஹஜ்ஜில் மக்கள் ஸஃபாவுக்கும் மர்மாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள்.


💦 ஸம்ஸம் தண்ணீர் உருவாதல்
அவர்கள் மர்வாவின் ஏழாவது முறை மீது ஏறி நின்றுபோது, ஒரு குரலைக் கேட்டார்கள். அமைதியாய் இரு என்று தமக்கு தாமே கூறிக்கொண்டார்கள். பிறகு காதைத் நன்றாக தீட்டிக் கேட்டார்கள். அப்போது அதே போன்ற ஒரு குரலை மீண்டும் செவியுற்றார்கள். உடனே "(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் அல்லது தமது இறக்கையினால் மண்ணில் தோண்டினார். அதன் விளைவாக அங்கிருந்து தண்ணீர் வெளிப்பட்டது. உடனே அன்னை ஹாஜர் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் கையால் அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி ஓடிவிடாதே! நில் நில் என்று சைகை செய்து சொன்னார்கள். அதுவே ஸம்ஸம் என்று பெயர் பெற்றது. இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.

⭐ நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் அன்னைக்கு கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால் ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்” என்பதாக.

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:3


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:3

⛵ அப்போது அவர்களை ஹஸ்ரத் இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அவர்கள் பின்தொடர்ந்து வந்து “இப்ராஹீமே! மனிதரோ, வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் நாயகி அவர்கள் 'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனா?” என்று கேட்க, அதற்கு இப்ராஹிம் நபியவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு அன்னை ஹாஜர் அவர்கள் “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.

🌄"எங்கள் இறைவா! உன் ஆணைப்படி நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எஙகள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழஙகுவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள்."

📕அல்குர்ஆன் 14-37

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:2


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:2

🐳 மக்காவுக்கு செல்லல்
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் அவர்களின் மனைவி அன்னை ஸாரா அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், அவர்களின் தாயாரான அன்னை ஹாஜராவையும் அழைத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றார்கள்.

🌷 தனிமைப்படுத்தப்படல்
சிறிது காலத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அது என்னவென்றால் தம் மனைவி, மகன் இருவரையும் கூட்டி சென்று கஃபாவின் மேல்பகுதியில் விட்டுவிட்டு வருமாறு.

🌲 அதன்படி, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அன்னை ஹாஜர் தம் மகன் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கூட்டி வந்து அவர்களை கஃபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கு இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு திரும்பிச் சென்றார்கள்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:1


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟



💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:1


🔮பிறப்பு
ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் முதல் மனைவி சாரா நாயகிக்கு 20 வருட காலமாக குழந்தை இல்லாத காரணத்தால், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம், சாரா நாயகி அவர்கள் “அல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியத்தை தரவில்லை. இந்த அடிமைப்பெண் ஹாஜராவை கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். அவள் மூலமாக உங்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை தரலாம்” என்று கூறினார்கள். அதன்படி ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அன்னை ஹாஜராவை மணம் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையே ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) ஆவார்கள்.

🍿ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிறக்கும்போது ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வயது 86 ஆகும்.

எகிப்து நாட்டு மன்னர் அன்னை ஸாராவுக்கு அன்னை ஹாஜராவை அன்பளிப்பு செய்திருந்தார்.
     

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

*இது தான் இன்று சில முஸ்லிம்களின் நிலை*




*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*

💥 மறுமையை மறந்து துன்யா மேல் மோகம் கொண்டு விட்டான்.

🔶 அல்லாஹ் ஒரு நாளைக்கு 5 தடவை அழைக்கிறான். அது அவன் காதில் விழாது. யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பு ஒலி மட்டும் எப்படி தூக்கத்திலும் அவன் காதுக்கு கேட்டு விடும்.

🔶  அல்லாஹ்வின் திருமறையை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் திறக்க நேரமில்லை. ஆனால் *whatsapp, viber, Facebook, Twitter* என அனைத்தையும் 24 மணிநேரமும்  திறந்து வைத்திருக்குறான்.

🔶 எவ்வளவோ அல்லாஹ்வுக்கு மாறு செய்திருப்பான். ஒரு தடவை கூட தவ்பா செய்ய மனம் நினைப்பது குறைவு. ஆனால் தவறுதலாக தட்டு பட்ட ஒருவரிடம் 10 தடவை மன்னிப்பு கேட்பான்.

🔶 அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அதிகாலை எழ மாட்டான். ஆனால் வேலை செய்யும் முதலாளியின் கட்டளைக்கு பயந்து அலாரம் வைத்து எழுவான்.

🔶 அற்ப தொழில் நஷ்டத்துக்காக கைசேதப் படுவான். மறுமையில் கைசேதப் படப் போவதை எண்ண மாட்டான்.

🔶 உயிரிலும் மேலான நபிகளாரின் பொன்மொழிகள் 10வையாவது முழுமையாக அறிந்து வைத்திருக்க மாட்டான். ஆனால் சினிமா கூத்தாடிகளின் ஒவ்வொரு *Punch Dialogues*ஐயும் மந்திரம்  போல் சொல்வான்.

🔶 அல்லாஹுவின் கலாமை ஓதிக் காண்பிக்கப் பட்டால் அது எந்த சூறாவில் உள்ளது என சொல்ல  முடியாதவனாய் இருப்பான் ஆனால் ஒரு பாடல்வரி பாடிக்காட்டப்பட்டால் எந்த திரைப்படம் என்ன பாடல் என அச்சொட்டாய் சொல்வான்.

🔶 அவனது காதுகள் குர்ஆன் ஓதலுக்கோ பயான் ஓடியோவுக்கோ செவி சாய்க்காது. ஹராமான இசைக்கு செவி சாய்ப்பான்.

🔶 இபாதத்தில் இன்பம் காண மாட்டான். பாவத்திற்கு ரசிகனாய் இருப்பான்.

🔶 அல்லாஹ்வின் பாதையில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய யோசிப்பான். வீண் ஆடம்பரங்களுக்கு லெட்ச கணக்கில் கணக்கின்றி செலவழிப்பான்.

🔶 சுவர்க்கத்துக்கு நன்மாராயம் செய்யப்ட்ட 10ஸஹாபாக்களை அறிந்திருக்க மாட்டான். கிரிக்கட் வீரர்களில் ஒருவரின் பெயரைக் கூட தெரியாமல் இருக்க மாட்டான்.

🔶 சந்தர்ப்ப துஆக்கள் ஓதியிருக்க மாட்டான். ஆனால் பாடல் வரிகளை மனனமாக்க மறந்திருக்க மாட்டான்.

🔶 காதுகளைக் கிழித்து ஒலிக்கும் பாங்குக்கு பதிலளிக்க மாட்டான். ஆனால் நகைச்சுவை காட்சியை ரசிக்க அனைவரின் வாயையும் மூட வைப்பான்.

🔶அழிந்து போகும் துன்யாவிற்க்காக  கோடி கணக்கில் சேர்த்து வைப்பான். மஹ்ஷர் நாளில் கை கொடுக்க உதவும் நல்ல அமல்களை சேகரிக்க மாட்டான்.

🔶 சிறிய கவலையையும் பெரிதாய்  எண்ணுவான். முள் குத்தும் வேதனைக்கும் பாவம் மன்னிக்கப் படுவதை அறிந்திருக்க மாட்டான்.

🔶 தொழுதுவிட்டு இறைவறனுக்காய் திக்ர் செய்ய 10 நிமிடம் கூட ஒதுக்க மாட்டான். ஆனால் Phone ல் game விளையாட 10 மணிநேரம் என்றாலும் தயங்க மாட்டான் .

இதை எழுதும் நான் உட்பட அனைவரும் பாவங்கள் செய்யக்கூடிய  சாதாரண மனிதர்ளே!!!

*இன்ஷா அல்லாஹ் தவ்பா செய்வோம். அல்லாஹுவின் நேசத்தை பெற்று மறுமையில் வெற்றியடைவோம்.*

ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன்.....

Tuesday, 28 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

“ அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  "

   📚 அல்குர்ஆன் 45:26

💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். "

🎭அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -1011

 🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱

🕋⛩🕋⛩💧29-3-17🕋⛩🕋⛩

அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும்.




அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான் ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.


ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ் விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.


அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.

ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.


அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சிலநேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம்.தாகித்த நாயிக்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத்தந்தது.


அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?

இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...


إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ


"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று (ஹாபீல்) கூறினார்.

அச்சமுள்ளவருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள இவ்வசனம் ஒன்றே போதுமானது.அதனால் தான் நபிமார்கள்,ஸஹாபாக்கள் ஸாலிஹீன்கள் ஒரு அமலை துவக்கும்போதும் முடிக்கும்போது அல்லாஹ் ஏற்றுக்கொள்வதை கேட்பார்கள்.

பதிவு நாள்: 29-03-2017

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 31*


*🎯சினிமா பார்ப்பது கூடுமா❓❓❓*

🔘சினிமா பார்ப்பது கூடுமா என்பது கேள்வி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. இஸ்லாத்தையும் நாகரீகத்தையும் ஒழுக்கத்தையும் மதிக்கக் கூடிய சராசரி மனிதனுக்கே சினிமாவின் சீர்கெடுகள் பளிச்சென்று தெரியும்.

🔘இஸ்லாம் தடைசெய்துள்ள பல விஷயங்கள் சினிமாவில் இருக்கின்றன. இசையும் ஆபாசக் காட்சிகளும் இல்லாமல் சினிமா இல்லை. இவ்விரண்டையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது

🔘சமுதாயத்தில் சினிமா ஏற்படுத்தும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு அளவே இல்லை. படிக்கும் மாணவ மாணவியர்களை ஒழுக்கக் கேட்டின் பால் இது தள்ளுகின்றது.

🔘மேலும் சினிமாவில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை உண்மையான நிகழ்வாகக் காட்டப்படுகின்றது. இந்தப் போலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்கின்ற அளவிற்கு சினிமா மக்களை முட்டாளாக்கி விடுகின்றது.

🔘மக்களுக்கு பலனில்லாத மக்களின் செல்வத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்ற இந்த சினிமாவை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)

பதிவு நாள்: *28-03-2017*

Monday, 27 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

“ அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  "

   📚 அல்குர்ஆன் 45:26

💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். "

🎭அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -1011

 🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱

🕋⛩🕋⛩💧29-3-17🕋⛩🕋⛩

விஷத்தை விட கொடியதா பார்ன் – டாப் 10 காரணங்கள் என்ன



அறிவியல் சிந்தனை தகவல்*

   ┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​​

பார்ன் (அ) பார்னோகிராஃபிஎனப்படும் ஆபாச தன்மை கொண்டவைகள் விஷத்தை விட கொடியது என நிருபிக்கும் டாப் 10 காரணிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பார்ன் நல்லதா ? கெட்டதா ? எனபதை விட மனித மனதில் ஏற்படுத்தும் அழுத்தங்களின் வாயிலாக வாழ்வைபாழ்படுத்தும்.

பாலுணர்வு சார்ந்த விடயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது வாழ்க்கையின் பல தவறுகளை கட்டுப்படுத்தும் நம் குடும்ப உறவுகளை வளப்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை தானே..!

பார்ன்
1. செயற்கை உலகுடன் உணர்வுபூர்வமான உறவு

நம்முடைய இந்திய கலாசாரத்தில் குடும்பம் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையில் குடும்பம் சார்ந்த உண்மையான பந்தத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்களின் மனதில் தவறான எண்ணங்களுடன் செயற்கையான உலகத்தினை உருவாக்கி கொள்வதனால் குடும்பத்தை விட்டு விலகி நிற்பார்கள்.

2. நெருக்கம் இல்லாத உறவு

உடலைச் சார்ந்த விடயங்களில் உறவிருந்தாலும் உணர்வுரீதியாக இல்லாமல் காமம் மட்டுமே குறிக்கோளாக மாறி அந்த எண்ண வேட்கைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு முழுமையான தீர்வினை உறவு தராது. எனவே அன்புடன் கூடிய நெருக்கமான உறவு வாழ்வை வளமாக்கும்.

3. பந்தமற்ற வாழ்வு

தவறான ஆபாச படங்களை அதிகம் பார்பதனால் அதை நிஜமாக கருதி நம் வாழ்வில் பல தவறான எண்ணங்கள் ,தாழ்வு மனப்பான்மை மற்றும் தனிமை போன்றவை அதிகம் ஏற்படும் என்பதனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பருகளுடன் உள்ள நெருக்கமான பந்தம் பாதிக்கும். இது தொடருமானல் வாழ்வின் பெரும்பகுதியை இழப்பீர்கள்.

4. பார்ன் போதையா ?

பார்னோகிராபி போதையல்ல என சமீபத்தில் வெளியான ஆய்வில் நிருபிக்கப்பட்டாலும் ஆபாச படங்களை பார்த்து பழகியவர்கள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது உண்மை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அது போதையா இல்லையா என்பதனை தாண்டி ஆபாசம் ஆபத்துதான் என்பது உண்மையே.. எனவே தவிர்ப்பது நல்லது.

5. சில நிமிடங்கள்

உடல் சார்ந்த உறவு என்பது கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய அளவிலான பிரிவுகளுக்கான உறவு பாலமாகவும் ,சந்ததியை வளர்க்கும் ஓர் உறவு பாலம் என்பதனை கடந்த அதன் தன்மைகளை மறந்து தவறான பார்னோகிராஃபி வாயிலாக நேர்வது குடும்ப பிரிவே ஆகும்.

6. ஏமாற்றமே மிஞ்சும்

பார்ன் என்பது தொழில்முறை ரீதியாக செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களை போன்ற அமைப்பாகும். அவற்றில் ( சினிமாவில் வரும் அதிரடியான சண்டை காட்சிகள் போல ) பார்க்கும் படங்களை நிஜ வாழ்வில் மையப்படுத்த நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் குடும்பம் உறவு பிரிவைத்தான் சந்திக்கும்.

7. எப்பொழுதும் தேவை

தனிமையில் இருக்கும் நேரங்களில் குரங்கினை போன்ற தாவும் மனதின் தூண்டுதலால் பார்க்கும் சில தடவைகள் தொடராமல் தடுக்க தவறினால் நம் தனிமையை ஆக்கிரமிக்க தொடங்கும் ஆபாசம் நம் வாழ்வின் பெரும்பகுதியை தனிமை ஆக்கி நம் நெருக்கமான உறவுகளை விலக்கி வைத்து தனிமையை தான் தேடுவோம். எனவே மனதின் சில நிமிட சபலத்தால் பல நிமிட வாழ்வினை இழந்து எப்பொழுதும் தேவை என்கின்ற எண்ணத்தை விதைத்து விடும்.

8. நிறைவற்ற தன்மை

அதிகப்படியான பாலுணர்வு கிளர்ச்சியம் சார்ந்த விடயங்களை கானும்பொழுதும் , ஆர்வம் காட்டும்பொழுது நம்முடைய மூளையின் செயல்பாடு முழுமையாக பார்ன் தன்மை கொண்டவற்றில் ஆர்வம் கொள்வதனால் நம்முடைய தொழில் மற்றும் குடும்ப சார்ந்த உறவுகளில் முழுமையான ஈடுபாட்டினை செலுத்த முடியாமல் நிறைவற்ற தன்மையால் தவிர்ப்பது உண்மையே..

9. கட்டுப்பாடு இல்லாமல்

வேடிக்கை , பொழுதுபோக்கு , ரிலாக்ஸ் என தெடங்கும் பார்ன் மெல்லமாகவிதை ஊன்றி மிகப்பெரிய விருட்சமாக உங்களுக்கே தெரியாமல் வளர்ந்து விடும் என்பதனால் உங்கள் மனதினை கட்டுப்படுத்த முடியாமல் , தவிர்க்க வேண்டும் என நினைத்தாலும் தவிர்க்க முடியாமல் தினசரி பணியாக மாறி வாழ்வின் பொன்னான நிமிடங்களை இழக்க நேரிடும்.

10. மழுங்கிய கத்தியாக மனம்

சிறிய அளவில் தொடங்கிய ஆபாசம் சார்ந்த விடயங்களால் மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் ஆபாசம்நாளடைவில் நம்முடைய மனதினை மழுங்கிய கத்தி போல ஆக்கிவிடும் என்பதனால் வாழ்வியலில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

 *நேசம் ஹாஜா* 

   ┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈


பதிவு நாள்:28-03-2017

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 30*


*🎯மனித உறுப்புகளையும், இரத்தத்தையும் விற்கலாமா❓❓*



🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் தொழில் நுட்பமும் இருக்கவில்லை.

🔘ஆனாலும் இன்றைக்கு அந்த தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இது மார்க்கத்தில்,அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்று ஆய்வு செய்து இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்துக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் வந்துள்ளனர்.

🔘கிட்னி இரத்தம் போன்றவற்றை விற்கலாமா என்றால் இதற்கான விடை காண்பது எளிதானது தான்.

🔘மார்க்கத்தில் எந்த ஒன்றை தர்மமாக கொடுக்க அனுமதி உள்ளதோ அதை விற்பதற்கும் அனுமதி உண்டு. நமக்குச் சொந்தமான ஒன்ரை நாம் விரும்பினால் இலவசமாகக் கொடுக்கலாம். விரும்பினால் அதற்காக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டும் கொடுக்கலாம். விரும்பினால் கொடுக்காமலும் இருக்கலாம்.

🔘மார்க்க ஆதாரத்தின் அடிப்படையில் இதை தடை செய்ய ஆதாரம் இல்லை. ஆனாலும் உயிர் காக்கும் நிர்பந்தத்தை கவனத்தில் கொண்டு அல்லாஹ் நமக்கு அருட்கொடையாகத் தந்ததை நாமும் அருட்கொடையாக கொடுப்பது சிறந்தது என்று கூறலாமே தவிர அது கட்டாயம் என்று கூற முடியாது.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும் ♻)

பதிவு நாள்: *27-03-2017*

சவால் விடுகிறேன்.இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்....உளம் தொடும் ஒரு கதை


சவால் விடுகிறேன்.இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்....உளம் தொடும் ஒரு
கதை:




இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.

நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.

உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்
நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன்.

திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன்.

இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.

எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.

நான் எங்கே நிற்கிறேன்.சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள்.சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள்.

சிலர் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்கள்.

பயம் என்னைப் பிய்த்துத் தின்னத்துவங்கியது.நான் எங்கிருக்கிறேன் என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்து கொள்கிறேன்.இதயம் நெஞ்சாங்கூட்டிலிருந்து எகிறி வெளியேறத்துடிக்கிறது.
இது இறுதித்தீர்ப்பு நாள்.
நான் உலகத்தில் இருந்த போது இந்த நாளைப்பற்றி எவ்வளவெல்லாம் கேட்டிருப்பேன்,வாசித்திருப்பேன்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த நாள் வரும் என்று நினைக்கவில்லையே!!!
ஒரு வேளை இதெல்லாம் வெறும் பிரமையோ?
இல்லை,இல்லை இதெல்லாம் நிஜமாகவே இருக்கிறது.இந்தப் பயம்…..இதுவரை நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை.
எனது பெயரைக் கூப்பிட்டு விட்டார்களா என்று ஒருவர் இருவரிடம் பதட்டத்தோடு கேட்டபடி கூட்டத்தோடு நானும் நகர்கிறேன்.

திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது.

ஆமாம்,என் பெயரே தான்.என் தந்தையின் பெயர் கூட சரியாக இருக்கிதே.

இந்த சனசமுத்திரம் அப்படியே பிளந்து எனக்கு வழிவிடுகிறது.

இரண்டு மலக்குகள் என் தோளிரண்டையும் பற்றுகிறார்கள்.சந்தேகம் நீங்காத கண்களோடு நடக்கிறேன்.

மலக்குகள் என்னை நடுவில் அமர்த்தி விட்டு நகர்கிறார்கள்.என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னே ஓடுகிறது ஒரு திரைப்படம் போல்.தலையைக்குனித்துக்கொள்கிறேன்.

திடீரென என் கண் முன்னே இன்னொரு உலகம் காட்டப்படுகிறது.அங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள்.
எனது தந்தை ஒரு சமூக சேவையிலிருந்துஇன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்.அவரது செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவளிக்கப்படுகிறது.
எனது உம்மா வீட்டிற்கு வரும் ஏழைகளுக்கு அள்ளி வழங்குகிறார்.விருந்தாளிகளுக்கு உணவளிக்கிறார.

நான் கெஞ்சுகிறேன்.

நானும் அல்லாஹ்வுடையபாதையில் தான் இருந்தேன்.

மற்றவர்களுக்கு உதவினேன்.

அல்லாஹ்வுடைய தீனை மற்றவர்களுக்கு எத்தி வைத்தேன்.

எனது தொழுகைகளை நிறைவேற்றினேன்.

ரமழானில் நோன்பு நோற்றேன்.

அல்லாஹ் சொன்னவற்றைச் செய்தேன்.

வேண்டாம் என்று சொன்னவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டேன்.

நான் எவ்வளவு அல்லாஹ்வை நேசித்தேன் என்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழத்துவங்கினேன்.

நான் உலகில் எதைத் தான் செய்திருந்தாலும் அது மிகக்குறைவே என்பதை அந்த நிமிடம் உணர்ந்தேன்.அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன்.

வியர்வை முன்னெப்போதும் இல்லாதளவு பெருகி வழிய நான் நடுநடுங்கினேன்.

கடைசித்தீர்ப்பை எதிர்நோக்கிய என் கண்கள் மீஸான் தராசில் நிலைகுத்தி நின்றன.

இதோ தீர்ப்பு.
நரகிற்கு செல்வோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின்றன.
இறைவா…….

என் பெயரும் வாசிக்கப்படுகிறது.

நான் முழங்காலில் விழுந்தேன்‘என்னால் முடியாது.இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது.நான் எப்படி நரகம் போக முடியும்” என்று கத்திக்கூச்சலிட்டேன்.தலை சுற்றியது.கண்களில் ஒளி மங்கியது.

மலக்குகள் இருவர் என்னை கொழுந்து விட்டெரியும் நரகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
என் கால்கள் கரடுமுரடான தரையில் இழுத்துச்செல்லப்படுகின்றன.
நான் சப்தமாக அழைக்கிறேன்.

“உதவுங்களே யாராவது”

எனது நற்செயல்களை அழைக்கிறேன்.ஓதிய குர் ஆனை,தொழுகைகளை அழைக்கிறேன்.

ரசூல் (ஸல்) அவர்களின் மணிமொழி ஞாபகத்துக்கு வருகிறது.ஐந்து முறை ஆற்றில் குளித்தால் உடம்பு சுத்தமடைவதைப்போல ஐவேளைத்தொழுகை பாவங்களை அழித்து விடுகிறது.

அழத்தொடங்கினேன்.

எங்கே என் தொழுகை?
எங்கே என் தொழுகை?
எங்கே என் தொழுகை?

மலக்குகள் நிற்கவில்லை;என் கதறலைக்காதில் போட்டுக்கொள்ளவுமில்லை.
நரகத்தின் சுவாலைகளின் வெப்பம் என் முகத்தை எரிக்கிறது.ஒரு முறை நம்பிக்கையின்றித் திரும்பிப்பார்க்கிறேன்.ஒரு மலக்கு என்னைப்பிடுத்து நெருப்புக் குண்டத்தில் தள்ளி விடுகிறார்.ஆவென்று கத்திக்கொண்டே நான் கீழே விழுகிறேன்.ஐந்தாறு அடிகள் விழுந்த பின் ஒரு கரம் என்னைப்பற்றி இழுக்கிறது.
தலையை உயர்த்திப்பார்க்கிறேன்.வெள்ளைத் தாடியுடன் ஒரு முதியவர்.
“நீங்கள் யார்?’
“நான் தான் உனது தொழுகை”
“ஏன் நீங்கள் இவ்வளவு தாமதித்து வந்தீர்கள்..இன்னும் கொஞ்ச நேரத்தில் நரகம் என்னை விழுங்கியிருக்குமே” ஆதங்கத்தோடு சொன்னேன்.
முதியவர் சிரித்தார்.”நீ எப்போதும் கடைசி ந
ேரத்தில் தான் நிறைவேற்றினாய்,மறந்து விட்டாயா?

ஒரு நொடி…
நான் விழித்துக்கொண்டேன்,சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினேன்.
என் தாயும் தந்தையும் உரையாடுவது கேட்கிறது.
என் உடை வியர்வையில் குளித்திருக்கிறது.

அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!
இஷாவிற்கான அதான். உடனே எழுந்து வுழூ செய்வதற்காகச் சென்றேன்.
காதல்
பாடல்களைக் கேட்டு
மனதில்
காமத்தை
வளர்க்காதே !

��
திரைப்படங்களை
பார்த்து
தீமைகளை
செய்யாதே !

��
இறைவனை
மறந்து உலக
இன்பங்களுக்கு அடிமையாகாதே !

��
மரணம் உன்னை சுவைத்தேத் தீரும்
என்பதை மறக்காதே !

��ஆதமின் மகனே ! ஆடம்பர
வாழ்க்கையை
விரும்பாதே !

��
ஏனெனில்
நாளை நீ மண்ணறைக்குச் சொந்தமானவன்
என்பதை மறக்காதே !

��மனிதனே ! விதவிதமாக
உணவுகளை
உண்டாயே !

��
நாளை
மண்ணறைக்குள்
உன்
உடம்பை புழுக்கள்
உண்ணும்
என்பதை
நினைத்தாயா ?

��ஆதமின் மகனே ! உதவிகள்
செய்வதை
வெறுத்து
ஏழைகளை
விரட்டியடித்து
ஆணவமாக
உலகில் வாழாதே !

��
மரணம் உங்கள் முன்
என்பதை
மறக்காதீர்கள்.

��
பேரம் பேசி
பாவங்களை செய்யும்
மனிதனே !
படைத்தவன்
உன்னை பார்த்த
வண்ணமாக
இருக்கிறான்
என்பதை மறந்து
விடாதே !

��மனிதனே
உன்னை இறைவன்
மரணத்திற்கும்,
மறுமைக்கும் ஏற்ப
படைத்துள்ளான்
என்பதை மறக்காதே !

����������������
என் அருமை
இஸ்லாமிய
நெஞ்சங்களே !

படித்த பின் இதை உங்களுடைய
நண்பர்களுடன்
பகிர்ந்துக்
கொள்ளுங்கள்
நல்லதை செய்யுங்கள்.


பதிவு நாள்:27-03-2017